En story comments kuraivunu feel pannen
partha fb la niraya irundhuchi
Facebook la niraya per comments pannirukinga
Romba thanks da ellarukum.
வழக்கம் போல எழுந்தவன் .
குளித்து விட்டு அப்பா படத்தை வணங்கினான். பின்பு காலை உணவருந்தினான்.
லட்சுமியிடம் காலேஜ்க்கு அப்ளிகேஷன் பார்ம் வாங்க பணத்தை வாங்கிக்கொண்டு கடைத்தெருவிற்கு சென்றவன் . தனது நண்பர்களுடன் ,
வாங்கிவிட்டு வரும் வழியில் " எனக்கு காலேஜ் சீட் கிடைக்குமா? " என்றான் வருத்தமாக சோமு ,
"கண்டிப்பாக கிடைக்கும் டா " என்று தெம்பேற்றினர். முகிலும் கதிரும்,
அப்படியே பேசிக்கொண்டே சேமியா வீட்டின் பக்கம் நடந்தனர்.
முகிலன் வருவதை பார்த்து வேப்பிலை அரைக்க சென்றால்,
சேமியாவோ குளிப்பதற்கு வேப்பிலை அரைத்து வைத்திருந்தாள்.
வேப்பிலை அரைத்து கைது வலி வேறு , மஞ்சள் அரைக்க முகிலன் வரும் வரை காத்திருந்தாள் .
முகிலனும் சரியாக மாட்டிகொண்டான்.
சோமுவும் கதிரும் மதி வீட்டினுள் நுழைந்தனர்.
"என்ன சேமியா என்ன பண்ற? " என முகிலன் கேட்க
"குளிக்கிறதுக்கு வேப்பிலை அரைச்சிட்டேன். மாமா பச்சை மஞ்சள் அரைக்கனும் , கை எல்லாம் வலிக்குது. என்றாள் அப்பாவியாக சேமியா,
"சரி குடு நான் அரைச்சி தாரேன் . என்றான் முகிலன் ,
"மஞ்சள் அரைச்சி பழக்கம் இருக்கா மாமா? " என்று சேமி ஆச்சரியத்துடன் வினவ ,
"அம்மாத்தாவுக்கு அரைச்சி குடுப்பேன் என்றான் முகிலன் "
" சரி மாமா " என்று அரைப்பதற்கு இடமளித்தாள் .
முகிலனும் கடகடவென்று மஞ்சள் அரைத்துவிட்டான்.
அரைத்தவற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொடுத்தான் .
வேப்பிலை எடுக்கும் சாக்கில் வேண்டும் என்று வேப்பிலை கிண்ணத்தை தட்டி விட்டாள். முகிலன் இடது கையில் சாடையாக பட்டடது. முகிலனோ வேப்பிலை தானே என்று மஞ்சள் அரைத்த கைகளால் நன்றாக தேய்த்து விட்டான் .
"சாரி மாமா தெரியாம பண்ணிட்டேன் ". என்றாள் நமுட்டு சிரிப்புடன் ,
முகிலனும் சாதாரணமாக எண்ணி விட்டு விட்டான்.
"என்ன சேமியா ? கீழ நிறைய ஜவுதாள் இருக்கு,
"அது வந்து மாமா எல்லாம் ஒதுக்கி வச்சிருக்கேன் வீசுரதுக்கு"…..! என்றாள் சேமியா ,
கதிரும் சோமுவும் வெளியே வர முகிலனும் இணைந்து கொண்டான் அவர்களுடன்,
"என்னடா உன் கை எல்லாம் மஞ்சளா இருக்கு ?" என்று சோமு கேட்க,
"பாவம் டா கைவலியாம் சேமியாவுக்கு அதன் மஞ்சள் அரைச்சு குடுத்தேன் " , மகிழ்வுடன் முகிலன் ,
"அரைச்சு மட்டும் குடுத்தியா ?அவ மேல அப்பியும் விட்டியா" ? என்று கதிர் குதர்க்கமாக கேட்டான்.
