அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே
மிக விநோதமான முரளிதரா
என் மனம் அலை பாயுதே
கண்ணா....
தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
திக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே!
தனித்த மனத்தில் உருக்கி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா!
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழல் எனக்களித்தவா!
கதறி மனமுருகி நான் அழைக்கவா
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ? இது முறையோ?
இது தருமம் தானோ?
குழல் ஊதிடும் பொழுது ஆடிடிடும்
குழைகள் போலவே
மனது வேதனை மிகவோடு
அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
என்று அந்த அழகிய காலைப் பொழுதில் மனதை மயக்கும் குரலில் கண்களை மூடி ஆழ்ந்து பாடிக் கொண்டு இருந்தாள் மதுமிதா.
கயல் போன்ற விழிகள், கூர்மையான மூக்கு, செயற்கை பூச்சு இன்றி பொலிவுடன் இருக்கும் முகம் என வடித்து எடுத்த சிலை போல இருப்பாள் மதுமிதா.
மதுமிதாவின் இனிய குரலில் மயங்கி போய் பூஜையறை வாயிலிலேயே நின்று கொண்டிருந்தார் மதுமிதாவின் அன்னை அருணாதேவி.
மனமுருக கடவுளை வேண்டிக் கொண்டவள் கண்களைத் திறந்து எதிரில் இருந்த தன் தந்தையின் படத்தை தொட்டு வணங்கிக் கொண்டாள்.
"அப்பா எப்போதும் நீங்க எனக்கு துணையாக இருக்கணும்பா" என்று வேண்டிக் கொண்டு திரும்பிய மதுமிதா அறை வாயிலில் கண் மூடி நின்று கொண்டிருந்த அருணாவைப் பார்த்ததும் அவரருகில் சென்று அவர் தோள் தொட கண் திறந்து கொண்டார் அருணா.
"சாரிடாமா உன் பாட்டை கேட்டு அப்படியே மெய் மறந்து போயிட்டேன். வாம்மா வந்து சாப்பிடு டைம் ஆயிடுச்சுலே" என்று கூறி விட்டு அருணா செல்ல அவரின் பின்னால் சென்றாள் மது.
தட்டில் சாப்பாட்டை எடுத்து வைத்து மதுவிடம் கொடுத்து விட்டு அவளருகில் நின்று கொண்டிருந்தார் அருணா.
ஏதோ பேச வாய் எடுப்பதும் தயங்குவதுமாக இருந்த அருணாவைக் கண்டு கொண்ட மது
"அம்மா என்ன சொல்றதுக்காக இவ்வளவு தயங்குற?? எதுவா இருந்தாலும் சொல்லுமா" எனக் கூறவும்
"அது வந்து...நான் சொல்லுறதக் கேட்டு நீ கோபப்படக்கூடாது சரியா???" என்று அருணா கேட்டதற்கு
"அப்போ ஏதோ கோபப்படுற மாதிரி தான் சொல்ல போற இல்லையா???" என மது எதிர்க் கேள்வி கேட்க பதில் பேசாமல் மெளனம் காத்தார் அருணா.
அருணா அமைதியாக இருப்பதைப் பார்த்த மது
"சரி நான் கோபப்படமாட்டேன். என்ன விஷயம் சொல்லுமா?" என்று கூறவும்
"நம்ம ப்ரோக்கர் கோபி அண்ணன் கிட்ட உன்னோட ஜாதகத்தை கொடுத்துருந்தேன்" என்று கூறி விட்டு அருணா மதுவை பார்க்க மது தட்டில் விரலால் கோலம் போட்டு கொண்டு அமர்ந்திருந்தாள்.
மது எதிர்த்து எதுவும் கூறாமல் இருப்பதை பார்த்த அருணா மேற் கொண்டு பேச தொடங்கினார்.
"நேற்று ஈவ்னிங் போன் பண்ணி இருந்தாரு. உன் ஜாதகத்தோட பொருந்துற மாதிரி ஒரு வரன் வந்துருக்காம். பையன் சாப்ட்வேர் என்ஜினியராம். வீட்டுக்கு ஒரே பையனாம். பையனோட வீட்ல உன்னை பத்தி கோபி அண்ணா எல்லாம் சொல்லிட்டாராம்.
