கம்ப இராமாயணம் - சீதை கேட்ட வரம்
---------------------------------------------------------------
அசோகவனத்தில் அனுமன் சீதையை கண்டான். அப்போது, அனுமன் மூலம் சீதை இராமனிடம் ஒரு வரம் கேட்கிறாள்.
அது-
"நான் ஒரு வேளை இந்த அசோகவனத்திலேயே இறந்து விட்டால், மீண்டும் பிறந்து வந்து இராமனின் திரு மேனியை தீண்டும் வரம் சீதை தொழுது வேண்டினாள் "என்று இராமனிடம் சொல்லுவாய் என்றாள்.
இராமன் திருமேனி எப்படி பட்டது?....சீதையே சொல்லுகிறாள்....
--------------------------------------------
ஈண்டு நானிருந் தின்னுயிர் மாயினும்
மீண்டு வந்து பிறந்துதன் மேனியைத்
தீண்ட லாவதோர் தீவினை தீர்வரம்
வேண்டி னாள்தொழுது என்று விளம்புவாய்
--------------------------------------------
கம்பன் வார்த்தைகளை அனுபவித்து எழுதுகிறான். ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஒரு சுவை.
ஈண்டு = இங்கு, இந்த அசோகா வனத்தில்
நானிருந் தின்னுயிர் மாயினும் = நான் இருந்து இன்னுயிர் மாயினும். "இருந்து" , ஒருவேளை திரும்பி வராமல், இங்கேயே இருந்து என்று அர்த்தம்
மீண்டு வந்து பிறந்துதன் மேனியைத் = மீண்டு வந்து பிறந்து தன் மேனியை = மீண்டும் பிறந்து, இராமனின் மேனியை
தீண்ட லாவதோர் தீவினை தீர்வரம் = தீண்டல் ஆவது ஓர் தீவினை தீர் வரம் = இராமனின் மேனியை தீண்டினால் , தீவினைகள் எல்லாம் தீர்ந்து விடும்.
வேண்டி னாள்தொழுது என்று விளம்புவாய் = அதுவும் எப்படி கேட்டாள் ? "வேண்டினாள், தொழுது". கடவுளிடம் வேண்டுவது போல தொழுது வேண்டினாள்.
படித்ததில் பிடித்தது ??
---------------------------------------------------------------
அசோகவனத்தில் அனுமன் சீதையை கண்டான். அப்போது, அனுமன் மூலம் சீதை இராமனிடம் ஒரு வரம் கேட்கிறாள்.
அது-
"நான் ஒரு வேளை இந்த அசோகவனத்திலேயே இறந்து விட்டால், மீண்டும் பிறந்து வந்து இராமனின் திரு மேனியை தீண்டும் வரம் சீதை தொழுது வேண்டினாள் "என்று இராமனிடம் சொல்லுவாய் என்றாள்.
இராமன் திருமேனி எப்படி பட்டது?....சீதையே சொல்லுகிறாள்....
--------------------------------------------
ஈண்டு நானிருந் தின்னுயிர் மாயினும்
மீண்டு வந்து பிறந்துதன் மேனியைத்
தீண்ட லாவதோர் தீவினை தீர்வரம்
வேண்டி னாள்தொழுது என்று விளம்புவாய்
--------------------------------------------
கம்பன் வார்த்தைகளை அனுபவித்து எழுதுகிறான். ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஒரு சுவை.
ஈண்டு = இங்கு, இந்த அசோகா வனத்தில்
நானிருந் தின்னுயிர் மாயினும் = நான் இருந்து இன்னுயிர் மாயினும். "இருந்து" , ஒருவேளை திரும்பி வராமல், இங்கேயே இருந்து என்று அர்த்தம்
மீண்டு வந்து பிறந்துதன் மேனியைத் = மீண்டு வந்து பிறந்து தன் மேனியை = மீண்டும் பிறந்து, இராமனின் மேனியை
தீண்ட லாவதோர் தீவினை தீர்வரம் = தீண்டல் ஆவது ஓர் தீவினை தீர் வரம் = இராமனின் மேனியை தீண்டினால் , தீவினைகள் எல்லாம் தீர்ந்து விடும்.
வேண்டி னாள்தொழுது என்று விளம்புவாய் = அதுவும் எப்படி கேட்டாள் ? "வேண்டினாள், தொழுது". கடவுளிடம் வேண்டுவது போல தொழுது வேண்டினாள்.
படித்ததில் பிடித்தது ??