• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagiye marry me.....-20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umasai

நாட்டாமை
Joined
Jul 10, 2018
Messages
22
Reaction score
23
Location
Vellore
"நல்ல நேம் செலக்ஷன் டா...." என்று வினித்தின் தோளில் தட்டிய ஸ்ரீதர்


"என்ன தான் இருந்தாலும் அவ சின்ன பொண்ணு தானே...அவங்க அம்மா அவளுக்கு நல்ல வழிகாட்டாம இப்படி பண்ணுறாங்களே!!!" என்று வருத்தத்துடன் கூறவும் அவனை வியப்பாக பார்த்தான் வினித்.


"என்னடா நடக்குது இங்க??? ஷோபாவுக்கு இவ்வளவு சப்போர்ட் பண்ணுற?? என்ன விஷயம்???" என்று வினித் கேட்கவும்


வெட்கப் புன்னகை ஒன்று ஸ்ரீதர் முகத்தில் உருவாக வினித்திற்கு விடயம் புரிந்து கொண்டது.


"ஆனாலும் உனக்கு ரொம்ப தியாக மனசுடா ஸ்ரீ.....வேல் முருகன் அங்கிள்க்கு பார்ட்னரா போக போற...கங்க்ராட்ஸ்..." என்று கூறி ஸ்ரீதரின் கை பற்றி வினித் குலுக்கவும்


அவனை பார்த்து புன்னகத்து கொண்ட ஸ்ரீதர்
"மது- அருள் லைப்ல இனி எந்த பிரச்சினையும் வராமல் பார்த்துக்கணும் வினித்....அவங்களுக்கே தெரியாம நிறைய சதி வேலைகள் நடக்கலாம்...அவங்க இரண்டு பேரும் இனியாவது சந்தோஷமாக இருக்கணும்" என்று கூறவும்



"ரொம்ப சரியா சொன்ன ஸ்ரீ...." என்று கூறினான் வினித்.


உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்க இன்முகத்துடன் அருளும், மதுவும் நின்று கொண்டிருந்தனர்.


சிறிது நேரம் கழித்து மண்டபத்தில் கீழே நின்று கொண்டிருந்த நபர்களுக்கு இடையில் சலசலப்பு கேட்க அனைவரது கவனமும் அங்கே சென்றது.


யாரோ முக்கியமான விருந்தினர்கள் வருகின்றார்களோ என்று வினித்தும், ஸ்ரீதரும் அங்கு செல்ல கூட்டத்தை விலக்கி கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தவனைப் பார்த்து அதிர்ந்து போய் நின்றான் ஸ்ரீதர்.


யார் வருகின்றார்கள் என்று ஆவலாக பார்த்து கொண்டிருந்த மது ஸ்ரீதரை பார்த்து சிரித்து விட்டு மேடையேறி வந்து கொண்டிருந்த கார்த்திக்கை பார்த்து சிலையாக நின்றாள்.


கார்த்திக்கை இதற்கு முதல் பார்த்திராத அருளோ சினேகமாக அவனை பார்த்து புன்னகக்க பதிலுக்கு கார்த்திக்கும் புன்னகத்து கொண்டான்.


கார்த்திக் தன் கையில் இருந்த கிஃப்டை மதுவிடம் நீட்ட அவளோ அதிர்ச்சியில் கண்கள் கலங்க விக்கித்துப் போய் நின்றாள்.


"என்ன மது ஷாக்காகி நிற்குற??? இந்தா கிஃப்டை வாங்கிக்கோ.." என்று அவள் கையின் மேல் கிஃப்டை வைத்தான் கார்த்திக்.


தன் முன்னால் நடப்பது எல்லாம் கனவா??நனவா?? எனப் புரியாமல் தவிப்போடு மது நின்று கொண்டிருந்தாள்.


மதுவை பார்த்து புன்னகத்து கொண்ட கார்த்திக் அருளின் புறம் திரும்பி
"பை த வே ஹெப்பி மேரிட் லைப்..." என்று அவனின் கை பற்றி குலுக்கி விட்டு



மேடையில் இருந்து இறங்கி செல்ல போக
"ஒரு நிமிஷம்..." என்று அருள் அவனை அழைத்தான்.