"ஏன்டா கதிரு உன் புத்தி இப்படி எல்லாம் போகுது? அரைச்சு மட்டும் குடுத்தேன் . அப்பி விடனும் ஆசை தான் எனக்கு மட்டும் சொந்தமானதும்…..! குதூகலமாக பதில் அளித்தான் முகிலன் ,
"அப்போ யாரு உன் கைல மஞ்சள் அப்புன?" என்றான் சோமு ,
"கடவுளே இவைங்க என்னைய படுத்துறாய்ங்களே….! என்று நொந்துக்கொண்டு வேப்பிலை கிண்ணம் கையில் கவிழ்ந்ததை கூறி முடிக்கும் முன் லேசாக அரிக்க ஆரம்பித்தான் கையை முகிலன் , கைகளில் மஞ்சள் கலந்து இருப்பதால் அரிப்பதற்கு சில வினாடிகள் எடுத்தது .
என்னாடா முகிலா கை அரிக்குதா இப்படி போட்டு அரிக்குற ? பதரிப்போய் சோமு கேட்க,
"இவ்வளவு நேரம் நல்ல தான் இருந்தேன். என்ன ஆச்சுன்னு தெரியல டா "என்றான் கையை அரித்து கொண்டே முகிலன் ,
"முகிலா நல்லா யோசித்து சொல்லு வேப்பிலை தானே உன் கைல கொட்டிச்சு " கதிர் கேட்க , ஆமாம் என்றான் முகிலனும் ,
"சேமியா உன்னை பழி வாங்கிட்டா போல முகிலா நீ அவளை கிள்ளி விட்டாய் தானே! " என்றான் சோமு
ஆத்தி…….. சேமியா உனக்கு ஆப்பு வைச்சிட்டா முகிலா கை எப்படி சிவந்து போச்சு பாரு இது கண்டிப்பா காஞ்சொறி அரிப்பு செடியாதான் இருக்கும் என்றான் கதிர் ,
ஆமாடா பக்கதுல ஜவுதாள் இருந்துச்சு ஏன் வைச்சுருக்கனு கேட்டேன்.
வீசுரதுக்கு மாமானு சொன்ன அத கை உள்ள போட்டு பத்திரமா அரைச்சி இருக்கா போல பாவி இப்படி எல்லாம் பண்ணுவனு நினைக்கலயே டா என்று நொந்து கொண்டான் முகிலன் ,
அரிப்பு தாங்க முடியாமல் மண்ணை அள்ளி தேய்த்து கொண்டான். முகிலன் , லேசாக உதிரத்துளிகள் எட்டிப் பார்த்து வெளியே…..! ,
"சீக்கிரம் அம்மத்தா கிட்ட போகலாம்". முகிலன் என்றான் சோமு ,
விரைவாக வீட்டை அடைந்தனர்.
"அம்மத்தா முகிலனுக்கு கை எல்லாம் ஒரே அரிப்பு என்றான் கதிர் ,
"என்ன ராசா ஆச்சு கையை காமி என்றார்." சீதா பாட்டி ,
கையை காமித்தவுடன் என்னனையா எப்படி வந்தது என்று சீதா பாட்டி கேட்க ,தெரியாமல் அரிப்பு செடிய தொட்டுட்டேன் . என்று சமாளிக்க ,
கதிர் " அம்மத்தா சேமியா. ….. " என்று ஆரம்பிக்க முகிலன் கண்ணை காமித்தான் வேண்டாம் என்று ,
"சேமியா யா தாதா அ அ அ ப ப ……… அது ஒன்னும் இல்லை அம்மத்தா " என்றான். கதிர் , என்ன கதிரு உளர்ற ? என்றார் அம்மத்தா ,
"அது ஒன்றும் இல்லை அம்மத்தா வரும் வழியில் சேமியாவை பார்த்தோம். அதத்தான் கதிர் புலம்புறான் " . என்று சமாளித்தான்.சோமு,
"கற்பூரவள்ளி செடிய ஆஞ்சிட்ட வாயா கதிரு என்றார் ,
சோமு உரல் உலக்கை எடுத்துட்டு வாயா " என்றார் அம்மத்தா,
இருவரும் கேட்டவற்றை சீதா பாட்டியிடம் கொடுத்தனர். கற்பூரவள்ளி இலைகளை நன்றாக இடித்து அதன் சாற்றை எடுத்து அரிப்பு இருக்கும் இடத்திற்கு தேய்த்து விட்டார் அம்மத்தா , சில வினாடிகள் கழித்து அரிப்பு நிண்டது. கொஞ்சம் எரிச்சலையும் ஏற்படுத்தியது .
" டாக்டர் கிட்ட போய்ட்டு வரலாம் ராசா" என்றார் அம்மத்தா ,
சரி என்று கிளம்பினான் முகிலன் , மருத்துவரை அணுகினார்கள். .
