lakshmi2407
அமைச்சர்
அத்தியாயம் – 18
காரை ஓட்டிக்கொண்டிருந்த பிரஜன், த்ரிவிக்ரமனிடம் அலைபேசியில் வந்த தகவலை காண்பித்து, "அண்ணா... இப்போ வீட்டுக்கா இல்ல ஸ்டேஷனுக்கா?", என்று கேட்டான்.
நொடி கூட தாமதிக்காமல், "அந்த விஷயத்தை போலீஸ் பாத்துக்கட்டும். நாம வீட்டுக்கு போலாம்", என்றான். யார் அவன் என்று தெரிந்து கொள்ள த்ரிவிக்கிரமனுக்கு ஆர்வம் இருந்தபோதும்... மனைவி போனில் பேசியபோது அழுததும், நேற்று அவனை வெகுவாக தேடியதையம் அறிந்தவன்... நங்கையை பார்க்க வேண்டுமென முடிவெடுத்தான்.
தவிர அவனுக்குமே ஒரு எண்ணம்... என்னதான் செல்வாக்குள்ள அமைச்சரை தெரிந்திருந்தாலும், காவல்துறையில் மேலதிகாரியைத் தொடர்பு கொள்ள இயலும் என்றிருந்தாலும், எதிரியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உந்துதலுடன், சம்பந்தப்பட்ட துறைக்கு, சென்றது தவறோ என்று.
அந்த காணொளியால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த மனைவியிடம் அல்லவா முதலில் சென்றிருக்க வேண்டும்?. நான் உன்னுடனிருக்கிறேன், கவலைப்படாதே என்றல்லவா நின்றிருக்க வேண்டும்? என்பது ... நங்கை தன்னைத் தேடியிருப்பதை உணர்ந்தபின்தான்..., இத்தனை தாமதமாகத்தான் தோன்றியது.
நேற்று மாலை, விமான நிலையத்தில் அமர்ந்து யோசித்தபோது, தன் மனைவியை ஒருவன் குற்றம் சுமத்துவதா?, அவ்வாறு செய்த அவனை சும்மா விடுவதா? என்று எண்ணினானே தவிர.. அவனது மனைவி, கணவனாக... தான் என்ன நினைக்கிறோம் என்பதைப் பற்றிய குழப்பத்தில் இருப்பாள் என்றிவன் யோசிக்கவில்லை. காரணம் வேறொன்றுமில்லை. அங்கே த்ரிவிக்ரமன், ஆணாக நின்று, அவன் என்ன செய்யவேண்டுமென தீர்மானித்தான், ஒரு மனைவியாக , நங்கை என்ன நினைப்பாள், தன்னிடம் என்ன எதிர்பார்ப்பாள் என்பதை யோசிக்க மறந்தான். ஆங்கு.. அவனிடத்து அறிவு பேசியது... நங்கையின்பால் இருந்த அன்பு.. அவளது சுற்றங்களை வரச் சொன்னது.
தவிர.. த்ரிவிக்-கிற்கு அவ்வீடியோ செய்தி குறித்த சந்தேகம், ஒரு சதமாவது இருந்தால்தானே..., மனையாள் குறித்த இப்பழிச் சொற்கள் உண்மையா என்று யோசிக்கத் தோன்றும்? த்ரிவிக்ரமன், அவனை எந்தளவிற்கு நம்புகிறானோ அதே அளவு தன மனைவி நங்கையையும் நம்புகிறான். அதுவும்...., எதிரியைத் தேடிச்சென்ற இவனது செயலுக்கு ஒரு காரணம். என்ன ஒன்று , அவனது நம்பிக்கையை, தன் மனைவியிடம் வெளிப்படுத்த த்ரிவிக்-கிற்கு சந்தர்ப்பம் அமையவில்லை.
