ஹாய்!!ஹலோ!! ப்ரெண்ட்ஸ்!!!
இன்னைக்கு ஐ யம் கொஞ்சம் வெட்டி ஷோ சொன்ன நாளுக்கு முன்னால் ud போட்டு விட்டேன்.
படிச்சுட்டு ஒரு லைக் அன்ட் கமெண்ட்ஸ்
ஷோபனா சுலோச்சனாவின் ஒரே வாரிசு.
குணத்திலும், நடத்தையிலும் சுலோச்சனாவின் மறு பிரதியாக இருந்தாள் ஷோபா.
ஷோபா 25 வயது நிரம்பிய ஓர் நவ நாகரீக மங்கை. சற்று சிவந்த நிறம் கொண்ட ஷோபனா பல பியூட்டி பார்லர்களின் கை வண்ணத்தில் தன் நிறத்தை மேலும் அதிகரிக்க செய்து இருந்தாள்.
அவளது ஆடையும், ஒப்பனையுமே அவளது நாகரீக வளர்ச்சியை அனைவருக்கும் பறைசாற்றியது.
ஷோபாவின் சத்தம் கேட்டு அனைவரும் ஹாலுக்கு வந்து சேர்ந்தனர்.
"வாம்மா ஷோபா எப்படி இருக்க?" என்று லோகநாதன் கேட்கவும்
அவர் முன்னால் வந்து நின்று அவரை முறைத்து பார்த்தவள்
"எங்க அம்மாவை எதுக்கு திட்டுனீங்க? அவங்கள இப்படி அவமானப்படுத்த உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு?" என்று கேட்டாள்.
"அதுக்குள்ள பெரிய பூகம்பம் சின்ன பூகம்பத்துக்கு கிட்ட போய் எல்லாத்தையும் வத்தி வைச்சுடுச்சு பாரேன்" என்று வினித் அருளிடம் கூற அவனை பார்த்து சிரித்துக் கொண்டு நின்றான் அருள்.
"நீ சின்ன பொண்ணு ஷோபா. இந்த விஷயத்தில் எல்லாம் நீ தலையிடாதே! பெரியவங்க நாங்க ஆயிரம் பேசுவோம். அதை பற்றி உன் கிட்ட விளக்கம் சொல்லிட்டு இருக்க முடியாது. சரி வா வந்து டிபன் சாப்பிடு" என்று லோகநாதன் ஷோபாவின் கை பிடித்து அழைக்கவும்
அவரது கையை தட்டி விட்ட ஷோபா"நான் ஒண்ணும் எங்க வீட்ல சாப்பிட சாப்பாடு இல்லாம உங்க வீட்டுக்கு வரல. எவளோ ஒரு லோ கிளாஸ் பொண்ணுக்காக எங்க அம்மாவை அசிங்கப்படுத்தி இருக்கீங்க. இதுக்கெல்லாம் நீங்க பின்னாடி ரொம்ப பீல் பண்ணுவீங்க மாமா. கண்டவங்களை எல்லாம் தலையில தூக்கி வைச்சுட்டு ஓவரா ஆட்டம் போடாதீங்க" என்று மதுவை பற்றி தவறாக கூறவும் அருள் தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு நின்றான்.
"என்னம்மா ஷோபா இது? பெரியவங்க கிட்ட இப்படி தான் பேசுவியா?" என்று வத்சலா கேட்க
அவரைப் பார்த்து கை காட்டி நிறுத்துமாறு கூறியவள்
"இது எங்க மாமாவுக்கும் எனக்கும் இடையில நடக்குற விஷயம். வீணா நீங்க இதுல தலையிட வேண்டாம். நல்லா இருந்தா எங்க மாமாவை அதையும் இதையும் சொல்லி ஏத்தி விட்டுட்டு இப்போ சமாதானம் பண்ணுற மாதிரி நடிக்குறீங்களா?" என்று கேட்கவும்
"வாயை மூடு ஷோபா!!!!" என்று முகம் சிவக்க உக்கிரமாக ஷோபாவின் முன் வந்து நின்றான் அருள்.
"அருள் அத்தான்!!!" என்று அதிர்ச்சியாக முணுமுணுத்துக் கொண்ட ஷோபா விக்கித்துப் போய் நின்றாள்.
"இவர் எப்போ இங்க வந்தாரு? இந்த அம்மா அருள் அத்தான் இங்க இல்லேனு சொல்லவும் தானே நான் இங்க வந்தேன். இப்போ நான் பேசுன எல்லாத்தையும் இவர் கேட்டிருப்பாரே! இப்போ என்ன பண்ணுறது?" என்று மனதிற்குள் வேகமாக சிந்திக்க தொடங்கினாள் ஷோபா.