எல்லாவற்றையும் விசாரித்து விட்டு " மஞ்சள் பூசிய கை என்பதால் ஆபத்து குறைவு , மண்ணை அள்ளி தேய்க்காவிட்டால் மருந்தே தேவையில்லை . என்றார் டாக்டர் கொஞ்சம் நிம்மதி அடைந்தார் சீதா பாட்டி ,
குளிசை மற்றும் தைலம் கொடுத்தார். இவற்றை சரிவர எடுத்துக் கொண்டால் சீக்கிரம் சரி ஆகிரும் என்றார் டாக்டர் ,
வீட்டிற்கு வந்து நாற்காலியை போட்டு அமர்ந்து "அப்ளிகேஷன் பார்ம் ஃபில் பண்ணிருவோம் "என்றான் நண்பர்களிடம்,
அவர்களோ "இப்ப வேணாம் டா நீ கொஞ்சம் தூங்கி எழுந்து அப்புறம் எழுதலாம் என்றார்கள் " கதிரும் சோமுவும் ,
அதே இடத்தில் அம்மத்தாவிற்கு ஒத்தாசையாக கதிரும் சோமுவும் ஆற்றில் மீன் பிடித்து கொடுத்தார்கள். இரண்டு மணி நேரங்கள் நன்கு உறங்கியவன் வயிற்றில் ஏதோ ஒரு சத்தம் வந்து எனக்கு பசிக்கிறது என்று எழுப்பியது முகிலனை ,
சீதா பாட்டி பழைய சாதத்தை மோர் சேர்த்து கரைத்து கொண்டிருக்க இது தான் அம்மத்தா வேண்டும் என்றான் . பிடிவாதமாய் நின்றான் முகிலன்,
உங்கள மூணு பேருக்கும் சாதம் வடிச்சு ஆத்து மீன் வறுத்து சாம்பார் வச்சு இருக்கேன் அத சாப்பிடுங்கையா என்றார் சீதா பாட்டி ,
அத நீங்க சாப்பிடுங்க அம்மத்தா இத நாங்க சாப்பிடுகிறோம். என்று கெஞ்சி ஒரு மாதிரி பழங்கஞ்சியை வாங்கி விட்டான். அம்மத்தாவிடம் சின்ன வெங்காயம் மட்டும் உரித்து கேட்டிருந்தான். சின்ன வெங்காயத்தை மீன் வறுவலும் ஒரு தட்டில் இட்டு கொடுத்தார்.
ஒரு பானைக்குள் மூவரும் கையிட்டுச் சாப்பிட்டது ஒரு சுகமே…!
வறுத்த மீனும் சின்ன வெங்காயமும் சுவையை ஏற்றி நாவில்
உதட்டிலும் நடனமிடும் பழங்கஞ்சி வெயிலில் உடலுக்கு இதமே….!
அம்மாத்தா கை பக்குவமே தனி….. மாறி மாறி வர்ணித்து விட்டு மூவரும் அப்ளிகேஷன் நிரப்ப ஆரம்பித்தனர்.
8 km ஒரு காலேஜ் , 10 km இன்னும் ஒரு காலேஜ் இரண்டுக்கும் அப்ளிகேஷன் பார்ம் போடலாம் . என்று முடிவு செய்து ஆளுக்கு இரண்டாக மொத்ததில் ஆறு பார்ம் நிரப்பி விட்டு போஸ்ட் செய்தனர்.
கதிர் முகிலனை பார்த்தும் "என்னடா சேமியா பற்றி யோசித்து கொண்டுருக்கியா? " ,
"ஆமாம் டா குமாரி ஆகிட்டா ஆனா அவள் செய்யுற வேலை எல்லாம் குழந்தை தானமா இருக்கே நினைச்ச சிரிப்பா இருக்கு " என்றான் முகிலன் ,
"அடபாவி உன் கை புண் ஆகியும் உனக்கு புத்தியில் வரலயா" என்றான் கிண்டலாக சோமு,
"இப்டி இருந்த அவள எப்டி பாஸ் பண்ண வைப்ப முகிலா" ? என்று கதிர் கூற , "பார்க்க தானே போற "என்று முகிலன் பதில் அளித்தான் .
கணக்கு வகுப்பு ஆரம்பிக்க சேமியா பத்து நிமிடம் தாமதமாக வந்தாள்.
