• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aadhirai - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Gnanaguru

நாட்டாமை
Joined
Mar 15, 2018
Messages
34
Reaction score
112
Location
Madurai
காதல் பரிகாரம்

ஜோசியர் சுப்ரமணி அமர்ந்திருந்தார்.
நவகிரகங்களும் இவர் கையசைவில் இயங்குவதைப் போலத் தான் பேசுவார்.
இவரைக் கேட்டுவிட்டுத்தான் சிவபெருமானே கண்விழிப்பதைப் போல கர்வத்தோடு இருப்பார்.
இவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே பின்பற்றுவதுதான் எங்கள் வீட்டு விதி.
என்னைப் பார்த்ததும்
" வாடா தம்பி... இப்பத்தான் உன் ஜாதகத்தப் பார்த்தேன்" என்றார்.
அதற்குள் அம்மாவும் வந்துவிட்டாள்.
"நல்லா.... புத்தியில ஒரைக்குற மாதிரி சொல்லுங்க...." என்றாள்.
"தம்பி... உன் ராசிக்கு ஜென்மத்துல சனி இருக்குறதுனால ஒரு பெண்ணால அவமானம் அசிங்கம் அவப்பேரு நாடுவிட்டு நாடு போறது கண்டம் விட்டு கண்டம் போறது தேசம் விட்டு தேசம் போறது மனநில பாதிச்சு லூசா திரியுறது..... இதெல்லாம் நடக்கும்பா...." என்றார்.
அம்மா.... இரண்டு கைகளையும் கூப்பிக்கொண்டே எங்கள் ஊரில் இருக்கிற எல்லா தெய்வங்களையும் கும்பிட்டாள்.
"இதுக்கு எதாவது பரிகாரம் இருக்கா?" என்று அம்மா கேட்டதற்கு.
"இன்னைல இருந்து இருபத்தியயொரு நாள் தொடார்ந்து சிவன் கோவில்ல விளக்கு போடனும்.... மூனு மாசம் கழிச்சு வீட்ல ஒரு யாகம் வளர்க்கனும்" என்றார்.
ஆன்மிக விழிப்புணர்வு ஆழ்மனதைத் தொடும் வரை இதுபோன்றவர்கள் வாழ்ந்துகொண்டே தான் இருப்பார்கள்.
நான் எதுவும் பேசவில்லை.
அம்மா என் காதருகே வந்து... "நீ அடிக்கடி கேம்ப் ... பக்கம் போறத நிறுத்துப்பா... அந்த சிலோன்காரிய நெனச்சுக்கிட்டு அலையாத.... அப்புறம் ஜோசியர் சொன்னது நடக்கும்" என்றாள்.
அப்படியென்றால்... நான் ஆதிரையைத் தினமும் சந்திப்பது அம்மாவுக்குத் தெரிந்திருக்கிறது..... பிறகு ஏன் அவள் என்னிடம் எதுவுமே கேட்கவில்லை. மனமெங்கும் ஆயிரம் கேள்விகள் முகாமிட்டன.
அன்றுமுதல் சிவன் கோவிலுக்கு விளக்குப் போட நானும் மகாவும் கிளம்பினோம்.
மகா அடிக்கடி ஒரு கேள்வி கேட்பான். "உனக்குத்தான் சனி ஜென்மத்துல இருக்கான் ... விளக்குப் போட போற.... என்னை ஏண்டா கூப்பிடுற?"
மௌனமே பதிலாக.... நான் சிரிப்பேன். அவனும் சிரித்துக்கொள்வான்.
இப்படி இருபத்தியொரு நாட்களும் நகர்ந்து கொண்டிருந்தன.
இதற்கிடையில் பெரியசாமி ஒரு நாள் வந்திருந்தான். மூணாறு செல்கிற நாளைக் கூறினான். அது இருபத்தியொரு நாள் பரிகாரம் முடிந்த மறு நாளாக இருந்தது.
அது எங்களுக்கு வசதியாக இருந்தது.
