காதல் பரிகாரம்
ஜோசியர் சுப்ரமணி அமர்ந்திருந்தார்.
நவகிரகங்களும் இவர் கையசைவில் இயங்குவதைப் போலத் தான் பேசுவார்.
இவரைக் கேட்டுவிட்டுத்தான் சிவபெருமானே கண்விழிப்பதைப் போல கர்வத்தோடு இருப்பார்.
இவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே பின்பற்றுவதுதான் எங்கள் வீட்டு விதி.
என்னைப் பார்த்ததும்
" வாடா தம்பி... இப்பத்தான் உன் ஜாதகத்தப் பார்த்தேன்" என்றார்.
அதற்குள் அம்மாவும் வந்துவிட்டாள்.
"நல்லா.... புத்தியில ஒரைக்குற மாதிரி சொல்லுங்க...." என்றாள்.
"தம்பி... உன் ராசிக்கு ஜென்மத்துல சனி இருக்குறதுனால ஒரு பெண்ணால அவமானம் அசிங்கம் அவப்பேரு நாடுவிட்டு நாடு போறது கண்டம் விட்டு கண்டம் போறது தேசம் விட்டு தேசம் போறது மனநில பாதிச்சு லூசா திரியுறது..... இதெல்லாம் நடக்கும்பா...." என்றார்.
அம்மா.... இரண்டு கைகளையும் கூப்பிக்கொண்டே எங்கள் ஊரில் இருக்கிற எல்லா தெய்வங்களையும் கும்பிட்டாள்.
"இதுக்கு எதாவது பரிகாரம் இருக்கா?" என்று அம்மா கேட்டதற்கு.
"இன்னைல இருந்து இருபத்தியயொரு நாள் தொடார்ந்து சிவன் கோவில்ல விளக்கு போடனும்.... மூனு மாசம் கழிச்சு வீட்ல ஒரு யாகம் வளர்க்கனும்" என்றார்.
ஆன்மிக விழிப்புணர்வு ஆழ்மனதைத் தொடும் வரை இதுபோன்றவர்கள் வாழ்ந்துகொண்டே தான் இருப்பார்கள்.
நான் எதுவும் பேசவில்லை.
அம்மா என் காதருகே வந்து... "நீ அடிக்கடி கேம்ப் ... பக்கம் போறத நிறுத்துப்பா... அந்த சிலோன்காரிய நெனச்சுக்கிட்டு அலையாத.... அப்புறம் ஜோசியர் சொன்னது நடக்கும்" என்றாள்.
அப்படியென்றால்... நான் ஆதிரையைத் தினமும் சந்திப்பது அம்மாவுக்குத் தெரிந்திருக்கிறது..... பிறகு ஏன் அவள் என்னிடம் எதுவுமே கேட்கவில்லை. மனமெங்கும் ஆயிரம் கேள்விகள் முகாமிட்டன.
அன்றுமுதல் சிவன் கோவிலுக்கு விளக்குப் போட நானும் மகாவும் கிளம்பினோம்.
மகா அடிக்கடி ஒரு கேள்வி கேட்பான். "உனக்குத்தான் சனி ஜென்மத்துல இருக்கான் ... விளக்குப் போட போற.... என்னை ஏண்டா கூப்பிடுற?"
மௌனமே பதிலாக.... நான் சிரிப்பேன். அவனும் சிரித்துக்கொள்வான்.
இப்படி இருபத்தியொரு நாட்களும் நகர்ந்து கொண்டிருந்தன.
இதற்கிடையில் பெரியசாமி ஒரு நாள் வந்திருந்தான். மூணாறு செல்கிற நாளைக் கூறினான். அது இருபத்தியொரு நாள் பரிகாரம் முடிந்த மறு நாளாக இருந்தது.
அது எங்களுக்கு வசதியாக இருந்தது.
இருபத்தியொரு நாள் பரிகாரமும்... சிறப்பாக இருந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது.
