அப்பொழுது அங்கே வந்த ஜிஷா "என்ன அஸ்லன் .... என் ஃபரெண்ட்ஸ் முன்னாடி என்னை அசிங்கப்படுத்தி பார்குறீங்களா..."என அவனைக் கூர்ந்துப் பார்த்துக்கொண்டே கேட்டாள்.
"ஜிஷா " என பதறியவன்,அவளது முறைப்பைக் கண்டு உடனே,"நீ என்னைத் தப்பா புரிஞ்சி வைத்திருக்க ... நான் உன்னை மனப்பூர்வமா காதலிக்கிறேன்... அதை உனக்குப் புரிய வைக்கத் தான் வந்திருக்கிறேன் ...என் காதல் உனக்கு உன்னை அசிங்கப்படுத்துற மாதிரி இருக்குதா ???"எனக் கண்களில் வலியுடன் கேட்டான் அஸ்லன் .
"காதலா...?!?!?!"என அதீத வெறுப்பில் முகம் சுருக்கியவள்,"என்னைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு அஸ்லன் ... அன்னைக்கு என்னைப் பார்த்ததும் எனக்கு முத்தம் கொடுத்த ... நான் கூட நீ என் மேல உள்ள ஆசையில் தான் குடுத்தன்னு நினைத்தேன் .... ஆனால் என்னாச்சு ஏஞ்சல் உன்னை லவ்வர்னு சொல்றா நீயும் பேசாம அப்படியே நிக்கிற ..இப்போ வந்து என்னை காதலிக்கிறேன்னு சொல்ற ... என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது ம்ம்ம்ம் உன் பணத்துக்காக டேலி உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு இருக்காங்களே அந்த பொண்ணுங்கள்ள ஒருத்தி மாதிரி தெரியுதா ???"என ஆவேசமாகக் கேட்டாள்.
"அப்படி சொல்லாத ஜிஷு ..என் காதல் என்ன உனக்கு அவ்வளவு கேவலமா தெரியுதா...???"எனச் சிறிது குரலை உயர்த்தியவன்,பின் முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு,
"இங்கப் பாரு ஜிஷா ...நான் உன்னைப் கஷ்டப்படுத்திட்டேன் ...இல்லைன்னு சொல்லல...நீ இல்லாத நாட்கள்ல பொண்ணுங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணிருக்கேன் ..அதையும் நான் மறுக்கல....ஆனா என் காதல் நிஜம்... அது நிஜம் ! எப்படி புரியவைக்கிறதென்று எனக்கு தெரியல ...ஃபிளீஸ் என்னைப் புரிஞ்சுக்கோ..
.என்னோட காதல் உன்னைப் பார்த்த முதல் நொடியிலேயே ஆரம்பிச்சுருச்சு...ஆனா அது சத்தியமா நீ சொல்ற மாதிரி உன் உடம்ப பார்த்து வந்த இனக்கவர்ச்சி கிடையாது...ஏன் உன் பேருக் கூட தெரியறதுக்கு முன்னாடியே வந்த அழகான உணர்வு அது..
அப்போ நான் இருந்த சூழ்நிலை உன்னை என்னால ஏத்துக்க முடியல ... இத்தனை வருஷத்துல நான் உன்னையே நினைச்சிட்டு வாழல தான் ஆனா என் மனசுல உன்னைத் தவிர வேற யாருக்கும் நான் இடமும் கொடுக்கலை .. அன்னைக்குக் கூட அதான் உன்னைப் பார்த்ததும் ஏதோ இவ்வளவு வருஷமா உனக்காகத்தான் காத்துக்கிட்டுருந்த மாதிரி ஒரு உணர்வு, ஏன் வந்துச்சுன்னு எனக்கே தெரியல அதான் ஆசையில முத்தம் கொடுத்துட்டேன் ...
ஆனா அந்த உணர்வு உண்மை...என் காதல் உண்மை...அதனால தயவுசெய்து என்னையும்,என் காதலையும் புரிஞ்சுக்கிட்டு என்னை ஏத்துக்கோ ஜிஷு ..."என அஸ்லன் ஜிஷாவின் கண்ணசைப்பிற்காக தன் கர்வம்,வெட்கத்தை விட்டு கெஞ்சிக் கொண்டிருந்தான்.