இருபத்தியொரு நாள் பரிகாரமும்... சிறப்பாக இருந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது.
அது தினமும் ஆதிரையைப் பார்த்து பேசிவிட்டு அதன்பின் சிவனைப் பார்ப்பது.அப்படிப் பார்க்கும் போது... இறைவனின் கண்களின் வழியே ஆதிரை தான் என்னை பார்த்தாள்.
ஏற்றும் விளக்கும் எரியும் ஜோதியும் என் ஆதிரையின் அழகையே சொல்லிக் கொண்டிருந்தன. ஒரு காதல் உண்மையெனில் அதை தடுக்க... இறைவன் விரும்புவதில்லை. எந்தவொரு விளக்கும் எந்தவொரு யாகமும் ஒரு காதலை எரித்துவிட முடியாது. காலம் பதில் சொல்லட்டும் என்பதற்காகத்தான் நானும் அம்மாவின் பேச்சை மீறவில்லை.
பரிகாரத்தை மறுக்கவில்லை.
நாங்கள் மூணாறு செல்கிறோம் என்று ஆதிரையிடம் கூறும் போது "நானும் வரட்டுமா?" என்றாள்.
இதுதான் அவள் முதன்முறையாக என்னோடு "வருகிறேன்" என்று சொல்வது.
என்னால் மறுக்க முடியவில்லை.
உயிரை இங்கே விட்டு விட்டு உடல் மட்டும் மூணாறு சென்று என்ன செய்யப் போகிறது?
மகா பைக்கை எடுத்துக் கொண்டு பெரியசாமி ஊருக்குச் சென்றான். இருவரும் சேர்ந்து மற்ற நண்பர்களோடும் ஆலோசித்து விட்டு "போகலாம்" என்றனர்.
ஆதிரையை அழைத்துச் செல்ல சாத்தனார் அய்யாவிடம் அனுமதி கேட்டோம்.
அவரது உயர்ந்த மனம்.... அனுமதித்தது.
பிறகென்ன
நண்பர்களோடு வந்த அந்த வாகனம்
என்னையும் என் தேவதையையும் சுமந்து கொண்டு மூணாறு புறப்பட்டது.
மதுரையிலிருந்து வாகனம் புறப்பட்டதும் எனது நண்பா்கள் ஆட்டமும் பாட்டமுமாக இருந்தனர். நானும் ஆதிரையும் முதல் இருக்கையில் அமர்ந்திருந்தோம்.
"தோள்ல சாய்ஞ்சுக்கவா" என்றாள்.
"ம்ம்ம்" என்றேன்.
சாய்ந்து கொண்டாள். வாகனம் வானத்தில் பறப்பது போல் இருந்தது.
எனது நண்பர்களின் ஆட்டமும் பாட்டமும் அவளுக்கு எரிச்சலை ஊட்டவில்லை. இதுவொரு வாய்ப்பாக கருதினாள்.
யாரோடும் அவள் பேச விரும்பவில்லை.
என் மீது சாய்ந்து கிடப்பதில் ஒரு விதமான அமைதியை உணர்வதாகக் கூறினாள்.
அந்த அமைதியை உணர்வதிலேயே கவனம் செலுத்தினாள்.
எல்லாவற்றையும் இழந்த வலி... என் ஆதிரையின் பேச்சில் இருக்கும்.
"இன்னும் கொஞ்சம் நாளில் என் தாத்தாவும் போய்விடுவாரே.... பிறகு நான்....? என்று அடிக்கடி கேட்பாள்.
"நான் இருக்கிறேன்" என்பேன்.
கண்கள் கலங்கிப் போக... என் தோளில் சாய்ந்து கொள்வாள்.
ஆதிரைக்கென்று ஒரு உலகம் கட்டி அதில் நான் அவளை வாழவைப்பேன் என்ற நம்பிக்கையில் எனது கரங்களைப் பற்றுவாள்....
வாழ வேண்டும் என்கின்ற ஆசை...
வாழ்ந்து விடுவோம் என்ற நம்பிக்கை....
அவளிடம் அதிகமாக இருந்தது. அதை நான்... "நீ தான்டா என் உலகம்" என்று அவளென்னை அனைத்துக் கொள்ளும் போது உணர்ந்தேன்!




