Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
hi friends,
thank u all for your great support
enna work irunthalum ud podanumn ena feel pana vaikrathu ungaloda comments than
இருள் சூழ்ந்தது
செல்லம்மாவும் ஆதியும் புறப்பட்டு சென்ற பிறகு கருணாகரனின் வீட்டில் பெரும் அமைதி சூழ்ந்தது. யாரும் யாரிடமும் பேசவில்லை. இரவு உணவு முடிந்தவுடன் எப்போதும் போல் விஷ்வா தன் அறைக்குள் செல்ல எத்தனிக்க,
கருணாகரன் அவனை அழைத்தார்.
" சொல்லுங்கப்பா" என்றவன் முன் வந்து நிற்க,
" உட்காரு விஷ்வா... உன்கிட்ட கொஞ்சம் பேசனும்" என்று சொல்லி இருக்கையைக் காண்பித்தார்.
விஷ்வா அவர் என்ன பேசப் போகிறார் என்று ஒருவாறு கணித்திருந்தான்.
அவன் யோசனைகுறியோடு அவர் எதிரில் அமர அவர் அவனிடம்,
"ஆதியை கல்யாணம் பண்ணிக்கிறதில் உனக்கென்னடா பிரச்சனை ?" என்று நேரடியாகவே கேட்டார்.
"ப்ளீஸ்ப்பா... என்னை விட்டுடிங்க , அவள கல்யாணம் பண்ணிக்கிறதில் எனக்கு சுத்தமா உடன்பாடில்ல... இதை பத்தி இனிமே பேசாதீங்க... வேற ஏதாவது விஷயம் இருந்தா மட்டும் சொல்லுங்க" என்றவன் சொல்லிவிட்டு எழுந்து கொள்ள,
கருணாகரனும் அவனுக்குச் சரியாய் எழுந்து நின்று கொண்டு,
"ஏன் விஷ்வா? நான் இது நாள் வரைக்கும் உனக்கு பிடிக்காத விஷயத்தை செய்யுன்னு சொல்லிருக்கேனா ? ஆனால் ஆதியை நீ வேண்டாம்னு சொல்றதுதான் ஏன்னு எனக்கு புரியல... அவ கிட்ட அப்படி என்னடா குறை ?" என்றவர் திட்டவட்டமாய் கேட்டார்.
அவன் வெறுப்போடு, "அவகிட்ட குறையெல்லாம் இல்ல... எல்லாமே அதிகம்... திமிரு... கர்வம்... தலைகணம்... வாய்... போதாக் குறைக்கு தான்தான் எல்லாம்னு ஒரு நினைப்பு... அவளை போய் கல்யாணம் பண்ணிக்க சொன்னா?" என்றவன் ஆங்காரமாய் தன் குரலை உயர்த்தினான்.
"உன் எண்ணம் ரொம்ப தப்பு விஷ்வா... நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஆதி இல்ல... அவ எல்லோர்கிட்டேயும் ரொம்ப இயல்பா பழகுவா... அன்பா பேசுவா... எல்லா பிரச்சனையும் புத்திசாலித்தனமா ஹேன்டல் பண்ணுவா... அனாவசியமா கோபப்பபட மாட்டா... அப்படியே அவ கோபப்பட்டாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும்" என்று கருணாகரன் பொறுமையோடு தன் மகனிடம் ஆதியை பற்றி எடுத்துரைக்க,
விஷ்வாவிற்கு அவற்றையெல்லாம் கேட்க கேட்க எரிச்சல் மூண்டது.
"நீங்கதான் அவளை மெச்சிக்கனும்" என்றவன் சலிப்புற,
"அவ எப்படி வேணா இருக்கட்டும்... ஆனா என்னால அவளை கல்யாணம் பண்ணிக்கவே முடியாது" என்று அழுத்தம் திருத்தமாய் தன் முடிவைச் சொன்னான்.
ஆனால் கருணாகரன் விடாமல்,
"என்னைக்கு இருந்தாலும் நீ யாரோ ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போற... அது ஏன் ஆதியா இருக்க கூடாது?" என்றவர் கேட்க,
"ஹ்ம்ம்... நீங்க சொல்றது கரெக்ட்...ஆனா நான் அவளை பொண்ணுங்க லீஸ்டிலேயே சேர்க்கலயே" என்று தடலாடியாய் அவன் சொல்ல, அந்த நொடி கருணாகரனின் பொறுமை உடைந்து போனது.
