பெரும்பற்று
எங்கள் அன்பின் சக்தி எனக்குத் தெரியும் அதனால்தான் தைரியம் அதிகமாக இருக்கிறது.
சித்தப்பா என் அருகில் வந்ததும் "இங்க எதுக்கு நிக்குற இந்த புள்ள எதுக்கு இங்க நிக்குது?" என்று கொஞ்சம் கோபமாக கேட்டார்.
'நான் காலேஜ்க்கு வந்தேன் இந்தப்புள்ள அவங்க தாத்தாவோட வந்துச்சு... அவர் அந்தக் கடைக்குப் போயிருக்காரு ' என்று சரளமான பொய்களோடு சமாளித்தேன்.....
"எதுல வந்த?" என்றார்
"மாகாவோட பைக்ல"
கோபமாக முறைத்துக் கொண்டே "சீக்கிரம் கிளம்பு" என்றார்.
அவர் சிரித்து நான் பார்த்ததேயில்லை.
ஆதிரை .. "ஏன் அத்தான்.இவர் இவ்லோ கோபமா பேசுராரு ?"
"அது பிறவிக்குணம் ஆதிரை"
வேறு எங்கும் சுற்றுவதற்கு மனம் இல்லை உடனே புறப்பட்டோம்.
ஆதிரை பின்புறம் அமர்ந்திருந்தாள்...
ஜென்மத் தொடர்புதான் என் ஆதிரை... எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து என்னிடம் வந்து சேர்ந்துவிட்டாள்.
"நிறைய பிரச்சினை வருமோ?" அப்பாவியாக கேட்கிறாள் ஆதிரை.
'வரட்டும் ஆதிரை... வரட்டும் ஒவ்வொரு மனுசனும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை சந்திக்கிறான்... சேகுவாராவும் ஹோசிமன்னும் நாட்டுக்காக போராடுனாங்க... எத்தனையோ ஆண்கள் தங்களோட வீட்டுக்காக போராடுறாங்க நான் என் ஆதிரைக்காக போராடப் போறேன்' என்றேன்.
"வேண்டாம் அத்தான் போராட்டம் போராட்டம் நு சின்ன வயசுல இருந்து நிறைய பார்த்துட்டேன் நிம்மதியா வாழ ஒரு வழி பாருங்க அத்தான்"
அவளது ஏக்கம் அர்த்தமுள்ளது.
அவளது அழகான வலது கை, என் தோளின் மீது ஒரு குழந்தையைப் போலக் கிடந்தது.
யார் கண்ணிலும் பட்டுவிடாமல் ஒருவழியாக ஊர்வந்து சேர்ந்தோம்.
தாமதம் என்பது காதலில் தவிர்க்க முடியாதது, என்பதை அன்றுதான் முதன்முதலில் புரிந்து கொண்டேன்.
ஆதிரையை இறக்கிவிட்டேன்.
சாத்தனார் அய்யா ஏன் தாமதம் என்று கேட்டுக்கொண்டிருந்தார்... அதற்கு அவள் ஏதோ ஒரு பொய்யைச் சொல்லத் துவங்கும் போது நான் கிளம்பிவிட்டேன்.
அம்மாவிடமும் ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு அந்த நாளைச் சமாளித்தேன்.
உறங்குவதற்காக படுத்தால்... அது கனவுக்களமாக மாறுகிறது. என் தலையனை இன்னொரு தலை கேட்கிறது..... அது முத்தங்களின் சுமைதாங்கியாய்.....ச்சீ காதல் எவ்வளவு கொடுமையானது?
இரவின் நீளம் நீண்டுகொண்டே போகிறது... அதிகாலை நான்கு மணியிருக்கும் அம்மாவை நான் எழுப்பினேன். நேற்றுவரை அம்மாதான் என்னை எழுப்பினாள்...
அவளுக்கு ஆச்சர்யம்...
மார்கழி மாதம் என்பதால் வீரமாகாளியம்மன் கோவிலில் பாட்டு பாடிக் கொண்டிருந்தது.
"என்ன தம்பி என்னாச்சு?" அம்மா கேட்டாள் அக்கறையோடு...
"டீ போட்டு கொடும்மா" என்று கேட்டேன்.