 




Gnanaguru

நாட்டாமை
Joined
Mar 15, 2018
Messages
34
Reaction score
112
Location
Madurai
மூணாறில்..............!


'போடி மெட்டு' தாண்டும் வரை என் மீது தலைசாய்த்துக்கிடந்த என் காதல் தேவதை.....திடீரென கண்விழ்த்தாள்.
அவள்மீது சில்லென்ற காற்று மோதியதால் இருக்கலாம்.


இதுவரை அவள் சிக்குண்ட வலையிலிருந்து வெளிவந்த உணர்வோடு புன்னகைத்தாள்.........!இதுபோன்ற இயற்கை எழில்கொஞ்சும் இடம்தான நமது மன இறுக்கங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகின்றன.
இரண்டு பக்கமும் தேயிலைத்தோட்டங்கள் பனிமூட்டத்தில் தலை துவட்டிக்கொண்டிருந்தன.
ஆதிரையின் வருகையைக்
கண்ட தேயிலைச்செடிகள் பனித்துளிகளால் தங்கள் முகத்தில் பொட்டுவைத்துக்கொண்டன.


பூப்பாறை என்ற இடம் வந்ததும் எல்லோரும் தேநீர் பருகினோம்..கேரளத்து மொழி வாசம் எங்கள் காதுக்குள் மணத்துக்கொண்டிருக்க....மெல்ல மெல்ல தொடர்கிறது எங்கள் பயணம்.
தேயிலைத்தோட்டங்களைப்
பார்த்ததும் ஆதிரைக்கு இலங்கையில் உள்ள மலையகத்
தொழிலாளர்களைப்பற்றி நினைவு வந்திருக்கும் போல அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தாள்.


மூணாறை நெருங்கிவிட்டோம்.....
பச்சை சேலை கட்டி .....ஒரு பெண்ணைப்போல படுத்துகிடக்கிறது மூணாறு.


வளைந்து நெலிந்து போகும் அதன் இடையில் நகர்ந்துகொண்டிருக்கிறது எங்கள் வாகனம்.


மூணாறில் இறங்கி நட்க்கிறோம்......
புல்வெளிகளில் என் தேவதை நடக்கிறாள்...


அவள் பாதங்களில் படும் பனித்துளியின் சிலிர்ப்பில் அவள் மேனியெங்கும் குளிர்கிறது....

மேகத்துள் மூழ்கி எழுகிறாள் அந்த அழகைக்கண்ட எனக்குள் சூரியன் உதிக்கிறது.

ஆதிரை ஒரு அருவியைப்பார்த்தாள்..தமது கரங்களால் ஏந்தி நீரினை வரவேற்றாள்..பதிலுக்கு அருவியும் அவள் தலைமீது நீர் தெளித்து ஆசீர்வதித்தது.

என் கரங்களைப்பற்றிக்கொண்ட ஆதிரையின் சிறகுகள் வானத்தில் மிதந்தன.

ஆதிரையின் கூந்தலில் உள்ள ஒற்றை ரோஜா...கேரளத்து காற்றோடு கெஞ்சியும் கொஞ்சியும் விளையாடியதில் ஒரு முடி மட்டும் வெளிநடப்பு செய்தது.

வழக்கம்போல் அவள் நெற்றியில் ஒரு ஒற்றை முடி....ஊர்வலம் போய்க்கொண்டிருந்தது.

அவள் நெற்றிலிருந்து புறப்படும் நேர்வகிட்டு ஒற்றையடிப்பாதையில் ஒரு பனித்துளி மட்டும் நடந்துகொண்டிருந்தது.

அவளது அழகான கன்னங்களில் காற்றின் கால்தடங்கள் பதிந்துகொண்டிருந்தன.

