- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
அத்தியாயம் – 7
ஐநூறு ஆண்டுகளுக்கு முன் :
ரதம் நேராக தஞ்சை அரண்மனை நோக்கி செல்வதை பார்த்து, மதியழகி குழப்பம் அடைந்தாள் முதலில். பின்னர் காரணமில்லாமல், தந்தை இங்கு அழைத்து செல்ல மாட்டார் என்பதை அறிந்து, அவள் அந்த அரண்மனையில் வசிக்கும் தன் பாட்டனாரை சந்திக்க, மகிழ்ச்சியுடன் சென்றாள்.
ஆனால் அவளின் அன்னைக்கும், சிறிய அன்னைக்கும் கலக்கம் உண்டானது. விஷயம் ஏதோ பெரியது என்ற அளவில் புரிந்ததே தவிர, அவர்களுக்கும் என்ன விவரம் என்று தெரியாததால், சற்று கவலை கொண்டனர்.
அரசர் இளங்கோவன் மனதிற்குள், தன் மகள் மதியழகியை ஆபத்தில் இருந்து மீட்க, தன் மாமனார் நிச்சயம் ஒரு வழி யோசித்து இருப்பார். அதை தெரிந்து கொள்வதோடு, அவரின் நலத்தையும் நேரில் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணியே, எல்லோரயும் அழைத்துக் கொண்டு அங்கே விரைந்தார்.
தஞ்சை அரண்மனைக்குள் ரதம் சென்று கொண்டு இருந்தது, இப்பொழுது. மிடார நாட்டு அரண்மனையை விட, மிகப் பெரிய அரண்மனை இந்த தஞ்சை அரண்மனை. இதன் வளாகம் மட்டுமே, 110 பரப்பளவு கொண்டு அமைந்து இருந்தது.
மதியழகிக்கு எப்பொழுதும், இதன் அமைப்பு மற்றும் அந்த அரண்மனையின் பிரமாண்டமும் ஒவ்வொரு முறையும், அவளை வியப்பில் ஆழ்த்தி கொண்டு இருக்கும். அவளின் தாயார் மங்கையர்கரசிக்கு, தன் பிறந்த வீடு வந்த உணர்வு தான் இருக்குமே தவிர அதன் பிரமாண்டம் கண்ணில் பட்டது கிடையாது.
ஆனால் இந்த அரண்மனைக்கு ஒவ்வொரு முறை வரும் பொழுதும், சற்று தயங்கிய படியே வருவார்கள் மதியழகியின் சிறிய அன்னையும், அவளின் தம்பி இளமாறனும். ஏனெனில், குமாரிதேவி குறவர் குலத்தை சேர்ந்தவர்.
அவர் வசித்தது, பாண்டிய நாட்டில். ஒரு முறை சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் நடந்த போரில் அங்கே குறவர் குலத்தை சேர்ந்தவர்கள், சோழ நாட்டு வீரர்களால் அழிக்கப்பட்டு இருந்தனர்.
அதில் அவரின் தாய், தந்தையை பறிகொடுத்து இருந்தார். அதில் இருந்து சோழர்கள் மேல், அதிக வெறுப்பு கொண்டு இருந்தார். இவரும் அப்போரில் சிறிய நூலிலையில், இளங்கோவ வீரரால் காப்பாற்றப்பட்டு இருந்தார்.
அச்சமயத்தில் தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு, அதன் பின் மிடார நாட்டை கைப்பற்றிய கையோடு, மங்கையுடன் இவரையும் கைப்பற்றினார் இளங்கோவன் அரசர். தன் மகளுக்கு போட்டியாக வந்த இவரை, முதலில் யாரும் அறியாமல் சோழ மன்னர் அவமரியாதை செய்து வந்தார்.
மங்கைக்காகவும், இளங்கோவன் மன்னருக்காகவும் பொறுத்துக் கொண்டு இருந்தார் குமாரிதேவி. ஒரு முறை தந்தை இவரை அவமரியாதை செய்வதை பார்த்த மங்கை, தந்தையிடம் இவருக்காக சண்டையிட்டார்.