கார் நங்கையின் வீட்டை சமீபித்திருந்தது. வீட்டிற்குச் சென்றதும், நங்கையிடம் த்ரிவிக்-கிற்கு சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று மட்டுமே., 'உன்னைப் பத்தி எவன் என்ன சொன்னாலும், நான் நம்பமாட்டேன். எனக்கு உன்னைத் தெரியும்", என்பதே அது. அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தான். அவன் சொல்லப்போவது அவனைப் பொறுத்தவரை மிகச் சிறிய வாக்கியமே. ஆனால், அது அவனது அரிவைக்கு எத்தனை வலிமை தரும் என்பதை அவன் கண்டிப்பாக அறியான்.
அங்கே வீட்டிலோ... நங்கைக்கு அண்ணியிடமிருந்து, விதவிதமாக அர்ச்சனைகள் கிடைத்துக் கொண்டிருந்தது.
"நீ பண்றது நல்லால்ல நல்லா., இருக்கிற பிரச்சனைல இருந்தே எப்பிட்றா வெளிய வர்றதுன்னு தெரியாம இருக்கு.. இதுவே நம்மூரா இருந்தா நிலமையே வேற. இப்டி செஞ்சவன, நம்மாளுங்க உண்டு இல்லைன்னு பண்ணிருப்பாங்க.."
"இப்போ என்னடான்னா... வெளியூர்ல வம்பு வேணாம்னு சொல்லச்சொல்ல கேக்காம.. உங்கண்ணன் வேற பத்து தடிப்பசங்கள வரவெச்சிருக்கு. யாரும் யார் பேச்சையும் கேக்கறதில்லன்னு முடிவோட இருக்கீங்களா?"
"இதுல நீ பேட்டிங்கிற பேர்ல... இன்னும் கொஞ்சம் அவன தூண்டி விட்டு இருக்க?, பொண்ணுன்னு அச்சம் கொஞ்சங்கூட இல்லாம... வீராப்பு பேசிட்டு..?"
"அங்க விக்கித்தம்பி வேற டிபார்ட்மென்ட், டிபார்ட்மென்டா சுத்திட்டு கிடக்கு", ஆரம்பித்த அண்ணி முடிப்பதாகக் காணோம்.
காப்பாற்றுவார் என்று நங்கை அப்பாவைப் பார்க்க.. அவரோ என்னாகப்போகிறதோ என்ற கவலையுடன் இருந்தார். சிறிது நேரம் யோசித்தவர்.. ஒரு தீர்மானத்திற்கு வந்தவராக...
"நல்லா... மாப்பிள்ளைக்கு போன் போடு பேசணும்", என்று நங்கையிடமும்...
"சின்னவனே.. வந்த ஆளுங்களை அப்படியே திரும்ப போகச் சொல்ற. ஏதாச்சும் தகறாருன்னு தெரிஞ்சுது ...", தனது அண்ணனின் மகனை மிரட்டினார்.
"நீ உடனே நம்ம எல்லாருக்கும்...", நிறுத்தி நங்கையை பார்த்தபடி.. "மாப்பிள்ளைக்கும் சேர்த்து நைட் பிளைட்-ல சென்னைக்கு டிக்கட்டை போடு.", என்றார் மருமகளிடம்.
"நல்லா... இன்னிக்கு நாம சென்னைக்கு போறோம்.. ஒரு ஒருவாரம் அங்க இருங்க. இங்க இந்த பரபரப்பெல்லாம் ஓயட்டும். அப்பறமா, எல்லாரும் கூடி பேசி நிதானமா, என்ன வேணா முடிவெடுத்துக்கலாம்.", கறார் குரலில் கூறினார்.
அப்பா, கணவனை தொடர்புகொள்ளச் சொன்னதால்... தனது அலைபேசியை, அருகிலிருக்கிறதா எனத் தேடிய நங்கை..., "உங்க இஷ்டம்பா", ஒருவித மரத்த குரலில் பதிலுரைக்க... சரியாக அதே நேரத்தில் த்ரிவிக் உள்ளே வந்தான். நங்கையின் இந்த "உங்க இஷ்டம்பா", வின் மரத்த த்வனி, ஏனோ மனதுள் தைத்தது.