அவங்க எல்லாருக்கும் சம்மதமாம். உனக்கு சம்மதம்னா மேலே பேசலாம்னு சொன்னாரு. என்னம்மா மேல பேசலாமா???" என்று அருணா ஆவலுடன் மதுவை பார்த்து கேட்க
எதுவும் பேசாமல் எழுந்து கொண்ட மது கைகளை கழுவி விட்டு வந்து அவளுடைய ஹேண்ட் பாக்கை எடுத்து கொண்டு புறப்பட்டு செல்ல போக அவளின் முன்னால் வந்து நின்றார் அருணா.
"என்ன மது எதுவுமே சொல்லாமலே போற?" என்று அருணா கேட்கவும்
அவரை ஆழ்ந்து பார்த்த மது
"என்ன பத்தி எல்லாமே சொல்லிட்டீங்களா??? எல்லாமே" என அழுத்தமாக கேட்க விக்கித்துப் போய் நின்றார் அருணா.
"என்னம்மா அமைதியாகிட்டீங்க?? எல்லாமே சொல்லிட்டீங்களா இல்லையா??" என மது கேட்கவும்
"அது வந்து.....அது..." என அருணா தடுமாறி கொண்டு நின்றார்.
"அப்போ சொல்லலே அப்படி தானே? அம்மா நாம எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு மீண்டு வந்துருக்கோம்னு தெரியும்லே. இப்போ தான் படிப்படியாக எல்லாமே சரியாகிட்டு வருது. என்னைப் பத்தி எல்லா விஷயங்களையும் தெரிஞ்சுகிட்டு அதற்கு அப்புறமா யாரு என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்குறாங்களோ அப்போ பார்த்துக்கலாம். இனி இந்த விஷயத்தை பத்தி பேசாதேமா ப்ளீஸ்" என்று விட்டு மது வேகமாக வீட்டை விட்டு வெளியேறி சென்று விட மது சென்ற வழியையே வேதனையுடன் பார்த்து கொண்டு நின்றார் அருணா.
வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த மதுவின் மனதோ எரிகுழம்பாய் கொதித்து கொண்டிருந்தது.
தன் வாழ்க்கை இப்படி மாறியதற்கு எல்லாம் காரணம் அவன் தானே என எண்ணும் போதே மதுவிற்கு எல்லையில்லா கோபம் வந்தது.
அவளது வாழ்வில் புயலென நுழைந்தவன் அவன்.
எத்தனை கஷ்டங்கள், எத்தனை போராட்டங்கள் எல்லாவற்றுக்கும் ஒட்டுமொத்த காரணம் அவன் தானே.
தன் குடும்ப மானத்தை இழந்து, சொந்த பந்தங்களை இழந்து எல்லாவற்றுக்கும் மேலாக உயிருக்கு உயிரான தன் தந்தையை இழந்து அவள் ஒட்டுமொத்த தவிப்புக்கும் காரணம் அவன் அருள்வேந்தன்.
அவன் பெயரை நினைத்தாலே அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.
எல்லாவற்றையும் நினைத்து கொண்டே வந்தவள் வழக்கமாக அவள் செல்லும் பேரூந்திற்காக காத்து நின்றாள்.
எப்போதும் போல தள்ளாடிய படி வந்து சேர்ந்த பேருந்தில் ஏறி அமர்ந்தவள் சிந்தனைகள் பின்னோக்கி நகர்ந்தது.
தந்தை இறந்த பின்பு சொந்த பந்தம், நண்பர்கள் எல்லோரும் அவளையும், அவள் அன்னையையும் கண்டு கொள்ளாது விட்டு விட தவித்துப் போயினர் இருவரும்.
மதுமிதாவின் தந்தை அருணாச்சலம் தனியார் கம்பெனி ஒன்றில் அசிஸ்டென்ட் மேனஜராக பணியாற்றி வந்தார்.
அவர் உயிருடன் இருந்த காலம் வரை குடும்ப கஷ்டங்களோ, சுமைகளோ மதுவிற்கு தெரியவில்லை.
அவர் இறந்த பின்பு தான் இனி அன்னையையும், தன்னையும் காப்பாற்றி கொள்ள என்ன செய்வது?? எனத் திக்குமுக்காடி போனாள் மது.
அவள் தந்தை இறக்கும் போது அவள் பி.காம் இறுதியாண்டு படித்து கொண்டிருந்தாள்.
அருணாசலத்தின் இறப்பிற்கு பின் அருணா தான் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த தங்க ஆபரணங்கள் எல்லாவற்றையும் விற்று மதுவின் படிப்பை முழுமையாக பூர்த்தி அடையவைத்தார்.
