சென்ற பதிவுக்கு லைக்,கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி!!!
சொன்ன மாதிரியே இன்னைக்கு ud போட்டு விட்டேன்.
மறக்காமல் ஒரு லைக் அன்ட் கமெண்ட்ஸ்
பயண அலுப்பு தீர ஒரு குளியல் போட்டு விட்டு வந்த அருள் வெளியில் மழை தூரும் சத்தம் கேட்கவும் பால்கனிக் கதவை திறந்து கொண்டு வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றான்.
மண் வாசனை அவன் நாசியை நிறைக்க குளிர் காற்றும், மழைச் சாரலும் அவன் மனதில் ஓர் இனம் புரியாத அமைதியை ஏற்படுத்தியது.
நாளை மதுவை நேருக்கு நேராக பார்க்க போகிறோம் என்ற எண்ணம் அவனை ஆனந்த வெள்ளத்தில் திளைக்கச் செய்தது.
அந்த ஏகாந்தமான சூழ் நிலையை அருள் ரசித்து கொண்டிருக்கையில் ஷோபாவின்
"அத்தான்..." என்ற அழைப்பில் சலித்து கொண்டவாறே அருள் திரும்பினான்.
"நீ இன்னும் வீட்டுக்கு கிளம்பாம இங்க என்ன பண்ணிட்டு இருக்க?" என்று அருள் கேட்கவும்
"மழை பெய்யவும் அத்தை கொஞ்சம் லேட்டா போக சொன்னாங்க அதுதான் அத்தான் போகல" என்று ஷோபா கூற
"ஆமா பெரிய லண்டன்ல இருக்கு இவ வீடு. பக்கத்து தெருவுக்கு போறதுக்கு இவ்வளவு பில்டப்பு" என்று முணுமுணுத்துக் கொண்டு நின்றான் அருள்.
"அத்தான் ஐ யம் ஸாரி..நான் ஏதோ தெரியாம அப்படி பேசிட்டேன். அம்மா வீட்டுக்கு வந்து ஒரே அழுகை. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதனால என்ன பேசுறேனு கூட தெரியாம அப்படி நடந்துக்கிட்டேன். மன்னிச்சுக்கோங்க அத்தான் ப்ளீஸ்.." என்று கூறி விட்டு கண்களை ஷோபா துடைத்து கொள்ள அருளிற்கு அவள் மேல் மீண்டும் கோபத்தை காட்ட முடியவில்லை.
"தங்களுடைய பெற்றோர் அழுதால் எந்த பிள்ளையும் கோபம் கொள்ளத்தான் செய்யும் அது தானே இயல்பு!" என்று எண்ணிக் கொண்ட அருள்
"சரி சரி அழாதே!! இனிமே பெரியவங்க கிட்ட பார்த்து பேசனும் சரியா?" என்று கேட்கவும்
"ஹையா!!! அத்தான் என்ன மன்னிச்சுட்டாங்க" என்று அவள் குதூகலமாக சிரிக்க அவளை பார்த்து புன்னகத்து கொண்டான் அருள்.
"அத்தான் வாங்க போய் சாப்பிடலாம். நான், விஜி, அத்தை எல்லோரும் சேர்ந்து வாழைக்காய் பஜ்ஜி செய்துருக்கோம். மழை பெய்யுற டைம்ல சூடான பஜ்ஜி செம்மயா இருக்கும். வாங்க அத்தான்.." என்று அருளின் கை பிடித்து ஷோபா அழைக்க
அவள் கைகளில் இருந்து தன் கையை மெல்ல எடுத்து கொண்ட அருள்
"விஜியும் நீயுமா? அப்போ இன்னைக்கு எல்லோரையும் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட வேண்டியது தான். மறந்து போய் கூட காக்காக்கு நீங்க பண்ணுண பஜ்ஜியை போட்றாதீங்க! அநியாயமாக ஒரு உயிரை கொன்ன பாவம் நம்ம குடும்பத்துக்கு வந்துடக் கூடாது" என்று சிரித்துக் கொண்டே கூறவும்
அவனை முறைத்து பார்த்த ஷோபா
"அத்தான் திஸ் இஸ் டூ மச்..நான் குக்கரி கிளாஸ்க்கு எல்லாம் போறேன் தெரியுமா? நான் நல்லா சமைப்பேன். ஒரு வாட்டி சாப்பிட்டிங்கனா அப்புறம்.."