என்னவென்று அதனுள் ஆழ்ந்து போகமுடியாதவனாய்.. "வாங்க மாப்ளே", "வாங்க தம்பி", மாமனாரின் குரலும், மச்சானின் குரலும் அவனைக் கலைக்க... சின்னதான தலை அசைவுடன் இதழ் நோகா புன்னகை சிந்தி, வீட்டைப் பார்வையிட்டபடி, உள் நுழைந்தான். விருந்தினர்களுக்கான படுக்கையறை விரியத் திறந்திருக்க.. அங்கிருந்த சோஃபாவில் நங்கை அமர்ந்திருந்தாள், அருகில் அண்ணி, நங்கையின் இடக்கையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தார்.
கூடத்திலிருந்து பார்த்தால் அவர்கள் இருப்பது தெரியும். ஆனால், வாயிலில் இருந்து வருபவர்கள் சற்று உள்ளே வந்தால்தான் படுக்கையறையில் நங்கை அமர்ந்திருப்பது தெரியும்.
'மாப்ள' என்ற அப்பாவின் அழைப்பிலேயே, த்ரிவிக்கின் வருகையை அறிந்து, ஆனந்தமாய் அதிர்ந்தவள்.., சட்டென்று எழுந்துவந்தாள்.
நங்கையை த்ரிவிக் பார்த்தான். அவளது நலுங்கிய தோற்றம், இவளைப் பிரிந்து இரண்டு நாள்தான் ஆனதா?, என்றுதான் எண்ணத் தோன்றியது. அதையும் மீறி அவள் கண்களில் ஒளி, முகத்தின் மலர்ச்சி. அது தன்னைக் கண்டதினால் என்று புரிந்தது. அவளது இதயத்தின் அதிவேகத்துடிப்பு, இரண்டே எட்டில் அவளை நெருங்கியிருந்த கணவனுக்குக் கேட்டது. உடனே மனைவியை ஆரத்தழுவி, தோள் சேர்த்துக் கொள்ள ஆசை வந்தது . இருந்தும், வீட்டிலிருக்கும் சுற்றத்தோருக்கு மதிப்பளித்து.. பேசாதிருந்தான்.
எப்போதும்போல, ஊரிலிருந்து வரும்போது கணவனின் கையிலிருக்கும் அமெரிக்கன் டூரிஸ்ட்டரை வாங்க மனைவியின் கைகள் நீள... அதைக் நங்கையின் கையில் கொடுக்க தன்னிச்சையாக அவன் கைகள் உயர... பார்த்தவனின் கண்கள்... அதிர்ந்தது. நங்கையின் உள்ளங்கை சதை முழுவதும் தாறுமாறாக கிழிபட்டிருக்க... விரல் நுனிகளைத்தவிர, ஆங்காங்கே சதை பெயர்ந்து.. செவசெவ-த்திருந்தது. அவனது முகம் தீவிரத்தன்மை கொண்டது.
நங்கையின் அண்ணி, அப்போதுதான் நங்கையின் கைக் கட்டினைப் பிரித்து, டெட்டால் கொண்டு பஞ்சினால் ரணத்தை சுத்தம் செய்துகொண்டிருந்தார். [கூடவே நங்கைக்கு வசவும்.. இலவச இணைப்பாக... (ஒருவேளை வலி தெரியாதிருக்கவோ?)].
த்ரிவிக், பெட்டியை தானே எடுத்துக் கொண்டு, அவளைப்பார்த்து, "காஃபி எடுத்திட்டு வா", என்றுவிட்டு விடுவிடுவென அவர்களது அறைக்குச் சென்றான்.
