ஹாய்!!! ஹாய்!!! ப்ரெண்ட்ஸ்!!!
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி!!!
இன்னைக்கும் ud படித்து விட்டு ஒரு லைக், ஒரு கமெண்ட்ஸ் எதிர்பார்க்கும் இந்த சிறு பிள்ளையை ஏமாற்றி விடாதீங்கோ மக்கா
கீழே சுருண்டு வீழ்ந்து கிடந்த மதுவின் தலை முடியை கொத்தாகப் பற்றி அவளை தூக்கி நிறுத்திய அகிலா
"என்னடி காரியம் பண்ணிருக்க நீ? இத்தனை நாள் ஏதோ சின்ன பொண்ணுனு உன்னை கண்டிக்காம விட்டா நீ இப்படி அசிங்கம் பண்ணிட்டு இருக்க. பழகுறது ஒருத்தன் கூட கல்யாணம் ஒருத்தன் கூடயா? நடத்தை கெட்டவளே!" என்றவர் மீண்டும் மதுவை அடிக்க போக அவர் கை பற்றி தடுத்தான் கார்த்திக்.
"அம்மா!!! கொஞ்சம் அமைதியாக இருமா...எல்லோரும் நம்மளையே தான் பார்க்குறாங்க. எதுவாக இருந்தாலும் வீட்டில் போய் பேசிக்கலாம் வாம்மா..." என்று கார்த்திக் கூறவும் சுற்றிலும் பார்த்து விட்டு மதுவின் கையை பிடித்து இழுத்து கொண்டு சென்று காரில் தள்ளி ஏற்றிய அகிலா அவளருகில் அமர்ந்து கொண்டார்.
ஒன்றுக்கு மேல் ஒன்றாக அதிர்ச்சியடைந்த மதுவோ அவள் கன்னத்தை பிடித்தவாறே கண்களில் நீர் வழிய வீதியை வெறித்துப் பார்த்து கொண்டு இருந்தாள்.
மதுவின் வீட்டை வந்தடைந்ததும் மதுவின் கையை பிடித்து இழுத்து கொண்டு அவளை வீட்டினுள் அழைத்து சென்ற அகிலா
"அருணா......." என்று வீடே அதிரும்படி கத்தினார்.
ஏற்கனவே கலக்கத்தில் அமர்ந்திருந்த அருணா அகிலாவின் குரல் கேட்டு அவசரமாக ஹாலுக்கு வர அங்கே மது நின்ற கோலத்தைப் பார்த்து பதறிப் போனார்.
வெளியே தோட்டத்தில் நின்றிருந்த அருணாசலமும் அகிலாவின் குரல் கேட்டு வீட்டினுள் வர அகிலாவின் பிடியில் கண்ணீரோடு நின்றிருந்த மதுவின் அருகில் அவசரமாக ஓடி வந்து மதுவை தன் புறம் இழுத்து கொண்டார்.
"என்ன அக்கா இதெல்லாம்? எதுக்கு மதுவை இப்படி பிடிச்சுட்டு நிற்குறிங்க? மது எதுக்குமே அழாதவ அவ அழுற அளவுக்கு என்ன பண்ணிங்க?" என்று கோபம் பாதி பதட்டம் பாதியாக அருணாசலம் கேட்கவும்
"என்ன எதுக்கு கேட்குற? நீ வளர்த்து வைச்சுருக்கியே உன் சீமந்தப் புத்திரி அவள் கிட்டயே கேளு. அவள் பண்ண வேலைக்கு அவளை கொன்னு போட்டாலும் பரவாயில்லை" என்று ஏறக்குறைய கத்தி கொண்டு நின்றார் அகிலா.
