• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

“என் மாணவனை இழந்தது ஈடுசெய்ய முடியாத இழப்பு” விவேக் குறித்து சாலமன் பாப்பையா உருக்கம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SM Support Team

Moderator
Staff member
Joined
Apr 7, 2019
Messages
154
Reaction score
950
1618901801460.png

பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையாவிடம் நடிகர் விவேக் படித்தவர். விவேக் மரணம் பற்றிய தகவல் அறிந்ததும் சாலமன் பாப்பையா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது.
மதுரை,

நான் அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியாக பணியாற்றிய போது, நடிகர் விவேக் அங்கு மாணவனாக படித்துக்கொண்டு இருந்தார். நான் பேச்சுக்கலை என்ற தலைப்பில் அவருக்கு வகுப்பு எடுத்தேன்.

அந்த வகுப்பில் விவேக் வாரத்திற்கு 2 நாட்கள் படித்தார். அவர் கல்லூரியில் படிக்கும் போதே பல்வேறு நாடகங்களில் நடித்து வந்தார். சிறப்பாக நடித்தற்காக பல்வேறு பரிசுகளையும் பெற்று இருக்கிறார். அவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்.

எனவே அவர் சிறந்த நடிகராக வருவார் என எதிர்பார்த்தோம். அதன்படி திரை உலகில் மிகப்பெரும் நடிகராக உயர்ந்தார். பழகுவதற்கு இனிமையானவர். நகைச்சுவையோடு, நல்ல சிந்தனைகளையும் திரைப்படங்கள் மூலம் விதைத்தார்.

அவரது ஒவ்வொரு நகைச்சுவையிலும் ஒரு சிந்தனை இருக்கும். என்.எஸ்.கிருஷ்ணனுக்கு பிறகு நகைச்சுவையின் மூலம் சிந்திக்க வைக்கக்கூடிய சிந்தனையாளராகவும் இருந்தார். அதனால் அவரை சின்ன கலைவாணர் என்று மக்கள் அங்கீகரித்தனர். அப்படிப்பட்ட என் மாணவனை இழந்தது ஈடு செய்ய முடியாத இழப்பு. இவ்வாறு அவர் கூறினார்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top