Thanks abhi dear@Sugaaa sugaa is back.. Awesome ana review ma.. Varthaiyodu koodiya vannagal aasaimugathirku melum varnajaalathai kootti yulladhu..
Vazhthukkal saro ma..
@Sugaaa
சரோஜினியின்...
ஆசை முகம்...
View attachment 30382
எளிதில் கடந்து விட முடியாத எழுத்துக்கள்...
இரு முறை வாசித்தாலும்... சேமிக்கத் தூண்டும் எழுத்து...
View attachment 30384
இந்த நாவலை வாசித்த பின்... ஆசிரியரின் ஏனைய நாவல்களை வாசிக்கும் ஆவல் என்னுள்...
View attachment 30386
ஒவ்வொரு பதிவின் முடிவில் கவிதை நடையில் அத்தனை அழகு...
நாவலை வாசிப்பதற்கு முன்... காதலென்றால் காவியத்திலும்... நாடகத்திலும் மட்டுமே பார்க்கலாம் என்ற எண்ணங்கள் தான்...
View attachment 30387
நாவலை வாசித்த பின் எதார்த்தத்தில் உள்ள அன்பையும்... காதலையும்... உணர வைக்கும்...
ஆசை முகத்தில்... இரு மனங்களின் வயது வித்தியாசம் பதினெட்டு ஆண்டுகளாம்...
View attachment 30388
எழுத்தாளரின் எழுத்துக்களில் (கருத்தினில் ) முதிர்வு தெரிந்தாலும்... இளமை ததும்பும் எழுத்து...
நான் அதிகமாகரசித்து வாசித்த எழுத்தாளரின் எழுத்துக்களில் கொஞ்சம் மட்டும் உங்கள் பார்வைக்காக...
View attachment 30389
ஆசை முகம்...
View attachment 30385
குணமென்ன...
குலமென்ன...
குறைவென்ன... குற்றமென்ன...
நிறைவென்ன... வயதென்ன...
வளர்ப்பென்ன... வளமென்ன...
வசதியென்ன... வாய்ப்பென்ன...
View attachment 30383
நிர்பந்தமென்ன... நிராகரிப்பென்ன...
நிஜமென்ன... நிழலென்ன...
நிறைவென்ன...
எந்த எதிர்பார்ப்புமில்லா ஏக மனதுடன்... சரிபாதியாய் ஏற்றுக் கொள்ளல்...!
சங்கடங்களை சகித்துக் கொள்ளல்...
காதலின் பூரணத்துவம்...!
விட்டுக் கொடுத்தல்...
சகிப்புத்தன்மை...
தியாகம்..
இவற்றில் விளைந்ததே குடும்பம்...
அன்பு ஒன்றே மாயம் செய்கிறது...
அது இல்லாத இடத்தில் வெறும் காயமே உண்டாகிறது...!!
சம்சாரியின் சாமர்த்தியங்களாக... எழுத்தாளர் சொன்னது
சமரசம்...!
ஒருவரின் கோபத்தில் பதிலாகக் குரலுயர்த்தாது...
நியாயத்தில் குளிர் காய்ந்து...
பேச்சினைக் குறித்துக் கொண்டு...
எனக்கு ஒரு doubt... இங்கே குறைத்துக் கொண்டு வருமோ...
மௌனத்தை மனனம் செய்து...
இதயத்தை இலகுவாய் இயங்கச் செய்து...
இதழில் புன்னகையோடு...
எதிரெதிரே நடவாததுபோல கடந்திட்டு...
வாய்ப்பு கிட்டும் நேரம்...
வாகாய் பயன்படுத்தி...
நோகாமல் எடுத்துரைத்து...
நோக்கம் நிறைவேறிட நோவில்லை...!
நொந்தாலும் அறிவின் நிலை புரிந்து கொண்டு...
விட்டுத்தந்திடும் வல்லமையை வளர்த்துக் கொண்டால்...
சம்சாரியின் சாமர்த்தியம்... சத்தியமாய் சாதித்திடும்...
சமரசம் சாத்தியமே...!!!
எழுத்தாளர் அவரின் கதாபாத்திரம் மூலமாக வாழ்வின் சூட்சுமம் உணர்த்துகிறார்...
வாழ்த்துக்கள் ஆசிரியரே...
உங்கள் கவிதையும்... தமிழும் அவ்வளவு இனிமை.
நன்றி குஹா பேபிஅருமை டாலி படங்களோடு கலந்து ஆசை முகம் மனசுல பசக்கனு ஒட்டிகிச்சு . வாழ்த்துகள் ஆத்தர் ஜி