சில்லென்ற மழை காற்று
என் முகத்தை வருடிச்செல்ல
நீ சென்ற திசை பார்த்து
நின்றதடி என் மனம்..
உன் முகம் காணும்
பொழுதினிலே பெண்ணே
சில நினைவுகள் மனதில்
வந்து செல்லும் மாயம்
நான் அறிவேன் பெண்ணே..
விரும்பிய பொழுது
என் எதிரே இருந்தவள்..
நான் பிரியும் பொழுது
என்னைவிட்டு விலகிச்
செல்ல நினைத்தாயோ..
சிலநொடிகளில் மாறிவிடுமா
நீ கொண்ட காதல்.. இல்லை
நான் காண்டது பொய்யா..?
விடை தேடி தவிக்கிறது மனம்..
கண்ணால் களவாடிச் சென்றவனே..
நான் உன் காதலிதான்..
என்னுள் இருப்பதும் நீதான்..
இந்த சிலநொடி மட்டும்
நான் மாறிவிட்ட மாயமும்
நான் அறிவேன் கண்ணா...
என்னுள் இருப்பவள் நான் அல்ல..
அவளொரு தூய ஆத்மா..
அவளின் பணியை நான்
செய்ய சென்ற தருணத்தில்
நீ வந்து நின்றால்
என்னால் என்ன செய்ய இயலும்..
உன் தேடலுக்கான பதிலை
நான் சொல்ல முடியும்..
சொல்லும் தருணம் அமையாது..
இன்று மட்டும் அல்ல.. என்றுமே..
புரிந்துகொள்ள முயற்சி செய்யடா
என்னுயிர் கண்ணா..
சந்தியா ஸ்ரீ
என் முகத்தை வருடிச்செல்ல
நீ சென்ற திசை பார்த்து
நின்றதடி என் மனம்..
உன் முகம் காணும்
பொழுதினிலே பெண்ணே
சில நினைவுகள் மனதில்
வந்து செல்லும் மாயம்
நான் அறிவேன் பெண்ணே..
விரும்பிய பொழுது
என் எதிரே இருந்தவள்..
நான் பிரியும் பொழுது
என்னைவிட்டு விலகிச்
செல்ல நினைத்தாயோ..
சிலநொடிகளில் மாறிவிடுமா
நீ கொண்ட காதல்.. இல்லை
நான் காண்டது பொய்யா..?
விடை தேடி தவிக்கிறது மனம்..
கண்ணால் களவாடிச் சென்றவனே..
நான் உன் காதலிதான்..
என்னுள் இருப்பதும் நீதான்..
இந்த சிலநொடி மட்டும்
நான் மாறிவிட்ட மாயமும்
நான் அறிவேன் கண்ணா...
என்னுள் இருப்பவள் நான் அல்ல..
அவளொரு தூய ஆத்மா..
அவளின் பணியை நான்
செய்ய சென்ற தருணத்தில்
நீ வந்து நின்றால்
என்னால் என்ன செய்ய இயலும்..
உன் தேடலுக்கான பதிலை
நான் சொல்ல முடியும்..
சொல்லும் தருணம் அமையாது..
இன்று மட்டும் அல்ல.. என்றுமே..
புரிந்துகொள்ள முயற்சி செய்யடா
என்னுயிர் கண்ணா..
சந்தியா ஸ்ரீ