அம்மா புரிந்து கொண்டவளாய் "இந்த நேரத்துல என்ன டீ? கண்டது கழுதைய மனசுல போட்டு நினச்சுகிட்டு திரியாத தம்பி.... காலம் கெடக்கு இன்னும்.... நிதானமா வாழனும்"
நான் எதுவும் பேசவில்லை.
வீரமாகாளியம்மன் கோவிலில் பாட்டுச் சத்தம் நின்றுவிட்டது.
'அம்மா பாட்டு நின்னிருச்சு' என்றேன்.
"கரண்ட் போயிருக்கும்டா" என்றாள் அம்மா.
'நம்ம வீட்ல இருக்கும்மா' என்று நான் சொன்னதும் அம்மா ஒரு நிமிடம் அதிர்ந்து போய் அமர்ந்துவிட்டாள்
மார்கழி மாதம் கோவிலில் பாட்டு நின்றுவிட்டால் ஏதோ மரணம் நிகழ்ந்திருக்கும் என்று அர்த்தம்.
"என்ன நடந்துச்சோ?" அம்மாவின் கண்களில் அச்சமும் சோகமும் அப்பிக் கொண்டிருக்கும் வேளையில்...
வெள்ளத்தரசு ஓடி வந்து.....
"ஆத்தா...உன் கொழுந்தன் பாப்பான்குலம் வீரணசாமிய வெட்டிக்கொன்னுட்டாரு....." என்றான்.
அம்மா...அலறிக்கொண்டே தலையை அள்ளிக்கட்டிக் கொண்டு ஓடினாள்....
சதுரகிரி சித்தப்பாவுக்கு இது நான்காவது கொலை.
விடிந்து கொண்டிருந்தது... ஊரின் அமைதி கூடிக்கொண்டே இருந்தது..
ஆங்காங்கே மக்கள் தங்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டார்கள்.
வீரணசாமி, சித்தப்பாவைப் பார்த்து சாதி பெயரைச் சொல்லி திட்டியிருக்கிறார்.......
சித்தப்பா, கோபத்தில் வீரணசாமியை கொன்றுவிட்டார்.
போலீஸ் வந்துவிட்டது.
வழக்கம் போல சித்தப்பா விலங்கு பூட்டப்பட்டார்...
ஊரில் உள்ளவர்கள் ஏதேதோ பேசிக்கொண்டனர்...
சூனா பானா பெரியப்பா மட்டும் நம்பிக்கையாகக் கூறினார்.
"சதுரகிரி அடுத்த பஸ்ல வந்துருவான்ப்பா"
ஏனென்றால் சித்தப்பா சாட்சிகளே இல்லாமல் வழக்கில் ஜெயிப்பதில் கில்லாடி.
அம்மாதான் அழுதுகொண்டே இருந்தாள்... "இந்தப் பாவத்தையெல்லாம் எங்க போய் தீர்க்குறது ?" என்று புலம்பினாள்.
வீரணசாமி குடும்பம் கத்துவதும் கதறுவதும் என் காதுக்குள் விழுகிறது.
என்ன செய்ய................... இரக்கம் இல்லாத சித்தப்பாவை......
என் இறைவன் இப்படி படைத்திருக்கிறான்.
ஆதிரையைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. அவள் வீட்டிற்குப் போயிருந்தேன் சாத்தனார் அய்யா... சோகத்தோடு இருந்தார்..
'என்னங்கையா ஆச்சு?' என்றேன்.
"வாங்க தம்பி...எங்க நாட்டுல நடக்குற பிரச்சினைக்கு பயந்துதான் இங்க வந்தோம்... இங்க வேற மாதிரி பிரச்சினை நடக்குது.." என்றார்,.
அய்யாவிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை அமைதியாக இருந்தேன்.
ஆதிரை தேநீர் எடுத்துவந்தாள்.
"இன்னைக்கு நடந்த சம்பவம்..?" அய்யா கேட்பதைப் புரிந்து கொண்டு நானே சொல்லிவிட்டேன்' என் சித்தப்பா தான் ." என்று.
சொன்ன பிறகு கொஞ்சம் பயமாக இருந்தது.
'கொலைகாரக் குடும்பம் என்று நினைத்துவிடுவாரோ'
ஆனால் அய்யாவோ என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே "இந்தக் கூட்டத்தில் நீங்க மட்டும் மனுசனா நிக்குறீங்க " என்றார்.