"நான் ஒரேயடியாக போய் சேர்ந்துடுவேன் அதுதானே?" என்று அருள் கூற
கோபமாக திரும்பி கொண்டாள் ஷோபா.
"சரி சரி நீ குக்கிங் எக்ஸ்பேர்ட் தான் போதுமா? வா அப்படி எல்லாருமா சேர்ந்து என்னத்த பண்ணி வைச்சுருக்கீங்கனு ஒரு கை பார்ப்போம்" என்று விட்டு அருள் செல்ல அவன் பின்னால் முகம் நிறைந்த புன்னகையோடு சென்றாள் ஷோபா.
ஷோபாவும், அருளும் ஒன்றாக சிரித்துக் கொண்டே படியிறங்கி வருவதைப் பார்த்த வத்சலா சுலோச்சனா தன்னிடம் அருளின் திருமணம் பற்றி கூறிய விடயங்களை ஒரு தரம் நினைத்து பார்த்துக் கொண்டார்.
வத்சலா ஏதோ சிந்தித்து கொண்டிருப்பதை பார்த்து அவரருகில் வந்து நின்ற விஜி
"என்னம்மா ஏதோ பலமா யோசிச்சுட்டு இருக்க??" என்று கேட்கவும்
"அங்கே பாரு அருளும், ஷோபாவும் பேசிட்டு வர்றாங்க" என்று வத்சலா கூற அவர்கள் இருவரையும் திரும்பி பார்த்தாள் விஜி.
"ஆமா பேசிட்டு வர்றாங்க இதுல என்னத்தம்மா யோசிக்குறீங்க? ஒரு வேளை அண்ணா கோபமாக பேசிட்டு இப்போ சிரிச்சுட்டு வர்றானேனு யோசிக்குறீங்களா? அண்ணாவைப் பத்தி தெரியும் தானேமா! அஞ்சு நிமிஷத்துக்கு மேல அண்ணனால கோபத்தை வைச்சிக்க முடியாது" என்று விஜி கூறவும்
அவளைப் பார்த்து புன்னகத்த வத்சலா
"அருளை பத்தி எனக்கு தெரியாதா? நான் அதை சொல்லல" என்று கூற
"அப்போ வேற என்ன? அண்ணா இதுக்கு முன்னாடி பேசாம இருந்துட்டு இப்போ தான் பேசுற மாதிரி சொல்ற? இல்லை அந்த ஷோபா இதுக்கு முன்னாடி ஊமையா இருந்தாளா?" என்று விஜி கேட்டாள்.
"கேள்வியும் நானே பதிலும் நானேனு நீயே பேசுனா அப்போ நான் என்ன தான் சொல்லுறது?" என்று வத்சலா கேட்கவும்
"சரி சரி யூ மே ப்ரோசீட் யுவர் ஹானர்" என்று விஜி கூற
"அருளுக்கும், ஷோபாவுக்கும் நல்ல ஜோடி பொருத்தம்லே" என்று வத்சலா கூறவும் திகைப்புடன் அவரை பார்த்தாள் விஜி.
"அம்மா...." என்று அவள் கூறத் தொடங்கவும் அருளும், ஷோபாவும் அவர்கள் அருகில் வரவும் சரியாக இருந்தது.
ஷோபாவையும், அருளையும் வைத்து கொண்டு எதுவும் பேசக்கூடாது என்று நினைத்து கொண்ட விஜி அமைதியாக நின்றாள்.