தனக்காக கஷ்டப்படும் தன் அன்னைக்காக படித்து முடித்த கையோடு வேலை தேடி அலைந்தாள் மது.
ஆனால் அவளின் தகுதிக்கும், படிப்புக்கும் யாரும் மதிப்பளிக்கவில்லை,
மாறாக பணத்தையே நாடினர்.
வெறுத்துப் போய் இருந்த மதுவிற்கு எப்போதும் பக்க பலமாக இருந்தார் அருணா.
இனி பிறர் கையை எதிர்பார்க்க விரும்பாத மது சொந்தமாக தொழில் ஆரம்பிக்க திட்டமிட்டாள்.
எல்லா சொத்துக்களும் கை நழுவி போய் விட இறுதியாக அருணாவிடமிருந்தது அவருடைய தாலியும், அருணாச்சலம் பார்த்து பார்த்து ஆசையாக கட்டிய அவர்களது வீடுமே.
வீட்டை விற்றால் இருக்க இடம் கிடைக்காது எனத் தெரிந்ததால் மதுவின் எதிர்ப்பையும் மீறி தன் தாலியை அடமானம் வைத்து மது தொழில் ஆரம்பிக்க பணம் வழங்கினார் அருணா.
அருணா வெடிங் பிளானர்ஸ் என்ற கம்பெனியை ஆரம்பித்து தட்டு தடுமாறி இன்று நல்ல நிலையில் தன் கம்பெனியை கொண்டு வந்த மது முதல் வேலையாக தன் அன்னையின் தாலியை மீட்டுக் கொடுத்தாள்.
படிப்படியாக இழந்த ஒவ்வொன்றாக மீட்டு வந்தவளால் இழந்து போன தன் குடும்ப மானத்தையோ, தன் தந்தையையோ மீட்ட முடியவில்லை.
தந்தையை நினைக்கும் போதே மதுவின் கண்கள் கலங்கியது.
தன் 23 வருட வாழ்க்கையில் சந்தோஷத்தை மாத்திரம் அனுபவித்தவள் கடந்த இரண்டு வருடங்களாக சிரிப்பையே இழந்து தவிக்கிறாள்.
மறுபடியும் தன் வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்குமா என்பது அவளுக்கே புரியாத புதிராக இருந்தது.
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே
மிக விநோதமான முரளிதரா
என் மனம் அலை பாயுதே
கண்ணா....
தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
திக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே!
தனித்த மனத்தில் உருக்கி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா!
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழல் எனக்களித்தவா!
கதறி மனமுருகி நான் அழைக்கவா
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ? இது முறையோ?
இது தருமம் தானோ?
குழல் ஊதிடும் பொழுது ஆடிடிடும்
குழைகள் போலவே
மனது வேதனை மிகவோடு
அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
என்று அந்த அழகிய காலைப் பொழுதில் மனதை மயக்கும் குரலில் கண்களை மூடி ஆழ்ந்து பாடிக் கொண்டு இருந்தாள் மதுமிதா.
கயல் போன்ற விழிகள், கூர்மையான மூக்கு, செயற்கை பூச்சு இன்றி பொலிவுடன் இருக்கும் முகம் என வடித்து எடுத்த சிலை போல இருப்பாள் மதுமிதா.
மதுமிதாவின் இனிய குரலில் மயங்கி போய் பூஜையறை வாயிலிலேயே நின்று கொண்டிருந்தார் மதுமிதாவின் அன்னை அருணாதேவி.
மனமுருக கடவுளை வேண்டிக் கொண்டவள் கண்களைத் திறந்து எதிரில் இருந்த தன் தந்தையின் படத்தை தொட்டு வணங்கிக் கொண்டாள்.
"அப்பா எப்போதும் நீங்க எனக்கு துணையாக இருக்கணும்பா" என்று வேண்டிக் கொண்டு திரும்பிய மதுமிதா அறை வாயிலில் கண் மூடி நின்று கொண்டிருந்த அருணாவைப் பார்த்ததும் அவரருகில் சென்று அவர் தோள் தொட கண் திறந்து கொண்டார் அருணா.
"சாரிடாமா உன் பாட்டை கேட்டு அப்படியே மெய் மறந்து போயிட்டேன். வாம்மா வந்து சாப்பிடு டைம் ஆயிடுச்சுலே" என்று கூறி விட்டு அருணா செல்ல அவரின் பின்னால் சென்றாள் மது.
