sameera anjali
மண்டலாதிபதி
“அப்பா, இப்போ இரண்டு ரூவானா அடுத்து பத்து ரூவாய்க்கு நம்மகிட்ட கொள்ளையாடிப்பாங்க. நாம முதலிலே கண்டுபிடிச்சிருக்கனும், நீங்க தான் கண்டுக்காம விட்டீங்க.. இதுக்குமேல நான் ஒத்த ரூவா கூட விட மாட்டேன் வரட்டும் அந்த சேகரு நான் பேசிகிறேன்.” இவனோ, தானமாக இருந்தாலும் அதை நேரிடையாக கேட்டு வாங்கவேண்டும் என விளக்கிறான்.
”கும்பிடுறேங்க ஐயா.. தேங்காய் எண்ணிடலாமுங்களா..” இருவரிடமும் பணிவாக கேட்க.
“சந்தையில தேங்காய் விலை என்ன போகுது அண்ணே..” கர்ணன் கேட்க
“பத்து ரூவா சின்னா காய், பெரிய காய் பதினைஞ்சுக்கு போகுதுங்கயா..”
“நீங்க என்ன விலைக்கு எடுக்குறீங்கண்ணே..”
“மொத்த காயும் பத்து ரூவாக்கு எடுக்குறேங்கய்யா.. ஏன் ய்யா எதாவது பிரச்சனையா.”
“அப்புறம் ஏன் அண்ணே போன முறை ஏழு ரூவாய்க்கு எடுக்காம, ஐஞ்சு ரூவாய்க்கு எடுத்தீங்க.. எங்களுக்கு தானே நஷ்ட்டம்.. உங்களுக்கு லாபம் தானே.”
“ஐயா, போன முறை நான் எடுத்தது என்னால உங்களுக்கு மொத்த தொகையும் கொடுக்க முடியாதுனு தான் விலை கம்மியா எடுத்தேன். இந்த முறை அப்படி ஆகாதுங்கய்யா.. நீங்க சொன்ன விலைக்கே எடுக்குறேன் ஐயா.. மன்னிசிருங்கய்யா.” அவர் தவறை ஒத்துகொள்ள
“நேரிடையாக கேளுங்கண்ணே... மொத்த தொகையும் நாங்க உடனே எல்லாம் கேட்கமாட்டோம் இனி.. உங்க கைக்கு எப்போ தொகை வருதோ அப்போ கொடுங்க. இப்போ காய் எண்ணலாம்.”
“சரிங்கய்யா..”
“சரி கர்ணா அம்மா உன்னை வீட்டுக்கு சாப்பிட வரசொல்லுச்சு போய்யா.. நான் இங்கன பார்த்துகிறேன்.” மகனை வீட்டுக்கு போகச்சொல்ல
“ம்ம் சரிப்பா.. பார்த்துக்கோங்க, வயலுக்கு காபி தண்ணி வாங்கிட்டு போயிட்டானா தர்மே. இல்லை நான் வாங்கி கொடுத்துட்டு போகனுமா.”
“இல்லையா.. அவன் வாங்கிட்டு போயிட்டான்.”
அவர்களிடம் இருந்து விடைபெற்று அவனது ராயல் பைக்கை எடுத்துகொண்டு வீட்டுக்கு சென்றான்.
கொடையளிக்கும் கர்ணன் கூட வலதுகையால் கொடுத்தால் அது இடக்கைக்கு தெரியகூடாது என நினைப்பான். ஆனால் இந்த கர்ணனோ கொடையளித்தாலும் அது நேர்மையாகவும், இருகையாலும் செய்ய வேண்டும் என நினைப்பான்.
தொடரும்………..