"என்ன விஜி? நீயும், ஷோபாவும் இன்னைக்கு கிச்சன்ல புல்லா பூந்து விளையாடிட்டீங்க போல. அப்படி என்ன கருமத்தை....ஸாரி ஸாரி என்ன தேவாமிர்தத்தை பண்ணி வைச்சிருக்கிங்கனு பார்க்க ஆவலாக வந்துருக்கேன். போய் எடுத்துட்டு வா" என்று அருள் கூறவும்
எதுவுமே கூறாமல் அவர்கள் செய்து வைத்திருந்த பஜ்ஜியை அருளிடம் கொண்டு வந்து கொடுத்தாள் விஜி.
விஜி அமைதியாக இருப்பதைப் பார்த்து கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்த அருள்
"இவ ஏன் இன்னைக்கு இவ்வளவு சைலண்டா இருக்கா? ஒரு வேளை ஷோபா கோபமாக பேசுனது நினைச்சு கவலைப்படுறாளா? மே பீ இருக்கலாம்" என்று கேள்வியும் அவனே கேட்டு கொண்டு பதிலையும் அவனே உருவாக்கி கொண்டான்.
மழை முற்றாக நிற்கும் வரையிலும் மழையில் ஆட்டம் போட்ட மதுவை இழுத்து செல்லாத குறையாக காரில் கொண்டு போய் அடைத்து வைத்தான் ஸ்ரீதர்.
அவள் காரை விட்டு இறங்குவதற்குள் அவசரமாக காரை ஸ்டார்ட் செய்த ஸ்ரீதர்
"பார்க்குறவங்க எல்லாரும் நான் உன்னை கடத்திட்டுப் போறேனு நினைச்சுக்கப் போறாங்க மது. கொஞ்ச நேரம் வீட்டுக்கு போற வரைக்கும் அமைதியா வா" என்று கூறவும்
அவன் தோளில் தட்டிய மது
"எதுக்கு ஸ்ரீ இப்போ என்ன இப்படி இழுத்துட்டு வந்த? நான் எவ்வளவு ஹேப்பியா மழையில் என்ஜாய் பண்ணிட்டு இருந்தேன். இன்னும் கொஞ்சம் நேரம் விட்டுருந்தா.."
"ஜன்னி புடிச்சு செத்திருப்ப..." என்று ஸ்ரீதர் கூற அவனை முறைத்து பார்த்தாள்.
"நீ இப்போ மழையில நனைஞ்சது மட்டும் அம்மாக்கு தெரிஞ்சதுனு வை நனைஞ்ச உன்ன விட நனைய வைச்ச என்னத்தான் திட்டி தீர்ப்பாங்க" என்று ஸ்ரீதர் கூறவும்
அவனைப் பார்த்து சிரித்த மது
"எங்க அம்மானா உனக்கு அவ்வளவு பயமா ஸ்ரீ? சொல்லவே இல்ல. சரி சரி டோன்ட் வொர்ரி. அம்மா கிட்ட நான் பேசி உன்னை திட்டு வாங்காம நான் காப்பாத்துரேன் ஓகே வா?" என்று கேட்டாள்.
காரை நிறுத்திய ஸ்ரீதர்
"என்னைக் காப்பாத்துரது இருக்கட்டும். உன் அம்மா வாசல்லயே காத்துட்டு நிற்குறாங்க. முதல்ல அவங்க கிட்ட இருந்து நீ தப்பிச்சுக்க. நான் இப்படியே வீட்டுக்கு ஓடிடுறேன்" என்று கூறவும்
திரும்பி பார்த்த மது அப்போது தான் தன்னுடைய வீட்டிற்கு வந்து விட்டோம் என்பதை உணர்ந்தாள்.
வீட்டு வாயிலில் பதட்டத்துடன் அருணா நின்று கொண்டிருப்பதை பார்த்து தயங்கி தயங்கி காரை விட்டு இறங்கினாள் மது.
மது இறங்கியதும் தான் தாமதம் காரை எடுத்துக்கொண்டு பறந்து சென்றான் ஸ்ரீதர்.
"எருமை தனியா என்ன அருணாதேவி கிட்ட மாட்ட வைச்சுட்டு எஸ்கேப் ஆகிட்டான். நாளைக்கு ஆபீஸ்க்கு வரட்டும். அவனை கவனிச்சுக்குறேன்" என்று மனதினுள் கருவிக் கொண்ட மது வீட்டினுள் அடியெடுத்து வைக்க அவள் முன்னால் வந்து நின்றார் அருணா.