லோகநாதனின் ஒட்டுமொத்த சொத்துக்களுக்கும் விஜியும், அருளுமே வாரிசுகள் என்பதால் எப்படியாவது அருளை தன் வீட்டு மருமகனாக ஆக்கி கொள்ள வேண்டும் என்று திட்டம் போட்ட சுலோச்சனா ஷோபவின் சிறு வயதில் இருந்தே 'அருள் உனக்கு தான்' என்று கூறி வளர்த்ததால் அந்த எண்ணம் ஷோபாவின் மனதில் வேரூன்றி இருந்தது.
அருளின் முன்னால் நல்லவள் போன்றும் மற்றவர்களின் முன்னால் தன் சுய ரூபத்தைக் காட்டிக் கொண்டும் இரு வேடமிட்டு கொண்டு இருந்த ஷோபாவின் குணம் தெரிந்தும் அருள் இது நாள் வரை அவளைக் கண்டித்தது இல்லை.
ஆனால் இன்று தன் தாய், தந்தையை அவள் எதிர்த்து பேசவும் கோபம் கொண்ட அருள் அவளை கோபத்துடன் முறைத்து கொண்டு நின்றான்.
அருளின் கோபப் பார்வையை கண்டு மிரண்டு போய் நின்ற ஷோபா உடனே தன்னை சரி செய்து கொண்டு
"அத்தான் எப்படி இருக்கீங்க? திருச்சியிலிருந்து எப்போ வந்தீங்க?" என்று கேட்கவும்
"சுகம் விசாரிக்குறது எல்லாம் இருக்கட்டும். உன் மனசுல என்ன பெரிய சண்டிராணினு நினைப்பா? வயசுல பெரியவங்கனு மரியாதை இல்லாம பேசுற. பல்லைத் தட்டிடுவேன் ஜாக்கிரதை!" என்று உறும செய்வதறியாது நின்றாள் ஷோபா.
அருள் கோபமாக திட்டவும் ஷோபா கண் கலங்கி நிற்க அவளை பார்த்து வருத்தத்துடன் நின்ற வத்சலா அருளைப் பார்த்து 'வேண்டாம்' என்பதை போல சைகை செய்ய அமைதியாக நின்றான் அருள்.
கண்கள் கலங்க நின்ற ஷோபாவின் அருகில் வந்த வத்சலா அவள் தோள் தொட தலைகுனிந்து கொண்டாள் ஷோபா.
"உன் அம்மா, அப்பாவை திட்டுனா உனக்கு கோபம் வர்ற மாதிரி தானே அவளுக்கும் கோபம் வந்துருக்கும். சின்ன பொண்ணு தெரியாம பேசிட்டா இனி இப்படி பண்ணமாட்ட விடு அருள்" என்று வத்சலா கூறவும்
"பார்த்தியா? இது தான் உனக்கும் மத்தவங்களுக்கும் இருக்குற வித்தியாசம். நீ அவங்கள கஷ்டப்படுத்துற மாதிரி பேசியும் உனக்கு சப்போர்டா அவங்க பேசுறாங்க. இனியாவது திருந்தி ஒழுங்கா நடந்துக்க பாரு" என்ற அருள் அவனறையை நோக்கி சென்று விட அவனைத் தொடர்ந்து வினித்தும் சென்றான்.
"மன்னிச்சுடுங்க அத்தை...நான் தெரியாம.." என்று ஷோபா தயங்கவும்
"பரவாயில்லை ஷோபா வா" என்று ஷோபாவை வத்சலா அழைத்து செல்ல தன் மனைவியை எண்ணி பெருமிதம் கொண்டார் லோகநாதன்.
லோகநாதனின் அருகில் வந்த விஜி அவரைப் பார்க்க
புன்னகத்து கொண்ட லோகநாதன்
"உங்க அம்மாவுக்கு பொறுமையின் சிகரம்னே அவார்ட் கொடுக்கலாம். எல்லாரையும் சமாளிக்க கத்து வைச்சுருக்கா" என்று கூறவும்
"உங்களையே இத்தனை வருஷமா சமாளிச்சுட்டாங்க. அந்த சில்வண்டு சோப்பு டப்பாவை சமாளிக்குறது பெரிய வேலையா என்ன?" என்று சிரித்துக் கொண்டே விஜி கூறினாள்.
