சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் செய்த அனைவருக்கும் நன்றி
கதையின் போக்கு நன்றாக இருந்தாலும் இல்லைனாலும் தயங்காமல் உங்கள் கருத்துக்களை அள்ளி வீசுங்கள்
ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம் போன்று தன் அன்றாட வேலைகளை எல்லாம் முடித்து விட்டு வெளியில் செல்வதற்காக தயாராகி வந்த மதுவை பார்த்து அருணா
"என்ன மது??ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் வீட்டுல நீ ப்ஃரீயா இருக்குறதே. இன்னைக்கும் உனக்கும் வேலை வந்துடுச்சா?" என்று கேட்கவும்
"இன்னைக்கு ஒரு கஸ்டமருக்கு டிசைன்ஸ் காட்டுறதுக்கு வர சொல்லி இருந்தாங்கமா. ஒரு விஷயம் தெரியுமா? இந்த ஆர்டர் தந்திருக்குறவங்க ரொம்ப பெரிய இடம். இந்த ஆர்டரை நான் கரெக்டா பண்ணி கொடுத்துட்டேன்னா நம்ம பிரச்சினை பாதி குறைஞ்சிடும்மா" என்று கூறினாள் மது.
"பணக்காரங்கனு வேற சொல்ற எதுக்கும் பார்த்து நடந்துக்க மது" என்று அருணா கூறவும்
"அதெல்லாம் ஒரு பிரச்சினையும் வராம நான் சமாளிச்சுக்குறேன் அருணா. யூ டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி.." என்று மது கூறி சிரிக்க
"அடி கழுதை! பேர் சொல்லியா கூப்பிடுற" என்று அவள் முதுகில் செல்லமாக தட்டினார்.
"நான் வர்ற வரைக்கும் காத்துட்டு இருக்காம நேரத்துக்கு சாப்பிடுமா" என்று விட்டு மது வெளியேறி சென்றாள்.
பேரூந்து நிலையத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த மது தன்னுடைய போனை எடுத்து ஸ்ரீதருக்கு அழைத்தாள்.
மூன்று, நான்கு முறை முழுமையாக ரிங் போய்க் கொண்டே இருந்தது ஆனால் ஸ்ரீதர் போனை எடுக்கவில்லை.
"எங்க போனான் இந்த ஸ்ரீ? நேத்து நைட் அத்தனை வாட்டி போன் பண்ணி, மெசேஜ் பண்ணி சொல்லியும் இந்த தடியனைக் காணோம்" என்று ஸ்ரீதரை திட்டிக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தாள் மது.
அப்போது ஸ்ரீதரிடம் இருந்து மதுவிற்கு போன் வரவும் போனை அட்டன்ட் செய்து காதில் வைத்த மது சரமாரியாக அவனை திட்டத் தொடங்கினாள்.
"எருமை ஸ்ரீ எங்கடா போய் தொலைஞ்ச? தடியா! நேத்து எத்தனை வாட்டி உனக்கு சொன்னேன்? இன்னைக்கு லோகநாதன் ஸார் வீட்டுக்கு போகணும்னு. எருமை உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையா? ஆள் தான் பறங்கி மலையாட்டம் வளர்ந்துருக்க. அறிவு வளர்ந்திருக்கா பாரு" என மது பேசிக் கொண்டிருக்க மறுமுனையில் ஸ்ரீதர் சத்தம் போட்டு சிரிக்கத் தொடங்கினான்.
"உன்னை இவ்வளவு திட்டுறேன் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம சிரிக்குற?" என மது கேட்கவும்
"நான் உன்னோட பிரண்ட் மது. அப்புறம் எப்படி என்கிட்ட நீ அறிவை எதிர்பார்க்கலாம்?" என்று ஸ்ரீதர் எதிர்க் கேள்வி கேட்டான்.