அருணாவைப் பார்த்து புன்னகத்தவாறே மெதுவாக வீட்டிற்குள் நுழைந்து கொள்ளப் போன மதுவின் கைகளை பிடித்து கொண்டார் அருணா.
"ம்மா!! நான் நடந்து வந்துட்டு இருக்கும் போது திடீர்னு 'சோ'னு மழை. ஒரு இடம் தேடி நிற்குறதுக்குள்ள புல்லா நனைஞ்சிட்டேன். அப்போ தான் ஸ்ரீ அந்த வழியா வந்தான். மழையில நனைஞ்சா அம்மா திட்டுவாங்க பத்திரமா என்ன வீட்டுல கொண்டு போய் விடச் சொன்னனா அது தான் விட்டுட்டு போய்ட்டான். இது தான்ம்மா நடந்துச்சு. நான் மழையில வேணும்னு ஒண்ணும் நனையலமா" என்று மது ஒரே மூச்சில் கூறி முடிக்கவும்
அவளையே பார்த்து கொண்டு நின்ற அருணா
"நான் உன்கிட்ட என்ன ஆச்சு? ஏது ஆச்சுனு எதுவுமே கேட்கலயே?" என்று கூற
"அய்யய்யோ!!! நானாவே உளறிட்டேனா? இன்னைக்கு அருணா என்னை காலி பண்ணப் போற!!" என்று மனதிற்குள் பயத்தோடு நினைத்து கொண்டு அருணாவைப் பார்த்தாள் மது.
மதுவை அங்கிருந்த ஒரு கதிரையில் அமர வைத்து விட்டு உள்ளே சென்ற அருணா டவலோடு வந்தார்.
"உனக்கு எத்தனை வாட்டி சொல்றது மது? மழையில் நனையாதேனு. உனக்கு தான் மழையில் நனைஞ்சா ஒத்துக்காதுனு தெரியும்லே! எல்லாம் தெரிஞ்சும் இன்னும் சின்ன பொண்ணாவே நடந்துட்டு இருக்க. நாளைக்கு கல்யாணம் பண்ணி இன்னொரு வீட்டுக்கு போன அப்புறம் அங்க போயும் இப்படி பண்ணுண வை. மாமியார் நல்லா நாலு சாத்து சாத்துவா அப்போ தான் உனக்கு ரோஷம் வரும்" என்று அருணா கோபமாக பேசி கொண்டே மதுவின் தலையை துவட்டி விட்டு கொண்டிருக்க மதுவோ அவர் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாமல்
"அம்மா இந்த பக்கம் அப்படியே துவட்டி விடு....அப்படியே மத்த சைட்டும்.....இந்த பக்கமும் மா...அப்படியே கொஞ்சம் லெப்ட் சைட்.....இன்னும் கொஞ்சம் ரைட் சைட் வாம்மா" என்று கூறி கொண்டிருக்க அவள் தலையில் கொட்டு ஒன்று வைத்தார் அருணா.
"நான் என்ன வண்டியை ரிவேர்ஸ் எடுத்துட்டா இருக்கேன்? இந்த சைட் வா..அந்த சைட் வானு சொல்ற? போய் ட்ரெஸை மாத்திட்டு வந்து சாப்பிடு" என்று அருணா கூறி விட்டு செல்ல
"ஹப்பாடா....அருணாதேவியின் பஜனை ஓவர்.." என்ற மது தன்னறைக்குள் நுழைந்து கொண்டாள்.
சிறிது நேரத்தில் சாதாரண காட்டன் குர்தி, ஜீன்ஸிற்கு மாறிக் கொண்ட மது ஹாலில் வந்து அமர்ந்து கொண்டு டிவியை ஆன் செய்து பார்த்து கொண்டிருந்தாள்.
மது வந்து அமர்ந்ததும் ஒரு தட்டு நிறைய மிளகாய் பஜ்ஜி மற்றும் காபி கப் ஒன்றை மதுவின் முன் கொண்டு வந்து வைத்தார் அருணா.