"மது என்னடா ஆச்சு? ஏதாவது சொல்லுடா!" என்று அவள் கையை பிடித்து கொண்டு அருணா கேட்க
மதுவின் ஒரு கன்னம் வீங்கி சிவந்திருந்ததைப் பார்த்து கோபம் கொண்ட அருணாசலம்
"அக்கா என் பொண்ண என்ன பண்ணி வைச்சிருக்கீங்க? அவ தப்பு பண்ணிருந்தாலும் என் பொண்ண எப்படி நீங்க அடிக்கலாம்? ஒரு சின்ன துரும்பு கூட அவளை காயப்படுத்திடக் கூடாதுனு கண்ணுக்குள்ள வைச்சு வளர்த்த பொண்ணு என் மது. அவள அடிக்க உங்களுக்கு எப்படி மனசு வந்தது?" என்று கேட்டார்.
"என்ன நடந்ததுனு சொன்னதுக்கு அப்புறம் உன் பொண்ணோட லட்சணத்தை நீயே தெரிஞ்சுக்க" என்ற அகிலா மாலில் மது ஒருவனிடம் நின்று பேசி கொண்டிருந்தது முதல் அவன் அவளை முத்தமிட்டு சென்றது வரை கூற அருணாசலம் உச்ச பட்ச அதிர்ச்சி அடைந்து நின்றார்.
ஆனால் அருணாவோ அகிலாவின் முன்னால் வந்து நின்று
"என் பொண்ணு எந்த கலங்கமும் இல்லாதவ. எவனோ ஏதோ பேசிட்டானு என் பொண்ண நான் சந்தேகப்பட மாட்டேன். அவ எல்லோரையும் ஒரே மாதிரி நினைச்சு பழகுறவ. அதை அந்த பையன் தப்பா பயன்படுத்தி இருக்கான். இப்போ கூட என் பொண்ணு மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. அவ தப்பானவ இல்ல" என்று கூற
"அம்மா!!!!!!!!!!" என்று ஓடி வந்து அருணாவை கட்டி கொண்டு தேம்பி தேம்பி அழுதாள் மது.
"என் பொண்ணு வேற யாரையாவது விரும்பி இருந்தா அவ அப்பாகிட்ட சொல்லுறாளோ இல்லையோ என்கிட்ட சொல்லி இருப்பாள். இப்படி பொய்யா நடிச்சு உங்கள ஏமாத்தணும்னு நினைச்சுருக்க மாட்டா. சின்ன வயசுலே இருந்து அத்தான் அத்தானு உன் பின்னாடியே தானே மது வருவா கார்த்திக். நீ கூட அவளை நம்பலயா?" என்று வலியோடு அருணா கேட்க தலை குனிந்து நின்றான் கார்த்திக்.
"அத்தை, கார்த்திக் அவன் யாருனே எனக்கு தெரியாது. அந்த மால்ல தான் அவனை பார்த்தேன். சும்மா பேசிட்டு தான் நான் நின்னேன். திடீர்னு அவன் அப்படி பண்ணிட்டான். நான் எந்த தப்பும் பண்ணல அத்தை" என்று கண்ணீர் மல்க மது கூறவும் அமைதியாக நின்றார் அகிலா.
"இந்த கல்யாணம் நடக்காது அருணாசலம்...எல்லாத்தையும் நிறுத்திடலாம்" என்று அகிலா கூறவும்
"அக்கா...." என்று அதிர்ச்சி அடைந்தார் அருணாசலம்.
"இது என்ன சின்ன புள்ளைங்க விளையாடுற பொம்மை கல்யாணமா அண்ணி? ஊரெல்லாம் பத்திரிகை கொடுத்து இன்னும் மூணு நாளையில் கல்யாணம்னு இருக்கும் போது இப்படி சொன்னா என்ன அர்த்தம் அண்ணி?" என்று அருணா கேட்கவும்
அவரை உறுத்து விழித்த அகிலா
"அதெல்லாம் உங்க பொண்ணு அடுத்தவன் கூட நின்னு தப்பா நடக்குறதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கனும். இப்போ வேஷம் போட்டு பலன் இல்லை" என்று கூறி விட்டு கார்த்திக்கின் கை பிடித்து இழுக்க அவனோ அசையாமல் நின்றான்.