“தந்தையே! தங்கள் செய்வது சரியில்லை. அவர் என் கணவருக்கு மனைவி மட்டும் அல்ல, என் உடன் பிறவா சகோதரியும் ஆவார். இவரை நீங்கள் அவமரியாதை செய்தால், அது என்னை செய்தது போலாகும்” என்று தந்தையிடம் கூறிவிட்டு, குமாரிதேவியை அங்கு இருந்து அழைத்து சென்றார்.
சோழ மன்னருக்கு மகள் புரியாமல், நடந்து கொள்கிறாள் என்ற கோபம் தான் முதலில் வந்தது. ஆனால் போக போக, இவரின் நடவடிக்கையை பார்த்து, அவரே அசந்து விட்டார்.
மதியழகியை தன் மகளாகவே பாவித்து, அவளை கவனித்து கொண்ட விதம், தன் மகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடந்து கொண்ட விதமும் சோழ நாட்டு மன்னரை வியப்பில் ஆழ்த்தி, அவரையும் தன் மகளாகவே பாவித்து வந்தார்.
ஆனால் குமாரிதேவிக்கு தான், அன்று செய்த அவமரியாதை மனதில் அவரை அறியாமல் எழுந்து, சற்று ஒதுங்கியே இருந்தார். இதை நன்கு அறிந்த மங்கையர்கரசியும், அவரை அவர் போக்கில் விட்டு விட்டார்.
சோழ அரசர் இருந்த பகுதிக்கு, ரதம் வந்து நின்றது. இவர்களின் வருகையை அறிந்த சோழ அரசர், தகுந்த மரியாதையோடு அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, வீரர்களை அழைத்த மன்னர் இளங்கோவன் அவர்களின் உதவியுடன், சோழ மன்னரை அவரின் அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்தார்.
“தந்தையே! தாங்கள் இவ்வளவு சிரமத்துடன், எழுந்து வந்து எங்களை வரவேற்க வேண்டுமா? நாங்கள் உங்களை காண, இங்கே வந்து இருப்போமே” என்று கவலையுடன் கூறினார் மங்கை.
“அது முறையாகாது, மகளே! மகள்களும், மருமகனும் வந்து இருக்கும் சமயத்தில் இந்த அரண்மனை சார்பாக நான் வரவேற்ப்பது தான் முறை. உன் அண்ணன் இருந்தால், இப்பொழுது அவன் தான் வரவேற்று இருப்பான்”.
“அவனோ, உனக்கு மணமாகும் முன்பே, நம்மை விட்டு பிரிந்து அந்த கடவுளிடம் சென்று விட்டான்” என்று கூறி மகனின் நினைவில் கண் கலங்கினார்.
அதுவரை அமைதியாக ஒரு ஓரமாக இருந்த குமாரிதேவி, சோழ மன்னர் வருத்தம் கொண்டதோடு மட்டுமல்லாமல், மகள் மங்கையையும் வருத்திக் கொண்டு இருப்பதை பார்த்து, பேச்சை திசை மாற்ற எண்ணி, தன் இருப்பை அவருக்கு உணர்த்தினார்.
“தந்தையே! வருத்தம் கொள்ளாதீர்கள்! தங்களின் மருமகன், மகன் போல் அல்லவா இருக்கிறார் தங்களிடத்தில். பின்னர், ஏன் இந்த கவலை? முதலில் தங்களின் உடல்நிலை பற்றி கூறுங்கள், வைத்தியர் என்ன கூறுகிறார்?” என்று அவரை பார்த்து கேட்டார் குமாரிதேவி.