"ஷோபா காதுல நீ சொன்னது மட்டும் விழுந்துச்சு அப்புறம் இன்னொரு பிரளயம் கிளம்பிடும்" என்று லோகநாதன் கூற
"அப்போ சங்கத்தை கலைச்சுட வேண்டியது தான்" என்று விட்டு விஜி சென்று விட லோகநாதன் அவருடைய ஆபீஸ் அறைக்குள் நுழைந்து கொண்டார்.
லோகநாதன் அறைக்குள் செல்வதைப் பார்த்து கொண்டு நின்ற விஜி வத்சலா, ஷோபா சென்ற பக்கம் சென்று என்ன நடக்கிறது என்று கண்காணிக்கத் தொடங்கினாள்.
அறைக்குள் நுழைந்த அருள் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அறையினுள் குறுக்கும், நெடுக்கும் நடந்து கொண்டிருக்க வினித் அங்கிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டு அருளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்து போன வினித்
"இப்போ எதுக்குடா குட்டி போட்ட பூனை போல அங்கேயும் இங்கேயும் நடந்துட்டு இருக்க?" என்று அருளின் முன் வந்து நின்று கேட்க
"சின்ன பொண்ணு தானே போனா போகுதுனு இத்தனை நாள் அவ பண்ணுற கூத்தை எல்லாம் கண்டுக்காம இருந்தேன். ஆனா இன்னைக்கு அவ என்ன பேச்சு பேசுறானு பார்த்தலே. வந்த ஆத்திரத்திற்கு அங்கேயே அவள அறைஞ்சுருப்பேன். எல்லோரும் இருக்கவும் பொறுமையாக வந்துட்டேன்" என்ற அருள் கண்களை மூடிக் கொண்டு நின்றான்.
சிறிது நேரத்தின் பின் கண்களைத் திறந்த அருள்
"ஆனாலும் அம்மா ஷோபாவுக்கு ரொம்ப தான் இடம் கொடுக்குறாங்க. இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ தெரியல" என்று அருள் கூற
சிரித்துக் கொண்ட வினித்
"வீட்டுக்கு மருமகளாக வரப் போறவனு விட்டுக் கொடுத்து போறாங்க போல" என்று கூறவும் அதிர்ச்சியாக அவனை பார்த்தான் அருள்.
இன்னைக்கு ஐ யம் கொஞ்சம் வெட்டி ஷோ சொன்ன நாளுக்கு முன்னால் ud போட்டு விட்டேன்.
படிச்சுட்டு ஒரு லைக் அன்ட் கமெண்ட்ஸ்
ஷோபனா சுலோச்சனாவின் ஒரே வாரிசு.
குணத்திலும், நடத்தையிலும் சுலோச்சனாவின் மறு பிரதியாக இருந்தாள் ஷோபா.
ஷோபா 25 வயது நிரம்பிய ஓர் நவ நாகரீக மங்கை. சற்று சிவந்த நிறம் கொண்ட ஷோபனா பல பியூட்டி பார்லர்களின் கை வண்ணத்தில் தன் நிறத்தை மேலும் அதிகரிக்க செய்து இருந்தாள்.
அவளது ஆடையும், ஒப்பனையுமே அவளது நாகரீக வளர்ச்சியை அனைவருக்கும் பறைசாற்றியது.
ஷோபாவின் சத்தம் கேட்டு அனைவரும் ஹாலுக்கு வந்து சேர்ந்தனர்.
"வாம்மா ஷோபா எப்படி இருக்க?" என்று லோகநாதன் கேட்கவும்
அவர் முன்னால் வந்து நின்று அவரை முறைத்து பார்த்தவள்
"எங்க அம்மாவை எதுக்கு திட்டுனீங்க? அவங்கள இப்படி அவமானப்படுத்த உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு?" என்று கேட்டாள்.
"அதுக்குள்ள பெரிய பூகம்பம் சின்ன பூகம்பத்துக்கு கிட்ட போய் எல்லாத்தையும் வத்தி வைச்சுடுச்சு பாரேன்" என்று வினித் அருளிடம் கூற அவனை பார்த்து சிரித்துக் கொண்டு நின்றான் அருள்.