நங்கை, இரண்டு நிமிடத்தில்.. காஃபியுடன் அவர்களது அறைக்குச் சென்றாள். உடை மாற்றிக்கொண்டிருந்த த்ரிவிக்.. கதவின் தாள் திறக்கும் சப்தம் கேட்டு திரும்ப.. மறுநொடி அவன் மார்பில் தஞ்சமடைந்திருந்தாள் நங்கை நல்லாள். அவள் வேகத்துக்கு சற்றும் குறையாமல், த்ரிவிக்கும் அவளை இறுக்கி அணைத்திருந்தான். காம, காதல் கசடுகளேதுமின்றி கணவனும் , அவனுக்கு சற்றும் குறையாத பேருவகையுடன் மனைவியும், நானிருக்கிறேன் உனக்கு என்ற உறுதியான அரவணைப்பில். பேசினால் இக்கணம் களங்கப்படும். இது மொழியறியா ஆதி மனிதனின் உடல்மொழி, வார்த்தைகளில் வடிக்கயியலாத ஓர் உள்ளுணர்வு.
சிறிது நேரம் பொறுத்து, நங்கையை விடுவித்தவன் கண்கள் பணித்திருக்க, அவளது நெற்றியில் செல்லமாக முட்டி, "லூஸு" என்றான்.. அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களில் கண்ணீர் படலம், நகைமுரணாக முகம் அன்றலர்ந்த மலர் போல் இருக்க.. இதழில் அவன் சொன்ன லூஸு -க்கு சிரிப்பு. இதென்ன சிறுபிள்ளை போல?.
"ஏன்?", நங்கை கேட்டாள்.
" போன்ல அப்படி அழற? "
"தப்பா எடுத்திட்டீங்களோன்னு நினச்சு....",
" லூஸு , உன்னப்போயி தப்பா நினைப்பேனாடீ?", என்க...
"அதான் ஏன்?",
'நீ அழகு', என்று பிறர் சொல்ல கேட்கும் பெண்கள், அதை இன்னும் ஊர்ஜிதப்படுத்த.. மேலும் மேலும், அதைக் குறித்து மற்றவரிடம் கேட்டு, இன்னின்னவாறு நீ அழகாக இருக்கிறாய் என்று அவர்கள் வாய் மொழியில் தெளிவுபடுத்துவத்தைக் கேட்டு இன்புறுவதைப்போலிருந்து , நங்கையின் கேள்வி.
காரை ஓட்டிக்கொண்டிருந்த பிரஜன், த்ரிவிக்ரமனிடம் அலைபேசியில் வந்த தகவலை காண்பித்து, "அண்ணா... இப்போ வீட்டுக்கா இல்ல ஸ்டேஷனுக்கா?", என்று கேட்டான்.
நொடி கூட தாமதிக்காமல், "அந்த விஷயத்தை போலீஸ் பாத்துக்கட்டும். நாம வீட்டுக்கு போலாம்", என்றான். யார் அவன் என்று தெரிந்து கொள்ள த்ரிவிக்கிரமனுக்கு ஆர்வம் இருந்தபோதும்... மனைவி போனில் பேசியபோது அழுததும், நேற்று அவனை வெகுவாக தேடியதையம் அறிந்தவன்... நங்கையை பார்க்க வேண்டுமென முடிவெடுத்தான்.
தவிர அவனுக்குமே ஒரு எண்ணம்... என்னதான் செல்வாக்குள்ள அமைச்சரை தெரிந்திருந்தாலும், காவல்துறையில் மேலதிகாரியைத் தொடர்பு கொள்ள இயலும் என்றிருந்தாலும், எதிரியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உந்துதலுடன், சம்பந்தப்பட்ட துறைக்கு, சென்றது தவறோ என்று.
அந்த காணொளியால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த மனைவியிடம் அல்லவா முதலில் சென்றிருக்க வேண்டும்?. நான் உன்னுடனிருக்கிறேன், கவலைப்படாதே என்றல்லவா நின்றிருக்க வேண்டும்? என்பது ... நங்கை தன்னைத் தேடியிருப்பதை உணர்ந்தபின்தான்..., இத்தனை தாமதமாகத்தான் தோன்றியது.