இத்தனை வருடத்தில், எவ்வளவு கெஞ்சியும் தந்தை என்று அழைக்காதவர், இன்று குமாரிதேவி அவரை தந்தை என்று அழைத்ததை கேட்டு ஆனந்தம் கொண்டார் சோழ மன்னர். அதே மகிழ்ச்சியுடன், அவர் அவர்களிடம் தன் உடல்நிலையை பற்றி விலக்கிவிட்டு, மதியழகி, இளமாறன் பற்றி விசாரித்தார்.
அப்பொழுது தான் அங்கே அந்த அறையில், இருவரும் இல்லாததை உணர்ந்து பெண்கள் இருவரும் திடுக்கிட்டனர். அது மட்டுமின்றி, இவர்கள் பேசிக் கொண்டு இருந்த நேரத்தில், மன்னர் இளங்கோவனும் அங்கு இருந்து சென்று இருந்தார்.
அங்கு இருந்த காவலாளியை அழைத்து விசாரித்ததில், மன்னர் இளங்கோவன் வைத்தியருடன் அடுத்த அறையில், சோழ அரசரின் உடல்நிலை குறித்து பேசிக் கொண்டு இருப்பதாக கூறிவிட்டு, மற்ற இருவரும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பதாக கூறினர்.
“குமாரி! பார்த்தாயா இருவரையும்! இங்கு அவர்களின் பாட்டனாரை வந்து பார்க்க கூட இல்லாமல், இருவரும் தோட்டத்தில் கதை அளந்து கொண்டு இருக்கிறதை” என்று பொருமினார் மங்கை.
“தமக்கையே! கோபம் வேண்டாம்! இருவரும் சிறு பிள்ளைகள் அல்ல, முக்கியமான விஷயமாக இருக்ககூடும், அதனால் தான் அங்கே பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்”.
“நீங்களே பாருங்கள், இன்னும் சற்று நேரத்தில் இருவரும் இங்கே வந்து, அவர்களின் பாட்டனார் நலம் குறித்து கேட்பார்கள்” என்று குமாரி கூறி முடிக்கையில், இருவரும் உள்ளே நுழைந்து பாட்டனாரிடம் நலம் விசாரித்துக் கொண்டு இருந்தனர்.
“பார்த்தீர்களா அக்கா! ” என்று தமக்கையிடம் கண் ஜாடை காட்டினார் குமாரிதேவி. மங்கையும் அதை புரிந்து கொண்டு, சிரித்தார்.
இவர்கள் இங்கே பேசிக் கொண்டு இருக்கையில், உள்ளே வந்த மன்னர் இளங்கோவன் தன் மனைவிகளிடம் கண் ஜாடை செய்து, மதியையும், இளமாறனையும் அழைத்துக் கொண்டு செல்லுமாறு கூறினான்.
அவர்களும் அதை புரிந்து கொண்டு, அவர்களை அழைத்துக் கொண்டு வெளியேறினார்கள். அவர்கள் சென்றதை உறுதிபடுத்திக் கொண்டு, காவலர்களிடம் இனி யாரையும் அறைக்கு உள்ளே விட வேண்டாம் என்று கட்டளையிட்டான்.
அங்கே படுத்து இருந்த சோழ அரசர் பக்கத்தில், ஒரு இருக்கையில் அமர்ந்து அவரிடம் மதியழகிக்கு சூழ்ந்து இருக்கும் ஆபத்தை பற்றி விளக்கி கூறினார். அதைக் கேட்ட சோழ அரசர், சிறிது நேரத்திற்கு சிந்தனை வயப்பட்டார்.
“மருமகனே! எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், மிடார நாட்டு ராஜ்யத்தையும், இந்த அரண்மனையையும் கைப்பற்ற தான் மதியழகியை ஆபத்து சூழ்ந்து இருக்கிறது என்று கருதுகிறேன்” என்று கூறினார் சோழ அரசர்.
“அது மட்டுமே காரணம் இல்லை மாமா, மதியழகி பற்றி தங்களுக்கு நன்றாக தெரியும். காவிரிபூம்பட்டினம் அவள் சென்று இருக்கும் பொழுது, அங்கே வேந்தன் மன்னனின் ஆட்சியையும், அங்கே இருந்த வணிகன் பாசிலையும் சந்தித்து வந்து இருக்கிறாள்”.
