அகிலா, கார்த்திக் வந்து சென்றது மதுவிற்கு இன்னும் கனவு போலவே இருந்தது.
விஜி, வினித், அருளின் பேச்சில் சிறிது நேரம் தன் சிந்தனைகளை மது மறந்திருந்தாலும் இரவு முழுவதும் தூங்காமல் மது அந்த சிந்தனையிலே உழன்று கொண்டிருந்தாள்.
மது புரண்டு புரண்டு படுக்கவும் அந்த அசைவில் கண் விழித்த அருள்
"என்ன மது தூங்காமல் என்ன பண்ணிட்டு இருக்க???" என்று கேட்கவும்
"ஒண்ணும் இல்லை..." என்று விட்டு மறுபுறம் திரும்பி கண் மூடி கொள்ள அருள் மதுவின் தோள் தொட்டு திருப்பினான்.
"சொல்லுடா மது....என்ன யோசனை??" என்று அருள் கேட்கவும்
விழி நிமிர்த்தி அவனை பார்த்தவள்
"உங்களுக்கு கார்த்திக்கை பார்த்து எதுவுமே தோணலயா?? அவங்க கூட கேசுவலா பேசுனீங்களே எப்படி???" என்று கேட்க வாய் விட்டு சிரித்தான் அருள்.
"இதைத் தானா மேடம் இவ்வளவு நேரமா யோசிச்சீங்க??" என்று அவள் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டியவன்
"கார்த்திக் வந்தது எனக்கும் ஷாக் தான்...பட் வீட்டுக்கு வந்தவங்ககிட்ட முகத்தை திருப்பிட்டு இருக்க முடியுமா சொல்லு??? அது மட்டுமில்லாம கார்த்தி எனக்கு எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணி இருக்கான்....ஷோ அதற்காகவாவது நல்லா பேசணும் தானே???" என்று அருள் கேட்கவும்
"ஹெல்ப்பா???" என்று குழப்பமாக கேட்டாள் மது.
"ஆமா அன்னைக்கு அவன் அம்மா பேச்சை அவன் கேட்கலனா இன்னைக்கு என் மதுவை மிஸ் பண்ணிருப்பேனே...." என்ன கூற கண்கள் கலங்க அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் மது.
"ஹேய்.....உங்க அத்தை கிளம்பி போகும் போது அவங்க காதுல ஏதோ சொன்னியே என்ன சொன்ன???" என்று அருள் கேட்கவும்
அவனைப் பார்த்து புன்னகத்த மது
"உங்க மேல எனக்கு கோபம் இப்போ இல்லை....நியாயமாக பார்த்தா உங்களுக்கு நான் தாங்க்ஸ் தான் சொல்லணும்....அருளை என் கிட்ட சேர்த்ததுக்குனு சொன்னேன்" என்று கூற
"சேம் டயலாக்கா???" என்று கூறி அருள் சிரிக்க அதே புன்னகையோடு கண்ணயர்ந்தாள் மது.
இரண்டு, மூன்று வாரங்கள் சுமுகமாக கடந்து சென்றது.
அடுத்த நாள் காலை வழக்கம் போல தன் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு பூஜையையும் முடித்த மது சிறிது நேரம் தோட்டத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.
பல வண்ண ரோஜா பூக்களுக்கு நடுவில் சிமெண்ட் மேஜை மற்றும் அதைச் சூழ நான்கு சிமெண்ட் பெஞ்ச்களும் அந்த பகுதிக்கு முழுமையாக நிழல் தரும் வகையில் முல்லை மற்றும் மல்லிகை மலர்களின் கொடி படர விடப்பட்டிருந்தது.
அந்த இடத்தை பார்த்ததுமே மதுவிற்கு ஆசை வந்து விட அங்கு சென்று அமர்ந்து கொண்டாள்.
தன் கையோடு கொண்டு வந்திருந்த இராமாயணம் புத்தகத்தை விரித்து மது படித்து கொண்டிருக்கும் போது எதிரில் நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தாள்.
சுலோச்சனா தன் பற்கள் முழுவதும் காட்டி சிரித்து கொண்டே மதுவின் எதிரில் அமர்ந்து கொள்ள மதுவிற்கோ சிறிது பதட்டம் தொற்றிக் கொண்டது.