" எனக்கு புடிக்கலை "
" ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி புடிச்சிருந்துச்சு , இப்போது மட்டும் புடிக்கலையா ??"
" நான் காதலிச்ச அஸ்லன் வேற .... இப்போ என் முன்னாடி நிற்கிற அஸ்லன் வேற "
" நான் தான் அது ... கொஞ்சம் என்னை பாரு என் கண்ணை பாரு என் காதல் உனக்கு புரியும் ... எனக்கு என்ன தகுதி இல்லையென்று நீ நினைக்கிற... என் காதலைக் கொஞ்சம் கன்சிடர் பண்ணக்கூடாதா ???"என ஆதங்கத்தோடு கேட்டான் அஸ்லன்
" போ அஸ்லன் ப்ளீஸ் "
"ஜிஷா நான் இப்பவும் பழைய அஸ்லன் தான் ... இனி எப்பவும் நான் ஒரே மாதிரிதான் இருப்பேன் ... உன் அஸ்லனா இருப்பேன் ...என்னை நம்பு ... இப்ப உன்மேல எனக்கிருக்குற காதல் என்றைக்குமே மாறாது...ஆனா அத நிரூபிக்க எனக்கு தெரியல ....ஆனா அதை காட்ட நீ எனக்கு ஒரு வாய்ப்பாச்சும் கொடு ஜிஷு ..."என மன்றாடினான்.
" உங்களைப் பத்தி தெரிஞ்சதுக்கு அப்பறம் என் மனசு உங்களை ஏத்துக்க மாட்டிக்குது அஸ்லன் .... உங்களை நம்பி என்னை ஒப்படைக்க நான் தயாராயில்ல... ஏற்கனவே என்னை ரொம்ப காயப்படுத்திடீங்க தெரிஞ்சே மறுபடியும் நம்ப எனக்கு விருப்பம் இல்ல..."என்று கடுமையுடன் கூறியவள் அவனைத் தவிக்கவிட்டு செல்ல முனைந்தாள்
அப்பொழுது நெஞ்சம் முழுவதும் வலியுடன் நின்றிருந்த அஸ்லனின் கண்கள் கலங்குவதைக் கண்டு வான்மகளுக்கே பொறுக்கவில்லை போலும்...அந்நேரம் பார்த்துச் சரியாக ஒரு பயங்கர சத்தத்துடன் இடி மின்னலுடன் மிரட்டவும் அங்கிருந்து செல்ல முனைந்த ஜிஷா பயத்தில் அஸ்லனை இறுக்கக் கட்டிக்கொண்டு அவன் நெஞ்சில் தஞ்சம் அடைந்தாள் .
ஒரு நொடி அஸ்லனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை...'இவள் இவ்வளவு நேரம் பேசியதிற்கும் ..???இப்போது செய்வதற்கும் சம்பந்தமே இல்லையே .???என்ன விளையாட்டு இது ??'எனக் குழம்பியவன் குனிந்து தன் நெஞ்சில் அழுந்தப் புதைந்திருந்த அவள் முகத்தை நிமிர்த்திப் பார்த்தான்.
இடியின் மிரட்டலில் மிரண்டு நடுங்கிக் கொண்டிருந்த ஜிஷா விடாமல் கொட்டிய மழையில் இன்னும் நடுங்கிக்கொண்டிருந்தாள்.அதைக் கண்ட அஸ்லனின் உணர்ச்சிகள் உயிர் பெற அவன் அறியாமலே அவன் கரங்கள் ஜிஷாவை தன் மார்போடு இறுக்கிப் பிடித்தன.
இந்த நொடி இப்படியே நீளாதா...???என்றிருந்தது அஸ்லன் ..தன்னவளை ரசித்தபடி தன் இமைமூடாமல் பார்த்திருந்தான் ...
ஜிஷாவின் மென் கரங்கள் அஸ்லனின் முன்புற சட்டை காலரை இறுக்கப் பற்றியிருந்தது.அவளது உச்சந்தலையில் விழுந்த மழைநீர்,பயத்தில் இறுக மூடியிருந்த அவளது இறகு இமைகளில் பட்டுத் தெறித்து,நாசி வழியே வழிந்து,அவளது ஸ்ட்ராபெரி இதழிலிருந்து சொட்டிக் கொண்டிருந்தது.