“அங்கு இருக்கும் தற்போதைய நிலைமையை பற்றி சொல்லி, என்னை அங்கு உள்ள மக்களை காக்கும் படி கேட்டுக் கொண்டாள். இந்த செய்திகள் எல்லாம் தூதுவன் ஒருவன் மூலம், முன்னரே அறிந்து கொண்டு இருந்ததால், யாருமறியாமல் சில பாதுக்காப்புகளை அங்கே செய்தேன்” .
ஐநூறு ஆண்டுகளுக்கு முன் :
ரதம் நேராக தஞ்சை அரண்மனை நோக்கி செல்வதை பார்த்து, மதியழகி குழப்பம் அடைந்தாள் முதலில். பின்னர் காரணமில்லாமல், தந்தை இங்கு அழைத்து செல்ல மாட்டார் என்பதை அறிந்து, அவள் அந்த அரண்மனையில் வசிக்கும் தன் பாட்டனாரை சந்திக்க, மகிழ்ச்சியுடன் சென்றாள்.
ஆனால் அவளின் அன்னைக்கும், சிறிய அன்னைக்கும் கலக்கம் உண்டானது. விஷயம் ஏதோ பெரியது என்ற அளவில் புரிந்ததே தவிர, அவர்களுக்கும் என்ன விவரம் என்று தெரியாததால், சற்று கவலை கொண்டனர்.
அரசர் இளங்கோவன் மனதிற்குள், தன் மகள் மதியழகியை ஆபத்தில் இருந்து மீட்க, தன் மாமனார் நிச்சயம் ஒரு வழி யோசித்து இருப்பார். அதை தெரிந்து கொள்வதோடு, அவரின் நலத்தையும் நேரில் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணியே, எல்லோரயும் அழைத்துக் கொண்டு அங்கே விரைந்தார்.
தஞ்சை அரண்மனைக்குள் ரதம் சென்று கொண்டு இருந்தது, இப்பொழுது. மிடார நாட்டு அரண்மனையை விட, மிகப் பெரிய அரண்மனை இந்த தஞ்சை அரண்மனை. இதன் வளாகம் மட்டுமே, 110 பரப்பளவு கொண்டு அமைந்து இருந்தது.
மதியழகிக்கு எப்பொழுதும், இதன் அமைப்பு மற்றும் அந்த அரண்மனையின் பிரமாண்டமும் ஒவ்வொரு முறையும், அவளை வியப்பில் ஆழ்த்தி கொண்டு இருக்கும். அவளின் தாயார் மங்கையர்கரசிக்கு, தன் பிறந்த வீடு வந்த உணர்வு தான் இருக்குமே தவிர அதன் பிரமாண்டம் கண்ணில் பட்டது கிடையாது.
ஆனால் இந்த அரண்மனைக்கு ஒவ்வொரு முறை வரும் பொழுதும், சற்று தயங்கிய படியே வருவார்கள் மதியழகியின் சிறிய அன்னையும், அவளின் தம்பி இளமாறனும். ஏனெனில், குமாரிதேவி குறவர் குலத்தை சேர்ந்தவர்.
அவர் வசித்தது, பாண்டிய நாட்டில். ஒரு முறை சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் நடந்த போரில் அங்கே குறவர் குலத்தை சேர்ந்தவர்கள், சோழ நாட்டு வீரர்களால் அழிக்கப்பட்டு இருந்தனர்.
அதில் அவரின் தாய், தந்தையை பறிகொடுத்து இருந்தார். அதில் இருந்து சோழர்கள் மேல், அதிக வெறுப்பு கொண்டு இருந்தார். இவரும் அப்போரில் சிறிய நூலிலையில், இளங்கோவ வீரரால் காப்பாற்றப்பட்டு இருந்தார்.