தட்டில் சாப்பாட்டை எடுத்து வைத்து மதுவிடம் கொடுத்து விட்டு அவளருகில் நின்று கொண்டிருந்தார் அருணா.
ஏதோ பேச வாய் எடுப்பதும் தயங்குவதுமாக இருந்த அருணாவைக் கண்டு கொண்ட மது
"அம்மா என்ன சொல்றதுக்காக இவ்வளவு தயங்குற?? எதுவா இருந்தாலும் சொல்லுமா" எனக் கூறவும்
"அது வந்து...நான் சொல்லுறதக் கேட்டு நீ கோபப்படக்கூடாது சரியா???" என்று அருணா கேட்டதற்கு
"அப்போ ஏதோ கோபப்படுற மாதிரி தான் சொல்ல போற இல்லையா???" என மது எதிர்க் கேள்வி கேட்க பதில் பேசாமல் மெளனம் காத்தார் அருணா.
அருணா அமைதியாக இருப்பதைப் பார்த்த மது
"சரி நான் கோபப்படமாட்டேன். என்ன விஷயம் சொல்லுமா?" என்று கூறவும்
"நம்ம ப்ரோக்கர் கோபி அண்ணன் கிட்ட உன்னோட ஜாதகத்தை கொடுத்துருந்தேன்" என்று கூறி விட்டு அருணா மதுவை பார்க்க மது தட்டில் விரலால் கோலம் போட்டு கொண்டு அமர்ந்திருந்தாள்.
மது எதிர்த்து எதுவும் கூறாமல் இருப்பதை பார்த்த அருணா மேற் கொண்டு பேச தொடங்கினார்.
"நேற்று ஈவ்னிங் போன் பண்ணி இருந்தாரு. உன் ஜாதகத்தோட பொருந்துற மாதிரி ஒரு வரன் வந்துருக்காம். பையன் சாப்ட்வேர் என்ஜினியராம். வீட்டுக்கு ஒரே பையனாம். பையனோட வீட்ல உன்னை பத்தி கோபி அண்ணா எல்லாம் சொல்லிட்டாராம்.
அவங்க எல்லாருக்கும் சம்மதமாம். உனக்கு சம்மதம்னா மேலே பேசலாம்னு சொன்னாரு. என்னம்மா மேல பேசலாமா???" என்று அருணா ஆவலுடன் மதுவை பார்த்து கேட்க
எதுவும் பேசாமல் எழுந்து கொண்ட மது கைகளை கழுவி விட்டு வந்து அவளுடைய ஹேண்ட் பாக்கை எடுத்து கொண்டு புறப்பட்டு செல்ல போக அவளின் முன்னால் வந்து நின்றார் அருணா.
"என்ன மது எதுவுமே சொல்லாமலே போற?" என்று அருணா கேட்கவும்
அவரை ஆழ்ந்து பார்த்த மது
"என்ன பத்தி எல்லாமே சொல்லிட்டீங்களா??? எல்லாமே" என அழுத்தமாக கேட்க விக்கித்துப் போய் நின்றார் அருணா.
"என்னம்மா அமைதியாகிட்டீங்க?? எல்லாமே சொல்லிட்டீங்களா இல்லையா??" என மது கேட்கவும்
"அது வந்து.....அது..." என அருணா தடுமாறி கொண்டு நின்றார்.
"அப்போ சொல்லலே அப்படி தானே? அம்மா நாம எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு மீண்டு வந்துருக்கோம்னு தெரியும்லே. இப்போ தான் படிப்படியாக எல்லாமே சரியாகிட்டு வருது. என்னைப் பத்தி எல்லா விஷயங்களையும் தெரிஞ்சுகிட்டு அதற்கு அப்புறமா யாரு என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்குறாங்களோ அப்போ பார்த்துக்கலாம். இனி இந்த விஷயத்தை பத்தி பேசாதேமா ப்ளீஸ்" என்று விட்டு மது வேகமாக வீட்டை விட்டு வெளியேறி சென்று விட மது சென்ற வழியையே வேதனையுடன் பார்த்து கொண்டு நின்றார் அருணா.
வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த மதுவின் மனதோ எரிகுழம்பாய் கொதித்து கொண்டிருந்தது.
தன் வாழ்க்கை இப்படி மாறியதற்கு எல்லாம் காரணம் அவன் தானே என எண்ணும் போதே மதுவிற்கு எல்லையில்லா கோபம் வந்தது.
அவளது வாழ்வில் புயலென நுழைந்தவன் அவன்.