அப்போது ஆதிரை என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
வானத்து தேவதைகள் அவள் கண்களின் வழியே என்னை எட்டிப் பார்த்தார்கள்.
ஆதிரை என் அழகு தேவதை.
அய்யா.. "நீங்க பேசிட்டு இருங்க கடைவரைக்கும் போய்ட்டு வாறேன்" என்றார்.
'நான் கடைக்குப் போய்ட்டு வரவா?' என்றேன்.
"இல்லை தம்பி அவங்க அவங்க வேலைய அவங்க அவங்கதான் பாக்கனும்" என்றார்.
நானும் ஆதிரையும் வாசலில் அமர்ந்திருந்தோம். அது அரசு கட்டிக் கொடுத்த வட்ட வடிவமான வீடு.
"காலேஜ் போகலையா ?" என்றாள்.
'போகனும்' என்றேன்.
பேசிக் கொண்டிருந்தோம்... எங்கள் பேச்செல்லாம் எதிர்காலத்தில் வாழப்போகிற வாழ்க்கை பற்றியதாகவே இருந்தது.
"தோளில் சாய்ந்து கொள்ளவா?"என்றாள்.
'ம்ம்ம்' என்றேன் சாய்ந்து கொண்டாள்.
உலகம் மெதுவாக சுற்றுகிறது.. என்னையும் என் தேவதையையும் சுமந்துகொண்டு..
மகா வந்தான்.
"மாப்ள... உன்னை வத்சலா தேடிக்கிட்டு இருக்காள்டா" என்றான்.
"எதுக்கு ?" என்று ஆதிரை கேட்டாள்.
அப்போது அவள் என் கையை இறுக்கமாகப் பிடித்திருந்தாள்.
அதில் ஆயிரம் அர்த்தம் இருந்தது.
நானும் மெளனமாக இருந்தேன்..அவளும் புரிந்து கொண்டாள்
நான் போய் விடமாட்டேன் என்று.
மூவரும் அமைதியாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்
நான்காவதாக ஒருவர் வருவதைப் பார்த்துவிட்டு......................!
எங்கள் அன்பின் சக்தி எனக்குத் தெரியும் அதனால்தான் தைரியம் அதிகமாக இருக்கிறது.
சித்தப்பா என் அருகில் வந்ததும் "இங்க எதுக்கு நிக்குற இந்த புள்ள எதுக்கு இங்க நிக்குது?" என்று கொஞ்சம் கோபமாக கேட்டார்.
'நான் காலேஜ்க்கு வந்தேன் இந்தப்புள்ள அவங்க தாத்தாவோட வந்துச்சு... அவர் அந்தக் கடைக்குப் போயிருக்காரு ' என்று சரளமான பொய்களோடு சமாளித்தேன்.....
"எதுல வந்த?" என்றார்
"மாகாவோட பைக்ல"
கோபமாக முறைத்துக் கொண்டே "சீக்கிரம் கிளம்பு" என்றார்.
அவர் சிரித்து நான் பார்த்ததேயில்லை.
ஆதிரை .. "ஏன் அத்தான்.இவர் இவ்லோ கோபமா பேசுராரு ?"
"அது பிறவிக்குணம் ஆதிரை"
வேறு எங்கும் சுற்றுவதற்கு மனம் இல்லை உடனே புறப்பட்டோம்.
ஆதிரை பின்புறம் அமர்ந்திருந்தாள்...
ஜென்மத் தொடர்புதான் என் ஆதிரை... எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து என்னிடம் வந்து சேர்ந்துவிட்டாள்.
"நிறைய பிரச்சினை வருமோ?" அப்பாவியாக கேட்கிறாள் ஆதிரை.
'வரட்டும் ஆதிரை... வரட்டும் ஒவ்வொரு மனுசனும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை சந்திக்கிறான்... சேகுவாராவும் ஹோசிமன்னும் நாட்டுக்காக போராடுனாங்க... எத்தனையோ ஆண்கள் தங்களோட வீட்டுக்காக போராடுறாங்க நான் என் ஆதிரைக்காக போராடப் போறேன்' என்றேன்.
