• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagaana ratchasiye -7(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
"அத்தை... என் பிரண்ட்ஸ் தங்க ரூம் வேண்டும் அதனால ஸ்ரீதேவி ரூம் எனக்கு வேண்டும்" என்று அத்தை பானுமதியிடம் கேட்டாள் வந்தனா.

"அங்கதான் அந்த பொண்ணு தங்கியிருக்கேம்மா" என்றார் பானுமதி.

"அத்தை... ஸ்ரீதேவியை கொஞ்ச நாள் உங்க ரூமில் தங்க வைச்சிக்கோங்களேன். அவ ஒருத்திதானே அத்தை"

"சரிம்மா... அப்படியே செஞ்சிடலாம்மா" என்று சம்மதித்தார்

"என்ன ஸ்ரீ பேர் அடிபடுது என்ன விஷயம்மா?" என்றபடி வந்தாள் சரண்யா.

"வந்தனா பிரண்ட்ஸ் தங்க இடமில்லன்னு ஸ்ரீதேவி தங்கியிருக்க ரூம கேட்டாம்மா. நான் சரி எடுத்துக்கோ. அந்த பொண்ணை என் ரும்ல தங்க வைச்சிக்கிறேன் அப்படின்னு சொன்னேன்" என்றார் அம்மா.

" உன் பிரண்ட்ஸ் தங்க ஸ்ரீ ரூம்தான் கேட்பியா?" என்றாள் சரண்யா.

"வேற எங்க ரும் இருக்கு சொல்லு? இப்ப காலியாக இருக்கறது அந்த ரும்தானே?" என்றாள் வந்தனா.

"சரண்... நான் அம்மா ருமுல தங்கிக்கிறேன். என் ஒருத்தீக்கு எதுக்கு அவ்வளவு பெரிய ரூம்" என்றாள் ஸ்ரீதேவி.

அடுத்த சில நிமிடங்களில் ஸ்ரீதேவி அந்த அறையை காலி செய்து தன் சூட்கேசுடன் வந்து விட்டாள்.

"ஸ்ரீ... நீ அம்மா ரூமுக்கு போக வேணாம். என் ரூம்ல வந்து தங்கிக்கோ வா" என்று அவளை தன் அறைக்கு அழைத்து சென்றாள் சரண்யா.

சரண்யாவின் அறைக்கு சென்ற ஸ்ரீதேவிக்கு அந்த அறை பெரியதாக இருக்க பிரமித்தாள்.

"ஏய்... ஜில்லு... நீ அன்னிக்கு வீட்டை விட்டு சொல்லாம போயிடுவேன்னு சொன்னில்ல. இப்ப என்ன நடந்துச்சு பாத்தியா?"என்றாள் சரண்யா.

ஸ்ரீதேவியின் முகம் சட்டென்று வாட உடனே சரண்யா "ஏய்... ஸ்ரீ... விளையாட்டுக்குதான் சொன்னேன். " என்றாள்.

"அதுக்கு நான் பீல் பன்னலை. எனக்கு இப்படி பெரிய பெரிய வசதிகள செஞ்சு தர்ற நீ. உன் ரூமை கூட இப்ப ஷேர் பன்னிட்ட. இதுக்கு எல்லாம் தனி மனசு வேண்டும்" என்று கண்கள் கலங்கிய நிலையில் சொன்னாள் ஸ்ரீதேவி.

"மேடம்... பீல் பன்றிங்களா? பன்னுங்க... பன்னுங்க..." என்றாள் தோழி.

ஸ்ரீதேவி அவளையே பார்க்க "அப்புறம் என்னப்பா... சுத்தி வளைச்சு வந்து எனக்கு நன்றின்னு சொல்ல போகிறாய் நீ. என்னை அந்நியளாக்க போகிறாய் அவ்வளவுதானே" என்றாள் சரண்யா.

"யாரு உனக்கு நன்றி சொல்றா இப்ப? ஏதோ வசதி செஞ்சு தந்துட்டியே கொஞ்சம் பாராட்டலாமேன்னு பேசுனேன் அவ்வளவுதான்"

"அப்ப எனக்கு தாங்க்ஸ் இல்லையா?" என்று சரண்யா கேட்க "இல்லவே இல்லை" என்றாள் தோழி.
Message…
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
"நீ கெட்டு போயிட்ட ஸ்ரீ" என்று சரண்யா சொன்ன பொழுது முத்தம் தந்தாள் ஸ்ரீதேவி.

"ஜில்லு... இனி கொஞ்சநாள் என் கூடத்தான் தங்க போகிறாய். நீ என்கூட தூங்க போகிறாய் அப்புறமா என் சோப்பு, சீப்பு பவுடர் எல்லாம் தயங்காம யூஸ் பன்னு. என்ன?" என்ற தோழியை ஆனந்தமாக பார்த்தாள்.

