மிகவும் அருமையான பதிவு,
சரோஜினி டியர்
அடிப்பாவி சசிகலா நாசமாப் போறவளே இழவு வீட்டுக்கு போனவள் அவள் வேலையை மட்டும் பார்க்காமல் இந்த மூதேவியின் கண்ணில் பட்டுவிட்ட பாவத்துக்கு அதிதீயின் வாழ்க்கையை ஒருவழியாக்க வந்துட்டாளே
வம்புக்கு அலையும் மூதேவிக்கு அதி நல்லா கொடுத்து கட்டினாள்
அட வீணாப் போனவளே
அந்த மாப்பிள்ளைக்கிட்டேயும் சசிகலா சொல்லிட்டாளே
அது வேற என்ன வினையாகுமோ?
இப்போ என்ன ஆபத்து வந்திருக்கோ?
ஐயோ பாவம் அதி
போட்டோவைக் காட்டி விசாரிச்சானுங்களா?
விசாரிச்சது யாரு?
தீனாவின் ஆட்களா?
இல்லை வேறு ஆளுங்களா?
அதி இங்கேதான் இருக்கிறாள்ன்னு எப்படி தெரிந்தது?
இருளாயி நல்லவளா? கெட்டவளா?
இப்போ கவுன்சிலர் வீட்டில் அதிக்கு ஏதாவது பிரச்சினை வருமா?
எல்லாவற்றையும் விட நந்தா வந்தால் எப்படி அதியை சந்திப்பான்?
அதி இங்கேயிருப்பது நந்தாவுக்கு தெரிய வருமா?
அவனுக்கு இருளாயி சொல்வாளா?
இப்போ நந்தாவுக்கு வேறு இடத்தில் வேலை கொடுத்து பொண்டாட்டியிடமிருந்து பிரிக்கத்தானோன்னு தோணுது
நாசமாப் போன தீனதயாளன்
வீட்டில் பொண்டாட்டியையும் பெற்ற பெண்ணையும் நாயை விட கேவலமா நடத்தும் கேடுகெட்ட ஈன ஜென்மம் ஊருலேயிருக்கிற மூதேவிங்களிடம் நல்ல பெயர் வாங்கி என்ன பிரயோஜனம்?
உப்புக்காச்சா? புளிக்காச்சா?
இவனுக்கு ஏதாவது நோக்காடு வந்தால் ஊரிலேயிருக்கிறவளுங்களா வந்து பார்ப்பாளுங்க?
என்னப்பா புது ஜோடிக்கு இன்னும் கஷ்டத்துக்கு மேலே கஷ்டம் கொடுக்கிறீங்க?
வரும் இன்னல்களையெல்லாம் அதிதீ நந்தா ஜோடி எப்படி சால்வ் பண்ணி ஜெயித்து மேலே வருவாங்க?
புத்தம்புது மலரான மனைவியை நந்தா இனி கண்ணில் பார்ப்பானா?
எனக்கு ஒரே கவலையாக இருக்கு, சரோ டியர்