எத்தனை கஷ்டங்கள், எத்தனை போராட்டங்கள் எல்லாவற்றுக்கும் ஒட்டுமொத்த காரணம் அவன் தானே.
தன் குடும்ப மானத்தை இழந்து, சொந்த பந்தங்களை இழந்து எல்லாவற்றுக்கும் மேலாக உயிருக்கு உயிரான தன் தந்தையை இழந்து அவள் ஒட்டுமொத்த தவிப்புக்கும் காரணம் அவன் அருள்வேந்தன்.
அவன் பெயரை நினைத்தாலே அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.
எல்லாவற்றையும் நினைத்து கொண்டே வந்தவள் வழக்கமாக அவள் செல்லும் பேரூந்திற்காக காத்து நின்றாள்.
எப்போதும் போல தள்ளாடிய படி வந்து சேர்ந்த பேருந்தில் ஏறி அமர்ந்தவள் சிந்தனைகள் பின்னோக்கி நகர்ந்தது.
தந்தை இறந்த பின்பு சொந்த பந்தம், நண்பர்கள் எல்லோரும் அவளையும், அவள் அன்னையையும் கண்டு கொள்ளாது விட்டு விட தவித்துப் போயினர் இருவரும்.
மதுமிதாவின் தந்தை அருணாச்சலம் தனியார் கம்பெனி ஒன்றில் அசிஸ்டென்ட் மேனஜராக பணியாற்றி வந்தார்.
அவர் உயிருடன் இருந்த காலம் வரை குடும்ப கஷ்டங்களோ, சுமைகளோ மதுவிற்கு தெரியவில்லை.
அவர் இறந்த பின்பு தான் இனி அன்னையையும், தன்னையும் காப்பாற்றி கொள்ள என்ன செய்வது?? எனத் திக்குமுக்காடி போனாள் மது.
அவள் தந்தை இறக்கும் போது அவள் பி.காம் இறுதியாண்டு படித்து கொண்டிருந்தாள்.
அருணாசலத்தின் இறப்பிற்கு பின் அருணா தான் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த தங்க ஆபரணங்கள் எல்லாவற்றையும் விற்று மதுவின் படிப்பை முழுமையாக பூர்த்தி அடையவைத்தார்.
தனக்காக கஷ்டப்படும் தன் அன்னைக்காக படித்து முடித்த கையோடு வேலை தேடி அலைந்தாள் மது.
ஆனால் அவளின் தகுதிக்கும், படிப்புக்கும் யாரும் மதிப்பளிக்கவில்லை,
மாறாக பணத்தையே நாடினர்.
வெறுத்துப் போய் இருந்த மதுவிற்கு எப்போதும் பக்க பலமாக இருந்தார் அருணா.
இனி பிறர் கையை எதிர்பார்க்க விரும்பாத மது சொந்தமாக தொழில் ஆரம்பிக்க திட்டமிட்டாள்.
எல்லா சொத்துக்களும் கை நழுவி போய் விட இறுதியாக அருணாவிடமிருந்தது அவருடைய தாலியும், அருணாச்சலம் பார்த்து பார்த்து ஆசையாக கட்டிய அவர்களது வீடுமே.
வீட்டை விற்றால் இருக்க இடம் கிடைக்காது எனத் தெரிந்ததால் மதுவின் எதிர்ப்பையும் மீறி தன் தாலியை அடமானம் வைத்து மது தொழில் ஆரம்பிக்க பணம் வழங்கினார் அருணா.
அருணா வெடிங் பிளானர்ஸ் என்ற கம்பெனியை ஆரம்பித்து தட்டு தடுமாறி இன்று நல்ல நிலையில் தன் கம்பெனியை கொண்டு வந்த மது முதல் வேலையாக தன் அன்னையின் தாலியை மீட்டுக் கொடுத்தாள்.
படிப்படியாக இழந்த ஒவ்வொன்றாக மீட்டு வந்தவளால் இழந்து போன தன் குடும்ப மானத்தையோ, தன் தந்தையையோ மீட்ட முடியவில்லை.
தந்தையை நினைக்கும் போதே மதுவின் கண்கள் கலங்கியது.
தன் 23 வருட வாழ்க்கையில் சந்தோஷத்தை மாத்திரம் அனுபவித்தவள் கடந்த இரண்டு வருடங்களாக சிரிப்பையே இழந்து தவிக்கிறாள்.
மறுபடியும் தன் வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்குமா என்பது அவளுக்கே புரியாத புதிராக இருந்தது.