"காலங்கார்த்தாலேயே இந்த அம்மா எதுக்கு இங்க வந்திருக்காங்க?? அதுவும் அதிசயமாக சிரிச்சுட்டு வேற வந்திருக்காங்க...எதுக்கு வம்பு நாமும் சிரிச்சு வைச்சுடுவோம்...." என்று எண்ணி கொண்டே மதுவும் பதிலுக்கு புன்னகத்து வைத்தாள்.
"இராமாயணம் படிக்குற போல...." என்று அவள் கையில் இருந்த புத்தகத்தை வாங்கி பார்த்த படியே சுலோச்சனா கேட்கவும்
ஆமென்பது போல தலை ஆட்டி விட்டு அமைதியாக இருந்தாள் மது.
"அப்புறம் உங்க அம்மா செத்து இன்னையோட எத்தனை நாள்???" என்று சுலோச்சனா கேட்க
முகம் வாட தலை குனிந்த மது
"மூணு வாரம்....." என்று கலங்கிய தன் கண்களை துடைத்து கொண்டே கூறினாள்.
"ஓஹ்......ஆனா உன்னை பார்த்தா அப்படி அம்மாவை பறி கொடுத்தவ மாதிரி தெரியலையே....புது புடவை, கழுத்து நிறைய நகை....முகத்தில் அப்படி ஒரு பொலிவு....ஏதோ இந்த வாழ்க்கைக்கு ஏங்கி கிடந்து அது கிடைச்ச பூரிப்புல இருக்குற மாதிரில இருக்கு...." என்று தன் விஷப் பேச்சை பேச மது அதிர்ச்சியாக அவரை பார்த்தாள்.
"என்ன அப்படி பார்க்குற??? உண்மையைத் தானே சொல்லுறன்....இல்லைனே கல்யாணமே வேண்டாம்னு சொன்னவ எதுக்கு அருளை திடீர்னு கட்டிக்க சம்மதிச்ச??? சொத்துக்காக தானே....அம்மாவும், மகளும் நல்லா திட்டம் போட்டு வந்து சேர்ந்தீங்கடியம்மா.....இவ அம்மா உடம்பு சரியில்லாமல் அருள்கிட்ட போய் ட்ரீட்மெண்ட் எடுப்பாங்களாம்....அதை இவ பார்த்துடுவாவாம்...அப்புறம் இவ அம்மா உடம்பு சரியில்லாமல் இருக்கும் போது கல்யாணத்துக்கு வாக்கு கேட்பாங்களாம்...இவங்களும் உடனே ஒத்துக்குவாங்களாம்.....நல்லா காதுல பூ சுத்துரீங்க.....அதை எல்லோருமே நம்பிட்டாங்க....ஆனா நான் நம்பமாட்டேன்...." என்றவர் சுற்றும் முற்றும் ஒரு தடவை நோட்டம் விட்டு விட்டு
"அந்த கார்த்திக் பயலை இன்னும் நீ விரும்பிட்டு இருக்குறதால தானே அவனை கல்யாணத்துக்கு வரவைச்ச....சொத்துக்காக அருள்.....உன் ஆசைக்கு அந்த கார்த்திக்கா????" என்று கேட்க
"ஸ்டாப் இட்..............." என்று தன் காதுகளை இறுக மூடிக் கொண்டு சத்தம் போட்டாள் மது.
மதுவின் சத்தத்தில் சுலோச்சனாவும் ஒரு கணம் மிரண்டு போனார்.
கண்கள் சிவக்க சுலோச்சனாவை உறுத்து விழித்த மது அவரருகில் சென்று நின்றாள்.
மதுவைப் பார்த்து திக்கித் திணறிய சுலோச்சனா
"ஏய்....எ....என்.....என்ன....எதுக்கு....இப்படி முறைச்சு பார்க்குற??? நீ என்ன பெரிய பத்தி....." என்றவரின் கன்னத்தில் இடியென இறங்கியது பத்மாவின் கரம்.
உச்சக்கட்ட அதிர்ச்சியோடு சுலோச்சனா மதுவை பார்க்க அவரை முறைத்து பார்த்த பத்மா
"இன்னொரு தடவை மதுவைப் பற்றியோ...அவ அம்மா, குடும்பத்தைப் பற்றியோ ஒரு வார்த்தை பேசுனாலும் கொன்னுடுவேன்....இத்தனை நாள் உங்க வயசுக்கு தான் மரியாதை தந்தாங்க எல்லோரும்....உங்களுக்கு இல்லை..." என்று கூற மதுவோ சுலோச்சனாவை வெறித்த வண்ணம் நின்றாள்.