"என்ன பேசிற விஷ்வா நீ? ஆதியை பத்தி நீ இந்த மாதிரி எல்லாம் பேசிறது எனக்கு சுத்தமா பிடிக்கல" என்று அவரும் தன் குரலை உயர்த்தினார்.
அவர்களுக்கு இடையில் கார சாரமான விவாதம் போய் கொண்டிருக்கச் சாரதா மனதில் அச்சம் தொற்றிக் கொண்டது.
அவர் எப்படி இவர்கள் பேச்சை நிறுத்துவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
விஷ்வா தன் தந்தையிடம், "உங்களுக்கு என்னை விட அவதானே முக்கியம்" என்க,
" என்னடா சொல்ல வர்ற நீ?" என்று கேட்டு கருணாகரன் சீற்றமாக,
"நான் எல்லா விஷயத்திலும் உங்களுக்கு இரண்டாம் பட்சம்தான்னு சொல்ல வர்றேன்... ஆதிதானே உங்களுக்கு முதல"
"ஏன்டா முட்டாள்தனமா இப்படி யோசிக்கிற?"
"நீங்கதான் செல்ஃபிஷா நடந்துகிறீங்க... ஆதியை இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வரனும்கிற எண்ணத்தில மாலதி வீட்டில உங்க இஷ்டபடி பேசி என் விருப்பத்தை நடக்க விடாம பண்ணிட்டீங்க இல்ல" என்று அவன் மனதில் புதைந்திருந்த வேதனையை வார்த்தைகளாய் கொட்டினான்.
"மாலதி வீட்டில ஒத்துக்காததிற்கு நான் காரணம் இல்ல... அவங்கதான் பிடிவாதமா முடியாதுன்னு சொல்லிட்டாங்க... அதுக்கு மேல நான் என்னடா பண்ண முடியும்"
" உங்களுக்கே மாலதியை எனக்கு கட்டி வைக்க விருப்பமில்லைனு வெளிப்படையா சொல்லிடுங்க... அதை விட்டுவிட்டு அவங்களுக்கு விருப்பமில்லன்னு நீங்க பாட்டுக்கு சப்பை கட்டு கட்டாதீங்க"
சாரதா சற்று துணுக்குற்று அவர்கள் இடையில் வந்து, "சரி போதும்.. இந்த பேச்சை இத்தோட விடுங்க" என்று அவர்கள் பேசுவதை நிறுத்த முயற்சித்தாள்.
ஆனால் விஷ்வா அமைதி அடையவில்லை.
"விட முடியாதும்மா... நான் மனசில இருக்கிறதை பேசனும்... ஆதியை இந்த வீட்டுக்கு மருமகளா ஆக்கிக்கனும்னு என் ஆசையை நொறுக்கிட்டீங்க இல்ல... நீங்க ரொம்ப சுயநலவாதி ப்பா " என்று விஷ்வா கோபத்தில் கருணாகரன் மீது வார்த்தைகளை வீச,
அதைப் பொறுத்து கொள்ள முடியாமல் சாரதா அவன் கன்னத்தில் அறைந்தார்.
விஷ்வா சீற்றமாய் அம்மா என்று அலற சாரதா,
"என் கண்ணு முன்னாடியே நிக்காதே இங்கிருந்து போடா" என்று அதட்டினார்.
அவனால் அதிர்ச்சி தாங்க முடியவில்லை. தன் அம்மா அப்படி குரல் உயர்த்திப் பேசி அவன் பார்த்ததே இல்லை.
உடனடியாக அவன் கோபமாய் மாடி படிக்கெட்டுகளில் ஏறிச் சென்றுவிட கருணாகரன் சாரதாவை நோக்கி,
" நீ செஞ்சது தப்பு சாரதா" என்றார்.
"என்னங்க தப்பு... அவன் பாட்டுக்கு உங்ககிட்ட மரியாதை இல்லாம பேசிட்டிருப்பான்... என்னை பாத்துக்கிட்டு சும்மா இருக்க சொல்றீங்களா?"
என்று சாரதா கோபம் குறையாமல் பேச,
கருணாகரன் பதிலுரை எதுவும் சொல்லாமல் அவரும் தன் அறைக்குள் புகுந்தார்.
சாரதா அதே கோபத்தோடு மாடி படிக்கெட்டு ஏறிச் சென்றவர்,
விஷ்வாவை காண...
அவனோ தான் செய்த தவற்றை உணராமல் கற்சிலை போல் சுவரில் சாய்ந்தபடி நின்றிருந்தான்.
"விஷ்வா" என்று சாரதா அதட்டலாய் அழைக்க அவன் அவரை ஏறிட்டுப் பார்க்க கூடத் தயாராக இல்லை.
