• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagaana Ratchasiye-2(3)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
"ஒரு வழியா நீங்க பாதுகாப்பா வந்துட்டிங்க. அதுவே போதும்" என்றாள் சரண்யா.

"உங்க அடுத்த பிளான் என்ன?" என்றான் ஸ்ரீநிவாஸ்.

"எங்க ஹோமுக்கே போலாம் ஆனா நான் நல்லா இருக்கறதா நினைச்சிட்டு இருப்பாங்க. நான் இப்ப போயி நடந்தத சொன்னா அவங்க வருத்தம் ஆயிடுவாங்க. அவங்க சந்தோஷத்தை கெடுக்க விரும்பலை"

"நீங்க சொல்றதும் சரிதான்" என்றாள் சரண்யா.

"அதுவும் இல்லாம என் கதை தெரிஞ்சா ஹோமுக்கு வந்து உதவற மத்தவங்க மேலயும் டவுட் வரும். இந்த அயோக்கியனால மத்தவங்களுக்கும் கெட்ட பேர் வர வேண்டாம்"

"உங்களுக்கு நல்ல மனசு பேசாம எங்க கூட வந்துடுங்க" என்றாள் சரண்யா.

"உங்களுக்கு என்னால ஏன் வீண் சிரமம்?" என்றாள் ஸ்ரீதேவி.

"சிரமமா? எங்களுக்கா? என் அண்ணா யார் தெரியுமா? ஊட்டியில அகிலா எஸ்டேட் ஒனரு. அங்க பெரிய பங்களாவில் நான், அண்ணா, எங்க சித்தி பானுமதிதான் இருக்கோம்" என்றாள் சரண்யா.

"இருந்தாலும் நான் எப்படி" என்று ஸ்ரீதேவி இழுத்த போது டிக்கெட் பரிசோதகர் வந்தார்.

ஸ்ரீதேவி அவரைப் பார்த்து பயந்து மிரண்டு விழித்தாள்.

டிக்கெட் பரிசோதகர் அவர்கள் இருவரின் டிக்கெட்டை சோதித்தபின் ஸ்ரீதேவியை பார்த்தார்.



"உங்க நேம் அண்ட் டிக்கெட்" என்றார் டிக்கெட் பரிசோதகர்.

ஸ்ரீதேவி என்ன சொல்வதென்று புரியாமல் அவரை பார்க்காமல் சரண்யாவை பார்த்தாள்.

"அவங்க என் கஸின்தான். அவங்க அவசரமாக வந்ததால் அவங்க டிக்கெட் எடுக்கலை. டிக்கெட் மணியவும் பைனும் நான் கட்டறேன். மேட்டுபாளையத்துக்கு ஒரு பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் தாங்க" என்றான் ஸ்ரீநிவாஸ்.
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
டிக்கெட் பரிசோதகர் அவனின் தோற்றத்தின் கம்பீரம் மற்றும் பேச்சுக்கு கட்டுபட்டு எதுவும் பேசாமல் பணத்தை வாங்கிக் கொண்டு சரி என்று டிக்கெட் தந்து விட்டு சென்று விட்டார்.

"என்னாலதான் உங்களுக்கு இப்பவே சிரமமாயிடுச்சே" என்றாள் ஸ்ரீதேவி.

"இதுல ஒரு சிரமமும் இல்லை. என் தங்கச்சி ஆசைப்பட்ட எதையும் நான் மறுத்ததில்லை. அவ இப்ப உங்கள கூட வைச்சிக்கனுமுன்னு ஆசைப் படறா அதனால நீங்க எங்க கூடவே வந்துடுங்க" என்றான் ஸ்ரீநிவாஸ்

"அண்ணாவே சொல்லிட்டாரில்ல. நீங்க எங்க கூடவே வந்து எங்க பங்களாவுல இருங்க" என்றாள் சரண்யா.

"சரிங்க... நான் வர்றேன்" என்று சொல்ல சரண்யா புன்னகைத்தாள்.

ஸ்ரீதேவியின் வாழ்க்கை பயணம் ஊட்டியை நோக்கி நகர்ந்தது.Write your reply...
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
ஸ்ரீதேவி உங்க நல்ல மனசுக்கு இனியாவது நல்ல வாழக்கை அமையட்டும்
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
ஸ்ரீதேவி உங்க நல்ல மனசுக்கு இனியாவது நல்ல வாழக்கை அமையட்டும்
உங்க வாக்கு பலிக்கட்டும் சக்தி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top