"நீங்க என்ன தான் என்னை அவமானப்படுத்த ட்ரை பண்ணுணாலும் உங்களை என் அம்மா மாதிரி தான் இத்தனை நாள் நினைச்சு இருந்தேன்....ஆனா இன்னைக்கு...சே...." என்று மது கூறவும் சுலோச்சனா அமைதியாக நின்றார்.
"இப்போ சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோங்க.....கார்த்திக்கை நான் விரும்புனேனா இல்லையானு தெரியலை....ஆனா என் மனசுல அருள் மட்டும் தான் இருக்காரு.....என் வாழ்நாள் பூராவும் அவர் மட்டும் தான் இருப்பாரு.....நீங்க அருள் கிட்ட இருந்து என்னைப் பிரிக்க தான் இவ்வளவு தூரம் கஷ்டப்படுறீங்கனும் எனக்கு தெரியும்....ஆனா அது கனவுல கூட நடக்காது....நீங்க வாங்க பத்துமா...." என்று பத்மாவை
கூட்டிக்கொண்டு மது சென்று விட சுலோச்சனா திகைத்துப் போய் நின்றார்.
"பார்க்குறதுக்கு ஊமையாட்டம் இருந்துட்டு என்ன பேச்சு பேசுறா?? இதுல ஆள் வேறு வைச்சு என்ன அடிச்சுட்டலே......இது எல்லாத்துக்கும் சேர்த்து உன்னை என்ன பண்ணுறேன் பாரு...." என்று சுலோச்சனா மனதிற்குள் கருவிக் கொண்டு நின்றார்.
மதுவின் முகம் வாடி இருப்பதை பார்த்த பத்மா
"மது இங்கே பாருடா.....அந்தப் பொம்பளை ஏதோ கிறுக்குத்தனமா பேசுனா அதை நினைச்சு நீ இப்படி பீல் பண்ணலாமா சொல்லு??? அருணாவுக்கு அப்படி நடந்தது எதிர்பார்க்காத ஒண்ணு....அதற்காக நீ இப்படி கவலைப்பட்டுட்டே அவ ஆத்மா சாந்தி அடையுமா??? நீ சந்தோஷமாக வாழணும்னு தானே அருணா ஆசைப்பட்டா....அவ ஆசையை நீ நிறைவேற்ற வேண்டாமா???" என்று கேட்கவும் தலை குனிந்து அமைதியாக இருந்தாள் மது.
"இதோ பாருடா மது....நீ இது வரை கஷ்டம் எல்லாம் போதும்....இனி வரப்போகுற நாள் எல்லாம் சந்தோஷமாக இருக்கணும்....அது தான் அருணாவோட ஆசை....எங்க எல்லோருடைய ஆசையும்...." என்று கூறவும் மனம் சிறிது தெளிவுற பத்மாவின் தோள் மேல் சாய்ந்து கொண்டாள் மது.
இரண்டு, மூன்று மாதங்கள் சக்கரத்தை கட்டி கொண்டு ஓடி சென்றது.
அருள் தன் வேலைகளில் மூழ்கி விட மதுவும் வீட்டு வேலைகளில் வத்சலாவிற்கு உதவி விட்டு தன் ஆபீஸ் வேலைகளையும் கவனிக்க தொடங்கினாள்.
சுலோச்சனா மறுபுறம் தன் சதி வேலைகளில் மூழ்கி போய் இருக்க ஷோபா தன் வாழ்க்கையை எண்ணி முதல் முறை அச்சம் கொண்டிருந்தாள்.
தன் தாயை நல் வழிப்படுத்த ஒரு வாய்ப்பாவது கிடைக்காதா?? என்று ஷோபா கடுமையாக முயன்று கொண்டிருந்தாள்.
இதற்கிடையில் ஸ்ரீதரை சந்திக்க பலமுறை முயன்றும் பயன் கிட்டாது போகவே ஷோபா மிகவும் மனமுடைந்து போனாள்.
அன்று அருள் ஹாஸ்பிடல் கிளம்பி சென்று விட ஆபீஸ் செல்வதற்காக மது தயாராகி வந்து வத்சலாவிடம் கூறி விட்டு புறப்பட்டு சென்றாள்.
மது செல்வதைப் பார்த்து கொண்டு நின்ற சுலோச்சனா தன் போனை எடுத்து யாரிடமோ தீவிரமாக பேசிக் கொண்டு அவரது வீட்டிற்குள் சென்றார்.