"வேண்டாம் அத்தான் போராட்டம் போராட்டம் நு சின்ன வயசுல இருந்து நிறைய பார்த்துட்டேன் நிம்மதியா வாழ ஒரு வழி பாருங்க அத்தான்"
அவளது ஏக்கம் அர்த்தமுள்ளது.
அவளது அழகான வலது கை, என் தோளின் மீது ஒரு குழந்தையைப் போலக் கிடந்தது.
யார் கண்ணிலும் பட்டுவிடாமல் ஒருவழியாக ஊர்வந்து சேர்ந்தோம்.
தாமதம் என்பது காதலில் தவிர்க்க முடியாதது, என்பதை அன்றுதான் முதன்முதலில் புரிந்து கொண்டேன்.
ஆதிரையை இறக்கிவிட்டேன்.
சாத்தனார் அய்யா ஏன் தாமதம் என்று கேட்டுக்கொண்டிருந்தார்... அதற்கு அவள் ஏதோ ஒரு பொய்யைச் சொல்லத் துவங்கும் போது நான் கிளம்பிவிட்டேன்.
அம்மாவிடமும் ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு அந்த நாளைச் சமாளித்தேன்.
உறங்குவதற்காக படுத்தால்... அது கனவுக்களமாக மாறுகிறது. என் தலையனை இன்னொரு தலை கேட்கிறது..... அது முத்தங்களின் சுமைதாங்கியாய்.....ச்சீ காதல் எவ்வளவு கொடுமையானது?
இரவின் நீளம் நீண்டுகொண்டே போகிறது... அதிகாலை நான்கு மணியிருக்கும் அம்மாவை நான் எழுப்பினேன். நேற்றுவரை அம்மாதான் என்னை எழுப்பினாள்...
அவளுக்கு ஆச்சர்யம்...
மார்கழி மாதம் என்பதால் வீரமாகாளியம்மன் கோவிலில் பாட்டு பாடிக் கொண்டிருந்தது.
"என்ன தம்பி என்னாச்சு?" அம்மா கேட்டாள் அக்கறையோடு...
"டீ போட்டு கொடும்மா" என்று கேட்டேன்.
அம்மா புரிந்து கொண்டவளாய் "இந்த நேரத்துல என்ன டீ? கண்டது கழுதைய மனசுல போட்டு நினச்சுகிட்டு திரியாத தம்பி.... காலம் கெடக்கு இன்னும்.... நிதானமா வாழனும்"
நான் எதுவும் பேசவில்லை.
வீரமாகாளியம்மன் கோவிலில் பாட்டுச் சத்தம் நின்றுவிட்டது.
'அம்மா பாட்டு நின்னிருச்சு' என்றேன்.
"கரண்ட் போயிருக்கும்டா" என்றாள் அம்மா.
'நம்ம வீட்ல இருக்கும்மா' என்று நான் சொன்னதும் அம்மா ஒரு நிமிடம் அதிர்ந்து போய் அமர்ந்துவிட்டாள்
மார்கழி மாதம் கோவிலில் பாட்டு நின்றுவிட்டால் ஏதோ மரணம் நிகழ்ந்திருக்கும் என்று அர்த்தம்.
"என்ன நடந்துச்சோ?" அம்மாவின் கண்களில் அச்சமும் சோகமும் அப்பிக் கொண்டிருக்கும் வேளையில்...
வெள்ளத்தரசு ஓடி வந்து.....
"ஆத்தா...உன் கொழுந்தன் பாப்பான்குலம் வீரணசாமிய வெட்டிக்கொன்னுட்டாரு....." என்றான்.
அம்மா...அலறிக்கொண்டே தலையை அள்ளிக்கட்டிக் கொண்டு ஓடினாள்....
சதுரகிரி சித்தப்பாவுக்கு இது நான்காவது கொலை.
விடிந்து கொண்டிருந்தது... ஊரின் அமைதி கூடிக்கொண்டே இருந்தது..
ஆங்காங்கே மக்கள் தங்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டார்கள்.
வீரணசாமி, சித்தப்பாவைப் பார்த்து சாதி பெயரைச் சொல்லி திட்டியிருக்கிறார்.......
சித்தப்பா, கோபத்தில் வீரணசாமியை கொன்றுவிட்டார்.
போலீஸ் வந்துவிட்டது.