"அய்யே!! ஓவரா மொக்கை போடாதே! எங்கே இருக்க ஸ்ரீ? நீ வர்றியா? இல்லையா?" என மது கேட்கவும்
"நான் பாண்டிச்சேரில இருக்கேன் மது" என ஸ்ரீதர் கூற
"பாண்டிச்சேரியா??" என அதிர்ச்சியாக கேட்டாள் மது.
"அங்கே எதுக்குடா இன்னைக்கு போன?" என மது கேட்கவும்
"நான் இரண்டு நாளா பாண்டிச்சேரில தான் இருக்கேன் மது" எனக் கூறினான் ஸ்ரீதர்.
"இன்னைக்கு காலையில எப்படியாவது வந்துடலாம்னு தான் பார்த்தேன். கொஞ்சம் தூங்கிட்டேன். இப்போவே ரெடி ஆகி வரேன்" என்று ஸ்ரீதர் கூறவும்
"இப்போ ரெடி ஆகி வந்து எத்தனை மணிக்கு இங்க வந்து சேரப் போற? நீ பாண்டிச்சேரிக்கு எதுக்கு போயிரப்பேனு தெரியும். தண்ணி வண்டி!! நீ நாளைக்கு ஆபீஸ்க்கு வா உனக்கு இருக்கு" என்று விட்டு போனை கட் செய்தாள் மது.
செல்லும் வழி முழுவதும் ஸ்ரீதரைத் திட்டிக் கொண்டே லோகநாதனின் வீட்டை வந்து சேர்ந்தாள் மது.
வாயிலில் நின்ற செக்யூரிட்டிமதுவைப் பார்த்து
"நீங்க யார்?" என்று கேட்கவும்
"நான் அருணா வெடிங் பிளானர்ஸ்ல இருந்து வரேன். ஸாரோட டாட்டர் மேரேஜ் விஷயமாக பேச ஸார் இன்னைக்கு வீட்டுக்கு வர சொல்லி இருந்தாரு" என்று மது கூறினாள்.
"ஆமா ஆமா ஸார் சொல்லி இருந்தாரு. உள்ளே வாங்கமா" என்று கேட்டைத் திறந்து விட உள்ளே நுழைந்த மது அந்த வீட்டைப் பார்த்து வாயடைத்துப் போய் நின்றாள்.
இது நாள் வரை கதைகளிலும், திரைப்படங்களிலுமே இவ்வாறான வீட்டை மது பார்த்திருக்கிறாள்.
அரண்மனை போன்ற தோற்றத்தில் அந்த வீடு அமைக்கப்பட்டிருந்தது.
அந்த வீட்டைச் சூழ பல வர்ணங்களில் பூ மரங்கள் வைக்கப்பட்டு அது வீட்டு தோட்டமா? இல்லை பூங்காவா? என்று யோசிக்குமளவில் இருந்தது.
திரும்பும் பக்கமெங்கும் வேலையாட்கள் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தனர்.
தயங்கி தயங்கி ஒவ்வொரு இடமாக பார்த்தபடி மது வருவதைப் பார்த்த லோகநாதன் வெளியேறி வந்து
"வாம்மா எப்படி இருக்க? ஸ்ரீதர் தம்பி வரலயா?" என்று கேட்கவும்
"நான் நல்லா இருக்கேன் அங்கிள். ஸ்ரீதருக்கு ஒரு சின்ன வேலை. அதனால அவனால வர முடியாம போயிடுச்சு" என்று கூறினாள்.
"உள்ளே வாம்மா.." என்று லோகநாதன் வீட்டினுள் செல்ல அவரைப் பின் தொடர்ந்து சென்றாள் மது.
வீட்டின் வெளித் தோற்றத்தைப் பார்த்து முற்றாக அசந்து போயிருந்த மது வீட்டின் உள் தோற்றத்தைப் பார்த்து கண் இமைக்கவும் மறந்து போனாள்.
தன் வீட்டை ஒரு முறை எண்ணி பார்த்து கொண்டாள் மது.