எதிரில் வந்த ஷோபாவை கவனிக்காது அவளின் மேல் மோதி நின்ற சுலோச்சனா கோபமாக ஷோபாவை திட்டி விட்டு செல்ல குழப்பமாக அவரைப் பார்த்து கொண்டு நின்றாள் ஷோபா.
"என்னாச்சு இந்த அம்மாவுக்கு??? அவங்க போன் பேசிட்டு வந்து என் மேல மோதிட்டு என்னைத் திட்டிட்டு போறாங்க??? வர வர இந்த அம்மாவுக்கு என்ன பண்ணுறோம்னே தெரிய மாட்டேங்குது...." என்று முணுமுணுத்துக் கொண்டே தன் காரை எடுத்துக்கொண்டு ஷோபா வெளியேறி சென்றாள்.
காரை நேராக அருளின் ஹாஸ்பிடலுக்கு செலுத்தியவள் காரை பார்க் செய்துவிட்டு தன் போனை எடுத்து அருளுக்கு அழைப்பை மேற்கொண்டாள்.
"ஹலோ....ஷோபா.....என்ன அதிசயமாக இருக்கு??? போன் எல்லாம் பண்ணிருக்க....கல்யாணத்துக்கு அப்புறம் அம்மணியை காணவே இல்லை....ரொம்ப பிஸி ஆகிட்டீங்களோ???" என்று அருள் கேட்கவும்
சிறிது நேரம் அமைதியாக இருந்த ஷோபா
"அத்தான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.....உங்க ஹாஸ்பிடலுக்கு வெளியில் தான் இருக்கேன்....இப்போ நீங்க ப்ஃரீயா???" என்று கேட்டாள்.
"ஒரு வன் அவர் வெயிட் பண்ண முடியுமா ஷோபா??? ரவுண்ட்ஸ் போகப் போறேன்....போயிட்டு வந்துடுறேன்...." என்று அருள் கூறவும்
"சரி அத்தான்....நான் கேன்டீனில் வெயிட் பண்ணுறேன்..." என்று விட்டு போனை வைத்த ஷோபா கேன்டீனில் சென்று அமர்ந்து கொண்டாள்.
விஜி, வினித், அருளின் பேச்சில் சிறிது நேரம் தன் சிந்தனைகளை மது மறந்திருந்தாலும் இரவு முழுவதும் தூங்காமல் மது அந்த சிந்தனையிலே உழன்று கொண்டிருந்தாள்.
மது புரண்டு புரண்டு படுக்கவும் அந்த அசைவில் கண் விழித்த அருள்
"என்ன மது தூங்காமல் என்ன பண்ணிட்டு இருக்க???" என்று கேட்கவும்
"ஒண்ணும் இல்லை..." என்று விட்டு மறுபுறம் திரும்பி கண் மூடி கொள்ள அருள் மதுவின் தோள் தொட்டு திருப்பினான்.
"சொல்லுடா மது....என்ன யோசனை??" என்று அருள் கேட்கவும்
விழி நிமிர்த்தி அவனை பார்த்தவள்
"உங்களுக்கு கார்த்திக்கை பார்த்து எதுவுமே தோணலயா?? அவங்க கூட கேசுவலா பேசுனீங்களே எப்படி???" என்று கேட்க வாய் விட்டு சிரித்தான் அருள்.
"இதைத் தானா மேடம் இவ்வளவு நேரமா யோசிச்சீங்க??" என்று அவள் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டியவன்
"கார்த்திக் வந்தது எனக்கும் ஷாக் தான்...பட் வீட்டுக்கு வந்தவங்ககிட்ட முகத்தை திருப்பிட்டு இருக்க முடியுமா சொல்லு??? அது மட்டுமில்லாம கார்த்தி எனக்கு எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணி இருக்கான்....ஷோ அதற்காகவாவது நல்லா பேசணும் தானே???" என்று அருள் கேட்கவும்
"ஹெல்ப்பா???" என்று குழப்பமாக கேட்டாள் மது.
"ஆமா அன்னைக்கு அவன் அம்மா பேச்சை அவன் கேட்கலனா இன்னைக்கு என் மதுவை மிஸ் பண்ணிருப்பேனே...." என்ன கூற கண்கள் கலங்க அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் மது.
