Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
இறங்குமுகம்
வீராவின் கோபத்திற்குப் பதிலுரையாய் வந்தது அரவிந்தின் ஏளன சிரிப்பொலி!
அவனின் சிரிப்பு சத்தம் அவளுக்கு எரிச்சலை மூட்ட அவனோ சிரித்த மேனிக்கு, "அப்போ மிஸ்ஸஸ் சாரதின்னு ரெஜிஸ்டராயிருக்கே... அந்த வீரமக்காளி... நீ இல்லையா டார்லிங்?" என்றவன் எகத்தாளமாய் கேட்டு வைக்க,
"அதெல்லாம் உனக்குத் தேவையில்லாத மேட்டர்... ஒழுங்கா போஃனை மலர் கிட்ட கொடு" என்றாள். சில நொடி மௌனத்திற்குப் பின் அவனே மீண்டும்,
"நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளு"
"என்னடா கேட்கனும்?"
"அந்த சாரதி உன்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பணியிருக்கான்னா... என்கிட்ட சொல்லு... நான் உன்னை காப்பாத்திறேன்" என்றான்.
"காப்பாத்திறியா... நீ யாருடா என்னை காப்பாத்த... எனக்கு ஒரு பிரச்சன்னைனா அத நானே சமாளிச்சிக்குவேன்... எனக்கு எவன் தயவும் தேவையில்ல... இன்னும் கேட்டா நான் சாரதி சாரை பிடிச்சிதான் கல்யாணம் பண்ணிக்கினேன்... நீ பாட்டுக்கு எதையாச்சும் கற்பனை பணிக்கினுன்னு மலரையும் போட்டு குழப்பி வைக்காதே... சொல்லிட்டேன்" அவள் படபடவென பொறிந்து தள்ள அரவிந்த மறுபுறம் ஆவேசமாய்,
"நான் உன்னை உயிரை கொடுத்து காதலிச்சிருக்கேன்... ஆனா நீ என்னை விட்டுட்டு போயும் போயும் அந்த பொறுக்கி புறம்போக்கை போய் பிடிச்சி... கல்யாணம் பண்ணிகினேன் சொல்ற" என்று கேட்டான்.
"அடிங்க! பொறுக்கி அது இதுன்னு சொன்ன கன்னம் பேந்திறோம்... யாருடா உன்னை என்னை காதலிக்க சொன்னது... நான் சொன்னேன்... என்னவோ உயிரை கொடுத்து காதலிச்சேன்... ம.. கொடுத்து காதலிச்சேன்னு பேசிட்டிருக்க"
"ஆமா... அவன் பெரிய உத்தம புருஷன் ... அவனுக்காக போய் கண்ணகிக்கு கசின் சிஸ்டர் மாறி பொங்கிற" என்றவன் மேலும்,
"ஆனா லாஜிக் என்னவோ கரெக்ட்தான்டி ... கீப் வைசிருக்கிறவனுக்குதான் கண்ணகி மாறி பொண்டாட்டியெல்லாம் கிடைப்பா...ஆனா என்ன ? கண்ணகி புருஷனுக்கு ஒன்னுதான்... ஆனா உன் புருஷனுக்கு வாரத்துக்கு ஒன்னு ?" என்றான்.
அவன் சொன்னவிதம் வீராவிற்கு சுருக்கென்றிருந்தது. எதவும் பேச முடியாமல் அவள் மௌனமாகிட,
அரவிந்த் அதோடு நிறுத்தி கொள்ளாமல், "பாத்தும்மா... உன் தங்கசிங்களையும் அந்த லிஸ்ட்ல சேர்த்திர போறான்... உன் அருமை புருஷன்" என்க, அவளின் கோபம் எல்லையை மீறியது.
"என்னடா ஓவரா பேசிற?... போஃன்ல பேசிற தைரியமாடா ?" என்றவள் ஆக்ரோஷமாய் கத்த,
"எங்க பேசினாலும்... நான் இப்படிதான்டி பேசியிருப்பேன்" என்றான் அவன்.
"நீ மட்டும் என் முன்னாடி இப்படி பேசியிருந்த... மவனே! உன் சங்கை அறுத்திறுப்பேன்" என்று அவள் ஆவேசமாய் வார்த்தைகளைக் கடித்து துப்பினாள்.
"இந்த கோபத்தையெல்லாம் உன்னை வைசிட்டிருக்கான் பாரு... உன் புருசன்... அவன்கிட்ட காமிடி... யாருக்கு தெரியும்? அவன் ஒரு நாள் உன்னையும் உன் தங்கசிங்களையும் காசுக்காக விலை பேசி வித்தாலும் ஆச்சரிய படிறதுக்கில்ல"
"டே! அரவிந்த்" என்றவள் ரௌத்திரமாய் கத்த எதிர்புறத்தில் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. அவன் இறுதியாய் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளை நொறுங்கிய கண்ணாடி துண்டுகளை போல சில்லுசில்லாய் உடைத்துப் போட்டிருந்தன!
தன் அறைக்குள் புகுந்தவள் கதவை தாளிட்டு கொண்டு ஓங்காரமாய் பொங்கி அழ, அவள் கட்டுக்குள் வைத்திருந்த அவளின் துயரங்கள் மொத்தமும் மடையை உடைத்த பெருவெள்ளமாக கரைபுரண்டு கண்ணீராய் வெளியேறின!