மதியின் அருகில் அமர்ந்து கொண்டால் ' அரிப்பு செடி வேலையை காட்டவில்லையோ….. ! சற்று குனிந்து கையை பார்த்தவள் ஐயோ இப்டி புண் ஆகிட்டே மாமா என்னை திட்டவே இல்லை' . மனதில் வேதனை வேறு சேமிக்கு ,
பாடத்தை கவனித்தாள். சந்தேகம் ஒன்று தோன்ற அதை முகிலனிடம் கேட்க , அதற்கு முகிலன் " கதிரு இதை கொஞ்சம் சேமியாக்கு விளக்கப்படுத்து" , என்று சொல்லிவிட்டு , மற்ற மூவருக்கும் பாடம் கற்ப்பிக்க தொடர்ந்தான்.
சேமியா மனம் சலனமாயிற்று கதிர் சந்தேகத்தை சரி செய்ய " கதிர் அண்ணா மாமா ஏன் என் கூட சரியா பேச மாட்டேங்கிறார். " என்று சேமியா கேட்க
"நீ பண்ணி வைச்ச காரியத்துக்கு அவன் நாலு அரை அரைஞ்சி இருக்கனும் உன்னை பாவம்னு சும்மா இருக்கான். " என்றான் கதிர்
(நடந்தவற்றை கூறினான் சேமியாவுக்கு கதிர் )
"சும்மா விளையாட்டா தான் பண்ணுனேன் கதிர்ண்ணா இப்படி ஆகும் நினைக்கல?" சேமி கவலையுடன் கூற ,
"போ போய் பாடத்தை கவனி "என்றான் கதிர் ,
பாடம் எடுத்து முடித்து விட்டான் முகிலன் இவள் வந்து அமர ஒன்றும் புரியவில்லை. மதியிடம் கேட்டு தெரிந்து கொள் என்று முகிலன் கூறிவிட்டு , மூவரும் கீழே சென்றார்கள்.
ஏன்டி எப்பவும் நச்சுனு ஆப்பிள் மாதிரி இருப்ப இன்னைக்கு நசுங்கி போன ஆப்பிள் மாதிரி இருக்க ? என்று மதி விளையாட்டாக சேமியிடம் கேட்க ,
"போடி உனக்கு என்ன பார்த்தா கிண்டலா இருக்கு "? என்று சோகத்துடன் சேமியா,
"அப்புறம் ஏன்டி மூக்க சிந்திக்கிட்டு இருக்க "? என்று மதி கேட்க ,
"அது வந்து….! மதி கணக்கு பாடம் கோட்டைய விட்டேனா? அதுக்கு மாமா கிள்ளினார் . பழி வாங்கணும்னு அரிப்பு செடிய அரைச்சி வேப்பிலைனு சொல்லி தெரியாம கொட்டுறேனு வேணும்ன்னு கொட்டிவிட்டேன். மாமா அரிப்பு தாங்க முடியாம மண்ணை அள்ளி தேய்ச்சுட்டாராம். மதி " என சேமி கூற,
"பாவம் டி முகில் அண்ணா , எவ்வளவோ இடத்துல காசு வாங்கி பாடம் எடுக்குறாங்க நீ என்னன்னா ,அதை விட உன் விழா நேரம் அண்ணா தானே மாங்கு மாங்குனு வேலை செஞ்சாரு அதுவும் உன் சித்தி படுத்தின பாடு இருக்கே பாவம் டி உன் மாமன்…..! " என்றாள் மதி ,
"நீதானே அரிப்பு செடி இலைய அரைச்ச உனக்கு மட்டும் ஏன் அரிக்கல? " என மதி கேட்க
"ஜவுதாள் கைக்குள்ள போட்டுக்கிட்டு அரைச்சேன்….! பல்லை இளித்தாள்.கொண்டு சேமியா ,
"அடி பாவி" என்றால் மதி ,
" நாளைக்கு மாமாவ எப்படியாவது சமாதானம் பண்ணிடுவேன் மதி " என்றால் சேமியா,
Aduththa epi la papom epdi samalikiranu
Ithu varaikum unga anba commentsa
koduththa nalla ullangaluku romba nanri
Indha episodekum unga nirai , kuraigala
Marakkama comment pannirunga en iniya tholamaikale
Thamil kawshi
உங்களில் ஒருத்தி
partha fb la niraya irundhuchi
Facebook la niraya per comments pannirukinga
Romba thanks da ellarukum.
