'நான் எடுக்க வேண்டிய பூ, ஊசி முனையை கொண்டது’
கவனத்தை எங்கும் சிதறவிடாமல் பார்த்துக் கொண்டே வந்தான் ஆதித்தன்.
ஒரு இடத்தில் அந்த பூ தெரிய வேகமாக அதை கையில் பிடிக்க வர, சிறிது நகர்ந்த அந்த பூ தானாக அவன் கையில் அமர்ந்த நேரம், பெரும் சத்தத்துடன் அந்த வெள்ளி மலை வெடித்து சிதறி, அந்த பள்ளமும் நிரம்பியது.
முன்னால் அவன் கண்ணுக்கு தெரிந்த மாய தோற்றம் எல்லாம் மறைந்து, சாதாரண விளைநிலங்களாக காட்சி தந்தது. அந்த பூ இருக்கும் வரை தான் அது சொர்க்கம்.
அந்த நிலத்தை பார்வையிட்டவன், முத்தழகை அழைத்துக் கொண்டு, வேகமாக புரவியில் கிளம்பினான்.
இவன் வெற்றியுடன் வந்துக் கொண்டிருப்பது மக்களுக்கு தெரிய ஆராவார கூப்பாடுப் போட்டனர்.
பூவின் வாசம் எங்கும் நிறைந்தது. புரவியை விட்டு வேகமாக குதித்து அரண்மனையை நோக்கி ஓடினான்.
அந்த பூவை கையில் வாங்கிய ராஜ சித்தவைத்தியர், அந்த பூவை நந்தினி நாசி அருகே கொண்டு செல்ல, அவள் தானாக திறந்துக் கொண்டது.
அந்த பூவின் நடுவில் இருந்த மகரந்தத்தை வேகமாக பிடித்திழுக்க, கீழே இருந்த ஊசி வழியாக ஒரு சொட்டு தேன் போன்ற திரவம் அவள் இதழில் பட்டு தொண்டையில் இறங்கியது.
இன்னும் சில பச்சிலைகளை கையில் கசக்கியவர், அவளின் உள்ளம் கையில் வைத்து வேகமாக தேய்த்தார்.
இன்னும் சில இலைகளை ஆதித்தன் கையில் கொடுத்து அவள் பாதத்தில் தேய்க்க கூற, கையில் வாங்கி உள்ளங்கையில் வைத்து கசக்கி பாதத்தில் தேய்த்தான்.
மெது மெதுவாக கண்களை திறந்துப் பார்த்தாள் நந்தினி. ஒரு திங்களில் பரிபூரண குணமடைந்தாள் அவள். வெளுறிய அவள் தேகம் ரத்த நிறம் கொண்டு அழகுற மிளிர்ந்தாள்.
“அரசே தங்களை காண தேவியார் வருகிறார்”
அரண்மனையில் அழகிகள் படை சூழ, நீராடிக் கொண்டிருந்தான் ஆதித்த கரிகாலன்.
பால், ரோஜா இதழ் கலந்த நீரில் தலையை வெளியே நீட்டி படுத்திருந்தான் ஆதித்தன். அவனை சுற்றியிருந்த அழகிகள் அவன் மேல் ரோஜா இதழைப் போடுவதும், நீரை இறைத்து வாரி இறைப்பதுமாக இருந்தனர்.
கைகளை கொண்டு முகத்தை மறைப்பதும், அவர்கள் மேல் நீர் வீசுவதுமாக அந்த ஆணழகன், அழகிகளுடன் கழித்து குளித்துக் கொண்டிருந்தான்.
தேவி அவள் படைகளுடன் அறையில் நுழைய, அவளை வணங்கி வெளியில் சென்றனர்.
திரும்பி தன் பின்னால் வந்தவர்களை, ‘செல்லுங்கள்” என்னும் விதமாகப் பார்க்க, அவர்கள் வெளியில் நின்றனர்.
மெதுவாக அன்னநடையிட்டு, கைகளில் தவழ்ந்த சால்வையை பிடித்து கைகளில் சுற்றிக் கொண்டே வந்தாள் அவள்.
“என்ன தேவியாரே திடீர் விஜயம்”
“அரசன் பார்வை தேவியில் மேல் படவில்லை, அது தான் தங்களை காண வந்தேன்” நீராடிக் கொண்டிருந்த தொட்டி அருகில் வந்து நின்றாள் அவள்.
கழுத்தில் மஞ்சள் தாலி தவழ்ந்தாட அவனை பார்த்திருந்தவளையே கண் கொட்டாமல் பார்த்திருந்தான் ஆதித்தன்.
அவள் முகம் முழு பௌர்ணமியை அவனுக்கு நினைவுப்படுத்தியது. மெதுவாக எம்பி அவள் கையை பிடித்திழுக்க, எதிர் பாராமல் அவன் மேலையே பொத்தென விழுந்தாள் அவள்.
“அரசே என்ன விளையாட்டு இது”
“என் தேவியுடன் விளையாடாமல் வேறு யாருடன் விளையாட” கேட்டபடியே அங்கிருந்த நீரை கையில் அள்ளி அவள் மேல் தெளித்தானவன்.
தொட்டியில் இருந்த ரோஜா இதழை கையில் எடுத்து, அவள் முகத்திலிருந்து கோடிழுத்தவனின் கை அவளின் மார்பருகில் வர, அவன் கையை தடுத்தாளவள்.
அவளின் கையை அப்படியே பிடித்து அவளை கீழே சரித்து அவள் மேல் விழுந்தவன் அவளின் செவ்விதழை சிறை செய்தான்.
“அரசே என்ன இது, வெளியில் சேவகிகள் இருக்கிறார்கள்”
“முத்தம் தேவி” கூறியவன் அவளின் பட்டு கன்னத்தில் இதழைப் பதித்தான்.
அவனின் கறுத்த புஜத்தில் கைவைத்து தள்ளியவள் அவன் மேல் சரிய, அவளின் முழுதாக நனைந்த உடை அவளின் அழகை அவனுக்கு எடுத்துக் காட்ட, கிறங்கிப் போனான் அந்த அழகு தேவியின் தேவன்.
அவளில் கிறங்கி, உருகி, மருகி நீராடிக் கொண்டிருந்தனர் அந்த காதல் ஜோடிகள்... அவர்களின் காதலும், உருகலும் மேலும் தொடர நாம் அவர்களை தொந்தரவு செய்யாமல் வாழ்த்தி விடைபெறுவோம்.
...நன்றி...