"நீ சின்ன பொண்ணு ஷோபா. இந்த விஷயத்தில் எல்லாம் நீ தலையிடாதே! பெரியவங்க நாங்க ஆயிரம் பேசுவோம். அதை பற்றி உன் கிட்ட விளக்கம் சொல்லிட்டு இருக்க முடியாது. சரி வா வந்து டிபன் சாப்பிடு" என்று லோகநாதன் ஷோபாவின் கை பிடித்து அழைக்கவும்
அவரது கையை தட்டி விட்ட ஷோபா"நான் ஒண்ணும் எங்க வீட்ல சாப்பிட சாப்பாடு இல்லாம உங்க வீட்டுக்கு வரல. எவளோ ஒரு லோ கிளாஸ் பொண்ணுக்காக எங்க அம்மாவை அசிங்கப்படுத்தி இருக்கீங்க. இதுக்கெல்லாம் நீங்க பின்னாடி ரொம்ப பீல் பண்ணுவீங்க மாமா. கண்டவங்களை எல்லாம் தலையில தூக்கி வைச்சுட்டு ஓவரா ஆட்டம் போடாதீங்க" என்று மதுவை பற்றி தவறாக கூறவும் அருள் தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு நின்றான்.
"என்னம்மா ஷோபா இது? பெரியவங்க கிட்ட இப்படி தான் பேசுவியா?" என்று வத்சலா கேட்க
அவரைப் பார்த்து கை காட்டி நிறுத்துமாறு கூறியவள்
"இது எங்க மாமாவுக்கும் எனக்கும் இடையில நடக்குற விஷயம். வீணா நீங்க இதுல தலையிட வேண்டாம். நல்லா இருந்தா எங்க மாமாவை அதையும் இதையும் சொல்லி ஏத்தி விட்டுட்டு இப்போ சமாதானம் பண்ணுற மாதிரி நடிக்குறீங்களா?" என்று கேட்கவும்
"வாயை மூடு ஷோபா!!!!" என்று முகம் சிவக்க உக்கிரமாக ஷோபாவின் முன் வந்து நின்றான் அருள்.
"அருள் அத்தான்!!!" என்று அதிர்ச்சியாக முணுமுணுத்துக் கொண்ட ஷோபா விக்கித்துப் போய் நின்றாள்.
"இவர் எப்போ இங்க வந்தாரு? இந்த அம்மா அருள் அத்தான் இங்க இல்லேனு சொல்லவும் தானே நான் இங்க வந்தேன். இப்போ நான் பேசுன எல்லாத்தையும் இவர் கேட்டிருப்பாரே! இப்போ என்ன பண்ணுறது?" என்று மனதிற்குள் வேகமாக சிந்திக்க தொடங்கினாள் ஷோபா.
லோகநாதனின் ஒட்டுமொத்த சொத்துக்களுக்கும் விஜியும், அருளுமே வாரிசுகள் என்பதால் எப்படியாவது அருளை தன் வீட்டு மருமகனாக ஆக்கி கொள்ள வேண்டும் என்று திட்டம் போட்ட சுலோச்சனா ஷோபவின் சிறு வயதில் இருந்தே 'அருள் உனக்கு தான்' என்று கூறி வளர்த்ததால் அந்த எண்ணம் ஷோபாவின் மனதில் வேரூன்றி இருந்தது.
அருளின் முன்னால் நல்லவள் போன்றும் மற்றவர்களின் முன்னால் தன் சுய ரூபத்தைக் காட்டிக் கொண்டும் இரு வேடமிட்டு கொண்டு இருந்த ஷோபாவின் குணம் தெரிந்தும் அருள் இது நாள் வரை அவளைக் கண்டித்தது இல்லை.
ஆனால் இன்று தன் தாய், தந்தையை அவள் எதிர்த்து பேசவும் கோபம் கொண்ட அருள் அவளை கோபத்துடன் முறைத்து கொண்டு நின்றான்.
அருளின் கோபப் பார்வையை கண்டு மிரண்டு போய் நின்ற ஷோபா உடனே தன்னை சரி செய்து கொண்டு
"அத்தான் எப்படி இருக்கீங்க? திருச்சியிலிருந்து எப்போ வந்தீங்க?" என்று கேட்கவும்
"சுகம் விசாரிக்குறது எல்லாம் இருக்கட்டும். உன் மனசுல என்ன பெரிய சண்டிராணினு நினைப்பா? வயசுல பெரியவங்கனு மரியாதை இல்லாம பேசுற. பல்லைத் தட்டிடுவேன் ஜாக்கிரதை!" என்று உறும செய்வதறியாது நின்றாள் ஷோபா.
அருள் கோபமாக திட்டவும் ஷோபா கண் கலங்கி நிற்க அவளை பார்த்து வருத்தத்துடன் நின்ற வத்சலா அருளைப் பார்த்து 'வேண்டாம்' என்பதை போல சைகை செய்ய அமைதியாக நின்றான் அருள்.