சொன்ன மாதிரியே இன்னைக்கு ud போட்டு விட்டேன்.
மறக்காமல் ஒரு லைக் அன்ட் கமெண்ட்ஸ்
பயண அலுப்பு தீர ஒரு குளியல் போட்டு விட்டு வந்த அருள் வெளியில் மழை தூரும் சத்தம் கேட்கவும் பால்கனிக் கதவை திறந்து கொண்டு வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றான்.
மண் வாசனை அவன் நாசியை நிறைக்க குளிர் காற்றும், மழைச் சாரலும் அவன் மனதில் ஓர் இனம் புரியாத அமைதியை ஏற்படுத்தியது.
நாளை மதுவை நேருக்கு நேராக பார்க்க போகிறோம் என்ற எண்ணம் அவனை ஆனந்த வெள்ளத்தில் திளைக்கச் செய்தது.
அந்த ஏகாந்தமான சூழ் நிலையை அருள் ரசித்து கொண்டிருக்கையில் ஷோபாவின்
"அத்தான்..." என்ற அழைப்பில் சலித்து கொண்டவாறே அருள் திரும்பினான்.
"நீ இன்னும் வீட்டுக்கு கிளம்பாம இங்க என்ன பண்ணிட்டு இருக்க?" என்று அருள் கேட்கவும்
"மழை பெய்யவும் அத்தை கொஞ்சம் லேட்டா போக சொன்னாங்க அதுதான் அத்தான் போகல" என்று ஷோபா கூற
"ஆமா பெரிய லண்டன்ல இருக்கு இவ வீடு. பக்கத்து தெருவுக்கு போறதுக்கு இவ்வளவு பில்டப்பு" என்று முணுமுணுத்துக் கொண்டு நின்றான் அருள்.
"அத்தான் ஐ யம் ஸாரி..நான் ஏதோ தெரியாம அப்படி பேசிட்டேன். அம்மா வீட்டுக்கு வந்து ஒரே அழுகை. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதனால என்ன பேசுறேனு கூட தெரியாம அப்படி நடந்துக்கிட்டேன். மன்னிச்சுக்கோங்க அத்தான் ப்ளீஸ்.." என்று கூறி விட்டு கண்களை ஷோபா துடைத்து கொள்ள அருளிற்கு அவள் மேல் மீண்டும் கோபத்தை காட்ட முடியவில்லை.
"தங்களுடைய பெற்றோர் அழுதால் எந்த பிள்ளையும் கோபம் கொள்ளத்தான் செய்யும் அது தானே இயல்பு!" என்று எண்ணிக் கொண்ட அருள்
"சரி சரி அழாதே!! இனிமே பெரியவங்க கிட்ட பார்த்து பேசனும் சரியா?" என்று கேட்கவும்
"ஹையா!!! அத்தான் என்ன மன்னிச்சுட்டாங்க" என்று அவள் குதூகலமாக சிரிக்க அவளை பார்த்து புன்னகத்து கொண்டான் அருள்.
"அத்தான் வாங்க போய் சாப்பிடலாம். நான், விஜி, அத்தை எல்லோரும் சேர்ந்து வாழைக்காய் பஜ்ஜி செய்துருக்கோம். மழை பெய்யுற டைம்ல சூடான பஜ்ஜி செம்மயா இருக்கும். வாங்க அத்தான்.." என்று அருளின் கை பிடித்து ஷோபா அழைக்க
அவள் கைகளில் இருந்து தன் கையை மெல்ல எடுத்து கொண்ட அருள்
"விஜியும் நீயுமா? அப்போ இன்னைக்கு எல்லோரையும் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட வேண்டியது தான். மறந்து போய் கூட காக்காக்கு நீங்க பண்ணுண பஜ்ஜியை போட்றாதீங்க! அநியாயமாக ஒரு உயிரை கொன்ன பாவம் நம்ம குடும்பத்துக்கு வந்துடக் கூடாது" என்று சிரித்துக் கொண்டே கூறவும்
அவனை முறைத்து பார்த்த ஷோபா
"அத்தான் திஸ் இஸ் டூ மச்..நான் குக்கரி கிளாஸ்க்கு எல்லாம் போறேன் தெரியுமா? நான் நல்லா சமைப்பேன். ஒரு வாட்டி சாப்பிட்டிங்கனா அப்புறம்.."