ஒரு குடும்பம் தங்கி இருக்கக் கூடிய அளவில் அவர்கள் வீடு அமைக்கப்பட்டிருக்க வீட்டை சுற்றி சிறியளவிலான தோட்டம்.
அவ்வளவே மதுவின் வீடு அதை எண்ணிக் கொண்டவள் வீட்டை சுற்றி
பார்த்தவாறே
"இவ்வளவு பெரிய பணக்காரங்க நம்ம கிட்ட ஆர்டர் தந்திருக்காங்க. கண்டிப்பா இந்த ஆர்டரை சரியாக அவங்க எதிர்பார்க்காத அளவு சிறப்பாக முடிச்சு கொடுத்துறனும்" என்று எண்ணி கொண்டே மது
நடந்து சென்றாள்.
"இப்படி உட்காருமா மது.."
என்று கூறிய லோகநாதன்
"லக்ஷ்மி..." என்று அழைக்க ஒரு நடுத்தர வயது பெண்மணி பவ்வியமாக வந்து அவர்களின் முன் நின்றார்.
"அம்மாவையும் விஜியையும் கூட்டிட்டு வா.." என்று லோகநாதன் கூற
"சரிங்க ஐயா..." என்று விட்டு சென்றவர் சிறிது நேரத்தில் வத்சலாவையும், விஜியையும் அழைத்து வந்தார்.
அவர்கள் இருவரையும் பார்த்து மது எழுந்து நின்று கொள்ள
"பரவாயில்லைமா உட்காரு" என்று கூறியபடி வந்து அமர்ந்தார் வத்சலா.
மதுவின் அருகில் வந்து அமர்ந்து கொண்ட விஜி
"அம்மா இவங்க ரொம்ப அமைதியா, அழகா இருக்காங்கலே! எனக்கு இவங்கள ரொம்ப புடிச்சுருக்கு" என்று கூறி மதுவின் தோள் மேல் கை போடவும் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டாள் மது.
"உங்க பேரு என்ன?" என்று விஜி கேட்கவும்
"மதுமிதா" என்று மது கூற
"உங்க பேர் கூட உங்கள
மாதிரியே அழகாக இருக்கு" என்று கூறினாள் விஜி.
"ஒரு ஆள் சிக்கிட்டா போதும். வைச்சு செஞ்சிடுவியே" என்றவாறு வினித் வரவும் அவனை பார்த்த மது
"இவர இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்துருக்கேனே??" என்று யோசித்து பார்த்தாள்.
ஆனால் எதுவும் ஞாபகம் வராமல் போகவே அந்த எண்ணங்களை எல்லாம் ஒதுக்கி வைத்தாள்.
"வாப்பா வினித் இன்னும் அவன் திருச்சியில் இருந்து வரலயா?" என்று வத்சலா கேட்கவும்
"சென்னைகிட்ட ரீச்சாகிட்டேனு இப்போ தான் போன் பண்ணுணான். அது தான் நான் கிளம்பி வந்தேன் அத்தை" என்று கூறினான் வினித்.
விஜியின் அருகில் அமர்ந்திருந்த மதுவைப் பார்த்து கொண்டே வந்தமர்ந்த வினித்
"இது....." என்று மனதில் கேள்வி எழுப்ப
"அப்போ அங்கிள் இப்போ டிசைன்ஸ் பார்க்கலாமா?" என்று மதுவின் கேள்வியில் தன் மனதுக்குள் எழுந்த கேள்வியை மறந்து போனான்.
"ஓகே மது ஸ்யூர்..." என்று விஜி குதூகலமாக கூறி கொண்டு மதுவின் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டாள்.
ஆல்பத்தில் இருந்த ஒவ்வொரு டிசைன்களாக எல்லோரும் பார்த்து கொண்டிருக்க மதுவின் மறு புறம் வந்து கொண்டார் வத்சலா.
