snehasree
SM Exclusive
தாய் தந்தை பாசம் கிடைக்காத மதிக்கு இனி ஆதி மற்றும் அவள் அத்தை மூலம் கிடைக்கட்டும் ஆனால் ஆப்பிள் மறுபடியும் தர்பூஸ் ஆகாமல் இருந்தால் சரி வாழ்த்துக்கள் பை ஆதித்தியா பை மதியழகி வி மிஸ் யு சோ மச்
நன்றி சினேகா சிஸ் ..தாய் தந்தை பாசம் கிடைக்காத மதிக்கு இனி ஆதி மற்றும் அவள் அத்தை மூலம் கிடைக்கட்டும் ஆனால் ஆப்பிள் மறுபடியும் தர்பூஸ் ஆகாமல் இருந்தால் சரி வாழ்த்துக்கள் பை ஆதித்தியா பை மதியழகி வி மிஸ் யு சோ மச்
அவங்க பெயர் ஹரிணிநன்றி டா ரிஹா பொண்ணு
கீப் சப்போர்டிங் எப்போவும் போல் ..
என்னுடைய சப்போர்ட்நன்றி அக்கா ..
எப்போவும் போல சப்போர்ட் செய்ங்க அக்கா ..
தெரியும் அக்கா நான் அவளை அப்படி தான் கூப்பிடுவேன்அவங்க பெயர் ஹரிணி
ரிஹா இல்லை,
உமா தீபக் டியர்
நன்றி நன்றி அக்கா ..என்னுடைய சப்போர்ட்
எப்பவுமே உங்களுக்கு
உண்டு, உமா தீபக் டியர்
ரியா சிஸ் மிக்க நன்றி ..வாவ்..... பல அதிரடி திருப்புமுனை கொண்ட அழகிய கதை...... வாழ்த்துக்கள் சிஸ்
மிக்க மிக்க நன்றி அண்ணாசகோதரி உமா தீபக் அவர்களுக்கு,
உங்களின் அழகியின் காதல் தவம் நல்ல முயற்சி சகோ. வித்தியாசமான கற்பனை. பொதுவாக பெண் எழுத்தாளர் சகோதரிகள் தொட தயங்கும் பகுதி, வரலாற்று நாவல்கள் என்று நினைப்பேன். காரணம், கற்பனை என்றாலும் அதனை உண்மை போல் தரவேண்டும், உண்மை என்றாலும் கற்பனை போல் தரவேண்டும். நாம் அனைவரும் ராஜா – ராணி கதை கேட்டு வளர்ந்தவர்கள். அது நம் சிந்தனையில் எப்போதும் இருக்கும். அதில் தவறு வரும் போது, ஈஸியாக கோட்டைவிட்டுவிடுவோம். அப்படி எதுவும் நேரமால், அழகாக கொண்டு சென்றுயிருந்தீர்கள். அந்த முயற்சிக்கு என் வாழ்த்துகள் சகோதரி.
இந்த நாவலில் எனக்கு மிக பிடித்த பகுதி, நாவலின் முடிவு சகோ. இந்த கற்பனை எல்லாமே ஒரு சினிமாவுக்கான திரைக்கதை, என வந்த போது அவ்வளவு லாஜிக் மீறல்கள் எல்லாமே தூள் தூளாக உடைந்து விட்டது சகோ. கடைசி பதிவு வந்து நாவலை, உண்மையில் காப்பற்றி விட்டது சகோதரி. இந்த நாவலில் வந்த கற்பனைகள், லாஜிக் மீறல்கள் எல்லாம் என்னுடையது இல்லை, ஏதேனும் தவறு என்றால் அது மதியின் தவறு, அவள் தான் இந்த நாவலை எழுதினால், எனவே எந்த குறையையும் நீங்கள், தர்பூசை கேளுங்கள் என்பது போல் தோன்றியது சகோ. செம பிரிலியாண்ட் வேலை சகோ.
உண்மை காதல், காலம் கடந்தும் சேரும் என்பதுக்கு, மதியழகி - ஆதித்யவர்மனின் காதல் உதாரணம் என்றால், நிகழ்காலத்தில் உதாரணம் தர்பூஸ் மதி – ஆதியும் ஆவார்கள். சினிமா படம் போல் வில்லன், தோழன், தோழி என அருமையாக கொண்டு சென்றுயிருந்தீர். நாவல் ஆரம்பத்தில் நிறைய கேள்விகள் சகோ. துறவி என்ன சொன்னார்?, மதி எப்படி மேல் இருந்து வந்தாள்? காமட்சியிடம் அந்த பெரியவர் என்ன சொன்னார்? ஏன் அந்த முஸ்லீம் பெரியவர் தற்கொலை செய்தார் என பல பல கேள்விகள் சகோ. அதனை அழகாக முடிவுக்கு கொண்டு வந்தீர்கள். இந்த இரு காலத்தையும் எப்படி இணைப்பீர்கள், அப்படியானால் எப்படியும் மதிக்கு 5௦௦ வயது வருமே என ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டேயிருந்தது. அந்த ஆர்வத்தை இறுதி பகுதி அருமையாக முடிந்தது.
நாவல் படிக்கும் போதே, இதில் தவம் போல் என்ன இருக்கிறது என்ற எண்ணம் வந்தது சகோ. ஆனால் நிகழ்கால மதியின் காதல் உண்மையில் தவம் தானே. நாவலில் உரையாடலில் நல்ல கவனம் சகோ. காவியதமிழ், பொது தமிழ், சென்னை தமிழ் என சரியான இடத்துக்கு, பொருத்தமாக எழுதியுள்ளீர்கள். நல்ல முயற்சிக்கு, புதிய சிந்தனைக்கு வாழ்த்துகள் சகோதரி.