"நீங்க யாருனு எனக்கு ஞாபகம் இல்லையே!! தப்பா எடுத்துக்கலன உங்க பேரை நாங்க தெரிஞ்சுக்கலமா???" என்று அருள் கேட்கவும்


மதுவை பார்த்து கொண்டே
"ஐ யம் கார்த்திக்...." என்று கூறினான்.



முதலில் எங்கேயோ கேட்ட பெயராக இருக்கிறதே என்று யோசித்த அருளிற்கு சிறிது நேரத்தின் பின்பே நினைவு வர அதிர்ச்சியாக அவனை பார்த்தான்.


இருவரது முகத்தையும் பார்த்து சிரித்துக் கொண்ட கார்த்திக் மேடையில் இருந்து இறங்கி சென்று விட ஷோபாவோ மனதிற்குள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து கொண்டாள்.


"பர்ஸ்ட் பிளான் சக்ஸஸ்...இனி எப்படி நீங்க இரண்டு பேரும்
சந்தோஷமாக இருக்குறீங்கனு நானும் பார்த்துடுறேன்...." என்று கூறி கொண்டவள் கார்த்திக்கை பின் தொடர்ந்து சென்றாள்.



ஸ்ரீதரின் தோளில் தட்டி அவனை நடப்புக்கு கொண்டு வந்த வினித்
"ஸ்ரீ....யார் அது??? ஏன் அவனை பார்த்து இப்படி ஷாக் ஆகுறீங்க???" என்று கேட்கவும்



"அவன் தான் கார்த்திக்..." என்ற ஸ்ரீதரின் பதிலில் வினித்தும் அதிர்ச்சி அடைந்தான்.


"இது என்ன புது குழப்பம்????" என்று வினித் கவலையுடன் அருளையும் மதுவையும் பார்த்து கொண்டு நின்றான்.


அருணாவோ சுவற்றில் சாய்ந்து நின்று தன்னை சமன் செய்து கொண்டிருந்தார்.


கார்த்திக் மண்டபத்தில் நுழைவதை பார்த்ததுமே அவர் இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டது.


"இவன் இங்கே எங்கே??? இத்தனை நாள் காணாமல் போனவன் இப்போ எதுக்கு வந்தான்??? என் பொண்ணு வாழ்க்கை இனியாவது சந்தோஷமாக இருக்கணும்னு நான் ஆசைப்பட்டனே!!! அது நடக்காது போல இருக்கே....என் பொண்ணு வாழ்க்கை...." என்று அருணாவின் மனம் தவியாக தவித்தது.


கண்களை இருட்டிக் கொண்டு வர தன் தலையில் கை வைத்தவாறே அருணா மயங்கி விழ அந்த சத்தம் கேட்டு அவசரமாக அவரருகில் அனைவரும் ஓடி வந்தனர்.


பேச்சு மூச்சின்றி கிடந்த அருணாவை தன் மடியில் வைத்து கொண்டு ஸ்ரீதர் அவர் முகத்தில் தண்ணீரை தெளிக்க சிறிதும் அசைவின்றி இருந்தார் அருணா.


"அம்மா...அம்மா...என்னாச்சு மா....எழுந்திருமா....எழுந்திருமா..." என்று கண்கள் கலங்க அருணாவின் கன்னம் தட்டி எழுப்ப மது போராடிக் கொண்டிருந்தாள்.


எல்லோரையும் தள்ளி போகும் படி கூறி விட்டு அவர் நாடித் துடிப்பை பரிசோதித்த அருள் கண்கள் கலங்க மதுவை நிமிர்ந்து பார்த்து
"அம்மா நம்மள விட்டு போயிட்டாங்க....." என்று கூற



"அம்மா.........." வீரிட்டு அழுது கொண்டே மயங்கி சரிந்தாள் மது......
 




mila

இணை அமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
855
Reaction score
1,256
Location
sri lanka
karthik soba solli vandan ok
valthitu thane ponan
kalyanatha nirutha venum na kalyanam annaku thane varanum:confused::confused:
pavam Aruna ma:cry::cry:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top