வழக்கம் போல எழுந்தவன் .
குளித்து விட்டு அப்பா படத்தை வணங்கினான். பின்பு காலை உணவருந்தினான்.
லட்சுமியிடம் காலேஜ்க்கு அப்ளிகேஷன் பார்ம் வாங்க பணத்தை வாங்கிக்கொண்டு கடைத்தெருவிற்கு சென்றவன் . தனது நண்பர்களுடன் ,
வாங்கிவிட்டு வரும் வழியில் " எனக்கு காலேஜ் சீட் கிடைக்குமா? " என்றான் வருத்தமாக சோமு ,
"கண்டிப்பாக கிடைக்கும் டா " என்று தெம்பேற்றினர். முகிலும் கதிரும்,
அப்படியே பேசிக்கொண்டே சேமியா வீட்டின் பக்கம் நடந்தனர்.
முகிலன் வருவதை பார்த்து வேப்பிலை அரைக்க சென்றால்,
சேமியாவோ குளிப்பதற்கு வேப்பிலை அரைத்து வைத்திருந்தாள்.
வேப்பிலை அரைத்து கைது வலி வேறு , மஞ்சள் அரைக்க முகிலன் வரும் வரை காத்திருந்தாள் .
முகிலனும் சரியாக மாட்டிகொண்டான்.
சோமுவும் கதிரும் மதி வீட்டினுள் நுழைந்தனர்.
"என்ன சேமியா என்ன பண்ற? " என முகிலன் கேட்க
"குளிக்கிறதுக்கு வேப்பிலை அரைச்சிட்டேன். மாமா பச்சை மஞ்சள் அரைக்கனும் , கை எல்லாம் வலிக்குது. என்றாள் அப்பாவியாக சேமியா,
"சரி குடு நான் அரைச்சி தாரேன் . என்றான் முகிலன் ,
"மஞ்சள் அரைச்சி பழக்கம் இருக்கா மாமா? " என்று சேமி ஆச்சரியத்துடன் வினவ ,
"அம்மாத்தாவுக்கு அரைச்சி குடுப்பேன் என்றான் முகிலன் "
" சரி மாமா " என்று அரைப்பதற்கு இடமளித்தாள் .
முகிலனும் கடகடவென்று மஞ்சள் அரைத்துவிட்டான்.
அரைத்தவற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொடுத்தான் .
வேப்பிலை எடுக்கும் சாக்கில் வேண்டும் என்று வேப்பிலை கிண்ணத்தை தட்டி விட்டாள். முகிலன் இடது கையில் சாடையாக பட்டடது. முகிலனோ வேப்பிலை தானே என்று மஞ்சள் அரைத்த கைகளால் நன்றாக தேய்த்து விட்டான் .
"சாரி மாமா தெரியாம பண்ணிட்டேன் ". என்றாள் நமுட்டு சிரிப்புடன் ,
முகிலனும் சாதாரணமாக எண்ணி விட்டு விட்டான்.
"என்ன சேமியா ? கீழ நிறைய ஜவுதாள் இருக்கு,
"அது வந்து மாமா எல்லாம் ஒதுக்கி வச்சிருக்கேன் வீசுரதுக்கு"…..! என்றாள் சேமியா ,
கதிரும் சோமுவும் வெளியே வர முகிலனும் இணைந்து கொண்டான் அவர்களுடன்,
"என்னடா உன் கை எல்லாம் மஞ்சளா இருக்கு ?" என்று சோமு கேட்க,
"பாவம் டா கைவலியாம் சேமியாவுக்கு அதன் மஞ்சள் அரைச்சு குடுத்தேன் " , மகிழ்வுடன் முகிலன் ,
"அரைச்சு மட்டும் குடுத்தியா ?அவ மேல அப்பியும் விட்டியா" ? என்று கதிர் குதர்க்கமாக கேட்டான்.