"நான் ஒரேயடியாக போய் சேர்ந்துடுவேன் அதுதானே?" என்று அருள் கூற
கோபமாக திரும்பி கொண்டாள் ஷோபா.
"சரி சரி நீ குக்கிங் எக்ஸ்பேர்ட் தான் போதுமா? வா அப்படி எல்லாருமா சேர்ந்து என்னத்த பண்ணி வைச்சுருக்கீங்கனு ஒரு கை பார்ப்போம்" என்று விட்டு அருள் செல்ல அவன் பின்னால் முகம் நிறைந்த புன்னகையோடு சென்றாள் ஷோபா.
ஷோபாவும், அருளும் ஒன்றாக சிரித்துக் கொண்டே படியிறங்கி வருவதைப் பார்த்த வத்சலா சுலோச்சனா தன்னிடம் அருளின் திருமணம் பற்றி கூறிய விடயங்களை ஒரு தரம் நினைத்து பார்த்துக் கொண்டார்.
வத்சலா ஏதோ சிந்தித்து கொண்டிருப்பதை பார்த்து அவரருகில் வந்து நின்ற விஜி
"என்னம்மா ஏதோ பலமா யோசிச்சுட்டு இருக்க??" என்று கேட்கவும்
"அங்கே பாரு அருளும், ஷோபாவும் பேசிட்டு வர்றாங்க" என்று வத்சலா கூற அவர்கள் இருவரையும் திரும்பி பார்த்தாள் விஜி.
"ஆமா பேசிட்டு வர்றாங்க இதுல என்னத்தம்மா யோசிக்குறீங்க? ஒரு வேளை அண்ணா கோபமாக பேசிட்டு இப்போ சிரிச்சுட்டு வர்றானேனு யோசிக்குறீங்களா? அண்ணாவைப் பத்தி தெரியும் தானேமா! அஞ்சு நிமிஷத்துக்கு மேல அண்ணனால கோபத்தை வைச்சிக்க முடியாது" என்று விஜி கூறவும்
அவளைப் பார்த்து புன்னகத்த வத்சலா
"அருளை பத்தி எனக்கு தெரியாதா? நான் அதை சொல்லல" என்று கூற
"அப்போ வேற என்ன? அண்ணா இதுக்கு முன்னாடி பேசாம இருந்துட்டு இப்போ தான் பேசுற மாதிரி சொல்ற? இல்லை அந்த ஷோபா இதுக்கு முன்னாடி ஊமையா இருந்தாளா?" என்று விஜி கேட்டாள்.
"கேள்வியும் நானே பதிலும் நானேனு நீயே பேசுனா அப்போ நான் என்ன தான் சொல்லுறது?" என்று வத்சலா கேட்கவும்
"சரி சரி யூ மே ப்ரோசீட் யுவர் ஹானர்" என்று விஜி கூற
"அருளுக்கும், ஷோபாவுக்கும் நல்ல ஜோடி பொருத்தம்லே" என்று வத்சலா கூறவும் திகைப்புடன் அவரை பார்த்தாள் விஜி.
"அம்மா...." என்று அவள் கூறத் தொடங்கவும் அருளும், ஷோபாவும் அவர்கள் அருகில் வரவும் சரியாக இருந்தது.
ஷோபாவையும், அருளையும் வைத்து கொண்டு எதுவும் பேசக்கூடாது என்று நினைத்து கொண்ட விஜி அமைதியாக நின்றாள்.
"என்ன விஜி? நீயும், ஷோபாவும் இன்னைக்கு கிச்சன்ல புல்லா பூந்து விளையாடிட்டீங்க போல. அப்படி என்ன கருமத்தை....ஸாரி ஸாரி என்ன தேவாமிர்தத்தை பண்ணி வைச்சிருக்கிங்கனு பார்க்க ஆவலாக வந்துருக்கேன். போய் எடுத்துட்டு வா" என்று அருள் கூறவும்
எதுவுமே கூறாமல் அவர்கள் செய்து வைத்திருந்த பஜ்ஜியை அருளிடம் கொண்டு வந்து கொடுத்தாள் விஜி.