"ஹேய்.....உங்க அத்தை கிளம்பி போகும் போது அவங்க காதுல ஏதோ சொன்னியே என்ன சொன்ன???" என்று அருள் கேட்கவும்
அவனைப் பார்த்து புன்னகத்த மது
"உங்க மேல எனக்கு கோபம் இப்போ இல்லை....நியாயமாக பார்த்தா உங்களுக்கு நான் தாங்க்ஸ் தான் சொல்லணும்....அருளை என் கிட்ட சேர்த்ததுக்குனு சொன்னேன்" என்று கூற
"சேம் டயலாக்கா???" என்று கூறி அருள் சிரிக்க அதே புன்னகையோடு கண்ணயர்ந்தாள் மது.
இரண்டு, மூன்று வாரங்கள் சுமுகமாக கடந்து சென்றது.
அடுத்த நாள் காலை வழக்கம் போல தன் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு பூஜையையும் முடித்த மது சிறிது நேரம் தோட்டத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.
பல வண்ண ரோஜா பூக்களுக்கு நடுவில் சிமெண்ட் மேஜை மற்றும் அதைச் சூழ நான்கு சிமெண்ட் பெஞ்ச்களும் அந்த பகுதிக்கு முழுமையாக நிழல் தரும் வகையில் முல்லை மற்றும் மல்லிகை மலர்களின் கொடி படர விடப்பட்டிருந்தது.
அந்த இடத்தை பார்த்ததுமே மதுவிற்கு ஆசை வந்து விட அங்கு சென்று அமர்ந்து கொண்டாள்.
தன் கையோடு கொண்டு வந்திருந்த இராமாயணம் புத்தகத்தை விரித்து மது படித்து கொண்டிருக்கும் போது எதிரில் நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தாள்.
சுலோச்சனா தன் பற்கள் முழுவதும் காட்டி சிரித்து கொண்டே மதுவின் எதிரில் அமர்ந்து கொள்ள மதுவிற்கோ சிறிது பதட்டம் தொற்றிக் கொண்டது.
"காலங்கார்த்தாலேயே இந்த அம்மா எதுக்கு இங்க வந்திருக்காங்க?? அதுவும் அதிசயமாக சிரிச்சுட்டு வேற வந்திருக்காங்க...எதுக்கு வம்பு நாமும் சிரிச்சு வைச்சுடுவோம்...." என்று எண்ணி கொண்டே மதுவும் பதிலுக்கு புன்னகத்து வைத்தாள்.
"இராமாயணம் படிக்குற போல...." என்று அவள் கையில் இருந்த புத்தகத்தை வாங்கி பார்த்த படியே சுலோச்சனா கேட்கவும்
ஆமென்பது போல தலை ஆட்டி விட்டு அமைதியாக இருந்தாள் மது.
"அப்புறம் உங்க அம்மா செத்து இன்னையோட எத்தனை நாள்???" என்று சுலோச்சனா கேட்க
முகம் வாட தலை குனிந்த மது
"மூணு வாரம்....." என்று கலங்கிய தன் கண்களை துடைத்து கொண்டே கூறினாள்.
"ஓஹ்......ஆனா உன்னை பார்த்தா அப்படி அம்மாவை பறி கொடுத்தவ மாதிரி தெரியலையே....புது புடவை, கழுத்து நிறைய நகை....முகத்தில் அப்படி ஒரு பொலிவு....ஏதோ இந்த வாழ்க்கைக்கு ஏங்கி கிடந்து அது கிடைச்ச பூரிப்புல இருக்குற மாதிரில இருக்கு...." என்று தன் விஷப் பேச்சை பேச மது அதிர்ச்சியாக அவரை பார்த்தாள்.