நேற்று மாலை, விமான நிலையத்தில் அமர்ந்து யோசித்தபோது, தன் மனைவியை ஒருவன் குற்றம் சுமத்துவதா?, அவ்வாறு செய்த அவனை சும்மா விடுவதா? என்று எண்ணினானே தவிர.. அவனது மனைவி, கணவனாக... தான் என்ன நினைக்கிறோம் என்பதைப் பற்றிய குழப்பத்தில் இருப்பாள் என்றிவன் யோசிக்கவில்லை. காரணம் வேறொன்றுமில்லை. அங்கே த்ரிவிக்ரமன், ஆணாக நின்று, அவன் என்ன செய்யவேண்டுமென தீர்மானித்தான், ஒரு மனைவியாக , நங்கை என்ன நினைப்பாள், தன்னிடம் என்ன எதிர்பார்ப்பாள் என்பதை யோசிக்க மறந்தான். ஆங்கு.. அவனிடத்து அறிவு பேசியது... நங்கையின்பால் இருந்த அன்பு.. அவளது சுற்றங்களை வரச் சொன்னது.
தவிர.. த்ரிவிக்-கிற்கு அவ்வீடியோ செய்தி குறித்த சந்தேகம், ஒரு சதமாவது இருந்தால்தானே..., மனையாள் குறித்த இப்பழிச் சொற்கள் உண்மையா என்று யோசிக்கத் தோன்றும்? த்ரிவிக்ரமன், அவனை எந்தளவிற்கு நம்புகிறானோ அதே அளவு தன மனைவி நங்கையையும் நம்புகிறான். அதுவும்...., எதிரியைத் தேடிச்சென்ற இவனது செயலுக்கு ஒரு காரணம். என்ன ஒன்று , அவனது நம்பிக்கையை, தன் மனைவியிடம் வெளிப்படுத்த த்ரிவிக்-கிற்கு சந்தர்ப்பம் அமையவில்லை.
கார் நங்கையின் வீட்டை சமீபித்திருந்தது. வீட்டிற்குச் சென்றதும், நங்கையிடம் த்ரிவிக்-கிற்கு சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று மட்டுமே., 'உன்னைப் பத்தி எவன் என்ன சொன்னாலும், நான் நம்பமாட்டேன். எனக்கு உன்னைத் தெரியும்", என்பதே அது. அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தான். அவன் சொல்லப்போவது அவனைப் பொறுத்தவரை மிகச் சிறிய வாக்கியமே. ஆனால், அது அவனது அரிவைக்கு எத்தனை வலிமை தரும் என்பதை அவன் கண்டிப்பாக அறியான்.
அங்கே வீட்டிலோ... நங்கைக்கு அண்ணியிடமிருந்து, விதவிதமாக அர்ச்சனைகள் கிடைத்துக் கொண்டிருந்தது.
"நீ பண்றது நல்லால்ல நல்லா., இருக்கிற பிரச்சனைல இருந்தே எப்பிட்றா வெளிய வர்றதுன்னு தெரியாம இருக்கு.. இதுவே நம்மூரா இருந்தா நிலமையே வேற. இப்டி செஞ்சவன, நம்மாளுங்க உண்டு இல்லைன்னு பண்ணிருப்பாங்க.."
"இப்போ என்னடான்னா... வெளியூர்ல வம்பு வேணாம்னு சொல்லச்சொல்ல கேக்காம.. உங்கண்ணன் வேற பத்து தடிப்பசங்கள வரவெச்சிருக்கு. யாரும் யார் பேச்சையும் கேக்கறதில்லன்னு முடிவோட இருக்கீங்களா?"
"இதுல நீ பேட்டிங்கிற பேர்ல... இன்னும் கொஞ்சம் அவன தூண்டி விட்டு இருக்க?, பொண்ணுன்னு அச்சம் கொஞ்சங்கூட இல்லாம... வீராப்பு பேசிட்டு..?"
"அங்க விக்கித்தம்பி வேற டிபார்ட்மென்ட், டிபார்ட்மென்டா சுத்திட்டு கிடக்கு", ஆரம்பித்த அண்ணி முடிப்பதாகக் காணோம்.