அது தினமும் ஆதிரையைப் பார்த்து பேசிவிட்டு அதன்பின் சிவனைப் பார்ப்பது.அப்படிப் பார்க்கும் போது... இறைவனின் கண்களின் வழியே ஆதிரை தான் என்னை பார்த்தாள்.
ஏற்றும் விளக்கும் எரியும் ஜோதியும் என் ஆதிரையின் அழகையே சொல்லிக் கொண்டிருந்தன. ஒரு காதல் உண்மையெனில் அதை தடுக்க... இறைவன் விரும்புவதில்லை. எந்தவொரு விளக்கும் எந்தவொரு யாகமும் ஒரு காதலை எரித்துவிட முடியாது. காலம் பதில் சொல்லட்டும் என்பதற்காகத்தான் நானும் அம்மாவின் பேச்சை மீறவில்லை.
பரிகாரத்தை மறுக்கவில்லை.
நாங்கள் மூணாறு செல்கிறோம் என்று ஆதிரையிடம் கூறும் போது "நானும் வரட்டுமா?" என்றாள்.
இதுதான் அவள் முதன்முறையாக என்னோடு "வருகிறேன்" என்று சொல்வது.
என்னால் மறுக்க முடியவில்லை.
உயிரை இங்கே விட்டு விட்டு உடல் மட்டும் மூணாறு சென்று என்ன செய்யப் போகிறது?
மகா பைக்கை எடுத்துக் கொண்டு பெரியசாமி ஊருக்குச் சென்றான். இருவரும் சேர்ந்து மற்ற நண்பர்களோடும் ஆலோசித்து விட்டு "போகலாம்" என்றனர்.
ஆதிரையை அழைத்துச் செல்ல சாத்தனார் அய்யாவிடம் அனுமதி கேட்டோம்.
அவரது உயர்ந்த மனம்.... அனுமதித்தது.
பிறகென்ன
நண்பர்களோடு வந்த அந்த வாகனம்
என்னையும் என் தேவதையையும் சுமந்து கொண்டு மூணாறு புறப்பட்டது.
மதுரையிலிருந்து வாகனம் புறப்பட்டதும் எனது நண்பா்கள் ஆட்டமும் பாட்டமுமாக இருந்தனர். நானும் ஆதிரையும் முதல் இருக்கையில் அமர்ந்திருந்தோம்.
"தோள்ல சாய்ஞ்சுக்கவா" என்றாள்.
"ம்ம்ம்" என்றேன்.
சாய்ந்து கொண்டாள். வாகனம் வானத்தில் பறப்பது போல் இருந்தது.
எனது நண்பர்களின் ஆட்டமும் பாட்டமும் அவளுக்கு எரிச்சலை ஊட்டவில்லை. இதுவொரு வாய்ப்பாக கருதினாள்.
யாரோடும் அவள் பேச விரும்பவில்லை.
என் மீது சாய்ந்து கிடப்பதில் ஒரு விதமான அமைதியை உணர்வதாகக் கூறினாள்.
அந்த அமைதியை உணர்வதிலேயே கவனம் செலுத்தினாள்.
எல்லாவற்றையும் இழந்த வலி... என் ஆதிரையின் பேச்சில் இருக்கும்.
"இன்னும் கொஞ்சம் நாளில் என் தாத்தாவும் போய்விடுவாரே.... பிறகு நான்....? என்று அடிக்கடி கேட்பாள்.
"நான் இருக்கிறேன்" என்பேன்.
கண்கள் கலங்கிப் போக... என் தோளில் சாய்ந்து கொள்வாள்.
ஆதிரைக்கென்று ஒரு உலகம் கட்டி அதில் நான் அவளை வாழவைப்பேன் என்ற நம்பிக்கையில் எனது கரங்களைப் பற்றுவாள்....
வாழ வேண்டும் என்கின்ற ஆசை...
வாழ்ந்து விடுவோம் என்ற நம்பிக்கை....
அவளிடம் அதிகமாக இருந்தது. அதை நான்... "நீ தான்டா என் உலகம்" என்று அவளென்னை அனைத்துக் கொள்ளும் போது உணர்ந்தேன்!
