• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Matured content 1_கொய்த அரும்பு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bala5796

மண்டலாதிபதி
Joined
Oct 20, 2019
Messages
283
Reaction score
742
Age
27
Location
Panruti,cuddalore
தாயின் இடம் வந்த
தடம்
யேது அறியேன்...?

கழிவுகள் கலைய
இரு
உறுப்பு உண்டு அறிவேன்...

மூச்சடைக்க அழுதால்
பசி
ஆறும் அறிவேன்...

குழல் நெறித்து
துளை கிழித்தால்...!
உன்
பசி தீர்ப்பேன் அறியேன்...?

முகம் அறிந்தவரே...
உன் நிர்வாணத்திலும் எ
னக்கோ
நாணம் இல்லை...

நானோ...
அரைகுறை ஆடையில்
அங்கம் ஒழித்தவள்...

ஆடவன் என்றாலே
அழைத்து மகிழ்ந்தவள்...

அப்பன் முத்தத்தில்
அரை நாழி சிரித்தவள்...

அரைவயிற்றை நிரப்பிட
அன்னை குரல் கலைத்தவள்...

மார்பகம் தொலைத்ததால்
மங்கையென மறந்தவள்...

மங்கைமணம் யேதென்று
நங்கைகுணம் தொலைத்தவள்...

சிற்றெரும்பு சினத்தோடு
போர் புரிய மறுத்தவள்...

சில்வண்டு வாழ்வினை
சிறிது நேரம் கேட்டவள்...

காலடி பள்ளத்திலே
கை உயர்த்தி நின்றவள்...

இடுக்கையளவு இடமாகினும்
உரிமை கோரி நின்றவள்...

ஆண் போர்வை கொண்டவரே....

ஏழு நிலைகளில் என் வாழ்வு
அறிவாயோ...

பேதையானவளை மடந்தை என்று நினைத்தாயோ....

என்றாவது ஓர் நாள்...
உனக்கும்
பேதையொன்று பிறவாதோ...

கையிடையே அவளை அணைத்திட...
எவ்வுணர்வு உணர்வாயோ...?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top