ஆனால் எவ்வளவு அழுதாலும் அவள் வேதனையும் வலியும் தீர்ந்ததென்றால் அதுதான் இல்லை. அது இன்னும் இன்னும் வளர்ந்து அவளுக்குள் விஸ்வரூபம் எடுத்து நிற்க, அதன் முன்னிலையில் அவளின் துணிச்சலும் தன்னம்பிக்கையும் குன்றித்தான் போனது.
அதேநேரம் அரவிந்திற்கு வீரா மீதான வன்மமும் வஞ்சமும் வானுயர ஓங்கி நின்றதென்று சொன்னாலும் அது மிகையல்ல. வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையென அவன் முகமும் அகமும் அனலைக் கக்கி கொண்டிருக்க, சரத் தன் பார்வையாலேயே அவன் மனநிலையை ஆராய்ந்து ,
"நான் அப்பவே சொன்னேன்... வேணாம் அந்த பொண்ணுக்கிட்ட பேசாதன்னு... கேட்டியா... லூசு மாறி அவ மேல இன்னும் நம்பிக்கை இருக்கு தும்பிக்கை இருக்குன்னு சொல்லி பேசி... இப்போ அசிங்கப்பட்டு நிற்கிற... இப்போ இந்த விஷயம் அவ மூலமா அந்த சாரதி காதுக்கு போச்சு... அவன் நமக்கு திரும்பவும் ஆப்படிச்சிருவான்" என்க,
"தப்புதான் மாமா... நீங்க சொன்னத நான் கேட்டிருக்கணும்... கேட்காம... பெரிய தப்பு பண்ணிட்டேன்... நான் அவளை நம்பினதுக்கு என் மூஞ்சில நல்லா கரிய பூசிட்டா... என் காதலையும் என்னையும் அசிங்கபடுத்திட்டா" என்று பேசி கொண்டே அரவிந்தின் குரல் உச்சபச்ச சீற்றத்திலும் ஏமாற்றத்திலும் நடுக்கமுற்றது.
"இனிமையாச்சும் நான் சொல்றத கேளு" என்று சரத் அழுத்தமாய் உரைக்க,
அரவிந்த் அந்த நொடியே நிமிர்ந்து அமர்ந்து தன்னைத்தானே தெளிவுபடுத்தி கொண்டு, "கேட்கிறேன் மாமா... நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்... எனக்கு... அந்த சாரதியை நடுத்தெருவில நிறுத்தனும்... அப்புறம் என்னை வேணாம்னு சொல்லிட்டு... அவனை நம்பி போனாளே... அந்த வீரா... அவளை அசிங்கபடுத்தி அவமானப்படுத்தி பார்க்கணும்" என்று வெறிகொண்டு உரைதான்.
"கண்டிப்பா செய்யலாம் அரவிந்த்... ஆனா அவசரபடாம பொறுமையா இரு... நம்ம இனி எடுத்து வைக்க போற ஒவ்வொரு அடியும் அந்த சாரதிக்கு மரண அடியா இருக்கனும்" சரத் தீர்க்கமாய் யோசித்து பேச அரவிந்த் மௌனமாய் தலையை மட்டும் அசைத்தான்.
சிங்கத்தின் பலத்தை கூட வீழ்த்திவிடலாம்... ஆனால் நரியின் தந்திரத்தை... எப்பேர்பட்டவனுக்கும் ஏறுமுகம் என்று ஒன்றிருந்தால் இறங்குமுகமென்று ஒன்றிருக்கவே செய்யும். சாரதிக்கான இறங்குமுகம் அங்கே தொடங்கியது.
சாரதி தன் அலுவலகத்தில் தீவிரமான சிந்தனையில் இருந்தான்.
லாயர் ஜானிடம் தன் அம்மா கிறிஸ்டினாவின் சொத்துக்கள் பற்றிய முழு விவரங்களைக் கேட்டறிந்தவன் ... நிலபுலன் வீடு நகை மற்றும் பணம் யாவும் சிலப்பல கோடிகளைத் தாண்டுமென வேகமாய் மனதிற்க்குள்ளேயே கணக்கிட்டு கொண்டான்.
ஆனால் இந்தச் சொத்துக்களை உரிமையாக்கிக் கொள்ள தன் அம்மாவை நேரில் சென்று சந்திக்க வேண்டுமென்பதில்தான் அவனுக்குக் கொஞ்சமும் உடன்பாடில்லை. அவன் பிசினஸ் மூளையும் அவன் ஈகோவும் இந்த விஷயத்தில் ஒன்றோடு ஒன்று முட்டிமோதிக் கொண்டிருந்தது. அதற்குக் காரணமோ இப்போதைக்கு அவனுக்கு பணதேவையில்லை என்பதுதான்!
அதேநேரம் தேவையேயில்லை என்று மானஸ்தன் பேர் வழியாக மாறிவிடவில்லை. தன் ஈகோவை விட்டு இறங்கிவராமல் அந்தச் சொத்தை எப்படி சொந்தமாக்கிக் கொள்வது என்ற சிந்தனைதான் அவனுக்கு! எப்படியும் அவன் யோசிக்க ஆரம்பித்துவிட்டால் அதை அவன் வெகுவிரைவில் சாதித்து விடுவான். அதற்குக் காரணம் இன்று வரை அவனுக்கு உறவுகளையும் உணர்வகளையும்விட பணம் மட்டுமே பிரதானமாயிருந்தது. ஆனால் அந்த ப்ரையாரிட்டி(priority) வெகுவிரைவில் மாறப் போகிறது. அதுதான் அவன் வீழ்ச்சியின் முதல் படி.
******