"என்ன அப்படி பார்க்குற??? உண்மையைத் தானே சொல்லுறன்....இல்லைனே கல்யாணமே வேண்டாம்னு சொன்னவ எதுக்கு அருளை திடீர்னு கட்டிக்க சம்மதிச்ச??? சொத்துக்காக தானே....அம்மாவும், மகளும் நல்லா திட்டம் போட்டு வந்து சேர்ந்தீங்கடியம்மா.....இவ அம்மா உடம்பு சரியில்லாமல் அருள்கிட்ட போய் ட்ரீட்மெண்ட் எடுப்பாங்களாம்....அதை இவ பார்த்துடுவாவாம்...அப்புறம் இவ அம்மா உடம்பு சரியில்லாமல் இருக்கும் போது கல்யாணத்துக்கு வாக்கு கேட்பாங்களாம்...இவங்களும் உடனே ஒத்துக்குவாங்களாம்.....நல்லா காதுல பூ சுத்துரீங்க.....அதை எல்லோருமே நம்பிட்டாங்க....ஆனா நான் நம்பமாட்டேன்...." என்றவர் சுற்றும் முற்றும் ஒரு தடவை நோட்டம் விட்டு விட்டு
"அந்த கார்த்திக் பயலை இன்னும் நீ விரும்பிட்டு இருக்குறதால தானே அவனை கல்யாணத்துக்கு வரவைச்ச....சொத்துக்காக அருள்.....உன் ஆசைக்கு அந்த கார்த்திக்கா????" என்று கேட்க
"ஸ்டாப் இட்..............." என்று தன் காதுகளை இறுக மூடிக் கொண்டு சத்தம் போட்டாள் மது.
மதுவின் சத்தத்தில் சுலோச்சனாவும் ஒரு கணம் மிரண்டு போனார்.
கண்கள் சிவக்க சுலோச்சனாவை உறுத்து விழித்த மது அவரருகில் சென்று நின்றாள்.
மதுவைப் பார்த்து திக்கித் திணறிய சுலோச்சனா
"ஏய்....எ....என்.....என்ன....எதுக்கு....இப்படி முறைச்சு பார்க்குற??? நீ என்ன பெரிய பத்தி....." என்றவரின் கன்னத்தில் இடியென இறங்கியது பத்மாவின் கரம்.
உச்சக்கட்ட அதிர்ச்சியோடு சுலோச்சனா மதுவை பார்க்க அவரை முறைத்து பார்த்த பத்மா
"இன்னொரு தடவை மதுவைப் பற்றியோ...அவ அம்மா, குடும்பத்தைப் பற்றியோ ஒரு வார்த்தை பேசுனாலும் கொன்னுடுவேன்....இத்தனை நாள் உங்க வயசுக்கு தான் மரியாதை தந்தாங்க எல்லோரும்....உங்களுக்கு இல்லை..." என்று கூற மதுவோ சுலோச்சனாவை வெறித்த வண்ணம் நின்றாள்.
"நீங்க என்ன தான் என்னை அவமானப்படுத்த ட்ரை பண்ணுணாலும் உங்களை என் அம்மா மாதிரி தான் இத்தனை நாள் நினைச்சு இருந்தேன்....ஆனா இன்னைக்கு...சே...." என்று மது கூறவும் சுலோச்சனா அமைதியாக நின்றார்.
"இப்போ சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோங்க.....கார்த்திக்கை நான் விரும்புனேனா இல்லையானு தெரியலை....ஆனா என் மனசுல அருள் மட்டும் தான் இருக்காரு.....என் வாழ்நாள் பூராவும் அவர் மட்டும் தான் இருப்பாரு.....நீங்க அருள் கிட்ட இருந்து என்னைப் பிரிக்க தான் இவ்வளவு தூரம் கஷ்டப்படுறீங்கனும் எனக்கு தெரியும்....ஆனா அது கனவுல கூட நடக்காது....நீங்க வாங்க பத்துமா...." என்று பத்மாவை
கூட்டிக்கொண்டு மது சென்று விட சுலோச்சனா திகைத்துப் போய் நின்றார்.
"பார்க்குறதுக்கு ஊமையாட்டம் இருந்துட்டு என்ன பேச்சு பேசுறா?? இதுல ஆள் வேறு வைச்சு என்ன அடிச்சுட்டலே......இது எல்லாத்துக்கும் சேர்த்து உன்னை என்ன பண்ணுறேன் பாரு...." என்று சுலோச்சனா மனதிற்குள் கருவிக் கொண்டு நின்றார்.
மதுவின் முகம் வாடி இருப்பதை பார்த்த பத்மா
"மது இங்கே பாருடா.....அந்தப் பொம்பளை ஏதோ கிறுக்குத்தனமா பேசுனா அதை நினைச்சு நீ இப்படி பீல் பண்ணலாமா சொல்லு??? அருணாவுக்கு அப்படி நடந்தது எதிர்பார்க்காத ஒண்ணு....அதற்காக நீ இப்படி கவலைப்பட்டுட்டே அவ ஆத்மா சாந்தி அடையுமா??? நீ சந்தோஷமாக வாழணும்னு தானே அருணா ஆசைப்பட்டா....அவ ஆசையை நீ நிறைவேற்ற வேண்டாமா???" என்று கேட்கவும் தலை குனிந்து அமைதியாக இருந்தாள் மது.