"மதுமிதா தானே உன் பெயரு? உன் அம்மா அப்பா எல்லாம் என்ன பண்ணுறாங்கமா?" என்று வத்சலா கேட்கவும்
சிறிது முகம் வாட்டமடைந்த மது
"அப்பா இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாரு ஆன்டி. அம்மாவும், நானும் தான் வீட்ல இருக்கோம்" என்று கூற
அவள் கைகளை ஆதரவாக பற்றிய வத்சலா
"ஸாரி மா...." என்று கூறினார்.
"பரவாயில்லை ஆன்டி" என்று மது கூறவும்
"உங்க எல்லாருக்கும் சுடச்சுட காபி போட்டு கொண்டு வரேன்" என்று எழுந்து சென்ற வத்சலாவை வியப்பாக பார்த்தாள் மது.
மதுவின் முக மாற்றத்தை கவனித்த லோகநாதன்
"என்ன தான் வீட்ல வேலை செய்ய வேலைக்காரங்க நிறையப் பேர் இருந்தாலும் சமையல் வேலையை மட்டும் நான் தான் பண்ணுவேனு உறுதியாக வத்சலா சொல்லிட்டா" என்று கூறவும்
"உங்களுக்கு எப்படி அங்கிள் நான் என்ன நினைச்சேன்னு தெரியும்?" என்று மது கேட்க
"எங்க வீட்டுக்கு புதுசா வர்ற எல்லாரும் இந்த கேள்வியை என்கிட்ட கேட்காம போனதே இல்ல"
என்று கூறிய லோகநாதனைப் பார்த்து புன்னகத்தாள் மது.
அப்போது லோகநாதனிற்கு போன் வரவும்
"ஒரு நிமிஷம் இப்ப வந்துடுறேன்" என்று விட்டு லோகநாதன் செல்ல வீட்டை சுற்றி பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள் மது.
அப்போது
"விஜி கண்ணா...." என்றவாறு அவர்கள் அருகில் வந்து நின்ற பெண்ணை பார்த்து
"சுலோச்சனா அத்தை...." என்றவாறு எழுந்து நின்றாள் விஜி.
"யாருடா அது நேரங்கெட்ட நேரத்தில்???" என்றவாறு நிமிர்ந்து பார்த்த வினித் சுலோச்சனாவைப் பார்த்ததும்
"அய்யய்யோ!!! பெரிய பூகம்பமா???" என்றவாறு மீண்டும் அமைதியாக தலை குனிந்து அமர்ந்து கொண்டான்.
சரசரக்கும் பட்டு சேலையும், கழுத்தை முழுமையாக மறைக்கும் அளவு தங்க ஆபரணங்களும், உண்மையான வயதை மறைத்து காட்டும் அளவுக்கு ஒப்பனையுமாக வந்து நின்ற பெண்ணை அதிசயமாக பார்த்தாள் மது.
"என்னடா விஜி கண்ணா இதெல்லாம்??" என்றவாறு விஜியின் கையில் இருந்த ஆல்பத்தை வாங்கி பார்த்தார் சுலோச்சனா.
"இதெல்லாம் என்கேஜ்மண்ட், மேரேஜ்க்கு டெகேரேஷன் எப்படி வேணும்னு செலக்ட் பண்ற டிசைன் ஆல்பம் அத்தை.." என்று விஜி கூறவும்
"ஓஹ்...அப்படியா???" என்று கேட்டுக் கொண்டவர் விஜியின் அருகில் அமர்ந்திருந்த மதுவை கேள்வியாகப் பார்த்தார்.
"இவங்க மது. அருணா வெடிங் பிளானர்ஸ்ல இருந்து வந்துருக்காங்க. இவங்கதான் இந்த டெகேரேஷன் வேலை எல்லாம் பார்க்கப் போறாங்க" என்று விஜி கூறவும்
"அருணா வெடிங் பிளானர்ஸா...." என்று ஏதோ கேட்கக் கூடாத வார்த்தையை கேட்டது போல சுலோச்சனா முகத்தை சுளிக்க மனமுடைந்து போனாள் மது.
