Thanks kavyaApt for those women who are not with her husbands...
Thanks kavyaApt for those women who are not with her husbands...
Awesomeஅயல் தேசத்தில் வேலைக்காக சென்ற கணவனும்,அவனுக்காக தாய்நாட்டில் ஏங்கும் மனைவியும் பேசிக் கொள்வதாக இந்த வரிகள்.
View attachment 4145
மணம் முடித்த மறுமாதம்
மனம் தவிக்க விட்டுச்சென்றாய்
மறுகித் தவிக்கின்றேன்
இது நியாயமா சொல்?
பந்தங்களை காப்பாற்ற
பணமென்ற ஒன்றை நாடி
பரிதவித்து செல்கின்றேன்
என் நியாயம் யாரிடம் சொல்ல?
வாரிசு வந்த சேதி கேட்டு
வாரியணைத்து முத்தமிடுவாய் என்றேங்கி
வஞ்சி மனம் வாடியதே
இது நியாயமா சொல்?
மணிவயிற்றில் முத்தமிட்டு
முப்பொழுதும் உனைக் காத்து
முத்தாட விழைகிறேனே
என் நியாயம் யாரிடம் சொல்ல?
வலி பொறுத்து பெற்றெடுத்தேன்
வாசமலர்ச்செண்டு ஒன்றை
மனதொன்றும் துள்ளவில்லை.. உன்
துணை தேடி தவிக்கிறதே
இது நியாயமா சொல்?
நிழற்படம் நிஜமாகுமா?
தொட்டுணரத் துடிக்கின்றேன்
என் வழி பார்க்கும் பூக்கள் இரண்டை
என் நியாயம் யாரிடம் சொல்ல?
வந்தது மகளின் பிறந்தநாள்
வரவில்லையே நீ இன்னும்
வாடிக்கிடப்பது புரியலையா?
இது நியாயமா சொல்?
மழலைக் குரல் கேட்க ஆசை
மகளின் மார்புதைக்கும் பாதம் ஆசை
மனைவி அதை ரசிக்க ஆசை
என் நியாயம் யாரிடம் சொல்ல?
பலவிசேஷம் போக நேர்ந்தும்
பட்டுடுத்த ஆசையில்லை
பார்த்து ரசிக்க நீ அருகில்லை
இது நியாயமா சொல்?
விழா இல்லை விசேஷம் இல்லை
வீட்டு விருந்து என்றுமில்லை
விடை என்ன இந்த விடுகதைக்கு
என் நியாயம் யாரிடம் சொல்ல?
Thank you greenySuper mam. ....
Thanks VasanthiNice