"கார்த்தி....." என்று அதிர்ச்சியாக அகிலா அவனைப் பார்க்க அவர் கைகளில் இருந்து தன் கையை விலக்கி கொண்டவன் நேராக மதுவின் அருகில் சென்றான்.
அவள் கண்ணீரை துடைத்து விட்ட கார்த்திக்
"என்ன நடந்தாலும் சரி எனக்கு நீ தான் மனைவி. இதை யாராலும் மாற்றமுடியாது"
என்று விட்டு அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறு பெட்டியை எடுத்தான்.
அனைவரும் அதிர்ந்த போய் கார்த்திக்கைப் பார்க்க எந்த வித பதட்டமும் இல்லாமல் அந்த பெட்டியை திறந்தவன் அதிலிருந்த தாலியை கையில் எடுத்தான்.
"கார்த்தி...." என்று அனைவரும் அதிர்ச்சியடைந்து நிற்க மதுவை நெருங்கி நின்றவன்
"எனக்கு மது தான். மதுவுக்கு நான் தான்னு நீங்க எல்லாரும் சின்ன வயசுல இருந்தே சொல்லி சொல்லி வளர்த்துட்டு இப்போ தூக்கி எறிஞ்சுட சொன்னா என்ன நியாயம்? இனி மதுவை பிரிஞ்சு நான் வாழ மாட்டேன்" என்று கூறி விட்டு அவள் கழுத்தில் தாலி கட்ட கையை அவள் கழுத்தின் அருகே கொண்டு சென்றான்.
"கார்த்தி......" என்று அகிலா கத்தவும் திரும்பி பார்த்தவன் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் நின்றிருந்த அகிலாவைப் பார்த்து விட்டு அவள் கழுத்தில் ஒரு முடிச்சு போட்டான்.
அவசரமாக அவனை நெருங்கி அவன் கையில் இருந்த தாலியை அகிலா பறிக்க அது மதுவின் கழுத்தை வெட்டி விட்டு அவர் கைக்கு சென்றது.
வலியால் மது
"அம்மா...." என்று கத்த அவளை பிடித்து கொண்ட அருணா
"ஏன் இப்படி மூர்க்கத்தனமா நடந்துக்குறீங்க? உங்களுக்கு மனுஷ தன்மையே இல்லையா?" என்று அகிலாவைப் பார்த்து கேட்டவர்
"கார்த்தி போதும்பா போதும். என் பொண்ண விட்டுடு. வாழ்க்கை பூரா உங்க அம்மாவோட ஏச்சு, பேச்சை கேட்டுட்டு என் பொண்ணு கஷ்டப்படனுமா? உங்க அம்மா எப்ப என் பொண்ண நம்புறாங்களோ அப்போ உங்களுக்கு நானே முன்னின்று கல்யாணம் பண்ணி வைக்கிறேன். இப்போ தயவுசெய்து என் பொண்ண கஷ்டப்படுத்தாம விட்டுடுங்க" என்று கையெடுத்து கும்பிடவும்
அவசரமாக அவர் கையை பிடித்து தடுத்த கார்த்திக்
"கண்டிப்பாக நான் திரும்பி வருவேன் அத்தை என் மதுவுக்காக.." என்று விட்டு
விறுவிறுவென வெளியேறி சென்று விட அகிலாவும் அவனைப் பின் தொடர்ந்து சென்றார்.
கீழே முழங்காலிட்டு அமர்ந்த மது முகத்தை மூடிக் கொண்டு கதறி அழவும் அவளருகில் வந்த அருணாசலம் அவள் தலையை ஆதரவாக கோதிவிட்டார்.
"மது போய் முகத்தை கழுவிட்டு வா சாப்பிடலாம்" என்று அருணா கூறவும்
"வேண்டாம்மா...." என்று மது கூற அவளை அருணா முறைத்து பார்க்க எதுவும் பேசாமல் எழுந்து சென்ற மது முகத்தை கழுவி விட்டு வந்தாள்.
