• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagaana Ratchasiye-4(3)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
"சரி சரண்யா... இங்க துணி எங்க காயப் போடறது?" என்றாள் ஸ்ரீதேவி.

"அது மாடியிலதான் காய போடுவாங்க நான் பாத்திருக்கேன்"

"அப்படியா! நான் போயி துணிய எடுத்துட்டு வர்றேன்" என்ற ஸ்ரீதேவி பாத்ருமுக்கு சென்று பக்கெட்டில் துணிகளை அள்ளி போட்டுக் கொண்டு வந்தாள்.

"ஏய்... அதுக்குள்ள நீ துவைச்சு வேற முடிச்சிட்டியா? உன்ன என்ன பன்றது?" என்றாள் சரண்யா.

"நம்ம வேலைய செய்யறதுக்கு என்ன டைம் பாக்கறது? அப்படியே செய்ய வேண்டியதுதான்"

"அதுக்கில்ல பலமணி நேர பயணக் களைப்பு தீர ரெஸ்ட் எடுக்கனுமில்ல. நானே படுத்து எழுந்திரிச்சு வந்தபிறகுதான் இப்ப நல்ல இருக்கு" என்று தோழியின் மீது அக்கறையுடன் சொன்னாள் சரண்யா.

"எனக்கு இந்த வசதிகளை பார்த்ததும் படுக்க தோணலை அதான் குளிச்சிட்டு படுக்கலாமுன்னு போயி குளிச்சேன். ஏன் துணிய அப்படியே போடனுமுன்னு துவைச்சிட்டேன்"

"சரி.... சரி... துணிய காய போட்டுட்டு வந்து ரெஸ்ட் எடுக்கனும் சரியா?" என்றாள் சரண்யா.

"சரி சரண்யா... நீ மாடிக்கு வழியக் காட்டு"என்றாள் ஸ்ரீதேவி.

"என் பின்னாடியே வா" என்ற சரண்யா முன்னே செல்ல பின் வந்த ஸ்ரீதேவி மாடியில் தன் துணிகளை காய வைத்துவிட்டு வந்தாள்.

மாலை வேளையில் இருவரும் தோட்டத்தில் அமர்ந்து சிறிது நேரம் பேசினார்கள்.

தோட்டத்தில் பேசிக் கொண்டே ஒரு சிறுநடை போட்டார்கள்.

தோட்டத்தில் பூத்த பூக்களில் தங்களுக்கு பிடித்த பூவை பறித்து தலையில் வைத்துக் கொண்டார்கள்.

"உனக்கும் மஞ்ச ரோஜாதான் பிடிக்குமா?" என்று சரண்யா கேட்டாள்.

"ஆமாம் எல்லாம் ரோஜாவும் பிடிக்கும் ஆனால் எல்லோ ரோஸ் ரொம்ப பிடிக்கும்" என்றாள் ஸ்ரீதேவி.

"எனக்கும் அப்படிதான் ஸ்ரீ" என்றாள் சரண்யா.

கார்டனில் சிறிது நேரம் அமர்ந்து பேசி விட்டு இருவரும் உள்ளே சென்றார்கள்.

இரவு சாப்பாட்டை முடித்து விட்டு ஸ்ரீதேவியுடன் கொஞ்சம் நேரம் பேசினாள் சரண்யா.

சரண்யா நைட் லேம்ப்களை போட்டு விட்டு
"நீ தரையில படுத்தாலும் படுத்திருவ. என் கண் முன்னாடி கட்டில்ல படு. நான் பாக்கனும்" என்றாள்.

ஸ்ரீதேவி யோசித்தபடி இருக்க அவளை கைபிடித்து இழுத்துக் கொண்டு போய் கட்டிலில் அருகில் நிறுத்தி "படுக்கவும் வைக்கனுமா?" என்றாள்.
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
"சரண்யா உன்ன..." என்றபடி படுத்த ஸ்ரீதேவியிடம் "கம்பளிக்கு ஒரு முறை சொல்லனுமா" என்றாள் சரண்யா.

ஸ்ரீதேவி கம்பளியில் தன்னை மறைத்துக் கொள்ள குட் என்றாள்.

சரண்யா சென்று அறைக் கதவை சாத்தி தாழ் போட்டு விட்டு வந்தாள்.

ஸ்ரீதேவி ஏன் என்று அவளை பார்க்க " நான் இன்னிக்கு இங்க உன் கூட தூங்க போறேன் அதனால எனக்கு கொஞ்சம் இடம் கொடுங்க மேடம்" என்றபடி கம்பளிக்குள் நுழைந்து அருகில் படுத்துக் கொண்டாள் சரண்யா.

ஸ்ரீதேவியை அணைத்து பிடித்து காலை போட்டு படுத்த சரண்யா "ஸ்ரீ... உன்ன எனக்கே கடிச்சு திங்க தோணூதே. மத்த ஆம்பளைங்க எல்லாம் பாவம்" என்றாள் சரண்யா.

"உன்ன..." என்று ஸ்ரீதேவி சிணுங்க "இதுல வெட்கம் வேறயா? நிஜமாலும் கடிக்கப் போறேன்" என்று கன்னத்தில் முத்தமிட்டாள்.

ஊட்டியின் நடுங்கும் குளிரில் ஒருவரை ஒருவர் அணைத்த நிலையில் உறங்கி விட்டனர்.

மறுநாள் காலை சாப்பாடு முடிந்து இருந்தது. ஸ்ரீதேவி வழக்கம்போல் துணிகளை துவைத்துவிட்டு வந்து அமர்ந்திருந்தாள்.

"ஸ்ரீ... நீ செஸ் விளையாடுவியா?"என்றாள் சரண்யா.

"ஏதோ கொஞ்சம்" என்றாள் ஸ்ரீதேவி.

"நானும் சுமார்தான். போர் அடிக்குது. வா விளையாடலாம்" என்றாள் சரண்யா.

ஸ்ரீதேவியும் சரண்யாவும் செஸ் விளையாடிக் கொண்டிருந்தார்கள்

"அத்தை... அத்தை... நீங்க எங்க இருக்கிங்க?" என்றபடி உள்ளே வந்தாள் வந்தனா.

"சரண்யா... யாரோ அம்மாவ கூப்பிடறாங்க பாரு" என்றாள் ஸ்ரீதேவி.

"அவ என் மாமா பொண்ணு வந்தனாதான். நீ பேசாம விளையாடு" என்றாள் சரண்யா.

"நீ வந்தனா பத்தி சொல்லவே இல்லையே?"

"எனக்கு புடிச்சவங்கள பத்தி எல்லாம் சொல்லிட்டேன். இவள எனக்கு சுத்தமா பிடிக்காது ஸ்ரீ. அதான் உங்கிட்ட சொல்லலே"என்று எரிச்சலுடன் சொன்னாள் சரண்யா.

"அவங்க என்ன பன்றாங்க?" என்றாள் ஸ்ரீதேவி.

"அவளா? கோயமுத்தூர்ல அக்ரிக்கு படிக்கிறா. இந்த வருசம் டிகிரி முடியுது."

Write your reply...
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
"சரண்யா... சரண்யா..." என்று அவள் அம்மா அழைக்கும் குரல் கேட்டது.

"அம்மா கூப்பிடறாங்க பாரு. வா என்னன்னு கேட்போம் அப்புறமா வந்து விளையாடிக்கலாம்" என்றாள் ஸ்ரீதேவி.

"சரி வா" சரண்யா எழுந்து அறைக்கு வெளியே வர ஸ்ரீதேவியும் அவளுடன் வந்தாள்.

"ஹாய் சரண்" என்று வந்தனா சொல்ல "வந்தனா எப்ப ஊருல இருந்து வந்த? எக்சாம் எல்லா நல்ல பன்னியா?" என்றாள் சரண்யா.

"இப்பதான் வந்தேன். எக்சாம் எல்லாம் பைனா பன்னிட்டேன். நீ எப்படி எக்சாம் செஞ்சிருக்க?" என்றாள் வந்தனா.

"நான் நேத்துதான் வந்தேன். நானும் பைனா செஞ்சிட்டேன்"

"இது யாரு அத்தை?" என்று ஸ்ரீதேவியை பார்த்தபடி கேட்டாள் வந்தனா.

"இவங்க ஸ்ரீதேவி. சென்னைல எனக்கு தெரிஞ்சவங்க.நான் தான் இவங்கள ஊட்டிக்கு கூட்டிட்டு வந்திருக்கேன்" என்றாள் சரண்யா.

"அப்படியா? இவங்க என்ன படிச்சிருக்காங்க?" என்றாள் வந்தனா.

"இவங்க நர்ஸ்" என்று சரண்யா சொல்ல "நர்சா?" என்று அலட்சியமாக பார்த்தபடி கேட்டாள் வந்தனா.

"ஏன் நர்சுக்கு என்ன? அவங்கதான் டாக்டர் அடுத்தபடி ஹாஸ்பிடல்ல பவர்புல்" என்றாள் சரண்யா.

"சரி... நான் ஏத்துக்கிறேன். உன் பிரண்டு பெரிய ஆளுதான்" என்றாள் வந்தனா.
"அம்மா... எதுக்கு கூப்பிட்டிங்கம்மா?" என்றாள் சரண்யா.

"வந்தனாதான் உன்னை கேட்டா அதான் கூப்பிட்டேன்" என்றாள் தாய்.

"சரிம்மா... நான் வர்றேன்." என்று ஸ்ரீதேவியை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டாள் சரண்யா.

வந்தனா அவளின் மாமா பெண்தான். அவள் அகிலா அம்மா கூடபிறந்த சகோதரர் மகள். அவள் பெற்றோரும் சிறுவயதில் இறந்துவிட்டதால் இங்கேயே பானுமதி வளர்ப்பில் அவளும் வளர்கிறாள்.

உருண்டையான பெரிய முகம், பெரிய விழிகள், மர்ம புன்னகை வீசும் உதடுகள், சிறிதாக தோள் வரை வெட்டபட்ட முடி, கனத்த சரீரம், குட்டை உயரம், நல்ல சிவப்பு நிறம் உடையவள் தான் வந்தனா.

சரண்யாவுக்கு சின்ன வயசிலிருந்தே வந்தனாவை பிடிக்காது. வந்தனாவின் கர்வமே அதற்கு காரணம்.

வந்தனாவிற்கு சாதாரண ஆட்களை கண்டால் அவளுக்கு பிடிக்காது. அவள் அவர்களை அவமானப் படுத்தவே முயல்வாள்.

வந்தனாவிற்கு பிடித்த நபரும், அவள் விரும்பும் நபர் யார் என்றால் ஸ்ரீநிவாஸ்.

ஸ்ரீநிவாஸை வயது வந்ததிலிருந்து விரும்பும் அவள் அவள் ஆசைக்கு குறுக்கே யார் வந்தாலும் அவர்களை கொன்றுவிடும் குணம் உடையவள்.

சரண்யாவின் பேச்சு அவளை கடுமையான தாக்கி மனதில் கோபத்தை உண்டாக்கியது.

அவள் பேச காரணமான சரண்யாவுடன் சென்ற ஸ்ரீதேவியின் அழகும் அவளை ஏதோ செய்ய கொலைவெறி கோபத்துடன் ஸ்ரீதேவியை பார்த்தாள் வந்தனாஃ
Write your reply...
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
Nice ud(y) vandhana villi character ah?? :unsure: srinivash yenga ponan??
நீங்க படிங்க உங்களுக்கே புரியும் ஸ்ரீநிவாஸ் வருவார் முதல்ல நாயகி இங்க செட்டானதும் வருவார்
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
இதுல வில்லி வேற பாவம் ஸ்ரீ ஒருபக்கம் அஸ்வின் மறுபக்கம் வந்தனா நீ என்ன செய்ய போறியோ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top