ஆனால் அவர் சொல்ல நினைத்ததை அவனிடம் தெளிவாக எடுத்துரைத்தார்.
"இதுவே கடைசி தடவையா இருக்கட்டும்... இனிமே உங்க அப்பாக்கிட்ட நீ இப்படி மரியாதை இல்லாம பேசினா... நான் என்ன பண்ணுவேன்னே தெரியாது" என்க,
விஷ்வா இப்போது அவரை நேர்கொண்டு பார்த்து,
"அவரு என் விஷயத்தில் பாரபட்சமாய் நடந்துக்கிட்டாரு... அதை சொன்னது
தப்போ?" என்றவன் கோபமாய் சொல்ல,
"தப்புதான் ப்பா...உன்னை மாதிரி ஒருத்தனை வளர்த்து ஆளாக்கி இருக்கிறாரே தப்புதான்...
அவரையா டா பாரபட்சமா நடந்துக்கிட்டாருன்னு சொன்ன... பைத்தியக்காரா.. சொந்த பிள்ளைக்கு மேல உன்னை பாத்துக்கிட்டாரே"
விஷ்வாவிற்கு அவன் அம்மாவின் வார்த்தைகள் ஏதோ தப்பாக கேட்டது போல் தோன்றச் சந்தேகமாய்,
" என்ன சொன்னிங்க ?" என்று கேட்டான்.
" நீ அவருக்கு பிள்ளையே இல்லன்னு சொன்னேன்... அவரோட குணமும் பரந்த மனப்பான்மையும் உனக்கு துளி கூட இல்லைன்னு சொல்றேன்"
"அம்மா ப்ளீஸ்... கோபத்தில் கூட இப்படி எல்லாம் பேசாதீங்க... சொல்லிட்டேன்" என்று விஷ்வா ஆவேசமாய் கத்தினான்.
"கோபத்தில சொன்ன வார்த்தை இல்ல... மனசில நான் இத்தனை நாளா உன் கிட்ட சொல்லாம மூடி மறைச்சிருந்த உண்மை... நீ எப்போ இப்படி எல்லாம் பேசிட்டியோ... அப்பவே முடிவு பண்ணிட்டேன்... உன் கிட்ட எல்லாத்தையும் சொல்லனும்னு"
thank u all for your great support
enna work irunthalum ud podanumn ena feel pana vaikrathu ungaloda comments than
இருள் சூழ்ந்தது
செல்லம்மாவும் ஆதியும் புறப்பட்டு சென்ற பிறகு கருணாகரனின் வீட்டில் பெரும் அமைதி சூழ்ந்தது. யாரும் யாரிடமும் பேசவில்லை. இரவு உணவு முடிந்தவுடன் எப்போதும் போல் விஷ்வா தன் அறைக்குள் செல்ல எத்தனிக்க,
கருணாகரன் அவனை அழைத்தார்.
" சொல்லுங்கப்பா" என்றவன் முன் வந்து நிற்க,
" உட்காரு விஷ்வா... உன்கிட்ட கொஞ்சம் பேசனும்" என்று சொல்லி இருக்கையைக் காண்பித்தார்.
விஷ்வா அவர் என்ன பேசப் போகிறார் என்று ஒருவாறு கணித்திருந்தான்.
அவன் யோசனைகுறியோடு அவர் எதிரில் அமர அவர் அவனிடம்,
"ஆதியை கல்யாணம் பண்ணிக்கிறதில் உனக்கென்னடா பிரச்சனை ?" என்று நேரடியாகவே கேட்டார்.
"ப்ளீஸ்ப்பா... என்னை விட்டுடிங்க , அவள கல்யாணம் பண்ணிக்கிறதில் எனக்கு சுத்தமா உடன்பாடில்ல... இதை பத்தி இனிமே பேசாதீங்க... வேற ஏதாவது விஷயம் இருந்தா மட்டும் சொல்லுங்க" என்றவன் சொல்லிவிட்டு எழுந்து கொள்ள,
கருணாகரனும் அவனுக்குச் சரியாய் எழுந்து நின்று கொண்டு,
"ஏன் விஷ்வா? நான் இது நாள் வரைக்கும் உனக்கு பிடிக்காத விஷயத்தை செய்யுன்னு சொல்லிருக்கேனா ? ஆனால் ஆதியை நீ வேண்டாம்னு சொல்றதுதான் ஏன்னு எனக்கு புரியல... அவ கிட்ட அப்படி என்னடா குறை ?" என்றவர் திட்டவட்டமாய் கேட்டார்.