ஆதிரை என் அழகு தேவதை.....
அவள் கண்களிலிருந்து புறப்படும் பட்டாம்பூச்சிகள் மூணாறு முழுக்க ரோஜா ச்செடிகளை நட்டுக்கொண்டிருந்தன...........


என் தேவதையின் உதடுகள் ஒவ்வொரு வார்த்தைகளையும் முத்தமிட்டுதான் அனுப்புகின்றன....

"எவ்ளோ அழகா இருக்குல?" அவள் சொல்லும்போது அந்த இடம் இன்னும் அழகாகிவிடுகிறது.

அவள் பற்களில் பட்டுத்தெரிக்கும் வார்த்தைகள் எவ்வளவு கொடுத்து வைத்தவை?

அவள் மேகங்களின் ஸ்பரிஷத்தை மெல்லத்தொடும்போது பிரம்மனின் தூரிகைக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல....இருந்தது.
அறைக்குத்திரும்புகிறோம்...........

எங்கள் இருவருக்கும் ஒரு அறையை ஒதுக்கிவிட்டு எனது நண்பர்கள் வேறு அறைக்குச்சென்றுவிட்டனர்.


உலகமே எங்கள் வீடாகிப்போன பின்பு ...........................இந்த அறை எங்களுக்குச்
சின்னதாய் இருந்தது.


முதன் முறையாக நானும் அவளும் தனியறையில் தனியாக இருக்கிறோம்.
தலைவன் தலைவியாக
கணவன் மனைவியாக
தாய் தந்தையாக
வாழ்வை எதிர்கொள்ளப்போகும் ஆவல் எங்கள் இருவருக்குமே இருந்தது.


ஆதிரை மெதுவாக .... ".நல்ல வீடு கட்டனும் அத்தான் நீங்க நான் நம்ம பிள்ளைங்க எல்லோருமா சேர்ந்து வாழ்க்கைய கொண்டாடனும் அத்தான்" என்றாள்.

அவளது கனவுகள் எல்லாம் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்றே இருந்தது.

நான் சந்தோசமாக தலையாட்டினேன்.
என் தோளில் சாய்ந்து கொண்டு.. : "நம் பிள்ளைகள இந்த மூணாறுக்கு கூட்டிட்டு வரனும் அத்தான்..எவ்ளோ அழகா இருக்குல?" என்றாள்.


பேசிக்கொண்டே இருந்தோம் இடையிடையே முத்தங்களும் கொஞ்சலுமாக நகர்ந்தது அந்தப்பொழுது.....
பிறகு புறப்பட்டோம்...நண்பர்களும் கிளம்பி நின்றார்கள்...
மாட்டுபட்டி அனைக்கட்டு கிளம்பினோம்.


வழிநெடுக மேகக்கூட்டங்கள் கை கோர்த்து நின்றன.
படுத்துக்கிடந்த ஒரு சில மேகங்களை எங்கள் வாகனச்சத்தம் எழுப்பிவிட்டன
அந்த சில்லென்ற காற்று எங்கள் உயிரில் மோதி வெளியேறும்போது
பெருமூச்சோடு இறைவனுக்கு நன்றி சொன்னோம்..........


இறைவனின் அற்புத படைப்பு மூணாறு.
தென்னகத்து காஷ்மீர்.


காதலர்களின் கனவு தேசம்.


சுற்றுலாப்பயணிகளின் வருகையால் மூணாறு இன்னும்கொஞ்சம் அழகாய் இருந்தது.

பயணிகளின் கண்கள் மொய்த்துக்கிடந்ததால் பலாப்பழத்தைவிட இனிப்பாய் இருந்தது மூணாறு.

மூணாறு சென்றால் மாட்டுப்பட்டி அனைக்கட்டில் படகு சவாரி செய்ய வேண்டும்.

நானும் ஆதிரையும் ஒரு படகில் ஏறிக்கொண்டோம்.....

நண்பர்கள் வெவ்வேறு படகில் ஏறிக்கொள்ள .................ஏரியில் மிதந்தது எங்கள் கூட்டம்.