அமைதியாக சாப்பிட்டு விட்டு எழுந்து சென்ற மது அறைக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டாள்.
அது வரை அடக்கி வைத்திருந்த மொத்த சோகத்தையும் அடக்க மாட்டாமல் கண்ணீராய் வடித்தாள் மது.
சமையலறைக்குள் சென்ற அருணா வாயை மூடிக்கொண்டு அழுது கொண்டிருக்க அவரை ஆதரவாக அணைத்துக் கொண்டார் அருணாசலம்.
அழுது கொண்டிருந்த மது அப்படியே உறங்கி விட அன்றைய இரவு அவர்கள் அனைவருக்கும் கவலை
மிகுந்ததாகவே கழிந்தது.
காலையில் கண் விழித்த மது நேற்று நடந்த சம்பவங்களை நினைத்து பார்க்க அவள் கண்கள் கலங்கியது.
சிறு வயதில் இருந்து தன் தாய், தந்தை தன்னை திட்டும் போதும் அவளுக்கு துணை நின்ற அவளது அன்புக்குரிய அத்தை அகிலா தன்னை புரிந்து கொள்ளவே இல்லையே என்ற கவலை அவளை பாடாய்ப்படுத்த எழுந்து அமர்ந்தவள் குளித்து விட்டு பூஜையறைக்கு சென்றாள்.
மனமுருக கடவுளை வேண்டி கொண்டவள் அருணாவை தேடி செல்ல அவரோ சமையலறையில் நின்று கொண்டிருந்தார்.
அருணாவின் கைகள் தான் சமைப்பதில் ஈடுபட்டிருந்ததே தவிர அவர் மனம் முழுவதும் அவரிடம் இல்லை.
சிறிது நேரம் அருணாவைப் பார்த்து கொண்டிருந்தவள் அவளது தந்தையை தேடி சென்றாள்.
வழக்கமாக அதிகாலையில் எழும்பி விடும் அருணாசலம் மணி ஒன்பது ஆகியும் எழும்பாமல் இருக்க அவரை தேடி சென்றாள் மது.
அவரது அறைக் கதவில் கை வைக்க கதவு தானாக திறந்து கொண்டது.
"அப்பா..." என்றவாறே அருணாசலத்தை நெருங்கி சென்ற மது அவர் கையை தொட அவரது கைகள் சில்லென்று இருந்தது.
"அப்பா...அப்பா...அப்பா..." என்று பலமுறை அவரை அழைத்தும் அருணாசலம் எழும்பாமல் இருக்க பதட்டமடைந்த மது
"அம்மா!!!!!!" என்று கத்தி கொண்டு சமையலறையை நோக்கி ஓடினாள்.
மதுவின் சத்தம் கேட்டு வந்த அருணா
"என்ன மது? எதுக்கு இப்படி சத்தம் போட்ட?" என்று கேட்கவும்
"அ...ம்...மா...அங்க...அப்...அப்பா....அப்பா.." என்று மது திணறிய படி நின்றாள்.
ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து அவசரமாக அறைக்குச் சென்ற அருணா அருணாசலத்தை எழுப்ப அவரோ மீளாத் துயிலில் ஆழ்ந்திருந்தார்.
நேற்று நடந்த சம்பவங்களின் தாக்கத்தில் தவித்துப் போய் இருந்த அருணா தன் கணவரை கவனிக்கவில்லையே என்ற சுயபச்சாதாபத்தில் கதறி அழுதார்.
அவர்களுக்கு துணை இருந்த அருணாசலமும் அவர்கள் இருவரையும் தவிக்க விட்டு விட்டு சென்று விட கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல தவித்தார் அருணா.
யாரிடம் சென்று என்ன சொல்வது எனப் புரியாமல் தவித்தவர் முதலில் அழைத்தது கார்த்திக்கை தான்.
அருணா சொன்ன செய்தியை கேட்டு பதறியடித்து கொண்டு வந்த அகிலா நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார்.
மதுவோ நடப்பதை எல்லாம் பார்த்து கொண்டு கல்லாக இறுகிப் போய் இருந்தாள்.