அன்றைய இரவில் ஸ்ரீதேவியை கட்டி அணைத்தபடி காலை மேலே போட்டு தூங்கினாள் சரண்யா.

வந்தனாவின் தோழிகள் வந்த காரணத்தால் தற்காலிகமாக கோடை விடுமுறை முடியும்வரை அஸ்வின் வீட்டு சமையல்கார நபர்களை இங்கு வர சொல்லி விட்டார்கள்.

ஸ்ரீதேவிக்கு அவர்களின் சாப்பாடுகளை கவனிப்பது, துணிகளை லாண்டரிக்கு அனுப்பி அயர்ன் செய்து வாங்குவது, அறைகளை சுத்தபடுத்தி வைப்பது என வேலைகள் இருந்து கொண்டே இருந்தது.

சரண்யா தோழிகள் சிலரும் ஊட்டி ரோஸ் கண்காட்சி காண வந்துவிட்டனர்.

சரண்யா அவர்களை தங்கள் வீட்டிற்கு அருகிலிருந்த கெஸ்ட் அவுசில் தங்க வைத்துவிட்டாள்.

"ஸ்ரீ.. நீதான் அவங்களுக்கு எந்த குறையும் இல்லாம பார்த்துக்கனும் செல்லம். ஏதாவதுன்னா காலேஜ்ல சொல்லி காட்டியே என் மானத்தை வாங்கிடுவாளுங்க" என்றாள் சரண்யா.

கெஸ்ட் அவுசில் தங்கியிருக்கும் அவர்களுக்காக மற்றொரு சமையல் நபர் ஏற்பாடு செய்யபட்டார்.

ஸ்ரீதேவியின் பொறுப்புதான் முன்பை விட இரட்டிப்பாகியது.

வந்தனா மற்றும் சரண்யாவின் தோழிகளின் தேவைகளை சரியாக கவனித்து செய்து வந்தாள்.

வந்தனா அவளுடைய தோழிகளுடனும், சரண்யா அவளுடைய தோழிகளுடனும் பகலில் சென்றுவிட்டு மாலையில்தான் வீடு திரும்புவார்கள்.

ஸ்ரீதேவி அவர்கள் தேவைகளை எல்லாம் முடித்துவிட்டு வீட்டு வேலைகளையும் முடித்துவிட்டு இரவில் தாமதமாக படுக்க வருவாள் ஆனால் காலையில் விரைவில் எழுந்து சென்று வேலைகளை பார்ப்பாள்.

வந்தனாவின் தோழிகள் அவளை ஒரு பணியாளாக பார்த்து வந்தனர்.

சரண்யாவின் தோழிகள் அவளை சகமனுசியாகவும் தோழியாகவும் மதித்தனர்.

சரண்யாவும் அவளை தன் சொந்தகார பெண் என்றுதான் அறிமுகபடுத்தி இருந்தாள்.

அவளையும் தங்களுடன் சுற்றுலா வர அழைத்தனர் ஆனால் ஸ்ரீதேவி வேலையை காரணம் காட்டி வரவில்லை என்று ஒதுங்கி கொண்டாள்.

ஸ்ரீதேவியின் செயல்கள் அவளை பானுமதி அம்மாளிடம் மேம்படுத்தி காட்டியது.

"ஸ்ரீதேவி ரொம்ப பொறுப்பா நடந்துக்கறா இல்லேன்னா ரெண்டு பேர் பிரண்ட்ஸ்கள வைச்சு மேனேஜ் பன்றது ரொம்ப கஷ்டம்" என்று தன் மகன்களிடம் மனதார பாரட்டினார் பானுமதி அம்மாள்.

ஸ்ரீதேவியின் மதிப்பை அவர்களின் மனதில் அது உயர்த்தியது.

ஊட்டி மலர் கண்காட்சி வரை தங்கியிருந்த அவர்கள் தொடங்கியவுடன் இருவரின் தோழிகளூம் பார்த்து ரசித்து விட்டு தங்கள் ஊருக்கு திரும்பினார்கள்.

Write your reply...
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
சரண்யாவின் தோழிகள் மற்றும் வந்தனாவின் தோழிகள் என இரு தரப்பினரும் போகும் வேளையில் ஸ்ரீதேவியை பாராட்டிவிட்டு அவளிடமும் விடைபெற்று கிளம்பினார்கள்.

"அத்தை... ஒருவழியாக எந்த குறையும் சொல்லாம என் பிரண்ட்ஸ் எல்லாம் பாராட்டிட்டு போயிட்டாங்க. சரண்யா பிரண்டு பரவாயில்லை அத்தை. எங்க ரெண்டு பேருடைய பிரண்ட்ஸகளையும் நல்ல பார்த்துகிட்டாள்" என்று தன் அத்தையிடம் ஸ்ரீதேவியை பற்றி மனதார பாராட்டினாள் வந்தனா.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top