காப்பாற்றுவார் என்று நங்கை அப்பாவைப் பார்க்க.. அவரோ என்னாகப்போகிறதோ என்ற கவலையுடன் இருந்தார். சிறிது நேரம் யோசித்தவர்.. ஒரு தீர்மானத்திற்கு வந்தவராக...
"நல்லா... மாப்பிள்ளைக்கு போன் போடு பேசணும்", என்று நங்கையிடமும்...
"சின்னவனே.. வந்த ஆளுங்களை அப்படியே திரும்ப போகச் சொல்ற. ஏதாச்சும் தகறாருன்னு தெரிஞ்சுது ...", தனது அண்ணனின் மகனை மிரட்டினார்.
"நீ உடனே நம்ம எல்லாருக்கும்...", நிறுத்தி நங்கையை பார்த்தபடி.. "மாப்பிள்ளைக்கும் சேர்த்து நைட் பிளைட்-ல சென்னைக்கு டிக்கட்டை போடு.", என்றார் மருமகளிடம்.
"நல்லா... இன்னிக்கு நாம சென்னைக்கு போறோம்.. ஒரு ஒருவாரம் அங்க இருங்க. இங்க இந்த பரபரப்பெல்லாம் ஓயட்டும். அப்பறமா, எல்லாரும் கூடி பேசி நிதானமா, என்ன வேணா முடிவெடுத்துக்கலாம்.", கறார் குரலில் கூறினார்.
அப்பா, கணவனை தொடர்புகொள்ளச் சொன்னதால்... தனது அலைபேசியை, அருகிலிருக்கிறதா எனத் தேடிய நங்கை..., "உங்க இஷ்டம்பா", ஒருவித மரத்த குரலில் பதிலுரைக்க... சரியாக அதே நேரத்தில் த்ரிவிக் உள்ளே வந்தான். நங்கையின் இந்த "உங்க இஷ்டம்பா", வின் மரத்த த்வனி, ஏனோ மனதுள் தைத்தது.
என்னவென்று அதனுள் ஆழ்ந்து போகமுடியாதவனாய்.. "வாங்க மாப்ளே", "வாங்க தம்பி", மாமனாரின் குரலும், மச்சானின் குரலும் அவனைக் கலைக்க... சின்னதான தலை அசைவுடன் இதழ் நோகா புன்னகை சிந்தி, வீட்டைப் பார்வையிட்டபடி, உள் நுழைந்தான். விருந்தினர்களுக்கான படுக்கையறை விரியத் திறந்திருக்க.. அங்கிருந்த சோஃபாவில் நங்கை அமர்ந்திருந்தாள், அருகில் அண்ணி, நங்கையின் இடக்கையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தார்.
கூடத்திலிருந்து பார்த்தால் அவர்கள் இருப்பது தெரியும். ஆனால், வாயிலில் இருந்து வருபவர்கள் சற்று உள்ளே வந்தால்தான் படுக்கையறையில் நங்கை அமர்ந்திருப்பது தெரியும்.
'மாப்ள' என்ற அப்பாவின் அழைப்பிலேயே, த்ரிவிக்கின் வருகையை அறிந்து, ஆனந்தமாய் அதிர்ந்தவள்.., சட்டென்று எழுந்துவந்தாள்.
நங்கையை த்ரிவிக் பார்த்தான். அவளது நலுங்கிய தோற்றம், இவளைப் பிரிந்து இரண்டு நாள்தான் ஆனதா?, என்றுதான் எண்ணத் தோன்றியது. அதையும் மீறி அவள் கண்களில் ஒளி, முகத்தின் மலர்ச்சி. அது தன்னைக் கண்டதினால் என்று புரிந்தது. அவளது இதயத்தின் அதிவேகத்துடிப்பு, இரண்டே எட்டில் அவளை நெருங்கியிருந்த கணவனுக்குக் கேட்டது. உடனே மனைவியை ஆரத்தழுவி, தோள் சேர்த்துக் கொள்ள ஆசை வந்தது . இருந்தும், வீட்டிலிருக்கும் சுற்றத்தோருக்கு மதிப்பளித்து.. பேசாதிருந்தான்.