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி!!!
இன்னைக்கும் ud படித்து விட்டு ஒரு லைக், ஒரு கமெண்ட்ஸ் எதிர்பார்க்கும் இந்த சிறு பிள்ளையை ஏமாற்றி விடாதீங்கோ மக்கா
கீழே சுருண்டு வீழ்ந்து கிடந்த மதுவின் தலை முடியை கொத்தாகப் பற்றி அவளை தூக்கி நிறுத்திய அகிலா
"என்னடி காரியம் பண்ணிருக்க நீ? இத்தனை நாள் ஏதோ சின்ன பொண்ணுனு உன்னை கண்டிக்காம விட்டா நீ இப்படி அசிங்கம் பண்ணிட்டு இருக்க. பழகுறது ஒருத்தன் கூட கல்யாணம் ஒருத்தன் கூடயா? நடத்தை கெட்டவளே!" என்றவர் மீண்டும் மதுவை அடிக்க போக அவர் கை பற்றி தடுத்தான் கார்த்திக்.
"அம்மா!!! கொஞ்சம் அமைதியாக இருமா...எல்லோரும் நம்மளையே தான் பார்க்குறாங்க. எதுவாக இருந்தாலும் வீட்டில் போய் பேசிக்கலாம் வாம்மா..." என்று கார்த்திக் கூறவும் சுற்றிலும் பார்த்து விட்டு மதுவின் கையை பிடித்து இழுத்து கொண்டு சென்று காரில் தள்ளி ஏற்றிய அகிலா அவளருகில் அமர்ந்து கொண்டார்.
ஒன்றுக்கு மேல் ஒன்றாக அதிர்ச்சியடைந்த மதுவோ அவள் கன்னத்தை பிடித்தவாறே கண்களில் நீர் வழிய வீதியை வெறித்துப் பார்த்து கொண்டு இருந்தாள்.
மதுவின் வீட்டை வந்தடைந்ததும் மதுவின் கையை பிடித்து இழுத்து கொண்டு அவளை வீட்டினுள் அழைத்து சென்ற அகிலா
"அருணா......." என்று வீடே அதிரும்படி கத்தினார்.
ஏற்கனவே கலக்கத்தில் அமர்ந்திருந்த அருணா அகிலாவின் குரல் கேட்டு அவசரமாக ஹாலுக்கு வர அங்கே மது நின்ற கோலத்தைப் பார்த்து பதறிப் போனார்.
வெளியே தோட்டத்தில் நின்றிருந்த அருணாசலமும் அகிலாவின் குரல் கேட்டு வீட்டினுள் வர அகிலாவின் பிடியில் கண்ணீரோடு நின்றிருந்த மதுவின் அருகில் அவசரமாக ஓடி வந்து மதுவை தன் புறம் இழுத்து கொண்டார்.
"என்ன அக்கா இதெல்லாம்? எதுக்கு மதுவை இப்படி பிடிச்சுட்டு நிற்குறிங்க? மது எதுக்குமே அழாதவ அவ அழுற அளவுக்கு என்ன பண்ணிங்க?" என்று கோபம் பாதி பதட்டம் பாதியாக அருணாசலம் கேட்கவும்
"என்ன எதுக்கு கேட்குற? நீ வளர்த்து வைச்சுருக்கியே உன் சீமந்தப் புத்திரி அவள் கிட்டயே கேளு. அவள் பண்ண வேலைக்கு அவளை கொன்னு போட்டாலும் பரவாயில்லை" என்று ஏறக்குறைய கத்தி கொண்டு நின்றார் அகிலா.