"இதோ பாருடா மது....நீ இது வரை கஷ்டம் எல்லாம் போதும்....இனி வரப்போகுற நாள் எல்லாம் சந்தோஷமாக இருக்கணும்....அது தான் அருணாவோட ஆசை....எங்க எல்லோருடைய ஆசையும்...." என்று கூறவும் மனம் சிறிது தெளிவுற பத்மாவின் தோள் மேல் சாய்ந்து கொண்டாள் மது.
இரண்டு, மூன்று மாதங்கள் சக்கரத்தை கட்டி கொண்டு ஓடி சென்றது.
அருள் தன் வேலைகளில் மூழ்கி விட மதுவும் வீட்டு வேலைகளில் வத்சலாவிற்கு உதவி விட்டு தன் ஆபீஸ் வேலைகளையும் கவனிக்க தொடங்கினாள்.
சுலோச்சனா மறுபுறம் தன் சதி வேலைகளில் மூழ்கி போய் இருக்க ஷோபா தன் வாழ்க்கையை எண்ணி முதல் முறை அச்சம் கொண்டிருந்தாள்.
தன் தாயை நல் வழிப்படுத்த ஒரு வாய்ப்பாவது கிடைக்காதா?? என்று ஷோபா கடுமையாக முயன்று கொண்டிருந்தாள்.
இதற்கிடையில் ஸ்ரீதரை சந்திக்க பலமுறை முயன்றும் பயன் கிட்டாது போகவே ஷோபா மிகவும் மனமுடைந்து போனாள்.
அன்று அருள் ஹாஸ்பிடல் கிளம்பி சென்று விட ஆபீஸ் செல்வதற்காக மது தயாராகி வந்து வத்சலாவிடம் கூறி விட்டு புறப்பட்டு சென்றாள்.
மது செல்வதைப் பார்த்து கொண்டு நின்ற சுலோச்சனா தன் போனை எடுத்து யாரிடமோ தீவிரமாக பேசிக் கொண்டு அவரது வீட்டிற்குள் சென்றார்.
எதிரில் வந்த ஷோபாவை கவனிக்காது அவளின் மேல் மோதி நின்ற சுலோச்சனா கோபமாக ஷோபாவை திட்டி விட்டு செல்ல குழப்பமாக அவரைப் பார்த்து கொண்டு நின்றாள் ஷோபா.
"என்னாச்சு இந்த அம்மாவுக்கு??? அவங்க போன் பேசிட்டு வந்து என் மேல மோதிட்டு என்னைத் திட்டிட்டு போறாங்க??? வர வர இந்த அம்மாவுக்கு என்ன பண்ணுறோம்னே தெரிய மாட்டேங்குது...." என்று முணுமுணுத்துக் கொண்டே தன் காரை எடுத்துக்கொண்டு ஷோபா வெளியேறி சென்றாள்.
காரை நேராக அருளின் ஹாஸ்பிடலுக்கு செலுத்தியவள் காரை பார்க் செய்துவிட்டு தன் போனை எடுத்து அருளுக்கு அழைப்பை மேற்கொண்டாள்.
"ஹலோ....ஷோபா.....என்ன அதிசயமாக இருக்கு??? போன் எல்லாம் பண்ணிருக்க....கல்யாணத்துக்கு அப்புறம் அம்மணியை காணவே இல்லை....ரொம்ப பிஸி ஆகிட்டீங்களோ???" என்று அருள் கேட்கவும்
சிறிது நேரம் அமைதியாக இருந்த ஷோபா
"அத்தான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.....உங்க ஹாஸ்பிடலுக்கு வெளியில் தான் இருக்கேன்....இப்போ நீங்க ப்ஃரீயா???" என்று கேட்டாள்.
"ஒரு வன் அவர் வெயிட் பண்ண முடியுமா ஷோபா??? ரவுண்ட்ஸ் போகப் போறேன்....போயிட்டு வந்துடுறேன்...." என்று அருள் கூறவும்
"சரி அத்தான்....நான் கேன்டீனில் வெயிட் பண்ணுறேன்..." என்று விட்டு போனை வைத்த ஷோபா கேன்டீனில் சென்று அமர்ந்து கொண்டாள்.