ஜோசியர் சுப்ரமணி அமர்ந்திருந்தார்.
நவகிரகங்களும் இவர் கையசைவில் இயங்குவதைப் போலத் தான் பேசுவார்.
இவரைக் கேட்டுவிட்டுத்தான் சிவபெருமானே கண்விழிப்பதைப் போல கர்வத்தோடு இருப்பார்.
இவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே பின்பற்றுவதுதான் எங்கள் வீட்டு விதி.
என்னைப் பார்த்ததும்
" வாடா தம்பி... இப்பத்தான் உன் ஜாதகத்தப் பார்த்தேன்" என்றார்.
அதற்குள் அம்மாவும் வந்துவிட்டாள்.
"நல்லா.... புத்தியில ஒரைக்குற மாதிரி சொல்லுங்க...." என்றாள்.
"தம்பி... உன் ராசிக்கு ஜென்மத்துல சனி இருக்குறதுனால ஒரு பெண்ணால அவமானம் அசிங்கம் அவப்பேரு நாடுவிட்டு நாடு போறது கண்டம் விட்டு கண்டம் போறது தேசம் விட்டு தேசம் போறது மனநில பாதிச்சு லூசா திரியுறது..... இதெல்லாம் நடக்கும்பா...." என்றார்.
அம்மா.... இரண்டு கைகளையும் கூப்பிக்கொண்டே எங்கள் ஊரில் இருக்கிற எல்லா தெய்வங்களையும் கும்பிட்டாள்.
"இதுக்கு எதாவது பரிகாரம் இருக்கா?" என்று அம்மா கேட்டதற்கு.
"இன்னைல இருந்து இருபத்தியயொரு நாள் தொடார்ந்து சிவன் கோவில்ல விளக்கு போடனும்.... மூனு மாசம் கழிச்சு வீட்ல ஒரு யாகம் வளர்க்கனும்" என்றார்.
ஆன்மிக விழிப்புணர்வு ஆழ்மனதைத் தொடும் வரை இதுபோன்றவர்கள் வாழ்ந்துகொண்டே தான் இருப்பார்கள்.
நான் எதுவும் பேசவில்லை.
அம்மா என் காதருகே வந்து... "நீ அடிக்கடி கேம்ப் ... பக்கம் போறத நிறுத்துப்பா... அந்த சிலோன்காரிய நெனச்சுக்கிட்டு அலையாத.... அப்புறம் ஜோசியர் சொன்னது நடக்கும்" என்றாள்.
அப்படியென்றால்... நான் ஆதிரையைத் தினமும் சந்திப்பது அம்மாவுக்குத் தெரிந்திருக்கிறது..... பிறகு ஏன் அவள் என்னிடம் எதுவுமே கேட்கவில்லை. மனமெங்கும் ஆயிரம் கேள்விகள் முகாமிட்டன.
அன்றுமுதல் சிவன் கோவிலுக்கு விளக்குப் போட நானும் மகாவும் கிளம்பினோம்.
மகா அடிக்கடி ஒரு கேள்வி கேட்பான். "உனக்குத்தான் சனி ஜென்மத்துல இருக்கான் ... விளக்குப் போட போற.... என்னை ஏண்டா கூப்பிடுற?"
மௌனமே பதிலாக.... நான் சிரிப்பேன். அவனும் சிரித்துக்கொள்வான்.
இப்படி இருபத்தியொரு நாட்களும் நகர்ந்து கொண்டிருந்தன.
இதற்கிடையில் பெரியசாமி ஒரு நாள் வந்திருந்தான். மூணாறு செல்கிற நாளைக் கூறினான். அது இருபத்தியொரு நாள் பரிகாரம் முடிந்த மறு நாளாக இருந்தது.
அது எங்களுக்கு வசதியாக இருந்தது.
இருபத்தியொரு நாள் பரிகாரமும்... சிறப்பாக இருந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது.