கதையின் போக்கு நன்றாக இருந்தாலும் இல்லைனாலும் தயங்காமல் உங்கள் கருத்துக்களை அள்ளி வீசுங்கள்
ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம் போன்று தன் அன்றாட வேலைகளை எல்லாம் முடித்து விட்டு வெளியில் செல்வதற்காக தயாராகி வந்த மதுவை பார்த்து அருணா
"என்ன மது??ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் வீட்டுல நீ ப்ஃரீயா இருக்குறதே. இன்னைக்கும் உனக்கும் வேலை வந்துடுச்சா?" என்று கேட்கவும்
"இன்னைக்கு ஒரு கஸ்டமருக்கு டிசைன்ஸ் காட்டுறதுக்கு வர சொல்லி இருந்தாங்கமா. ஒரு விஷயம் தெரியுமா? இந்த ஆர்டர் தந்திருக்குறவங்க ரொம்ப பெரிய இடம். இந்த ஆர்டரை நான் கரெக்டா பண்ணி கொடுத்துட்டேன்னா நம்ம பிரச்சினை பாதி குறைஞ்சிடும்மா" என்று கூறினாள் மது.
"பணக்காரங்கனு வேற சொல்ற எதுக்கும் பார்த்து நடந்துக்க மது" என்று அருணா கூறவும்
"அதெல்லாம் ஒரு பிரச்சினையும் வராம நான் சமாளிச்சுக்குறேன் அருணா. யூ டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி.." என்று மது கூறி சிரிக்க
"அடி கழுதை! பேர் சொல்லியா கூப்பிடுற" என்று அவள் முதுகில் செல்லமாக தட்டினார்.
"நான் வர்ற வரைக்கும் காத்துட்டு இருக்காம நேரத்துக்கு சாப்பிடுமா" என்று விட்டு மது வெளியேறி சென்றாள்.
பேரூந்து நிலையத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த மது தன்னுடைய போனை எடுத்து ஸ்ரீதருக்கு அழைத்தாள்.
மூன்று, நான்கு முறை முழுமையாக ரிங் போய்க் கொண்டே இருந்தது ஆனால் ஸ்ரீதர் போனை எடுக்கவில்லை.
"எங்க போனான் இந்த ஸ்ரீ? நேத்து நைட் அத்தனை வாட்டி போன் பண்ணி, மெசேஜ் பண்ணி சொல்லியும் இந்த தடியனைக் காணோம்" என்று ஸ்ரீதரை திட்டிக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தாள் மது.
அப்போது ஸ்ரீதரிடம் இருந்து மதுவிற்கு போன் வரவும் போனை அட்டன்ட் செய்து காதில் வைத்த மது சரமாரியாக அவனை திட்டத் தொடங்கினாள்.
"எருமை ஸ்ரீ எங்கடா போய் தொலைஞ்ச? தடியா! நேத்து எத்தனை வாட்டி உனக்கு சொன்னேன்? இன்னைக்கு லோகநாதன் ஸார் வீட்டுக்கு போகணும்னு. எருமை உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையா? ஆள் தான் பறங்கி மலையாட்டம் வளர்ந்துருக்க. அறிவு வளர்ந்திருக்கா பாரு" என மது பேசிக் கொண்டிருக்க மறுமுனையில் ஸ்ரீதர் சத்தம் போட்டு சிரிக்கத் தொடங்கினான்.
"உன்னை இவ்வளவு திட்டுறேன் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம சிரிக்குற?" என மது கேட்கவும்
"நான் உன்னோட பிரண்ட் மது. அப்புறம் எப்படி என்கிட்ட நீ அறிவை எதிர்பார்க்கலாம்?" என்று ஸ்ரீதர் எதிர்க் கேள்வி கேட்டான்.
