பெண்ணிடம் வீரத்தை காட்டும் பேடிகளே...
மனதால், உள்ளத்தால் நிர்வாணமாக இருக்கும் மானம் கெட்ட மங்கூஸ் மண்டையன்களே...
மானம் என்ன பிட்ஸாவோ...கெட்டு போக
ஊசி போக...
மானம் - ஆறு மீட்டர் நீளத்தில் இல்லையடா
காட்டு மிராண்டிகளே...
மானம் என்ன மேலாடையோ அவிழ்த்தால் அழிந்துபோக....இழுத்தால் கிழிந்துபோக....
மானத்தை காக்க அழைக்கவில்லையடா பார்த்தசாரதியை - மூடர்களே
உங்களை போன்ற பேடிகளுக்கு பாடத்தை புகட்டவே
அழைத்தால் மாதவனை - அழித்தால் துஷ்டர்களின் வம்சத்தையே....
ஒன்றை மறந்தீர்கள் நரியின் தந்திர புத்தி கொண்ட சகுனிகளே...
திரௌபதிக்கு மித்ரனடா அந்த சாரதி ...
வீரவிற்க்கோ சரிபாதியடா இந்த சாரதி...
இவள் திரௌபதி அல்ல டா அழைக்க
இவள் காளி வீரமாகாளி..
இவள்அழைக்காமலே வருவான்
இவள் விளக்காமலே உங்களை அழிப்பான்...
நற்சிந்தனை இல்லாத கூடலில் பிறந்த கயவர்களே...
மானம் என்றால் என்ன தெரியுமோ -
நிமிர்வோடும் திமிரோடும் உம் போன்ற
இழிவான, கேவலமான ஜந்துக்கள் முன்
வாழ்ந்து காட்டுவதுடா...
நடக்கும் நடக்கும்...
தண்டனைகளுக்கு எல்லாம் உச்சம்...
உங்களுக்கு அது நிச்சயம் .. மிச்சமில்லாமல்
கொடுப்பான் அது தான் நிதர்சனம் ...
I also accept this.
Indru migavum ganamana padivu.
Padikkumpodu nenjam ganathu povudu