"ஏன்டா கதிரு உன் புத்தி இப்படி எல்லாம் போகுது? அரைச்சு மட்டும் குடுத்தேன் . அப்பி விடனும் ஆசை தான் எனக்கு மட்டும் சொந்தமானதும்…..! குதூகலமாக பதில் அளித்தான் முகிலன் ,
"அப்போ யாரு உன் கைல மஞ்சள் அப்புன?" என்றான் சோமு ,
"கடவுளே இவைங்க என்னைய படுத்துறாய்ங்களே….! என்று நொந்துக்கொண்டு வேப்பிலை கிண்ணம் கையில் கவிழ்ந்ததை கூறி முடிக்கும் முன் லேசாக அரிக்க ஆரம்பித்தான் கையை முகிலன் , கைகளில் மஞ்சள் கலந்து இருப்பதால் அரிப்பதற்கு சில வினாடிகள் எடுத்தது .
என்னாடா முகிலா கை அரிக்குதா இப்படி போட்டு அரிக்குற ? பதரிப்போய் சோமு கேட்க,
"இவ்வளவு நேரம் நல்ல தான் இருந்தேன். என்ன ஆச்சுன்னு தெரியல டா "என்றான் கையை அரித்து கொண்டே முகிலன் ,
"முகிலா நல்லா யோசித்து சொல்லு வேப்பிலை தானே உன் கைல கொட்டிச்சு " கதிர் கேட்க , ஆமாம் என்றான் முகிலனும் ,
"சேமியா உன்னை பழி வாங்கிட்டா போல முகிலா நீ அவளை கிள்ளி விட்டாய் தானே! " என்றான் சோமு
ஆத்தி…….. சேமியா உனக்கு ஆப்பு வைச்சிட்டா முகிலா கை எப்படி சிவந்து போச்சு பாரு இது கண்டிப்பா காஞ்சொறி அரிப்பு செடியாதான் இருக்கும் என்றான் கதிர் ,
ஆமாடா பக்கதுல ஜவுதாள் இருந்துச்சு ஏன் வைச்சுருக்கனு கேட்டேன்.
வீசுரதுக்கு மாமானு சொன்ன அத கை உள்ள போட்டு பத்திரமா அரைச்சி இருக்கா போல பாவி இப்படி எல்லாம் பண்ணுவனு நினைக்கலயே டா என்று நொந்து கொண்டான் முகிலன் ,
அரிப்பு தாங்க முடியாமல் மண்ணை அள்ளி தேய்த்து கொண்டான். முகிலன் , லேசாக உதிரத்துளிகள் எட்டிப் பார்த்து வெளியே…..! ,
"சீக்கிரம் அம்மத்தா கிட்ட போகலாம்". முகிலன் என்றான் சோமு ,
விரைவாக வீட்டை அடைந்தனர்.
"அம்மத்தா முகிலனுக்கு கை எல்லாம் ஒரே அரிப்பு என்றான் கதிர் ,
"என்ன ராசா ஆச்சு கையை காமி என்றார்." சீதா பாட்டி ,
கையை காமித்தவுடன் என்னனையா எப்படி வந்தது என்று சீதா பாட்டி கேட்க ,தெரியாமல் அரிப்பு செடிய தொட்டுட்டேன் . என்று சமாளிக்க ,
கதிர் " அம்மத்தா சேமியா. ….. " என்று ஆரம்பிக்க முகிலன் கண்ணை காமித்தான் வேண்டாம் என்று ,
"சேமியா யா தாதா அ அ அ ப ப ……… அது ஒன்னும் இல்லை அம்மத்தா " என்றான். கதிர் , என்ன கதிரு உளர்ற ? என்றார் அம்மத்தா ,
"அது ஒன்றும் இல்லை அம்மத்தா வரும் வழியில் சேமியாவை பார்த்தோம். அதத்தான் கதிர் புலம்புறான் " . என்று சமாளித்தான்.சோமு,
"கற்பூரவள்ளி செடிய ஆஞ்சிட்ட வாயா கதிரு என்றார் ,
சோமு உரல் உலக்கை எடுத்துட்டு வாயா " என்றார் அம்மத்தா,
இருவரும் கேட்டவற்றை சீதா பாட்டியிடம் கொடுத்தனர். கற்பூரவள்ளி இலைகளை நன்றாக இடித்து அதன் சாற்றை எடுத்து அரிப்பு இருக்கும் இடத்திற்கு தேய்த்து விட்டார் அம்மத்தா , சில வினாடிகள் கழித்து அரிப்பு நிண்டது. கொஞ்சம் எரிச்சலையும் ஏற்படுத்தியது .
" டாக்டர் கிட்ட போய்ட்டு வரலாம் ராசா" என்றார் அம்மத்தா ,
சரி என்று கிளம்பினான் முகிலன் , மருத்துவரை அணுகினார்கள். .
