• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagaana Ratchasiye-5(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
ஸ்ரீநிவாசின் காரில் வந்தனா முன்புறத்தில் ஏறிக் கொண்டாள்.

சரண்யா அவளை தவிர்க்க வேண்டி அஸ்வின் அண்ணா காரில் தானும் ஏறிக் கொண்டு ஸ்ரீதேவியையும் ஏற்றிக் கொண்டு விட்டாள்.

பானுமதி அம்மாவும் ஸ்ரீநிவாஸின் காரில் ஏறிக் கொள்ற கார்கள் பைக்காரா சூட்டிங் ஸ்பாட்டை நோக்கி சென்றது.

அஸ்வின் கார் கண்ணாடி வழியே ஸ்ரீதேவியை ரசித்தபடியே காரை ஒட்டினான்.

மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்து பாட்டு வைத்தான்.

"பார்த்தேன் பார்த்தேன் சுடசுட ரசித்தேன்" என்று பாடல் ஒட அடுத்த வரிகளில் ஸ்ரீதேவி கடுப்பாகி காரின் வெளியே கவனத்தை செலுத்தினாள்.

மறுபக்கம் வந்தனா மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்து "ஒரு பொய்யாவது சொல் கண்ணா... உன் காதலி நான்தான் என்று... அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்..." என்ற பாடலை பிளே செய்தாள்.

கார்கள் பைக்காரா சூட்டிங் ஸ்பாட்டை அடைந்தது.

சூட்டிங் எதுவும் இல்லாத ஒர் மேடான இடத்தில் புல்வெளி சும்மா இருக்க வறுத்த கடலையுடன் அமர்ந்த ஸ்ரீதேவி இயற்கையை ரசித்தபடி கடலையை கொறித்தாள்.

பானுமதி அம்மாளும் அவளுக்கு கம்பெனி தந்தபடி அமர்ந்தார்கள்.

"வா மாமா... போட்டிங் போயிட்டு வந்து இங்க உட்காரலாம்" என்று ஸ்ரீநிவாஸை இழுத்துக் கொண்டு சென்றாள் வந்தனா.

"உய்! என்ன இங்க உட்கார்ந்துட்டே? வா போட்டிங் போலாம்" என்றாள் சரண்யா.
 




Last edited:

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
"இல்ல நான் வரல. அம்மாவுக்கு துணையா இங்க இருக்கேன். நீ போயிட்டு வா" என்றாள் ஸ்ரீதேவி.

"அப்படி எல்லாம் விட முடியுது. நீ இப்ப வர்றே" என்று ஸ்ரீதேவியின் கடலை பொட்டலத்தை பிடூங்கி கொண்டு அவளை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள் சரண்யா.

அஸ்வினும் அம்மாவிடம் வந்து "நீங்களும் போட்டிங் வாங்கம்மா" என்று கெஞ்சலாய் கேட்க பானுமதி அம்மாள் சம்மதித்தார்கள்.

வந்தனா தன் மாமாவுடன் போட்டிங்கை தொடங்கியிருக்க அஸ்வின் அம்மாவுடனும், சரண்யாவும் ஸ்ரீதேவியுடனும் போட்டிங் சென்றார்கள்.

வந்தனா கத்தியபடியும் கை அசைத்தபடியும் சந்தோஷமாக வலம் வந்தாள்.

அஸ்வின் அம்மாவுடன் அமைதியாக போட்டிங் வர சரண்யாவும் கத்தியபடியும் கை அசைத்தபடியும் வந்தாள். ஸ்ரீதேவியோ அமைதியாக இயற்கையை ரசித்தபடி வந்தாள்.

போட்டிங் நல்லபடியாக முடிய அனைவரும் கரைக்கு திரும்பினார்கள்.

வந்தனா முன்னே செல்ல ஸ்ரீநிவாஸ் பின்னே சென்று பைக்காரா ஏரி இருக்கும் ரோட்டில் நின்று வேடிக்கை பார்த்தான்.

சரண்யா துள்ளலாய் மேலே செல்ல பின்னே வந்த ஸ்ரீதேவியின் கால் தண்ணீரால் வழுக்கி விட அவள் தடுமாறி விழ ஒரு கை அவளை விழாமல் தாங்கியது.

அஸ்வின்தான் அவளை விழாமல் கையால் தாங்கிபிடித்தபடி இருக்க மார்பில் சாய்ந்திருந்தாள் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவி சுயநினைவுக்கு வர அவள் நெருப்பில் கை வைத்தது போல் சட்டென்று விலகி மேலே ஏறி வந்து நின்றாள்.

"நம்தனம் நம்தனம் ஆ ஆ ஆ கண்ணூக்குள் நூறு நிலவா" என்ற பாடலை சரண்யா பிளே செய்தாள்.

"சரண்யா... நீ எங்கிட்ட உதைபட போறே" என்று அதட்டினாள் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவி மக்கா சோளத்தை வாங்கிக் கொண்டு புல்வெளியில் அமர்ந்துக் கொள்ள பானுமதி அம்மாளும் சரண்யாவும் அருகில் அமர்ந்தார்கள்.

வந்தனா புல்வெளியில் மாமாவுடன் செல்பி எடுக்க சரண்யாவும் தன் அம்மா தோழியுடன் செல்பியை கிளிக்கினாள்.

அஸ்வின் வர அவனுடனும் செல்பி எடுத்துவிட்டு ஸ்ரீதேவி, அம்மாவுடன் சேர்ந்து போட்டோ எடுக்க சொல்லி எடுத்தாள்.