அவன் வெறுப்போடு, "அவகிட்ட குறையெல்லாம் இல்ல... எல்லாமே அதிகம்... திமிரு... கர்வம்... தலைகணம்... வாய்... போதாக் குறைக்கு தான்தான் எல்லாம்னு ஒரு நினைப்பு... அவளை போய் கல்யாணம் பண்ணிக்க சொன்னா?" என்றவன் ஆங்காரமாய் தன் குரலை உயர்த்தினான்.
"உன் எண்ணம் ரொம்ப தப்பு விஷ்வா... நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஆதி இல்ல... அவ எல்லோர்கிட்டேயும் ரொம்ப இயல்பா பழகுவா... அன்பா பேசுவா... எல்லா பிரச்சனையும் புத்திசாலித்தனமா ஹேன்டல் பண்ணுவா... அனாவசியமா கோபப்பபட மாட்டா... அப்படியே அவ கோபப்பட்டாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும்" என்று கருணாகரன் பொறுமையோடு தன் மகனிடம் ஆதியை பற்றி எடுத்துரைக்க,
விஷ்வாவிற்கு அவற்றையெல்லாம் கேட்க கேட்க எரிச்சல் மூண்டது.
"நீங்கதான் அவளை மெச்சிக்கனும்" என்றவன் சலிப்புற,
"அவ எப்படி வேணா இருக்கட்டும்... ஆனா என்னால அவளை கல்யாணம் பண்ணிக்கவே முடியாது" என்று அழுத்தம் திருத்தமாய் தன் முடிவைச் சொன்னான்.
ஆனால் கருணாகரன் விடாமல்,
"என்னைக்கு இருந்தாலும் நீ யாரோ ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போற... அது ஏன் ஆதியா இருக்க கூடாது?" என்றவர் கேட்க,
"ஹ்ம்ம்... நீங்க சொல்றது கரெக்ட்...ஆனா நான் அவளை பொண்ணுங்க லீஸ்டிலேயே சேர்க்கலயே" என்று தடலாடியாய் அவன் சொல்ல, அந்த நொடி கருணாகரனின் பொறுமை உடைந்து போனது.
"என்ன பேசிற விஷ்வா நீ? ஆதியை பத்தி நீ இந்த மாதிரி எல்லாம் பேசிறது எனக்கு சுத்தமா பிடிக்கல" என்று அவரும் தன் குரலை உயர்த்தினார்.
அவர்களுக்கு இடையில் கார சாரமான விவாதம் போய் கொண்டிருக்கச் சாரதா மனதில் அச்சம் தொற்றிக் கொண்டது.
அவர் எப்படி இவர்கள் பேச்சை நிறுத்துவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
விஷ்வா தன் தந்தையிடம், "உங்களுக்கு என்னை விட அவதானே முக்கியம்" என்க,
" என்னடா சொல்ல வர்ற நீ?" என்று கேட்டு கருணாகரன் சீற்றமாக,
"நான் எல்லா விஷயத்திலும் உங்களுக்கு இரண்டாம் பட்சம்தான்னு சொல்ல வர்றேன்... ஆதிதானே உங்களுக்கு முதல"
"ஏன்டா முட்டாள்தனமா இப்படி யோசிக்கிற?"
"நீங்கதான் செல்ஃபிஷா நடந்துகிறீங்க... ஆதியை இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வரனும்கிற எண்ணத்தில மாலதி வீட்டில உங்க இஷ்டபடி பேசி என் விருப்பத்தை நடக்க விடாம பண்ணிட்டீங்க இல்ல" என்று அவன் மனதில் புதைந்திருந்த வேதனையை வார்த்தைகளாய் கொட்டினான்.
"மாலதி வீட்டில ஒத்துக்காததிற்கு நான் காரணம் இல்ல... அவங்கதான் பிடிவாதமா முடியாதுன்னு சொல்லிட்டாங்க... அதுக்கு மேல நான் என்னடா பண்ண முடியும்"
" உங்களுக்கே மாலதியை எனக்கு கட்டி வைக்க விருப்பமில்லைனு வெளிப்படையா சொல்லிடுங்க... அதை விட்டுவிட்டு அவங்களுக்கு விருப்பமில்லன்னு நீங்க பாட்டுக்கு சப்பை கட்டு கட்டாதீங்க"
சாரதா சற்று துணுக்குற்று அவர்கள் இடையில் வந்து, "சரி போதும்.. இந்த பேச்சை இத்தோட விடுங்க" என்று அவர்கள் பேசுவதை நிறுத்த முயற்சித்தாள்.