விஜி அமைதியாக இருப்பதைப் பார்த்து கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்த அருள்
"இவ ஏன் இன்னைக்கு இவ்வளவு சைலண்டா இருக்கா? ஒரு வேளை ஷோபா கோபமாக பேசுனது நினைச்சு கவலைப்படுறாளா? மே பீ இருக்கலாம்" என்று கேள்வியும் அவனே கேட்டு கொண்டு பதிலையும் அவனே உருவாக்கி கொண்டான்.
மழை முற்றாக நிற்கும் வரையிலும் மழையில் ஆட்டம் போட்ட மதுவை இழுத்து செல்லாத குறையாக காரில் கொண்டு போய் அடைத்து வைத்தான் ஸ்ரீதர்.
அவள் காரை விட்டு இறங்குவதற்குள் அவசரமாக காரை ஸ்டார்ட் செய்த ஸ்ரீதர்
"பார்க்குறவங்க எல்லாரும் நான் உன்னை கடத்திட்டுப் போறேனு நினைச்சுக்கப் போறாங்க மது. கொஞ்ச நேரம் வீட்டுக்கு போற வரைக்கும் அமைதியா வா" என்று கூறவும்
அவன் தோளில் தட்டிய மது
"எதுக்கு ஸ்ரீ இப்போ என்ன இப்படி இழுத்துட்டு வந்த? நான் எவ்வளவு ஹேப்பியா மழையில் என்ஜாய் பண்ணிட்டு இருந்தேன். இன்னும் கொஞ்சம் நேரம் விட்டுருந்தா.."
"ஜன்னி புடிச்சு செத்திருப்ப..." என்று ஸ்ரீதர் கூற அவனை முறைத்து பார்த்தாள்.
"நீ இப்போ மழையில நனைஞ்சது மட்டும் அம்மாக்கு தெரிஞ்சதுனு வை நனைஞ்ச உன்ன விட நனைய வைச்ச என்னத்தான் திட்டி தீர்ப்பாங்க" என்று ஸ்ரீதர் கூறவும்
அவனைப் பார்த்து சிரித்த மது
"எங்க அம்மானா உனக்கு அவ்வளவு பயமா ஸ்ரீ? சொல்லவே இல்ல. சரி சரி டோன்ட் வொர்ரி. அம்மா கிட்ட நான் பேசி உன்னை திட்டு வாங்காம நான் காப்பாத்துரேன் ஓகே வா?" என்று கேட்டாள்.
காரை நிறுத்திய ஸ்ரீதர்
"என்னைக் காப்பாத்துரது இருக்கட்டும். உன் அம்மா வாசல்லயே காத்துட்டு நிற்குறாங்க. முதல்ல அவங்க கிட்ட இருந்து நீ தப்பிச்சுக்க. நான் இப்படியே வீட்டுக்கு ஓடிடுறேன்" என்று கூறவும்
திரும்பி பார்த்த மது அப்போது தான் தன்னுடைய வீட்டிற்கு வந்து விட்டோம் என்பதை உணர்ந்தாள்.
வீட்டு வாயிலில் பதட்டத்துடன் அருணா நின்று கொண்டிருப்பதை பார்த்து தயங்கி தயங்கி காரை விட்டு இறங்கினாள் மது.
மது இறங்கியதும் தான் தாமதம் காரை எடுத்துக்கொண்டு பறந்து சென்றான் ஸ்ரீதர்.
"எருமை தனியா என்ன அருணாதேவி கிட்ட மாட்ட வைச்சுட்டு எஸ்கேப் ஆகிட்டான். நாளைக்கு ஆபீஸ்க்கு வரட்டும். அவனை கவனிச்சுக்குறேன்" என்று மனதினுள் கருவிக் கொண்ட மது வீட்டினுள் அடியெடுத்து வைக்க அவள் முன்னால் வந்து நின்றார் அருணா.