வழக்கம் போல சித்தப்பா விலங்கு பூட்டப்பட்டார்...
ஊரில் உள்ளவர்கள் ஏதேதோ பேசிக்கொண்டனர்...
சூனா பானா பெரியப்பா மட்டும் நம்பிக்கையாகக் கூறினார்.
"சதுரகிரி அடுத்த பஸ்ல வந்துருவான்ப்பா"
ஏனென்றால் சித்தப்பா சாட்சிகளே இல்லாமல் வழக்கில் ஜெயிப்பதில் கில்லாடி.
அம்மாதான் அழுதுகொண்டே இருந்தாள்... "இந்தப் பாவத்தையெல்லாம் எங்க போய் தீர்க்குறது ?" என்று புலம்பினாள்.
வீரணசாமி குடும்பம் கத்துவதும் கதறுவதும் என் காதுக்குள் விழுகிறது.
என்ன செய்ய................... இரக்கம் இல்லாத சித்தப்பாவை......
என் இறைவன் இப்படி படைத்திருக்கிறான்.
ஆதிரையைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. அவள் வீட்டிற்குப் போயிருந்தேன் சாத்தனார் அய்யா... சோகத்தோடு இருந்தார்..
'என்னங்கையா ஆச்சு?' என்றேன்.
"வாங்க தம்பி...எங்க நாட்டுல நடக்குற பிரச்சினைக்கு பயந்துதான் இங்க வந்தோம்... இங்க வேற மாதிரி பிரச்சினை நடக்குது.." என்றார்,.
அய்யாவிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை அமைதியாக இருந்தேன்.
ஆதிரை தேநீர் எடுத்துவந்தாள்.
"இன்னைக்கு நடந்த சம்பவம்..?" அய்யா கேட்பதைப் புரிந்து கொண்டு நானே சொல்லிவிட்டேன்' என் சித்தப்பா தான் ." என்று.
சொன்ன பிறகு கொஞ்சம் பயமாக இருந்தது.
'கொலைகாரக் குடும்பம் என்று நினைத்துவிடுவாரோ'
ஆனால் அய்யாவோ என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே "இந்தக் கூட்டத்தில் நீங்க மட்டும் மனுசனா நிக்குறீங்க " என்றார்.
அப்போது ஆதிரை என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
வானத்து தேவதைகள் அவள் கண்களின் வழியே என்னை எட்டிப் பார்த்தார்கள்.
ஆதிரை என் அழகு தேவதை.
அய்யா.. "நீங்க பேசிட்டு இருங்க கடைவரைக்கும் போய்ட்டு வாறேன்" என்றார்.
'நான் கடைக்குப் போய்ட்டு வரவா?' என்றேன்.
"இல்லை தம்பி அவங்க அவங்க வேலைய அவங்க அவங்கதான் பாக்கனும்" என்றார்.
நானும் ஆதிரையும் வாசலில் அமர்ந்திருந்தோம். அது அரசு கட்டிக் கொடுத்த வட்ட வடிவமான வீடு.
"காலேஜ் போகலையா ?" என்றாள்.
'போகனும்' என்றேன்.
பேசிக் கொண்டிருந்தோம்... எங்கள் பேச்செல்லாம் எதிர்காலத்தில் வாழப்போகிற வாழ்க்கை பற்றியதாகவே இருந்தது.
"தோளில் சாய்ந்து கொள்ளவா?"என்றாள்.
'ம்ம்ம்' என்றேன் சாய்ந்து கொண்டாள்.
உலகம் மெதுவாக சுற்றுகிறது.. என்னையும் என் தேவதையையும் சுமந்துகொண்டு..
மகா வந்தான்.
"மாப்ள... உன்னை வத்சலா தேடிக்கிட்டு இருக்காள்டா" என்றான்.
"எதுக்கு ?" என்று ஆதிரை கேட்டாள்.
அப்போது அவள் என் கையை இறுக்கமாகப் பிடித்திருந்தாள்.
அதில் ஆயிரம் அர்த்தம் இருந்தது.
நானும் மெளனமாக இருந்தேன்..அவளும் புரிந்து கொண்டாள்
நான் போய் விடமாட்டேன் என்று.
மூவரும் அமைதியாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்
நான்காவதாக ஒருவர் வருவதைப் பார்த்துவிட்டு......................!