ஆனால் விஷ்வா அமைதி அடையவில்லை.
"விட முடியாதும்மா... நான் மனசில இருக்கிறதை பேசனும்... ஆதியை இந்த வீட்டுக்கு மருமகளா ஆக்கிக்கனும்னு என் ஆசையை நொறுக்கிட்டீங்க இல்ல... நீங்க ரொம்ப சுயநலவாதி ப்பா " என்று விஷ்வா கோபத்தில் கருணாகரன் மீது வார்த்தைகளை வீச,
அதைப் பொறுத்து கொள்ள முடியாமல் சாரதா அவன் கன்னத்தில் அறைந்தார்.
விஷ்வா சீற்றமாய் அம்மா என்று அலற சாரதா,
"என் கண்ணு முன்னாடியே நிக்காதே இங்கிருந்து போடா" என்று அதட்டினார்.
அவனால் அதிர்ச்சி தாங்க முடியவில்லை. தன் அம்மா அப்படி குரல் உயர்த்திப் பேசி அவன் பார்த்ததே இல்லை.
உடனடியாக அவன் கோபமாய் மாடி படிக்கெட்டுகளில் ஏறிச் சென்றுவிட கருணாகரன் சாரதாவை நோக்கி,
" நீ செஞ்சது தப்பு சாரதா" என்றார்.
"என்னங்க தப்பு... அவன் பாட்டுக்கு உங்ககிட்ட மரியாதை இல்லாம பேசிட்டிருப்பான்... என்னை பாத்துக்கிட்டு சும்மா இருக்க சொல்றீங்களா?"
என்று சாரதா கோபம் குறையாமல் பேச,
கருணாகரன் பதிலுரை எதுவும் சொல்லாமல் அவரும் தன் அறைக்குள் புகுந்தார்.
சாரதா அதே கோபத்தோடு மாடி படிக்கெட்டு ஏறிச் சென்றவர்,
விஷ்வாவை காண...
அவனோ தான் செய்த தவற்றை உணராமல் கற்சிலை போல் சுவரில் சாய்ந்தபடி நின்றிருந்தான்.
"விஷ்வா" என்று சாரதா அதட்டலாய் அழைக்க அவன் அவரை ஏறிட்டுப் பார்க்க கூடத் தயாராக இல்லை.
ஆனால் அவர் சொல்ல நினைத்ததை அவனிடம் தெளிவாக எடுத்துரைத்தார்.
"இதுவே கடைசி தடவையா இருக்கட்டும்... இனிமே உங்க அப்பாக்கிட்ட நீ இப்படி மரியாதை இல்லாம பேசினா... நான் என்ன பண்ணுவேன்னே தெரியாது" என்க,
விஷ்வா இப்போது அவரை நேர்கொண்டு பார்த்து,
"அவரு என் விஷயத்தில் பாரபட்சமாய் நடந்துக்கிட்டாரு... அதை சொன்னது
தப்போ?" என்றவன் கோபமாய் சொல்ல,
"தப்புதான் ப்பா...உன்னை மாதிரி ஒருத்தனை வளர்த்து ஆளாக்கி இருக்கிறாரே தப்புதான்...
அவரையா டா பாரபட்சமா நடந்துக்கிட்டாருன்னு சொன்ன... பைத்தியக்காரா.. சொந்த பிள்ளைக்கு மேல உன்னை பாத்துக்கிட்டாரே"
விஷ்வாவிற்கு அவன் அம்மாவின் வார்த்தைகள் ஏதோ தப்பாக கேட்டது போல் தோன்றச் சந்தேகமாய்,
" என்ன சொன்னிங்க ?" என்று கேட்டான்.
" நீ அவருக்கு பிள்ளையே இல்லன்னு சொன்னேன்... அவரோட குணமும் பரந்த மனப்பான்மையும் உனக்கு துளி கூட இல்லைன்னு சொல்றேன்"
"அம்மா ப்ளீஸ்... கோபத்தில் கூட இப்படி எல்லாம் பேசாதீங்க... சொல்லிட்டேன்" என்று விஷ்வா ஆவேசமாய் கத்தினான்.
"கோபத்தில சொன்ன வார்த்தை இல்ல... மனசில நான் இத்தனை நாளா உன் கிட்ட சொல்லாம மூடி மறைச்சிருந்த உண்மை... நீ எப்போ இப்படி எல்லாம் பேசிட்டியோ... அப்பவே முடிவு பண்ணிட்டேன்... உன் கிட்ட எல்லாத்தையும் சொல்லனும்னு"