அருணாவைப் பார்த்து புன்னகத்தவாறே மெதுவாக வீட்டிற்குள் நுழைந்து கொள்ளப் போன மதுவின் கைகளை பிடித்து கொண்டார் அருணா.
"ம்மா!! நான் நடந்து வந்துட்டு இருக்கும் போது திடீர்னு 'சோ'னு மழை. ஒரு இடம் தேடி நிற்குறதுக்குள்ள புல்லா நனைஞ்சிட்டேன். அப்போ தான் ஸ்ரீ அந்த வழியா வந்தான். மழையில நனைஞ்சா அம்மா திட்டுவாங்க பத்திரமா என்ன வீட்டுல கொண்டு போய் விடச் சொன்னனா அது தான் விட்டுட்டு போய்ட்டான். இது தான்ம்மா நடந்துச்சு. நான் மழையில வேணும்னு ஒண்ணும் நனையலமா" என்று மது ஒரே மூச்சில் கூறி முடிக்கவும்
அவளையே பார்த்து கொண்டு நின்ற அருணா
"நான் உன்கிட்ட என்ன ஆச்சு? ஏது ஆச்சுனு எதுவுமே கேட்கலயே?" என்று கூற
"அய்யய்யோ!!! நானாவே உளறிட்டேனா? இன்னைக்கு அருணா என்னை காலி பண்ணப் போற!!" என்று மனதிற்குள் பயத்தோடு நினைத்து கொண்டு அருணாவைப் பார்த்தாள் மது.
மதுவை அங்கிருந்த ஒரு கதிரையில் அமர வைத்து விட்டு உள்ளே சென்ற அருணா டவலோடு வந்தார்.
"உனக்கு எத்தனை வாட்டி சொல்றது மது? மழையில் நனையாதேனு. உனக்கு தான் மழையில் நனைஞ்சா ஒத்துக்காதுனு தெரியும்லே! எல்லாம் தெரிஞ்சும் இன்னும் சின்ன பொண்ணாவே நடந்துட்டு இருக்க. நாளைக்கு கல்யாணம் பண்ணி இன்னொரு வீட்டுக்கு போன அப்புறம் அங்க போயும் இப்படி பண்ணுண வை. மாமியார் நல்லா நாலு சாத்து சாத்துவா அப்போ தான் உனக்கு ரோஷம் வரும்" என்று அருணா கோபமாக பேசி கொண்டே மதுவின் தலையை துவட்டி விட்டு கொண்டிருக்க மதுவோ அவர் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாமல்
"அம்மா இந்த பக்கம் அப்படியே துவட்டி விடு....அப்படியே மத்த சைட்டும்.....இந்த பக்கமும் மா...அப்படியே கொஞ்சம் லெப்ட் சைட்.....இன்னும் கொஞ்சம் ரைட் சைட் வாம்மா" என்று கூறி கொண்டிருக்க அவள் தலையில் கொட்டு ஒன்று வைத்தார் அருணா.
"நான் என்ன வண்டியை ரிவேர்ஸ் எடுத்துட்டா இருக்கேன்? இந்த சைட் வா..அந்த சைட் வானு சொல்ற? போய் ட்ரெஸை மாத்திட்டு வந்து சாப்பிடு" என்று அருணா கூறி விட்டு செல்ல
"ஹப்பாடா....அருணாதேவியின் பஜனை ஓவர்.." என்ற மது தன்னறைக்குள் நுழைந்து கொண்டாள்.
சிறிது நேரத்தில் சாதாரண காட்டன் குர்தி, ஜீன்ஸிற்கு மாறிக் கொண்ட மது ஹாலில் வந்து அமர்ந்து கொண்டு டிவியை ஆன் செய்து பார்த்து கொண்டிருந்தாள்.
மது வந்து அமர்ந்ததும் ஒரு தட்டு நிறைய மிளகாய் பஜ்ஜி மற்றும் காபி கப் ஒன்றை மதுவின் முன் கொண்டு வந்து வைத்தார் அருணா.