arumai suvi dear
பார்ப்போம் சீதா...காலம் என்ன வைத்திருக்கிறது என்று....வாழ்த்துக்கள்
ஆஹா சுவிமா என்னச்சொல்ல எப்படிச் சொல்ல
வார்த்தைகள் அனைத்தும் வெகு அருமை நீங்க ஏன் கதை எழுதக்கூடாது
உங்களின் விமர்சனங்கள் படித்து நான் ஏற்கனவே சொல்லியது தான் முயற்சிக்கலாமே
Nice suvi kadhaiyea padikka veindam poola idhu pol epilouge padichavea kadhai padicha feeling pa nice ???மாலையும் வந்தது. அபராஜிதன் பிள்ளைகளை அழைத்துவர தன் ப்ளாக் ஆடியில் பறக்க...வீட்டிலோ ஏதோ பல வருடங்களுக்குப் பிறகு வரும் பிள்ளைகளை காணப்போவதைப் போன்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது பெண்களிடம். பிள்ளைகளுக்கு பிடித்த சிற்றுண்டியோடு பெண்களிருவரும் காத்திருக்க, ‘அம்மா’ என்ற ஆர்ப்பரிப்போடு ஓடி வந்தான் வில்லாளன். அவனை அள்ளி மடிதாங்கி, உச்சி முகர்ந்து பள்ளிக்கதைகளை பேசத்தொடங்கினாலும், பெண்ணவளின் மற்றொரு கை தன்மகளையும் வாஞ்சையோடு அணைக்கத்தவறவில்லை... தன்னவளின் கையணைப்பில் இருக்கும் தன் இருமகவுகளையும் மனநிறைவோடு பார்த்துக்கொண்டிருந்தான் அபராஜிதன் தன் மனையாளுக்கு அருகினில் அமர்ந்து கொண்டு. என்னதான் பேசினாலும் நாளைக்கு தான் பள்ளிக்கு செல்லப்போவதில்லை என்றே உதடுபிதுக்கினான் அவளின் செல்வன். அவனின் மனநிலையை மாற்றும் பொருட்டு “ குட்டா! உங்களுக்கு அப்பாம்மை குண்டு குண்டு குலோப்ஜாமூன் செய்து வச்சிருக்கேன் வந்து பாருங்க” என்று மருமகளின் மடியிலிருந்து தன் பேரனை எழுப்பி கூட்டிச்சென்றார் சுஜாதா.
ராதாவின் கைவளைவில் நின்றிருந்த ஆத்மிகா வில்லாளன் விட்டுச்சென்ற இடத்தை அழகாகவே நிரப்ப, குலாப்ஜாமூனை சாப்பிட்டு விட்டு அக்காவிற்கும் சின்ன கிண்ணத்தில் கொண்டு வந்த சின்னவர் தன்இடம் பறிபோன கோபத்தில் “இது என் அம்மா மடி , நானு தான் உக்காருவேன், நீ இதங்கு என்றான் ஒற்றைக் கையால் ஆத்மியை இழுத்துவிட்டுக்கொண்டே... இந்த மாதிரி என்றும் நடந்ததில்லை..காலையிலிருந்து முதன்முறையாக தாயைப் பிரிந்திருந்த பிஞ்சு தன் உரிமைப் போராட்டத்தை தொடங்க, கேட்ட வார்த்தையில் விதிர்விதிர்த்து போனாள் ராதா.
ஆனால் இது எதுவுமே ஆத்மிக்கு இல்லை போலும், “ஹாங்...இது என்னோட ‘அம்மா’ மடி நீ தூரப்போடா” என்று வாகாக ராதாவின் கழுத்தைக்கட்டிக்கொண்டு “அப்படித்தானேம்மா” என்று ராதாவைத் துணைக்கழைத்தாள்.
ஒருவினாடி, ஒரே ஒருவினாடி கண்கள் குளமாக அந்தக்கண்களில் மின்னலின் வீச்சு வந்து போக ஆனந்தமயமாக தன் ஆதவனை நோக்கி விட்டு “ உங்க ரெண்டு பேருக்குமே அம்மா மடியில் இடமிருக்கு செல்லங்களா” என்று கூறியவள் வில்லாளனையும் இழுத்து அணைத்து மடிதாங்கி கொண்டாள்.
ஆத்மியிடம் இருந்து வந்த ‘ஆன்டி’ என்ற வார்த்தையை எப்படி இயல்பாக ஏற்றுக்கொண்டாளோ அதேபோல் ஆத்மியிடமிருந்து வந்த ‘அம்மா’ என்ற வார்த்தையில் அவளுள்ளம் பொங்குமாக்கடலைப் போல பொங்கினாலும் தன் பெண்ணரசி முன் இயல்பாக இருப்பது போல காட்டிக்கொண்டாள் பெண்ணவள்....
மனமெங்கும் சந்தோஷமும், நிம்மதியும் ஊற்றெடுக்க அந்த அழகான காட்சியை தன் கண்களினாலேயே படமெடுத்து தன் மனமெனும் பெட்டகத்தில் சேமித்துக்கொண்டான் அபராஜிதன்.
“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...”
மறுபடியும் முழுவதும் கதை படித்த உணர்வு எனக்கும்...Nice suvi kadhaiyea padikka veindam poola idhu pol epilouge padichavea kadhai padicha feeling pa nice ???
Hai mangala? sowkiyam dhane darly ?மறுபடியும் முழுவதும் கதை படித்த உணர்வு எனக்கும்...
??.நலம் நலமறிய ஆவல்...Hai mangala? sowkiyam dhane darly ?
தோழமைக்களுக்கு நடுவே நன்றி எதற்கு பேபி???