பாசப்பிணைப்புகளே!!!
போட்டியில் கலந்துகொண்டு எழுத வாய்ப்பு கொடுத்த எஸ்.எம்.தளம், சஷி மேம், உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
என்னை பாசமென்னும் மழையில் நனைய வைத்த அத்தனை வாசகர்களுக்கும் என் பணிவான நன்றிகள்.
ஆன்ட்டி ஹீரோ கதை எழுத வருமா என்ற தயக்கத்துடன் இப்போட்டியில் கலந்துகொண்டேன். ஆனால் என் கதை, Word Limit காரணத்தால் தான் பதிப்பிக்கும் வாய்ப்பை இழந்தது என்று பார்க்கும் போது, எழுத்துப்பயணத்தில் வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன் வாசகர்களே!
நீங்கள் தந்த தொடர் ஆதரவால் தான், நானும் தங்குதடையின்றி என் சிறகுகளை விரித்து உயரப் பறந்தேன்; முழுமையான கதை எழுதிய மனநிறைவும் பெற்றேன்.
சக போட்டியாளர் என்று பாராமல், எண்ணிலடங்கா பல உதவிகளை செய்த அனாமிகாஸ் அத்தனை பேருக்கும் என் நன்றிகள் பல பல. தக்க சமயத்தில் ஊக்கம் தந்து, முக நூலில் என் சார்பில் பதிவிட்டு, கதையும் படித்துப் பாராட்டிய அனாமிகாஸ்
@Anamika 12 @Anamika 28 @Anamika 47 @Anamika 49 உங்கள் நால்வரின் அன்பை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
என்றும் பாசமுடன்,
அனாமிகா 50 என்னும் வித்யா வெங்கடேஷ்