snehasree
SM Exclusive
"சரி சரண்யா... இங்க துணி எங்க காயப் போடறது?" என்றாள் ஸ்ரீதேவி.
"அது மாடியிலதான் காய போடுவாங்க நான் பாத்திருக்கேன்"
"அப்படியா! நான் போயி துணிய எடுத்துட்டு வர்றேன்" என்ற ஸ்ரீதேவி பாத்ருமுக்கு சென்று பக்கெட்டில் துணிகளை அள்ளி போட்டுக் கொண்டு வந்தாள்.
"ஏய்... அதுக்குள்ள நீ துவைச்சு வேற முடிச்சிட்டியா? உன்ன என்ன பன்றது?" என்றாள் சரண்யா.
"நம்ம வேலைய செய்யறதுக்கு என்ன டைம் பாக்கறது? அப்படியே செய்ய வேண்டியதுதான்"
"அதுக்கில்ல பலமணி நேர பயணக் களைப்பு தீர ரெஸ்ட் எடுக்கனுமில்ல. நானே படுத்து எழுந்திரிச்சு வந்தபிறகுதான் இப்ப நல்ல இருக்கு" என்று தோழியின் மீது அக்கறையுடன் சொன்னாள் சரண்யா.
"எனக்கு இந்த வசதிகளை பார்த்ததும் படுக்க தோணலை அதான் குளிச்சிட்டு படுக்கலாமுன்னு போயி குளிச்சேன். ஏன் துணிய அப்படியே போடனுமுன்னு துவைச்சிட்டேன்"
"சரி.... சரி... துணிய காய போட்டுட்டு வந்து ரெஸ்ட் எடுக்கனும் சரியா?" என்றாள் சரண்யா.
"சரி சரண்யா... நீ மாடிக்கு வழியக் காட்டு"என்றாள் ஸ்ரீதேவி.
"என் பின்னாடியே வா" என்ற சரண்யா முன்னே செல்ல பின் வந்த ஸ்ரீதேவி மாடியில் தன் துணிகளை காய வைத்துவிட்டு வந்தாள்.
மாலை வேளையில் இருவரும் தோட்டத்தில் அமர்ந்து சிறிது நேரம் பேசினார்கள்.
தோட்டத்தில் பேசிக் கொண்டே ஒரு சிறுநடை போட்டார்கள்.
தோட்டத்தில் பூத்த பூக்களில் தங்களுக்கு பிடித்த பூவை பறித்து தலையில் வைத்துக் கொண்டார்கள்.
"உனக்கும் மஞ்ச ரோஜாதான் பிடிக்குமா?" என்று சரண்யா கேட்டாள்.
"ஆமாம் எல்லாம் ரோஜாவும் பிடிக்கும் ஆனால் எல்லோ ரோஸ் ரொம்ப பிடிக்கும்" என்றாள் ஸ்ரீதேவி.
"எனக்கும் அப்படிதான் ஸ்ரீ" என்றாள் சரண்யா.
கார்டனில் சிறிது நேரம் அமர்ந்து பேசி விட்டு இருவரும் உள்ளே சென்றார்கள்.
இரவு சாப்பாட்டை முடித்து விட்டு ஸ்ரீதேவியுடன் கொஞ்சம் நேரம் பேசினாள் சரண்யா.
சரண்யா நைட் லேம்ப்களை போட்டு விட்டு
"நீ தரையில படுத்தாலும் படுத்திருவ. என் கண் முன்னாடி கட்டில்ல படு. நான் பாக்கனும்" என்றாள்.
ஸ்ரீதேவி யோசித்தபடி இருக்க அவளை கைபிடித்து இழுத்துக் கொண்டு போய் கட்டிலில் அருகில் நிறுத்தி "படுக்கவும் வைக்கனுமா?" என்றாள்.
"அது மாடியிலதான் காய போடுவாங்க நான் பாத்திருக்கேன்"
"அப்படியா! நான் போயி துணிய எடுத்துட்டு வர்றேன்" என்ற ஸ்ரீதேவி பாத்ருமுக்கு சென்று பக்கெட்டில் துணிகளை அள்ளி போட்டுக் கொண்டு வந்தாள்.
"ஏய்... அதுக்குள்ள நீ துவைச்சு வேற முடிச்சிட்டியா? உன்ன என்ன பன்றது?" என்றாள் சரண்யா.
"நம்ம வேலைய செய்யறதுக்கு என்ன டைம் பாக்கறது? அப்படியே செய்ய வேண்டியதுதான்"
"அதுக்கில்ல பலமணி நேர பயணக் களைப்பு தீர ரெஸ்ட் எடுக்கனுமில்ல. நானே படுத்து எழுந்திரிச்சு வந்தபிறகுதான் இப்ப நல்ல இருக்கு" என்று தோழியின் மீது அக்கறையுடன் சொன்னாள் சரண்யா.
"எனக்கு இந்த வசதிகளை பார்த்ததும் படுக்க தோணலை அதான் குளிச்சிட்டு படுக்கலாமுன்னு போயி குளிச்சேன். ஏன் துணிய அப்படியே போடனுமுன்னு துவைச்சிட்டேன்"
"சரி.... சரி... துணிய காய போட்டுட்டு வந்து ரெஸ்ட் எடுக்கனும் சரியா?" என்றாள் சரண்யா.
"சரி சரண்யா... நீ மாடிக்கு வழியக் காட்டு"என்றாள் ஸ்ரீதேவி.
"என் பின்னாடியே வா" என்ற சரண்யா முன்னே செல்ல பின் வந்த ஸ்ரீதேவி மாடியில் தன் துணிகளை காய வைத்துவிட்டு வந்தாள்.
மாலை வேளையில் இருவரும் தோட்டத்தில் அமர்ந்து சிறிது நேரம் பேசினார்கள்.
தோட்டத்தில் பேசிக் கொண்டே ஒரு சிறுநடை போட்டார்கள்.
தோட்டத்தில் பூத்த பூக்களில் தங்களுக்கு பிடித்த பூவை பறித்து தலையில் வைத்துக் கொண்டார்கள்.
"உனக்கும் மஞ்ச ரோஜாதான் பிடிக்குமா?" என்று சரண்யா கேட்டாள்.
"ஆமாம் எல்லாம் ரோஜாவும் பிடிக்கும் ஆனால் எல்லோ ரோஸ் ரொம்ப பிடிக்கும்" என்றாள் ஸ்ரீதேவி.
"எனக்கும் அப்படிதான் ஸ்ரீ" என்றாள் சரண்யா.
கார்டனில் சிறிது நேரம் அமர்ந்து பேசி விட்டு இருவரும் உள்ளே சென்றார்கள்.
இரவு சாப்பாட்டை முடித்து விட்டு ஸ்ரீதேவியுடன் கொஞ்சம் நேரம் பேசினாள் சரண்யா.
சரண்யா நைட் லேம்ப்களை போட்டு விட்டு
"நீ தரையில படுத்தாலும் படுத்திருவ. என் கண் முன்னாடி கட்டில்ல படு. நான் பாக்கனும்" என்றாள்.
ஸ்ரீதேவி யோசித்தபடி இருக்க அவளை கைபிடித்து இழுத்துக் கொண்டு போய் கட்டிலில் அருகில் நிறுத்தி "படுக்கவும் வைக்கனுமா?" என்றாள்.