தோள் மீது சாய்ந்துகொண்ட ஆதிரைக்கு அந்த அனுபவம் மிகவும் பிடித்திருந்ததுபோல ........அடிக்கடி கண்களை மூடி மூடித்திறந்தாள்.

நடு ஏரிக்குப்போகும் போது வானம் சின்னதாய் ஒரு தூறல் போட்டது.........
மழை என்றால் குடை தேடு மனம் இன்றைக்கு முதன் முறையாக மழையை வரவேற்றது காரணம் என் அருகில் ஆதிரை இருக்கிறாள்.


காதலோடு இருக்கும்போது இயற்கை இன்னும் அழகாக இருக்கிறது.

வானம் வேதம் சொல்கிறது.

மழை கவிதை படிக்கிறது.


காதல்..............ஒவ்வொரு மனதுக்குள்ளும் நுழைந்து வெளியேறும்போது அவர் வாழ்க்கையே அழகாகி விடுகிறது.

நானும் ஆதிரையும் நனைகிறோம்..
என் முகம் கழுவும் மழையை என் தேவதை தன் முந்தானையால் துடைத்துவிடுகிறாள்.............


முரண்டுபிடித்த மழை மீண்டும் மீண்டும் பெய்கிறது ........ஆதிரைவிடவில்லை மீண்டும் மீண்டும் துடைக்கிறாள்....

நேரம் ஆகிவிட்டதென படகுக்காரன் கூப்பிடுகிறான்.

நேரம் போதவில்லையென ஆதிரை என் கைகளைப் பிடிக்கிறாள்.

ஒரு வழியாக கரைக்கு வந்தோம்....
ஒருவன் மக்காச்சோளம் விற்றுக்கொண்டிருந்தான்
ஒருவன் நிலக்கடலை விற்றுக்கொண்டிருந்தான்
இன்னொருவன் ரோஜா விற்றுக்கொண்டிருந்தான்.....ஆதிரைக்கு வாங்கிக்கொடுத்தேன்.


அவள் ஆசையோடு தலையில் வைத்துக்கொண்டாள்.
"எவ்வளவுன்னு கேக்காமலே ரோஜாவ வாங்கிட்டிங்க" என்றாள்.


'ரோஜாவின் விலையை யாருமே தீர்மாணிக்கமுடியாது ஆதிரை' என்றேன்.

"ஏன்" என்றாள்.

'காதலில் ரோஜாவை விட உயர்ந்த ஒரு பொருளை பரிசலித்துவிட முடியாது ஆதிரை.........ரோஜாவை விற்பவனும் அதை விற்ற பணத்தில் சாப்பிடும்போது ஏதோ ஒரு காதலின் திருக்கரங்களால் ஆசீர்வதிக்கபடுகிறான்" என்றேன்.

அவள் சிரித்தாள்..... அப்போது மூணாறே முகம் மலர்ந்தது.
அவரவர் அறைக்குத் திரும்பினோம்..


இரவு உணவு கேரளத்து வாசம் வீசும் ஆப்பமும் கடலைக்கறியும்...
நண்பர்கள் கொஞ்சம் மதுவோடு இருந்தார்கள் .


நான் ஆதிரையோடு இருந்தேன்.
எத்தனையோ இரவுகளை சந்தித்திருந்தாலும் மூணாறில் நாம் சந்திக்கிற இரவின் மடி சுகமானது...........


ஒரு காதலியின் ஸ்பரிசத்தைவிட மிகவும் மென்மையானது.
ஒரு முத்தத்தை எப்படி விளக்கிவிட முடியாதோ அதைப்போலவே மூணாறில் நான் சந்தித்த இரவின் ஸ்பரிசத்தை இந்த இடத்தில் என்னால் விளக்கமுடியவில்லை.


நல்ல தூக்கம் இருவருக்குமே.....
திடீரென வெளியில் பயங்கரமான சப்தம் கேட்டது....


ஆதிரையை உள்ளே இருக்கச்சொல்லிவிட்டு வெளியில் வந்து பார்த்தேன்...
 