"அய்யே!! ஓவரா மொக்கை போடாதே! எங்கே இருக்க ஸ்ரீ? நீ வர்றியா? இல்லையா?" என மது கேட்கவும்
"நான் பாண்டிச்சேரில இருக்கேன் மது" என ஸ்ரீதர் கூற
"பாண்டிச்சேரியா??" என அதிர்ச்சியாக கேட்டாள் மது.
"அங்கே எதுக்குடா இன்னைக்கு போன?" என மது கேட்கவும்
"நான் இரண்டு நாளா பாண்டிச்சேரில தான் இருக்கேன் மது" எனக் கூறினான் ஸ்ரீதர்.
"இன்னைக்கு காலையில எப்படியாவது வந்துடலாம்னு தான் பார்த்தேன். கொஞ்சம் தூங்கிட்டேன். இப்போவே ரெடி ஆகி வரேன்" என்று ஸ்ரீதர் கூறவும்
"இப்போ ரெடி ஆகி வந்து எத்தனை மணிக்கு இங்க வந்து சேரப் போற? நீ பாண்டிச்சேரிக்கு எதுக்கு போயிரப்பேனு தெரியும். தண்ணி வண்டி!! நீ நாளைக்கு ஆபீஸ்க்கு வா உனக்கு இருக்கு" என்று விட்டு போனை கட் செய்தாள் மது.
செல்லும் வழி முழுவதும் ஸ்ரீதரைத் திட்டிக் கொண்டே லோகநாதனின் வீட்டை வந்து சேர்ந்தாள் மது.
வாயிலில் நின்ற செக்யூரிட்டிமதுவைப் பார்த்து
"நீங்க யார்?" என்று கேட்கவும்
"நான் அருணா வெடிங் பிளானர்ஸ்ல இருந்து வரேன். ஸாரோட டாட்டர் மேரேஜ் விஷயமாக பேச ஸார் இன்னைக்கு வீட்டுக்கு வர சொல்லி இருந்தாரு" என்று மது கூறினாள்.
"ஆமா ஆமா ஸார் சொல்லி இருந்தாரு. உள்ளே வாங்கமா" என்று கேட்டைத் திறந்து விட உள்ளே நுழைந்த மது அந்த வீட்டைப் பார்த்து வாயடைத்துப் போய் நின்றாள்.
இது நாள் வரை கதைகளிலும், திரைப்படங்களிலுமே இவ்வாறான வீட்டை மது பார்த்திருக்கிறாள்.
அரண்மனை போன்ற தோற்றத்தில் அந்த வீடு அமைக்கப்பட்டிருந்தது.
அந்த வீட்டைச் சூழ பல வர்ணங்களில் பூ மரங்கள் வைக்கப்பட்டு அது வீட்டு தோட்டமா? இல்லை பூங்காவா? என்று யோசிக்குமளவில் இருந்தது.
திரும்பும் பக்கமெங்கும் வேலையாட்கள் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தனர்.
தயங்கி தயங்கி ஒவ்வொரு இடமாக பார்த்தபடி மது வருவதைப் பார்த்த லோகநாதன் வெளியேறி வந்து
"வாம்மா எப்படி இருக்க? ஸ்ரீதர் தம்பி வரலயா?" என்று கேட்கவும்
"நான் நல்லா இருக்கேன் அங்கிள். ஸ்ரீதருக்கு ஒரு சின்ன வேலை. அதனால அவனால வர முடியாம போயிடுச்சு" என்று கூறினாள்.
"உள்ளே வாம்மா.." என்று லோகநாதன் வீட்டினுள் செல்ல அவரைப் பின் தொடர்ந்து சென்றாள் மது.
வீட்டின் வெளித் தோற்றத்தைப் பார்த்து முற்றாக அசந்து போயிருந்த மது வீட்டின் உள் தோற்றத்தைப் பார்த்து கண் இமைக்கவும் மறந்து போனாள்.
தன் வீட்டை ஒரு முறை எண்ணி பார்த்து கொண்டாள் மது.
