• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வைரமுத்து வைர வரிகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
ஜென்மம் நிறைந்தது
சென்றவர் வாழ்க

சிந்தை கலங்கிட
வந்தவர் வாழ்க

நீரில் மிதந்திடும்
கண்களும் காய்க

நிம்மதி நிம்மதி
இவ்விடம் சூழ்க!

ஜனனமும் பூமியில்
புதியது இல்லை

மரணத்தைப் போல் ஒரு
பழையதும் இல்லை

இரண்டுமில்லாவிடில்
இயற்கையும் இல்லை

இயற்கையின் ஆணைதான்
ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய
கண்களும் எங்கே?

பாய்ந்து துழாவிய
கைகளும் எங்கே?

தேசம் அளாவிய
கால்களும் எங்கே?

தீ உண்டதென்றது
சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது
காற்றுடன் போக

மண்ணில் பிறந்தது
மண்ணுடன் சேர்க

எலும்பு சதை கொண்ட
உருவங்கள் போக

எச்சங்களால் அந்த
இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே
நாளொன்று இல்லை

இறப்பு இல்லாமலும்
நாளொன்று இல்லை

நேசத்தினால் வரும்
நினைவுகள் தொல்லை

மறதியைப் போல்
ஒரு மாமருந்தில்லை

கடல் தொடு ஆறுகள்
கலங்குவதில்லை

தரை தொடும் தாரைகள்
அழுவதும் இல்லை

நதி மழை போன்றதே
விதியென்று கண்டும்

மதி கொண்ட மானுடர்
மயங்குவதேன்ன !

மரணத்தினால் சில
கோபங்கள் தீரும்

மரணத்தினால் சில
சாபங்கள் தீரும்

வேதம் சொல்லாததை
மரணங்கள் கூறும்

விதை ஒன்று வீழ்ந்திட
செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு
யாத்திரை வந்தோம்

யாத்திரை தீரும் முன்
நித்திரை கொண்டோம்

நித்திரை போவது
நியதி என்றாலும்

யாத்திரை என்பது
தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம்
தீண்டிடும் போதும்

சூரியக் கீற்றொளி
தோன்றிடும் போதும்

மழலையின் தேன்மொழி
செவியுறும் போதும்

மாண்டவர் எம்முடன்
வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள்
காற்றுடன் சேர்க !

தூயவர் கண்ணொளி
சூரியன் சேர்க !

பூதங்கள் ஐந்திலும்
பொன்னுடல் சேர்க!

போனவர் புண்ணியம்
எம்முடன் சேர்க !
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சூப்பர்ப், மணிக்கொடி டியர்
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
இந்த பாடல் மின் மயானத்தில் உறவினர்கள் பிரார்த்தனை செய்யும் பொழுது ஒலிக்கிறது. நான் உறவினர்கள் இறுதி சடங்குகள் நடக்கும் பொழுது இப்பாடலின் இசை ஒலிக்கும் பொழுது மனம் பாரமாகி வெளியே வந்துவிடுவேன் ஆனால் எனது கணவரின் இழப்பின் போது முழுமையாக கேட்க நேர்ந்தது மிகவும் அர்த்தம் கொண்ட ஆழமான பாடல்
 




SaDi

இணை அமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
933
Reaction score
2,790
Age
34
Location
coimbatore
super mani ka.... Romba arumaiyana varigal... Itha ketkumbothe enakulla oru amaithi unaruven eppavume.... Niraya per ketka mudiyala. Alugai varuthunu solvanga... Neradi pathippu enaku illathathala enaku amaithi than feel agiruku...

Brama murari song music la indha pattu varum... Video mob la vachuruken... Romba stress ah irukkumbothu enna meri en manasu azhuga ninaikkumbothu indha pattu ketpen...
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
இந்த பாடல் மின் மயானத்தில் உறவினர்கள் பிரார்த்தனை செய்யும் பொழுது ஒலிக்கிறது. நான் உறவினர்கள் இறுதி சடங்குகள் நடக்கும் பொழுது இப்பாடலின் இசை ஒலிக்கும் பொழுது மனம் பாரமாகி வெளியே வந்துவிடுவேன் ஆனால் எனது கணவரின் இழப்பின் போது முழுமையாக கேட்க நேர்ந்தது மிகவும் அர்த்தம் கொண்ட ஆழமான பாடல்
வருந்துகிறேன் சித்ராம்மா
இந்த பாடல் வரிகள் விடியோ வைத்திருக்கிறேன் எப்பலாம் எனக்கு அமைதி தேவையோ அப்பலாம் இந்த பாடலை கேட்டுகொட்டிருப்பேன் இதில் சொல்லபட்ட ஒவ்வோரு வரிகளும் அவ்வளவு ஆழமானது
 




S

satheesh

Guest
அவர்தம் புண்ணியங்கள் உம்மேயை சாரும், உம்மை அவரே ஆட்கொள்வார்! பொறுத்திரு மகளே!!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top