Gnanaguru

நாட்டாமை
Joined
Mar 15, 2018
Messages
34
Reaction score
112
Location
Madurai
யாரோ ஒரு பெண் அழுதுகொண்டிருக்கிறாள்.

"நான் அப்படிப்பட்டவள் இல்ல..." என்கிறாள்.

அருகில் இருந்த ஆணோ "அப்புறம் ஏண்டி இந்த நேரம் வெளியில வந்த" என்றான்.

அவள் பாவம் இரவு நேரத்து குளிர் காற்றை அனுபவிக்க வராண்டாவில் நின்றுகொண்டிருந்திருக்கிறாள்..

அவளைத்தவறாக நினைத்துக்கொண்டு அந்த ஆள் அவளிடம் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறான்..

அவள் சத்தம் போடிருக்கிறாள்...

அவளோடு வந்த தோழிகளும் பக்கத்தில் நின்று கொண்டிருந்தனர்....

ஒரு வழியாக பேசி அந்த விடுதிக்காரன் பிரச்சினைகளைத்தீர்த்து வைத்தான்.
நடந்ததை ஆதிரையிடம் சொன்னேன்... பதிலுக்கு அவள் சொன்னாள்....


"இந்த உலகம் முழுக்க போர் நடந்துகிட்டேதான் இருக்கு... எப்படியாவது வாழ்ந்துர மாட்டோமான்னு ஒவ்வொரு உயிரும்...ஒவ்வொரு வடிவத்துல போராடிக்கிட்டேதான் இருக்கு..."

'ஆமாம்' என்றேன்.

"அதுல பெண்களோட போராட்டம் மட்டும் ஜென்மம் ஜென்மமாக தொடர்ந்து கிட்டே இருக்கு அத்தான்.........தனியா நிக்க முடியல நடக்கமுடியல............" என்று பேசிக்கொண்டே என்னருகில் வந்தாள்

"நீங்க மட்டும் ஏன் அத்தான் யாரையுமே பாக்குறதில்லை?" என்றாள்.

நான் சிரித்துக்கொண்டே ' உன்னைப்பார்க்கவே நேரமில்லை..ஆதிரை................ நான் எதுக்கு இன்னொருத்திய பாக்கனும்?' என்றேன்.

"வேற யாரையுமே பாக்க மாட்டிங்களா?"

'பாக்கமாட்டேன்'

"நிஜமாவா?"

'நிஜம்தான்.......'

என்னைக்கட்டிக்கொண்டாள்................... "எனக்கே எனக்குனு இருப்பிங்களா?" என்றாள்.

'ம்ம்ம்.........இருப்பேன் இதுல என்ன சந்தேகம் ஆதிரை?' என்றேன்.

அதற்குப்பிறகு அவள் பேசவில்லை.............ஒரு குழந்தையைப்போல உறங்கிக்கிடந்தாள்.

அடுத்த நாள்
ஒரு முத்தத்தோடு விடிந்தது........
காலை உணவுக்குப்பின்
நண்பர்களோடு ஜீப்பில் டாப் ஸ்டேசன் கிளம்பினோம்.


மிக உயரமான இடம்.

வாழ்வின் மிக உயரமான சொர்க்கத்தை ஆதிரையின் அன்பால் நான் உணர்ந்த இடம் டாப் ஸ்டேசன்.

நண்பர்கள் வழக்கம்போல் ஆட்டமும் பாட்டமுமாக இருந்தனர்.

மகா மட்டும் அடிக்கடி வந்து "சந்தோசம்தானே?" என்பான்.

நாங்கள் இருவரும் சிரிப்போம்...பதிலுக்கு அவனும் சிரித்துவிட்டு நகர்ந்துவிடுவான்.

மூணாறு சென்றால் அவித்த மரவள்ளிக்கிழங்கு கண்டிப்பாக சாப்பிடவேண்டும் என்று என் பேராசிரியர் அடிக்கடி சொல்வது நினைவுக்கு வந்தது.....ஆதிரைக்கு வாங்கிக்கொடுக்க ஒரு கடைக்குள் நுழைந்தேன் ஆதிரையும் என் உடன் வந்தாள்.