ஒரு குடும்பம் தங்கி இருக்கக் கூடிய அளவில் அவர்கள் வீடு அமைக்கப்பட்டிருக்க வீட்டை சுற்றி சிறியளவிலான தோட்டம்.
அவ்வளவே மதுவின் வீடு அதை எண்ணிக் கொண்டவள் வீட்டை சுற்றி
பார்த்தவாறே
"இவ்வளவு பெரிய பணக்காரங்க நம்ம கிட்ட ஆர்டர் தந்திருக்காங்க. கண்டிப்பா இந்த ஆர்டரை சரியாக அவங்க எதிர்பார்க்காத அளவு சிறப்பாக முடிச்சு கொடுத்துறனும்" என்று எண்ணி கொண்டே மது
நடந்து சென்றாள்.
"இப்படி உட்காருமா மது.."
என்று கூறிய லோகநாதன்
"லக்ஷ்மி..." என்று அழைக்க ஒரு நடுத்தர வயது பெண்மணி பவ்வியமாக வந்து அவர்களின் முன் நின்றார்.
"அம்மாவையும் விஜியையும் கூட்டிட்டு வா.." என்று லோகநாதன் கூற
"சரிங்க ஐயா..." என்று விட்டு சென்றவர் சிறிது நேரத்தில் வத்சலாவையும், விஜியையும் அழைத்து வந்தார்.
அவர்கள் இருவரையும் பார்த்து மது எழுந்து நின்று கொள்ள
"பரவாயில்லைமா உட்காரு" என்று கூறியபடி வந்து அமர்ந்தார் வத்சலா.
மதுவின் அருகில் வந்து அமர்ந்து கொண்ட விஜி
"அம்மா இவங்க ரொம்ப அமைதியா, அழகா இருக்காங்கலே! எனக்கு இவங்கள ரொம்ப புடிச்சுருக்கு" என்று கூறி மதுவின் தோள் மேல் கை போடவும் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டாள் மது.
"உங்க பேரு என்ன?" என்று விஜி கேட்கவும்
"மதுமிதா" என்று மது கூற
"உங்க பேர் கூட உங்கள
மாதிரியே அழகாக இருக்கு" என்று கூறினாள் விஜி.
"ஒரு ஆள் சிக்கிட்டா போதும். வைச்சு செஞ்சிடுவியே" என்றவாறு வினித் வரவும் அவனை பார்த்த மது
"இவர இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்துருக்கேனே??" என்று யோசித்து பார்த்தாள்.
ஆனால் எதுவும் ஞாபகம் வராமல் போகவே அந்த எண்ணங்களை எல்லாம் ஒதுக்கி வைத்தாள்.
"வாப்பா வினித் இன்னும் அவன் திருச்சியில் இருந்து வரலயா?" என்று வத்சலா கேட்கவும்
"சென்னைகிட்ட ரீச்சாகிட்டேனு இப்போ தான் போன் பண்ணுணான். அது தான் நான் கிளம்பி வந்தேன் அத்தை" என்று கூறினான் வினித்.
விஜியின் அருகில் அமர்ந்திருந்த மதுவைப் பார்த்து கொண்டே வந்தமர்ந்த வினித்
"இது....." என்று மனதில் கேள்வி எழுப்ப
"அப்போ அங்கிள் இப்போ டிசைன்ஸ் பார்க்கலாமா?" என்று மதுவின் கேள்வியில் தன் மனதுக்குள் எழுந்த கேள்வியை மறந்து போனான்.
"ஓகே மது ஸ்யூர்..." என்று விஜி குதூகலமாக கூறி கொண்டு மதுவின் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டாள்.
ஆல்பத்தில் இருந்த ஒவ்வொரு டிசைன்களாக எல்லோரும் பார்த்து கொண்டிருக்க மதுவின் மறு புறம் வந்து கொண்டார் வத்சலா.