"மது என்னடா ஆச்சு? ஏதாவது சொல்லுடா!" என்று அவள் கையை பிடித்து கொண்டு அருணா கேட்க
மதுவின் ஒரு கன்னம் வீங்கி சிவந்திருந்ததைப் பார்த்து கோபம் கொண்ட அருணாசலம்
"அக்கா என் பொண்ண என்ன பண்ணி வைச்சிருக்கீங்க? அவ தப்பு பண்ணிருந்தாலும் என் பொண்ண எப்படி நீங்க அடிக்கலாம்? ஒரு சின்ன துரும்பு கூட அவளை காயப்படுத்திடக் கூடாதுனு கண்ணுக்குள்ள வைச்சு வளர்த்த பொண்ணு என் மது. அவள அடிக்க உங்களுக்கு எப்படி மனசு வந்தது?" என்று கேட்டார்.
"என்ன நடந்ததுனு சொன்னதுக்கு அப்புறம் உன் பொண்ணோட லட்சணத்தை நீயே தெரிஞ்சுக்க" என்ற அகிலா மாலில் மது ஒருவனிடம் நின்று பேசி கொண்டிருந்தது முதல் அவன் அவளை முத்தமிட்டு சென்றது வரை கூற அருணாசலம் உச்ச பட்ச அதிர்ச்சி அடைந்து நின்றார்.
ஆனால் அருணாவோ அகிலாவின் முன்னால் வந்து நின்று
"என் பொண்ணு எந்த கலங்கமும் இல்லாதவ. எவனோ ஏதோ பேசிட்டானு என் பொண்ண நான் சந்தேகப்பட மாட்டேன். அவ எல்லோரையும் ஒரே மாதிரி நினைச்சு பழகுறவ. அதை அந்த பையன் தப்பா பயன்படுத்தி இருக்கான். இப்போ கூட என் பொண்ணு மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. அவ தப்பானவ இல்ல" என்று கூற
"அம்மா!!!!!!!!!!" என்று ஓடி வந்து அருணாவை கட்டி கொண்டு தேம்பி தேம்பி அழுதாள் மது.
"என் பொண்ணு வேற யாரையாவது விரும்பி இருந்தா அவ அப்பாகிட்ட சொல்லுறாளோ இல்லையோ என்கிட்ட சொல்லி இருப்பாள். இப்படி பொய்யா நடிச்சு உங்கள ஏமாத்தணும்னு நினைச்சுருக்க மாட்டா. சின்ன வயசுலே இருந்து அத்தான் அத்தானு உன் பின்னாடியே தானே மது வருவா கார்த்திக். நீ கூட அவளை நம்பலயா?" என்று வலியோடு அருணா கேட்க தலை குனிந்து நின்றான் கார்த்திக்.
"அத்தை, கார்த்திக் அவன் யாருனே எனக்கு தெரியாது. அந்த மால்ல தான் அவனை பார்த்தேன். சும்மா பேசிட்டு தான் நான் நின்னேன். திடீர்னு அவன் அப்படி பண்ணிட்டான். நான் எந்த தப்பும் பண்ணல அத்தை" என்று கண்ணீர் மல்க மது கூறவும் அமைதியாக நின்றார் அகிலா.
"இந்த கல்யாணம் நடக்காது அருணாசலம்...எல்லாத்தையும் நிறுத்திடலாம்" என்று அகிலா கூறவும்
"அக்கா...." என்று அதிர்ச்சி அடைந்தார் அருணாசலம்.
"இது என்ன சின்ன புள்ளைங்க விளையாடுற பொம்மை கல்யாணமா அண்ணி? ஊரெல்லாம் பத்திரிகை கொடுத்து இன்னும் மூணு நாளையில் கல்யாணம்னு இருக்கும் போது இப்படி சொன்னா என்ன அர்த்தம் அண்ணி?" என்று அருணா கேட்கவும்
அவரை உறுத்து விழித்த அகிலா
"அதெல்லாம் உங்க பொண்ணு அடுத்தவன் கூட நின்னு தப்பா நடக்குறதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கனும். இப்போ வேஷம் போட்டு பலன் இல்லை" என்று கூறி விட்டு கார்த்திக்கின் கை பிடித்து இழுக்க அவனோ அசையாமல் நின்றான்.
