“அவருக்கு நான் பதில் சொல்லிக்கிறேன், நீங்க மத்த பார்மாலிடீஸ் எல்லாம் முடிச்சிட்டு ரிப்போர்ட் என் கிட்ட சப்மிட் பண்ணிடுங்க” என்று கூறிவிட்டு அவன் அந்த இடத்தில் இருந்து வெளியே வந்து, அவனின் வண்டியை எடுத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி சென்றான்.
அங்கே மருத்துவமனை வாசலில் அவனின் மனைவி ப்ரீத்தி, எட்டு மாத கருவை சுமந்து கொண்டு நின்று இருந்த கோலத்தை பார்த்து அவளை ரசித்துக் கொண்டே, வண்டியை பார்கிங்கில் நிறுத்திவிட்டு அவளை நெருங்கினான்.
“மதி எப்படி இருக்கா? டாக்டர் என்ன சொல்லுறாங்க?” என்று விசாரித்து கொண்டு இருந்தான்.
“தெரியல? இன்னும் டாக்டர் வெளியே வரல, உங்க தம்பி ஆதி யாரையும் நெருங்க விடல அவர் கிட்ட. ரொம்ப மனசொடைஞ்சு சோர்ந்து போய் இருக்கார், நீங்க அவர் கூட இருங்க கொஞ்ச நேரம்”.
“ஹரியை வர சொல்லி இருக்கேன், அவன் கூட நான் கிளம்புறேன்” என்று அவள் கூறிக் கொண்டு இருக்கும் பொழுது, ஹரி அங்கே அவனின் புது ஹுண்டாய் கிரெஸ்டாவில் வந்து சேர்ந்தான்.
அப்பொழுது ரமணன் என்ன நினைத்தானோ, ஹரியை அங்கே மருத்துவமனையில் ஆதியை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, மனைவியுடன் தன் suv வண்டியில் பயணம் செய்தான், தன் வீட்டை நோக்கி.
ப்ரீத்திக்கு, அவன் எதற்கு இப்பொழுது தன்னுடன் வருகிறான் என்று புரிந்தது. அங்கே என்ன நடந்து இருக்கும் என்று தான் புரியவில்லை, அதை பற்றி இப்பொழுது கேட்பதை விட வீட்டிற்கு சென்று கேட்கலாம் என்று நினைத்தாள்.
ஆனால் அவனோ, இப்பொழுதே பகிர வேண்டும் என்று நினைத்தான் போலும், அங்கே நடந்ததை சொல்ல தொடங்கினான். ப்ரீத்தி இடத்தை சொன்னதும், ரமணன் முதலில் அங்கே விரைந்தான்.
அவனும், அங்கு அந்த கல்லூரி முழுவதும், அதன் பின் அருகில் உள்ள விலங்கு பூங்காவிலும் தேடி களைத்து விட்டான். அவனின் டீம் வரவும், அவர்களை விட்டும் தேடிக் கொண்டு இருந்தான்.
பின் பகுதியில், மசூதியில் குரான் வாசிப்பு அவன் காதிற்கு எட்டவும், அவன் கால்கள் அங்கே விரைந்தது. அப்பொழுது தான், அங்கே பின் பகுதியில் இருக்கும் காடு அவன் கண்ணிற்கு புலப்பட்டது.
கால்கள் வேகமாக அங்கே விரைந்தது, சத்தங்கள் காதை பிளந்தது. காதுகளை தீட்டிக் கொண்டு, சத்தம் வந்த திசையை நோக்கி முன்னேறினான். அங்கே இருந்த கட்டிடத்தில் உள்ளே நுழைந்து, ஆதியின் அருகில் சென்று நின்றது வரை மட்டுமே அவன் செய்தது.
அதன் பின், அவனின் கையில் இருந்த துப்பாக்கியை எப்பொழுது ஆதி வாங்கி(பிடுங்கி)சுட்டான் என்று இன்னும் தெரியவில்லை. சுட்ட பின், மீண்டும் தன் கையில் எப்பொழுது வைத்தான் என்றும் புரியவில்லை.
“என்னையை இவன் நல்லா வச்சு செய்றான், அது மட்டும் எனக்கு நல்லா தெரியுது” என்று புலம்பியவனை பார்த்து சிரித்தாள் ப்ரீத்தி.
“ஆமா! நீ இந்த மாதிரி நேரத்தில் இங்க வரணுமா பேபி, வீட்டில் ரெஸ்ட் எடுத்து இருக்கலாம் ல” என்று கூறியவனை பார்த்து இப்பொழுது முறைத்தாள்.
“இன்னைக்கு எனக்கு செக் அப் சொன்னேனே, மறந்திடுச்சா?” என்று கேட்டாள்.
“அடி எண்ணிக்கை, வர வர உனக்கு கூடிகிட்டே போகுது டா ரமணா உனக்கு” என்று எண்ணி நொந்து கொண்டான்.
மருத்துவமனையில், அந்த அறைக்கு வெளியே மருத்துவர் வரவும், உடனே எழுந்து அவரிடம் விரைந்தான் ஆதி. அவர் மதி, மயக்கத்தில் இருக்கிறாள், அதிக ரத்த இழப்பு காரணமாக, உயிருக்கு எந்த ஆபத்தும் இனி இல்லை என்று கூறிய பிறகு தான், அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
இன்று முழுவதும் அவளுக்கு நல்ல ஓய்வு தேவை என்பதால், ஒருவரை தவிர வேறு யாரும் இருக்க வேண்டாம் என்று மருத்துவர் வலியுறுத்தினார்.ஆதிக்கும் ஓய்வு தேவைப்பட்டதால், அவனின் அன்னை தான் பார்த்துக் கொள்வதாக கூறிவிட்டு அவனை ஹரியுடன் அனுப்பி வைத்தார்.
ஆதிக்கும், சில விஷயங்கள் யோசிக்க வேண்டி இருந்தது, ஆகையால் தாய் கூறிய அடுத்த நொடி அவன் புறப்பட்டான். ஹரியுடன் வீடு வந்து சேர்ந்தவன், நேராக அவனின் அறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டான்.
திருமணம் செய்ய வேண்டும், என்று அவர்கள் கோவிலுக்கு சென்ற தினத்தில் தான் முதன் முதலில் அந்த பெயரை உச்சரித்தான். அப்பொழுது அவனுக்கு நினைவில், ஆங்காங்கு சில முகங்கள் பரிச்சயமானதாக வேறு இருந்தது.
அன்றே அவன் புகழ் பெற்ற சைகாட்ரிஸ்ட் ருத்ரன் என்பவரிடம் சென்றான். அங்கே தான், அவரின் சிகிச்சை முறையில் கடந்த காலத்தில், அவன் யார் எவ்வாறு அவனின் பெயரை எவ்வாறு உச்சரித்தான் என்று தெரிய வந்தது.
அதே ஆதித்ய வர்மா, பதினாறு வயதில் ஐநூறு வருடங்களுக்கு முன் எவ்வாறு இருந்தான் என்பதை முதலில் மனகண்ணில் கண்டான்.
தொடரும்...