எல்லாவற்றையும் விசாரித்து விட்டு " மஞ்சள் பூசிய கை என்பதால் ஆபத்து குறைவு , மண்ணை அள்ளி தேய்க்காவிட்டால் மருந்தே தேவையில்லை . என்றார் டாக்டர் கொஞ்சம் நிம்மதி அடைந்தார் சீதா பாட்டி ,
குளிசை மற்றும் தைலம் கொடுத்தார். இவற்றை சரிவர எடுத்துக் கொண்டால் சீக்கிரம் சரி ஆகிரும் என்றார் டாக்டர் ,
வீட்டிற்கு வந்து நாற்காலியை போட்டு அமர்ந்து "அப்ளிகேஷன் பார்ம் ஃபில் பண்ணிருவோம் "என்றான் நண்பர்களிடம்,
அவர்களோ "இப்ப வேணாம் டா நீ கொஞ்சம் தூங்கி எழுந்து அப்புறம் எழுதலாம் என்றார்கள் " கதிரும் சோமுவும் ,
அதே இடத்தில் அம்மத்தாவிற்கு ஒத்தாசையாக கதிரும் சோமுவும் ஆற்றில் மீன் பிடித்து கொடுத்தார்கள். இரண்டு மணி நேரங்கள் நன்கு உறங்கியவன் வயிற்றில் ஏதோ ஒரு சத்தம் வந்து எனக்கு பசிக்கிறது என்று எழுப்பியது முகிலனை ,
சீதா பாட்டி பழைய சாதத்தை மோர் சேர்த்து கரைத்து கொண்டிருக்க இது தான் அம்மத்தா வேண்டும் என்றான் . பிடிவாதமாய் நின்றான் முகிலன்,
உங்கள மூணு பேருக்கும் சாதம் வடிச்சு ஆத்து மீன் வறுத்து சாம்பார் வச்சு இருக்கேன் அத சாப்பிடுங்கையா என்றார் சீதா பாட்டி ,
அத நீங்க சாப்பிடுங்க அம்மத்தா இத நாங்க சாப்பிடுகிறோம். என்று கெஞ்சி ஒரு மாதிரி பழங்கஞ்சியை வாங்கி விட்டான். அம்மத்தாவிடம் சின்ன வெங்காயம் மட்டும் உரித்து கேட்டிருந்தான். சின்ன வெங்காயத்தை மீன் வறுவலும் ஒரு தட்டில் இட்டு கொடுத்தார்.
ஒரு பானைக்குள் மூவரும் கையிட்டுச் சாப்பிட்டது ஒரு சுகமே…!
வறுத்த மீனும் சின்ன வெங்காயமும் சுவையை ஏற்றி நாவில்
உதட்டிலும் நடனமிடும் பழங்கஞ்சி வெயிலில் உடலுக்கு இதமே….!
அம்மாத்தா கை பக்குவமே தனி….. மாறி மாறி வர்ணித்து விட்டு மூவரும் அப்ளிகேஷன் நிரப்ப ஆரம்பித்தனர்.
8 km ஒரு காலேஜ் , 10 km இன்னும் ஒரு காலேஜ் இரண்டுக்கும் அப்ளிகேஷன் பார்ம் போடலாம் . என்று முடிவு செய்து ஆளுக்கு இரண்டாக மொத்ததில் ஆறு பார்ம் நிரப்பி விட்டு போஸ்ட் செய்தனர்.
கதிர் முகிலனை பார்த்தும் "என்னடா சேமியா பற்றி யோசித்து கொண்டுருக்கியா? " ,
"ஆமாம் டா குமாரி ஆகிட்டா ஆனா அவள் செய்யுற வேலை எல்லாம் குழந்தை தானமா இருக்கே நினைச்ச சிரிப்பா இருக்கு " என்றான் முகிலன் ,
"அடபாவி உன் கை புண் ஆகியும் உனக்கு புத்தியில் வரலயா" என்றான் கிண்டலாக சோமு,
"இப்டி இருந்த அவள எப்டி பாஸ் பண்ண வைப்ப முகிலா" ? என்று கதிர் கூற , "பார்க்க தானே போற "என்று முகிலன் பதில் அளித்தான் .
கணக்கு வகுப்பு ஆரம்பிக்க சேமியா பத்து நிமிடம் தாமதமாக வந்தாள்.