"கார்த்தி....." என்று அதிர்ச்சியாக அகிலா அவனைப் பார்க்க அவர் கைகளில் இருந்து தன் கையை விலக்கி கொண்டவன் நேராக மதுவின் அருகில் சென்றான்.
அவள் கண்ணீரை துடைத்து விட்ட கார்த்திக்
"என்ன நடந்தாலும் சரி எனக்கு நீ தான் மனைவி. இதை யாராலும் மாற்றமுடியாது"
என்று விட்டு அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறு பெட்டியை எடுத்தான்.
அனைவரும் அதிர்ந்த போய் கார்த்திக்கைப் பார்க்க எந்த வித பதட்டமும் இல்லாமல் அந்த பெட்டியை திறந்தவன் அதிலிருந்த தாலியை கையில் எடுத்தான்.
"கார்த்தி...." என்று அனைவரும் அதிர்ச்சியடைந்து நிற்க மதுவை நெருங்கி நின்றவன்
"எனக்கு மது தான். மதுவுக்கு நான் தான்னு நீங்க எல்லாரும் சின்ன வயசுல இருந்தே சொல்லி சொல்லி வளர்த்துட்டு இப்போ தூக்கி எறிஞ்சுட சொன்னா என்ன நியாயம்? இனி மதுவை பிரிஞ்சு நான் வாழ மாட்டேன்" என்று கூறி விட்டு அவள் கழுத்தில் தாலி கட்ட கையை அவள் கழுத்தின் அருகே கொண்டு சென்றான்.
"கார்த்தி......" என்று அகிலா கத்தவும் திரும்பி பார்த்தவன் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் நின்றிருந்த அகிலாவைப் பார்த்து விட்டு அவள் கழுத்தில் ஒரு முடிச்சு போட்டான்.
அவசரமாக அவனை நெருங்கி அவன் கையில் இருந்த தாலியை அகிலா பறிக்க அது மதுவின் கழுத்தை வெட்டி விட்டு அவர் கைக்கு சென்றது.
வலியால் மது
"அம்மா...." என்று கத்த அவளை பிடித்து கொண்ட அருணா
"ஏன் இப்படி மூர்க்கத்தனமா நடந்துக்குறீங்க? உங்களுக்கு மனுஷ தன்மையே இல்லையா?" என்று அகிலாவைப் பார்த்து கேட்டவர்
"கார்த்தி போதும்பா போதும். என் பொண்ண விட்டுடு. வாழ்க்கை பூரா உங்க அம்மாவோட ஏச்சு, பேச்சை கேட்டுட்டு என் பொண்ணு கஷ்டப்படனுமா? உங்க அம்மா எப்ப என் பொண்ண நம்புறாங்களோ அப்போ உங்களுக்கு நானே முன்னின்று கல்யாணம் பண்ணி வைக்கிறேன். இப்போ தயவுசெய்து என் பொண்ண கஷ்டப்படுத்தாம விட்டுடுங்க" என்று கையெடுத்து கும்பிடவும்
அவசரமாக அவர் கையை பிடித்து தடுத்த கார்த்திக்
"கண்டிப்பாக நான் திரும்பி வருவேன் அத்தை என் மதுவுக்காக.." என்று விட்டு
விறுவிறுவென வெளியேறி சென்று விட அகிலாவும் அவனைப் பின் தொடர்ந்து சென்றார்.
கீழே முழங்காலிட்டு அமர்ந்த மது முகத்தை மூடிக் கொண்டு கதறி அழவும் அவளருகில் வந்த அருணாசலம் அவள் தலையை ஆதரவாக கோதிவிட்டார்.
"மது போய் முகத்தை கழுவிட்டு வா சாப்பிடலாம்" என்று அருணா கூறவும்
"வேண்டாம்மா...." என்று மது கூற அவளை அருணா முறைத்து பார்க்க எதுவும் பேசாமல் எழுந்து சென்ற மது முகத்தை கழுவி விட்டு வந்தாள்.
அமைதியாக சாப்பிட்டு விட்டு எழுந்து சென்ற மது அறைக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டாள்.