தன்னவளின் தேகம் முழுவதும் தன்னுடன் பிணைந்து இருக்க , அவனை மயக்கும் அவளது ஸ்ட்ராபெரி இதழ்களோ அவனது மார்பில் உரசிக்கொண்டிருந்தது .... அவனுக்குள் பற்றியெரிந்த மோகத்தீயை அணைக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்த அஸ்லனுக்கு இவ்வளவு நெருக்கத்தில் தன் நெஞ்சில் உரசிக்கொண்டிருக்கும் அவளது இதழ்களைக் கண்டதும் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போக ...
மெல்ல தன்னவளைஅணைத்திருந்த கரங்களை விடுவித்தவன் அவள் மென் வதனத்தை தன் இருக்கைகளில் ஏந்தி தன்னை மயக்கும் தன் ஸ்ட்ராபெரியை சுவைத்தான்
ஜிஷா அதிர்ச்சியில் இருக்க ..அஸ்லனுக்கோ காதல் மயக்கம்...ஜிஷா விடம் இருந்து எந்தவித எதிர்ப்பும் வராமல் இருக்கவும்,தன்னிலை மறந்து இன்னுமின்னும் அவள் இதழ்களில் அழுத்தமான முத்தத்தைப் பதித்தவனின் அவளது கன்னத்தை பற்றியிருந்த இரு கரங்களும் மெல்ல நகர்ந்து அவளது வெற்றிடையில் முற்றுகையிட்டிருந்தது ... அவனது இதழ்கள் இப்பொழுது அவளது கழுத்தில் புதைந்திருக்க ...
அவ்வளவு நேரம் அதிர்ச்சியில் உறைந்திருந்த ஜிஷா அஸ்லன் தன்னிடையை இறுகப் பற்றவும்,சுதாரித்துக்கொண்டவள் அஸ்லனை அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளி விட்டு நொடி கூட தாமதிக்காமல் அவன் கன்னத்தில் " பளார் " என்ற சத்தத்துடன் இடியென அடியை இறக்கினாள்.
ஆனால் அதன் பின் அவள் உதிர்த்த வார்த்தைகள் அதை விடவும் பலமாக அவன் நெஞ்சில் வந்து ஈட்டியைப் போல இறங்கியது..." சீ ...இவ்வளவு கேவலமானவனாடா நீ...வெக்கமா இல்ல உனக்கு....இவ்வளவு நேரம் நான் சொல்லியும் என்னை யூஸ் பண்ணிக்க தான பாக்குற ... உனக்கு எப்பவுமே இது தான் முக்கியம் அப்படி தான .. நினைப்பெல்லாம் இது மேல் தான் இருகுல்ல ... என் மனசு என்ன சொல்லுது அதுல எவ்வளவு கஷ்டம் இருக்கு அதெல்லாம் உனக்கு முக்கியமே இல்லை அப்படி தான ... உன்னைப் பொறுத்த வரைக்கும் நான் உனக்கு ஒரு சாய்ஸ் ... செலினா இல்லைனா நான் ...ஏஞ்சல் இல்லையென்றால் நான் ... நைட் பொண்ணுங்க கிடைக்கலைன்னா நான் அப்படி தான .... இப்போ உனக்கு என்ன நான் வேண்டும் இன்னைக்கு ஒரு நாளைக்கு உன் ஆசையா தீர்த்துக்கொள்ள நான் வேணும் அப்படி தானே, வா ... காதலித்த பாவத்துக்கு என்னை எடுத்துக்கோ ??? அதுக்கு அப்புறம் என் முன்னாடி நீ வரவே கூடாது ! "எனக் கொடிய வார்த்தையெனும் திராவகத்தை அவன் மீது வீசினாள்.
இந்நேரம் வரையில் தன் தவறை உணர்ந்து,அவள் அறைந்ததை ஏற்றுக்கொண்டு மௌனமாய் நின்ற அஸ்லன் அவளது வார்த்தைகளைக் கேட்டுக் கொதித்துப் போய் ரௌத்திரமானான் ...
இதுவரையில் தன்னிடம் கெஞ்சிக் கொண்டு பொறுமையாக இருந்தவன்,இப்போது தலைகால் புரியாத கோபத்துடன்,கை முஷ்டி இறுக,கண்கள் சிவக்க,தன்னை பார்த்த விதம் பார்த்து அதிர்ந்து நின்றாள் ஜிஷா....
- தொடரும்