ஒரு கோப்பையில் மரவள்ளிக்கிழங்கும் அதன் மீது அவித்த மீன் துண்டமும் வைத்திருந்தார்கள்...அப்படியொரு சுவை.

இருவரும் சாப்பிட்டோம்.
"இந்தியாவில் உள்ள எல்லா ஊருக்கும் போகனும்..அத்தான் நல்லா சுத்திப்பாக்கனும்" என்றாள் ஆதிரை.


சாப்பிட்டதற்கு பணம் கொடுக்க சென்றோம்..................அப்போது அங்கு ஒரு முகம் என்னை உற்று நோக்குவதும் பிறகு திரும்பிக்கொள்வதுமாக இருந்தது.......

யார் அந்த முகம்?

அருகில் செல்கிறேன்..அவன் தான் அவனே தான்..

'டேய் நீ பிச்சைதானே?" என்றேன்.

அவனும் மெதுவாக "ஆமாம்" என்றான்.

'உன்னை ஊரெல்லாம் தேடுறாங்க நீ இங்க என்ன டா பண்ற?' என்றேன்

அவன் கண்கள் கலங்கி விட்டது.
என்னை அழைத்துக்கொண்டு கடைக்கு வெளியே வந்தான்.


ஆதிரையைப்பார்த்து "இவள் யார்" என்றான்.

ஆதிரையின் கரங்களைப்பிடித்தேன் அவன் புரிந்துகொண்டான்

"இருபது வருசம் இருக்கும்ல பிச்சை" என்றேன்.

ஆமாம் என்றான்.

என் சிறு வயது தோழன்.அவனும் நானும் மகாவும் ஒன்றாகத்தான் ஊர் சுற்றுவோம்.

அப்பா அடித்தார் என்று ஊரைவிட்டே ஓடி வந்துவிட்டான்.

'உன் அப்பா அம்மா பாவம் பிச்சை....ரொம்ப ஒடஞ்சு போய்ட்டாங்க' என்றேன்.

அதற்குள் மகாவும் ஓடி வந்தான்.

"என்னாச்சு மாப்ள?" என்றான்.

பிச்சை....என்றேன்
அவனும் உற்றுப்பார்த்துவிட்டு " டேய் பிச்சை" என்று கட்டிப்பிடித்து அழுதான்.


பிச்சையும் கண்கலங்கி நின்றான்.
"வீட்டுக்குப்போலாமா?" என்றான் பிச்சை.


'எங்கடா உங்க வீடு' என்றேன்

'பக்கத்துலதான்' என்று அழைத்துச்சென்றான்..
அது ஒரு ஓலைவீடு
வீட்டிற்குள் பர்தா போட்ட பெண்ணொருத்தி வரவேற்றாள் மூன்று வயது குழந்தை ஒன்று விளையாடிக்கொண்டிருந்தது.


எங்களை அறிமுகப்படுத்தி வைத்தான்.
புரிந்து கொண்டோம் பிச்சை காதலில் விழுந்திருக்கிறான் என்று.
பிறகு அவனே சொன்னான்


"அப்பா அடிச்ச அன்னைக்கு ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் நின்னுட்டுருந்தேன்...இவளோட அப்பா தான் இங்க கூட்டிட்டு வந்தார்....வந்து இவங்க ஓட்டல்ல வேலை பார்த்தேன்..அப்பதான் இவளுக்கும் எனக்கும் ஒரு பிரியம் வந்துச்சு.....இவங்க வீட்ல சம்மதிச்சுட்டாங்க....."

"அப்புறம் என்னடா பிச்சை?" என்றான் மகா.

"நம்ம ஊரப்பத்திதான் உங்களுக்கு தெரியுமே? இந்த விசயம்தெரிஞ்சா எங்கள வாழ விடமாட்டாங்கல்ல?"

நாங்கள் எதுவும் பேசவில்லை.