அது வரை அடக்கி வைத்திருந்த மொத்த சோகத்தையும் அடக்க மாட்டாமல் கண்ணீராய் வடித்தாள் மது.
சமையலறைக்குள் சென்ற அருணா வாயை மூடிக்கொண்டு அழுது கொண்டிருக்க அவரை ஆதரவாக அணைத்துக் கொண்டார் அருணாசலம்.
அழுது கொண்டிருந்த மது அப்படியே உறங்கி விட அன்றைய இரவு அவர்கள் அனைவருக்கும் கவலை
மிகுந்ததாகவே கழிந்தது.
காலையில் கண் விழித்த மது நேற்று நடந்த சம்பவங்களை நினைத்து பார்க்க அவள் கண்கள் கலங்கியது.
சிறு வயதில் இருந்து தன் தாய், தந்தை தன்னை திட்டும் போதும் அவளுக்கு துணை நின்ற அவளது அன்புக்குரிய அத்தை அகிலா தன்னை புரிந்து கொள்ளவே இல்லையே என்ற கவலை அவளை பாடாய்ப்படுத்த எழுந்து அமர்ந்தவள் குளித்து விட்டு பூஜையறைக்கு சென்றாள்.
மனமுருக கடவுளை வேண்டி கொண்டவள் அருணாவை தேடி செல்ல அவரோ சமையலறையில் நின்று கொண்டிருந்தார்.
அருணாவின் கைகள் தான் சமைப்பதில் ஈடுபட்டிருந்ததே தவிர அவர் மனம் முழுவதும் அவரிடம் இல்லை.
சிறிது நேரம் அருணாவைப் பார்த்து கொண்டிருந்தவள் அவளது தந்தையை தேடி சென்றாள்.
வழக்கமாக அதிகாலையில் எழும்பி விடும் அருணாசலம் மணி ஒன்பது ஆகியும் எழும்பாமல் இருக்க அவரை தேடி சென்றாள் மது.
அவரது அறைக் கதவில் கை வைக்க கதவு தானாக திறந்து கொண்டது.
"அப்பா..." என்றவாறே அருணாசலத்தை நெருங்கி சென்ற மது அவர் கையை தொட அவரது கைகள் சில்லென்று இருந்தது.
"அப்பா...அப்பா...அப்பா..." என்று பலமுறை அவரை அழைத்தும் அருணாசலம் எழும்பாமல் இருக்க பதட்டமடைந்த மது
"அம்மா!!!!!!" என்று கத்தி கொண்டு சமையலறையை நோக்கி ஓடினாள்.
மதுவின் சத்தம் கேட்டு வந்த அருணா
"என்ன மது? எதுக்கு இப்படி சத்தம் போட்ட?" என்று கேட்கவும்
"அ...ம்...மா...அங்க...அப்...அப்பா....அப்பா.." என்று மது திணறிய படி நின்றாள்.
ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து அவசரமாக அறைக்குச் சென்ற அருணா அருணாசலத்தை எழுப்ப அவரோ மீளாத் துயிலில் ஆழ்ந்திருந்தார்.
நேற்று நடந்த சம்பவங்களின் தாக்கத்தில் தவித்துப் போய் இருந்த அருணா தன் கணவரை கவனிக்கவில்லையே என்ற சுயபச்சாதாபத்தில் கதறி அழுதார்.
அவர்களுக்கு துணை இருந்த அருணாசலமும் அவர்கள் இருவரையும் தவிக்க விட்டு விட்டு சென்று விட கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல தவித்தார் அருணா.
யாரிடம் சென்று என்ன சொல்வது எனப் புரியாமல் தவித்தவர் முதலில் அழைத்தது கார்த்திக்கை தான்.
அருணா சொன்ன செய்தியை கேட்டு பதறியடித்து கொண்டு வந்த அகிலா நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார்.
மதுவோ நடப்பதை எல்லாம் பார்த்து கொண்டு கல்லாக இறுகிப் போய் இருந்தாள்.