கண்கள் கலங்க நின்ற ஷோபாவின் அருகில் வந்த வத்சலா அவள் தோள் தொட தலைகுனிந்து கொண்டாள் ஷோபா.
"உன் அம்மா, அப்பாவை திட்டுனா உனக்கு கோபம் வர்ற மாதிரி தானே அவளுக்கும் கோபம் வந்துருக்கும். சின்ன பொண்ணு தெரியாம பேசிட்டா இனி இப்படி பண்ணமாட்ட விடு அருள்" என்று வத்சலா கூறவும்
"பார்த்தியா? இது தான் உனக்கும் மத்தவங்களுக்கும் இருக்குற வித்தியாசம். நீ அவங்கள கஷ்டப்படுத்துற மாதிரி பேசியும் உனக்கு சப்போர்டா அவங்க பேசுறாங்க. இனியாவது திருந்தி ஒழுங்கா நடந்துக்க பாரு" என்ற அருள் அவனறையை நோக்கி சென்று விட அவனைத் தொடர்ந்து வினித்தும் சென்றான்.
"மன்னிச்சுடுங்க அத்தை...நான் தெரியாம.." என்று ஷோபா தயங்கவும்
"பரவாயில்லை ஷோபா வா" என்று ஷோபாவை வத்சலா அழைத்து செல்ல தன் மனைவியை எண்ணி பெருமிதம் கொண்டார் லோகநாதன்.
லோகநாதனின் அருகில் வந்த விஜி அவரைப் பார்க்க
புன்னகத்து கொண்ட லோகநாதன்
"உங்க அம்மாவுக்கு பொறுமையின் சிகரம்னே அவார்ட் கொடுக்கலாம். எல்லாரையும் சமாளிக்க கத்து வைச்சுருக்கா" என்று கூறவும்
"உங்களையே இத்தனை வருஷமா சமாளிச்சுட்டாங்க. அந்த சில்வண்டு சோப்பு டப்பாவை சமாளிக்குறது பெரிய வேலையா என்ன?" என்று சிரித்துக் கொண்டே விஜி கூறினாள்.
"ஷோபா காதுல நீ சொன்னது மட்டும் விழுந்துச்சு அப்புறம் இன்னொரு பிரளயம் கிளம்பிடும்" என்று லோகநாதன் கூற
"அப்போ சங்கத்தை கலைச்சுட வேண்டியது தான்" என்று விட்டு விஜி சென்று விட லோகநாதன் அவருடைய ஆபீஸ் அறைக்குள் நுழைந்து கொண்டார்.
லோகநாதன் அறைக்குள் செல்வதைப் பார்த்து கொண்டு நின்ற விஜி வத்சலா, ஷோபா சென்ற பக்கம் சென்று என்ன நடக்கிறது என்று கண்காணிக்கத் தொடங்கினாள்.
அறைக்குள் நுழைந்த அருள் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அறையினுள் குறுக்கும், நெடுக்கும் நடந்து கொண்டிருக்க வினித் அங்கிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டு அருளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்து போன வினித்
"இப்போ எதுக்குடா குட்டி போட்ட பூனை போல அங்கேயும் இங்கேயும் நடந்துட்டு இருக்க?" என்று அருளின் முன் வந்து நின்று கேட்க
"சின்ன பொண்ணு தானே போனா போகுதுனு இத்தனை நாள் அவ பண்ணுற கூத்தை எல்லாம் கண்டுக்காம இருந்தேன். ஆனா இன்னைக்கு அவ என்ன பேச்சு பேசுறானு பார்த்தலே. வந்த ஆத்திரத்திற்கு அங்கேயே அவள அறைஞ்சுருப்பேன். எல்லோரும் இருக்கவும் பொறுமையாக வந்துட்டேன்" என்ற அருள் கண்களை மூடிக் கொண்டு நின்றான்.
சிறிது நேரத்தின் பின் கண்களைத் திறந்த அருள்
"ஆனாலும் அம்மா ஷோபாவுக்கு ரொம்ப தான் இடம் கொடுக்குறாங்க. இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ தெரியல" என்று அருள் கூற
சிரித்துக் கொண்ட வினித்
"வீட்டுக்கு மருமகளாக வரப் போறவனு விட்டுக் கொடுத்து போறாங்க போல" என்று கூறவும் அதிர்ச்சியாக அவனை பார்த்தான் அருள்.