எப்போதும்போல, ஊரிலிருந்து வரும்போது கணவனின் கையிலிருக்கும் அமெரிக்கன் டூரிஸ்ட்டரை வாங்க மனைவியின் கைகள் நீள... அதைக் நங்கையின் கையில் கொடுக்க தன்னிச்சையாக அவன் கைகள் உயர... பார்த்தவனின் கண்கள்... அதிர்ந்தது. நங்கையின் உள்ளங்கை சதை முழுவதும் தாறுமாறாக கிழிபட்டிருக்க... விரல் நுனிகளைத்தவிர, ஆங்காங்கே சதை பெயர்ந்து.. செவசெவ-த்திருந்தது. அவனது முகம் தீவிரத்தன்மை கொண்டது.
நங்கையின் அண்ணி, அப்போதுதான் நங்கையின் கைக் கட்டினைப் பிரித்து, டெட்டால் கொண்டு பஞ்சினால் ரணத்தை சுத்தம் செய்துகொண்டிருந்தார். [கூடவே நங்கைக்கு வசவும்.. இலவச இணைப்பாக... (ஒருவேளை வலி தெரியாதிருக்கவோ?)].
த்ரிவிக், பெட்டியை தானே எடுத்துக் கொண்டு, அவளைப்பார்த்து, "காஃபி எடுத்திட்டு வா", என்றுவிட்டு விடுவிடுவென அவர்களது அறைக்குச் சென்றான்.
நங்கை, இரண்டு நிமிடத்தில்.. காஃபியுடன் அவர்களது அறைக்குச் சென்றாள். உடை மாற்றிக்கொண்டிருந்த த்ரிவிக்.. கதவின் தாள் திறக்கும் சப்தம் கேட்டு திரும்ப.. மறுநொடி அவன் மார்பில் தஞ்சமடைந்திருந்தாள் நங்கை நல்லாள். அவள் வேகத்துக்கு சற்றும் குறையாமல், த்ரிவிக்கும் அவளை இறுக்கி அணைத்திருந்தான். காம, காதல் கசடுகளேதுமின்றி கணவனும் , அவனுக்கு சற்றும் குறையாத பேருவகையுடன் மனைவியும், நானிருக்கிறேன் உனக்கு என்ற உறுதியான அரவணைப்பில். பேசினால் இக்கணம் களங்கப்படும். இது மொழியறியா ஆதி மனிதனின் உடல்மொழி, வார்த்தைகளில் வடிக்கயியலாத ஓர் உள்ளுணர்வு.
சிறிது நேரம் பொறுத்து, நங்கையை விடுவித்தவன் கண்கள் பணித்திருக்க, அவளது நெற்றியில் செல்லமாக முட்டி, "லூஸு" என்றான்.. அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களில் கண்ணீர் படலம், நகைமுரணாக முகம் அன்றலர்ந்த மலர் போல் இருக்க.. இதழில் அவன் சொன்ன லூஸு -க்கு சிரிப்பு. இதென்ன சிறுபிள்ளை போல?.
"ஏன்?", நங்கை கேட்டாள்.
" போன்ல அப்படி அழற? "
"தப்பா எடுத்திட்டீங்களோன்னு நினச்சு....",
" லூஸு , உன்னப்போயி தப்பா நினைப்பேனாடீ?", என்க...
"அதான் ஏன்?",
'நீ அழகு', என்று பிறர் சொல்ல கேட்கும் பெண்கள், அதை இன்னும் ஊர்ஜிதப்படுத்த.. மேலும் மேலும், அதைக் குறித்து மற்றவரிடம் கேட்டு, இன்னின்னவாறு நீ அழகாக இருக்கிறாய் என்று அவர்கள் வாய் மொழியில் தெளிவுபடுத்துவத்தைக் கேட்டு இன்புறுவதைப்போலிருந்து , நங்கையின் கேள்வி.