ஆதிரை என்னைப்பார்த்தாள்....அதிலொரு கேள்வி இருந்தது.

நானும் அவளைப்பார்த்தேன் அதிலொரு ஆறுதலிருந்தது.

தேநீர் பருகிவிட்டு வெளியேறினோம்.
பிச்சை எங்களிடம் மெதுவாகக்கூறினான் "யார்ட்டையும் சொல்லிறாதிங்கடா" என்று.
அவன் கெஞ்சலில் ஒரு பயம் இருந்தது.
சொல்லமாட்டோம் என்றோம்.


இப்போது சுற்றிப்பார்க்க மனம் இல்லை .....எங்கள் மூவருக்கும்.
பெரியசாமி கோபமாகக் கத்தினான் "எங்கடா போனிங்க?"
போன இடத்தை மறைத்துவிட்டோம்.


அவனும் அதற்கடுத்து கேட்கவில்லை.
ஒரு வழியாக எல்லோரும் ஜீப்பில் ஏறிக்கொண்டார்கள்.


நானும் மகாவும் ஆதிரையும் ஜீப்பில் ஏறுவதற்காக போய்க்கொண்டிருக்கும்போது பிச்சை வேகமாக ஓடி வந்தான்
'என்ன பிச்சை ?' என்றேன்.


என் கைகளைப்பிடித்துக்கொண்டு "நீயும் ஆதிரையும் நல்லா இருக்கனும்டா...அந்த ஊர்க்காரங்க கண்ல பட்றாம எங்கயாவது ஓடிப்போய்ருங்க...எதாவது உதவி வேணும்னா இங்க வந்துருங்க"
என்று அவன் சொல்லும்போது எங்கள் மூவரின் கண்களும் கலங்கி இருந்தன...!
ஜீப்பில் ஏறிக்கொண்டோம்...தோளில் சாய்ந்துகொண்டாள்.
(ஊருக்குத்திரும்புகிறோம்)



My heartly thanks to who all commented last episodes. aadhirai is my long time dream, your words are my encouragement to write....

waiting for your comments... pls click the vote button too....

support me...this story will be a different experience for you all.... real time experience of my life....

Gnanaguru


 




N.Pitchai

புதிய முகம்
Joined
Mar 19, 2018
Messages
3
Reaction score
4
Location
Ladanendal
திக்....திக்....திக்.....கதை மட்டடுமல்ல எதிர்பார்ப்பில் நாங்களும் தான்
 




G.Anushka.

புதிய முகம்
Joined
Mar 16, 2018
Messages
2
Reaction score
0
Location
madurai
ஆன்மிக விழிப்புணர்வு ஆழ்மனதைத் தொடும் வரை இதுபோன்றவர்கள் வாழ்ந்துகொண்டே தான் இருப்பார்கள்.
Excellent
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
ஒரு காதல் உண்மையெனில் அதை தடுக்க... இறைவன் விரும்புவதில்லை. எந்தவொரு விளக்கும் எந்தவொரு யாகமும் ஒரு காதலை எரித்துவிட முடியாது. காலம் பதில் சொல்லட்டும் என்பதற்காகத்தான் நானும் அம்மாவின் பேச்சை மீறவில்லை.
arumai sago(y)(y)(y)(y)
ஆதிரை என் அழகு தேவதை.....
அவள் கண்களிலிருந்து புறப்படும் பட்டாம்பூச்சிகள் மூணாறு முழுக்க ரோஜா ச்செடிகளை நட்டுக்கொண்டிருந்தன...........
moonarucum devathaiyin varnanai nice:):):)
இந்த உலகம் முழுக்க போர் நடந்துகிட்டேதான் இருக்கு... எப்படியாவது வாழ்ந்துர மாட்டோமான்னு ஒவ்வொரு உயிரும்...ஒவ்வொரு வடிவத்துல போராடிக்கிட்டேதான் இருக்கு..."
(y)(y)(y)(y)arumaiyana pathivu sago......... kathalai anupavithu eluthi irukireekal:):):):)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top