அது தினமும் ஆதிரையைப் பார்த்து பேசிவிட்டு அதன்பின் சிவனைப் பார்ப்பது.அப்படிப் பார்க்கும் போது... இறைவனின் கண்களின் வழியே ஆதிரை தான் என்னை பார்த்தாள்.
ஏற்றும் விளக்கும் எரியும் ஜோதியும் என் ஆதிரையின் அழகையே சொல்லிக் கொண்டிருந்தன. ஒரு காதல் உண்மையெனில் அதை தடுக்க... இறைவன் விரும்புவதில்லை. எந்தவொரு விளக்கும் எந்தவொரு யாகமும் ஒரு காதலை எரித்துவிட முடியாது. காலம் பதில் சொல்லட்டும் என்பதற்காகத்தான் நானும் அம்மாவின் பேச்சை மீறவில்லை.
பரிகாரத்தை மறுக்கவில்லை.
நாங்கள் மூணாறு செல்கிறோம் என்று ஆதிரையிடம் கூறும் போது "நானும் வரட்டுமா?" என்றாள்.
இதுதான் அவள் முதன்முறையாக என்னோடு "வருகிறேன்" என்று சொல்வது.
என்னால் மறுக்க முடியவில்லை.
உயிரை இங்கே விட்டு விட்டு உடல் மட்டும் மூணாறு சென்று என்ன செய்யப் போகிறது?
மகா பைக்கை எடுத்துக் கொண்டு பெரியசாமி ஊருக்குச் சென்றான். இருவரும் சேர்ந்து மற்ற நண்பர்களோடும் ஆலோசித்து விட்டு "போகலாம்" என்றனர்.
ஆதிரையை அழைத்துச் செல்ல சாத்தனார் அய்யாவிடம் அனுமதி கேட்டோம்.
அவரது உயர்ந்த மனம்.... அனுமதித்தது.
பிறகென்ன
நண்பர்களோடு வந்த அந்த வாகனம்
என்னையும் என் தேவதையையும் சுமந்து கொண்டு மூணாறு புறப்பட்டது.
மதுரையிலிருந்து வாகனம் புறப்பட்டதும் எனது நண்பா்கள் ஆட்டமும் பாட்டமுமாக இருந்தனர். நானும் ஆதிரையும் முதல் இருக்கையில் அமர்ந்திருந்தோம்.
"தோள்ல சாய்ஞ்சுக்கவா" என்றாள்.
"ம்ம்ம்" என்றேன்.
சாய்ந்து கொண்டாள். வாகனம் வானத்தில் பறப்பது போல் இருந்தது.
எனது நண்பர்களின் ஆட்டமும் பாட்டமும் அவளுக்கு எரிச்சலை ஊட்டவில்லை. இதுவொரு வாய்ப்பாக கருதினாள்.
யாரோடும் அவள் பேச விரும்பவில்லை.
என் மீது சாய்ந்து கிடப்பதில் ஒரு விதமான அமைதியை உணர்வதாகக் கூறினாள்.
அந்த அமைதியை உணர்வதிலேயே கவனம் செலுத்தினாள்.
எல்லாவற்றையும் இழந்த வலி... என் ஆதிரையின் பேச்சில் இருக்கும்.
"இன்னும் கொஞ்சம் நாளில் என் தாத்தாவும் போய்விடுவாரே.... பிறகு நான்....? என்று அடிக்கடி கேட்பாள்.
"நான் இருக்கிறேன்" என்பேன்.
கண்கள் கலங்கிப் போக... என் தோளில் சாய்ந்து கொள்வாள்.
ஆதிரைக்கென்று ஒரு உலகம் கட்டி அதில் நான் அவளை வாழவைப்பேன் என்ற நம்பிக்கையில் எனது கரங்களைப் பற்றுவாள்....
வாழ வேண்டும் என்கின்ற ஆசை...
வாழ்ந்து விடுவோம் என்ற நம்பிக்கை....
அவளிடம் அதிகமாக இருந்தது. அதை நான்... "நீ தான்டா என் உலகம்" என்று அவளென்னை அனைத்துக் கொள்ளும் போது உணர்ந்தேன்!