மதியின் அருகில் அமர்ந்து கொண்டால் ' அரிப்பு செடி வேலையை காட்டவில்லையோ….. ! சற்று குனிந்து கையை பார்த்தவள் ஐயோ இப்டி புண் ஆகிட்டே மாமா என்னை திட்டவே இல்லை' . மனதில் வேதனை வேறு சேமிக்கு ,
பாடத்தை கவனித்தாள். சந்தேகம் ஒன்று தோன்ற அதை முகிலனிடம் கேட்க , அதற்கு முகிலன் " கதிரு இதை கொஞ்சம் சேமியாக்கு விளக்கப்படுத்து" , என்று சொல்லிவிட்டு , மற்ற மூவருக்கும் பாடம் கற்ப்பிக்க தொடர்ந்தான்.
சேமியா மனம் சலனமாயிற்று கதிர் சந்தேகத்தை சரி செய்ய " கதிர் அண்ணா மாமா ஏன் என் கூட சரியா பேச மாட்டேங்கிறார். " என்று சேமியா கேட்க
"நீ பண்ணி வைச்ச காரியத்துக்கு அவன் நாலு அரை அரைஞ்சி இருக்கனும் உன்னை பாவம்னு சும்மா இருக்கான். " என்றான் கதிர்
(நடந்தவற்றை கூறினான் சேமியாவுக்கு கதிர் )
"சும்மா விளையாட்டா தான் பண்ணுனேன் கதிர்ண்ணா இப்படி ஆகும் நினைக்கல?" சேமி கவலையுடன் கூற ,
"போ போய் பாடத்தை கவனி "என்றான் கதிர் ,
பாடம் எடுத்து முடித்து விட்டான் முகிலன் இவள் வந்து அமர ஒன்றும் புரியவில்லை. மதியிடம் கேட்டு தெரிந்து கொள் என்று முகிலன் கூறிவிட்டு , மூவரும் கீழே சென்றார்கள்.
ஏன்டி எப்பவும் நச்சுனு ஆப்பிள் மாதிரி இருப்ப இன்னைக்கு நசுங்கி போன ஆப்பிள் மாதிரி இருக்க ? என்று மதி விளையாட்டாக சேமியிடம் கேட்க ,
"போடி உனக்கு என்ன பார்த்தா கிண்டலா இருக்கு "? என்று சோகத்துடன் சேமியா,
"அப்புறம் ஏன்டி மூக்க சிந்திக்கிட்டு இருக்க "? என்று மதி கேட்க ,
"அது வந்து….! மதி கணக்கு பாடம் கோட்டைய விட்டேனா? அதுக்கு மாமா கிள்ளினார் . பழி வாங்கணும்னு அரிப்பு செடிய அரைச்சி வேப்பிலைனு சொல்லி தெரியாம கொட்டுறேனு வேணும்ன்னு கொட்டிவிட்டேன். மாமா அரிப்பு தாங்க முடியாம மண்ணை அள்ளி தேய்ச்சுட்டாராம். மதி " என சேமி கூற,
"பாவம் டி முகில் அண்ணா , எவ்வளவோ இடத்துல காசு வாங்கி பாடம் எடுக்குறாங்க நீ என்னன்னா ,அதை விட உன் விழா நேரம் அண்ணா தானே மாங்கு மாங்குனு வேலை செஞ்சாரு அதுவும் உன் சித்தி படுத்தின பாடு இருக்கே பாவம் டி உன் மாமன்…..! " என்றாள் மதி ,
"நீதானே அரிப்பு செடி இலைய அரைச்ச உனக்கு மட்டும் ஏன் அரிக்கல? " என மதி கேட்க
"ஜவுதாள் கைக்குள்ள போட்டுக்கிட்டு அரைச்சேன்….! பல்லை இளித்தாள்.கொண்டு சேமியா ,
"அடி பாவி" என்றால் மதி ,
" நாளைக்கு மாமாவ எப்படியாவது சமாதானம் பண்ணிடுவேன் மதி " என்றால் சேமியா,
Aduththa epi la papom epdi samalikiranu
Ithu varaikum unga anba commentsa
koduththa nalla ullangaluku romba nanri
Indha episodekum unga nirai , kuraigala
Marakkama comment pannirunga en iniya tholamaikale
Thamil kawshi
உங்களில் ஒருத்தி
Last edited: