snehasree
SM Exclusive
நன்றி சக்திஇதுல வில்லி வேற பாவம் ஸ்ரீ ஒருபக்கம் அஸ்வின் மறுபக்கம் வந்தனா நீ என்ன செய்ய போறியோ
நன்றி சக்திஇதுல வில்லி வேற பாவம் ஸ்ரீ ஒருபக்கம் அஸ்வின் மறுபக்கம் வந்தனா நீ என்ன செய்ய போறியோ
ஆமாப்பா வந்தனாவுக்கு கொஞ்சம் ஹெட்வெயிட் அதிகம் இல்லைப்பா ஸ்ரீதேவி அவளை கவர்வாளோங்கற கடுப்புதான் வெறுப்புக்கு காரணம்sri ya patha udane vandhanaku pidikaliya............ srinivas avalai ninika arambithu vituvaan endra payama
என்னங்க அக்ரி க்கு படிச்சா இந்த சரண்யாவுக்கு புடிக்காதா. சரி அடுத்தத படிப்பபோம்"சரண்யா உன்ன..." என்றபடி படுத்த ஸ்ரீதேவியிடம் "கம்பளிக்கு ஒரு முறை சொல்லனுமா" என்றாள் சரண்யா.
ஸ்ரீதேவி கம்பளியில் தன்னை மறைத்துக் கொள்ள குட் என்றாள்.
சரண்யா சென்று அறைக் கதவை சாத்தி தாழ் போட்டு விட்டு வந்தாள்.
ஸ்ரீதேவி ஏன் என்று அவளை பார்க்க " நான் இன்னிக்கு இங்க உன் கூட தூங்க போறேன் அதனால எனக்கு கொஞ்சம் இடம் கொடுங்க மேடம்" என்றபடி கம்பளிக்குள் நுழைந்து அருகில் படுத்துக் கொண்டாள் சரண்யா.
ஸ்ரீதேவியை அணைத்து பிடித்து காலை போட்டு படுத்த சரண்யா "ஸ்ரீ... உன்ன எனக்கே கடிச்சு திங்க தோணூதே. மத்த ஆம்பளைங்க எல்லாம் பாவம்" என்றாள் சரண்யா.
"உன்ன..." என்று ஸ்ரீதேவி சிணுங்க "இதுல வெட்கம் வேறயா? நிஜமாலும் கடிக்கப் போறேன்" என்று கன்னத்தில் முத்தமிட்டாள்.
ஊட்டியின் நடுங்கும் குளிரில் ஒருவரை ஒருவர் அணைத்த நிலையில் உறங்கி விட்டனர்.
மறுநாள் காலை சாப்பாடு முடிந்து இருந்தது. ஸ்ரீதேவி வழக்கம்போல் துணிகளை துவைத்துவிட்டு வந்து அமர்ந்திருந்தாள்.
"ஸ்ரீ... நீ செஸ் விளையாடுவியா?"என்றாள் சரண்யா.
"ஏதோ கொஞ்சம்" என்றாள் ஸ்ரீதேவி.
"நானும் சுமார்தான். போர் அடிக்குது. வா விளையாடலாம்" என்றாள் சரண்யா.
ஸ்ரீதேவியும் சரண்யாவும் செஸ் விளையாடிக் கொண்டிருந்தார்கள்
"அத்தை... அத்தை... நீங்க எங்க இருக்கிங்க?" என்றபடி உள்ளே வந்தாள் வந்தனா.
"சரண்யா... யாரோ அம்மாவ கூப்பிடறாங்க பாரு" என்றாள் ஸ்ரீதேவி.
"அவ என் மாமா பொண்ணு வந்தனாதான். நீ பேசாம விளையாடு" என்றாள் சரண்யா.
"நீ வந்தனா பத்தி சொல்லவே இல்லையே?"
"எனக்கு புடிச்சவங்கள பத்தி எல்லாம் சொல்லிட்டேன். இவள எனக்கு சுத்தமா பிடிக்காது ஸ்ரீ. அதான் உங்கிட்ட சொல்லலே"என்று எரிச்சலுடன் சொன்னாள் சரண்யா.
"அவங்க என்ன பன்றாங்க?" என்றாள் ஸ்ரீதேவி.
"அவளா? கோயமுத்தூர்ல அக்ரிக்கு படிக்கிறா. இந்த வருசம் டிகிரி முடியுது."
Write your reply...
ரொமான்ஸ் பெண்களின் சொத்து இரு பெண்கள் இணைந்தால் கொஞ்சலும் கேலீயும் கண்டிப்ப நடக்கும் அப்புறம் தனக்கு பிடித்தவங்கள குழந்தை மாதிரி நடத்தி பார்ப்பதும் பெண்களின் இயல்பு சரண்யாவுக்கு அக்ரி பிடிக்கும் ஆனால் அதை படிக்கிற வந்தனாவ பிடிக்காதுஎன்னங்க அக்ரி க்கு படிச்சா இந்த சரண்யாவுக்கு புடிக்காதா. சரி அடுத்தத படிப்பபோம்
நன்றிவந்தனாவ பத்தி தெரிஞ்சுகாட்டேனுங்க