மதிய வேளை வர நல்ல பெரிய ஹோட்டலுக்கு சாப்பிட அனைவரும் சென்றார்கள்.

வந்தனா வழக்கம் போல் ஸ்ரீநிவாசுடன் அமர அஸ்வின் அவள் அம்மா எல்லாம் ஒரு டேபிளில் அமர்ந்தார்கள்.
Write your reply...
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
சரண்யாவும் ஸ்ரீதேவியும் தனியாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு பொட்டானிகல் கார்டன் சென்றார்கள்.

பொட்டானிகல் கார்டனின் ஒவ்வொரு பகுதியையும் ஸ்ரீதேவி ரசித்து பார்த்து புன்னகைத்தபடி வந்தாள்.

"இத்தனை ரோஸ்களா?" என்று விதவிதமான ரோஜாக்களைப் பார்த்து அதிசயித்து கேட்டாள்.

பூக்களை பார்த்து சிரித்தும், மரங்களின் நிழலில் நின்றும், பெஞ்சில் அமர்ந்தும், புல்வெளியில் நடந்தும் படுத்தும் குழந்தை போல் நடந்துக் கொண்டாள் ஸ்ரீதேவி.

சரண்யா செல்பி எடுக்க விதவிதமாய் போஸ் கொடுத்தபடி வந்தாள் அவள்.

டால்பின் நோஸ், அவாலாஞ்சி, தொட்டபெட்டா மலை சிகரம் என்று எல்லாபகுதிகளுக்கும் அவர்கள் சென்றார்கள்.

"ஈவினிங் ஆச்சு. சரி வாங்க வீட்டுக்கு போலாம்" என்று பானுமதி அம்மாள் சொல்ல அனைவரும் வீடு திரும்பினார்கள்.

இரவு அறையில் இருந்த ஸ்ரீதேவியிடம் "ஸ்ரீ... இன்னிக்கு டுர் போட்டோகள பாக்கறியா?" என்றாள் சரண்யா.

"காட்டு பாக்கலாம்" என்று ஸ்ரீதேவி சொல்ல அவள் காலையிலிருந்து எடுத்த போட்டோக்களை காட்டினாள்.

"சரண் நீ சூப்பரா இருக்கே" என்று பார்த்தவள் "அம்மாவும் நல்லா இருக்காங்க" என்றாள் ஸ்ரீதேவி.

அஸ்வின் சில படங்களில் தன் அருகில் இருப்பதை பார்த்து ஸ்ரீதேவிக்கு ஏதோ போல் இருந்தது.

"என்ன விட நீதான் சூப்பரா போஸ் கொடுக்கிறடி" என்று சரண்யா சொல்ல "அப்படி எல்லாம் ஒணணும் இல்ல சரண்யா" என்றாள் ஸ்ரீதேவி.

வந்தனா தன் அறையில் ஸ்ரீநிவாசுடன் எடுத்த போட்டோக்களை பார்த்து பார்த்து மகிழ்ந்தாள்.

வந்தனா வாட்ஸ்அப்பிலும் தன் போட்டோக்களை ஷேர் செய்து மகிழ்ந்தாள்.

அஸ்வின் தன் போட்டோக்களை பார்த்து மகிழ்ந்ததுடன் ஸ்ரீதேவியுடன் சேர்ந்து எடுத்த படங்களை பார்த்து பரவசப்பட்டான்.

ஸ்ரீதேவிக்கு தெரியாமல் அவள் புல்வெளியில் படுத்திருந்த காட்சிகளையும், அவள் அமர்ந்திருந்த காட்சிகளையும் படம் பிடித்து வைத்திருந்தான்.

செல்போனில் அந்த படங்களைளை பார்த்து அவள் அழகை ரசித்து ஆனந்தம் கொண்டிருந்தான் அஸ்வின்.

வந்தனா போட்டோக்களை பார்த்துக் கொண்டிருந்த வேளையில் சில புகைப்படங்கள் கண்ணில் சிக்க அவள் கண்கள் ஒளிர்ந்தன.

இந்த போட்டோக்களை வைத்து ஏதாவது செய்யனுமே என்று யோசித்தாள் அவள்.

அஸ்வின் நினைவு வர உடனே அவள் சிம்மை மாற்றி போட்டு தன்னுடைய ரகசிய எண் வழியாக அவனுக்கு அதை அனுப்பி வைத்தாள்.

அஸ்வின் செல்போனுக்கு வாட்ஸ்அப் மெசேஜில் ஒரு படம் வர அவன் அதை பார்த்து குஷியாகி விட்டான்.

அவன் யார் அனுப்பியவர் யார் என்று அஸ்வின் பார்த்தான். அதில் பெயர் இல்லை.

Write your reply...
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
Nice ud(y) yenna pic ah vandhana aswin ku share panna?? Srinivash heroine ah kandukave illa:confused:
அடுத்த அத்தியாயத்தில என்ன படம் என்று தெரியும் வந்தனா இருக்கறப்ப அது எப்படி முடியும் தோழி
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
aswin& vandhana than romba happya irukanga picnicpoitu vanthu........ nice epi pa:):):):):):):):)
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
aswin& vandhana than romba happya irukanga picnicpoitu vanthu........ nice epi pa:):):):):):):):)
என்ன பன்றது அவங்களுக்கு வேண்டிய போட்டோக்கள் கிடைச்சிடுச்சு அதனால் அவங்க ஹேப்பியா இருக்காங்க
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top