"மதுமிதா தானே உன் பெயரு? உன் அம்மா அப்பா எல்லாம் என்ன பண்ணுறாங்கமா?" என்று வத்சலா கேட்கவும்
சிறிது முகம் வாட்டமடைந்த மது
"அப்பா இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாரு ஆன்டி. அம்மாவும், நானும் தான் வீட்ல இருக்கோம்" என்று கூற
அவள் கைகளை ஆதரவாக பற்றிய வத்சலா
"ஸாரி மா...." என்று கூறினார்.
"பரவாயில்லை ஆன்டி" என்று மது கூறவும்
"உங்க எல்லாருக்கும் சுடச்சுட காபி போட்டு கொண்டு வரேன்" என்று எழுந்து சென்ற வத்சலாவை வியப்பாக பார்த்தாள் மது.
மதுவின் முக மாற்றத்தை கவனித்த லோகநாதன்
"என்ன தான் வீட்ல வேலை செய்ய வேலைக்காரங்க நிறையப் பேர் இருந்தாலும் சமையல் வேலையை மட்டும் நான் தான் பண்ணுவேனு உறுதியாக வத்சலா சொல்லிட்டா" என்று கூறவும்
"உங்களுக்கு எப்படி அங்கிள் நான் என்ன நினைச்சேன்னு தெரியும்?" என்று மது கேட்க
"எங்க வீட்டுக்கு புதுசா வர்ற எல்லாரும் இந்த கேள்வியை என்கிட்ட கேட்காம போனதே இல்ல"
என்று கூறிய லோகநாதனைப் பார்த்து புன்னகத்தாள் மது.
அப்போது லோகநாதனிற்கு போன் வரவும்
"ஒரு நிமிஷம் இப்ப வந்துடுறேன்" என்று விட்டு லோகநாதன் செல்ல வீட்டை சுற்றி பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள் மது.
அப்போது
"விஜி கண்ணா...." என்றவாறு அவர்கள் அருகில் வந்து நின்ற பெண்ணை பார்த்து
"சுலோச்சனா அத்தை...." என்றவாறு எழுந்து நின்றாள் விஜி.
"யாருடா அது நேரங்கெட்ட நேரத்தில்???" என்றவாறு நிமிர்ந்து பார்த்த வினித் சுலோச்சனாவைப் பார்த்ததும்
"அய்யய்யோ!!! பெரிய பூகம்பமா???" என்றவாறு மீண்டும் அமைதியாக தலை குனிந்து அமர்ந்து கொண்டான்.
சரசரக்கும் பட்டு சேலையும், கழுத்தை முழுமையாக மறைக்கும் அளவு தங்க ஆபரணங்களும், உண்மையான வயதை மறைத்து காட்டும் அளவுக்கு ஒப்பனையுமாக வந்து நின்ற பெண்ணை அதிசயமாக பார்த்தாள் மது.
"என்னடா விஜி கண்ணா இதெல்லாம்??" என்றவாறு விஜியின் கையில் இருந்த ஆல்பத்தை வாங்கி பார்த்தார் சுலோச்சனா.
"இதெல்லாம் என்கேஜ்மண்ட், மேரேஜ்க்கு டெகேரேஷன் எப்படி வேணும்னு செலக்ட் பண்ற டிசைன் ஆல்பம் அத்தை.." என்று விஜி கூறவும்
"ஓஹ்...அப்படியா???" என்று கேட்டுக் கொண்டவர் விஜியின் அருகில் அமர்ந்திருந்த மதுவை கேள்வியாகப் பார்த்தார்.
"இவங்க மது. அருணா வெடிங் பிளானர்ஸ்ல இருந்து வந்துருக்காங்க. இவங்கதான் இந்த டெகேரேஷன் வேலை எல்லாம் பார்க்கப் போறாங்க" என்று விஜி கூறவும்
"அருணா வெடிங் பிளானர்ஸா...." என்று ஏதோ கேட்கக் கூடாத வார்த்தையை கேட்டது போல சுலோச்சனா முகத்தை சுளிக்க மனமுடைந்து போனாள் மது.