அச்சமயத்தில் தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு, அதன் பின் மிடார நாட்டை கைப்பற்றிய கையோடு, மங்கையுடன் இவரையும் கைப்பற்றினார் இளங்கோவன் அரசர். தன் மகளுக்கு போட்டியாக வந்த இவரை, முதலில் யாரும் அறியாமல் சோழ மன்னர் அவமரியாதை செய்து வந்தார்.
மங்கைக்காகவும், இளங்கோவன் மன்னருக்காகவும் பொறுத்துக் கொண்டு இருந்தார் குமாரிதேவி. ஒரு முறை தந்தை இவரை அவமரியாதை செய்வதை பார்த்த மங்கை, தந்தையிடம் இவருக்காக சண்டையிட்டார்.
“தந்தையே! தங்கள் செய்வது சரியில்லை. அவர் என் கணவருக்கு மனைவி மட்டும் அல்ல, என் உடன் பிறவா சகோதரியும் ஆவார். இவரை நீங்கள் அவமரியாதை செய்தால், அது என்னை செய்தது போலாகும்” என்று தந்தையிடம் கூறிவிட்டு, குமாரிதேவியை அங்கு இருந்து அழைத்து சென்றார்.
சோழ மன்னருக்கு மகள் புரியாமல், நடந்து கொள்கிறாள் என்ற கோபம் தான் முதலில் வந்தது. ஆனால் போக போக, இவரின் நடவடிக்கையை பார்த்து, அவரே அசந்து விட்டார்.
மதியழகியை தன் மகளாகவே பாவித்து, அவளை கவனித்து கொண்ட விதம், தன் மகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடந்து கொண்ட விதமும் சோழ நாட்டு மன்னரை வியப்பில் ஆழ்த்தி, அவரையும் தன் மகளாகவே பாவித்து வந்தார்.
ஆனால் குமாரிதேவிக்கு தான், அன்று செய்த அவமரியாதை மனதில் அவரை அறியாமல் எழுந்து, சற்று ஒதுங்கியே இருந்தார். இதை நன்கு அறிந்த மங்கையர்கரசியும், அவரை அவர் போக்கில் விட்டு விட்டார்.
சோழ அரசர் இருந்த பகுதிக்கு, ரதம் வந்து நின்றது. இவர்களின் வருகையை அறிந்த சோழ அரசர், தகுந்த மரியாதையோடு அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, வீரர்களை அழைத்த மன்னர் இளங்கோவன் அவர்களின் உதவியுடன், சோழ மன்னரை அவரின் அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்தார்.
“தந்தையே! தாங்கள் இவ்வளவு சிரமத்துடன், எழுந்து வந்து எங்களை வரவேற்க வேண்டுமா? நாங்கள் உங்களை காண, இங்கே வந்து இருப்போமே” என்று கவலையுடன் கூறினார் மங்கை.
“அது முறையாகாது, மகளே! மகள்களும், மருமகனும் வந்து இருக்கும் சமயத்தில் இந்த அரண்மனை சார்பாக நான் வரவேற்ப்பது தான் முறை. உன் அண்ணன் இருந்தால், இப்பொழுது அவன் தான் வரவேற்று இருப்பான்”.
“அவனோ, உனக்கு மணமாகும் முன்பே, நம்மை விட்டு பிரிந்து அந்த கடவுளிடம் சென்று விட்டான்” என்று கூறி மகனின் நினைவில் கண் கலங்கினார்.
அதுவரை அமைதியாக ஒரு ஓரமாக இருந்த குமாரிதேவி, சோழ மன்னர் வருத்தம் கொண்டதோடு மட்டுமல்லாமல், மகள் மங்கையையும் வருத்திக் கொண்டு இருப்பதை பார்த்து, பேச்சை திசை மாற்ற எண்ணி, தன் இருப்பை அவருக்கு உணர்த்தினார்.
“தந்தையே! வருத்தம் கொள்ளாதீர்கள்! தங்களின் மருமகன், மகன் போல் அல்லவா இருக்கிறார் தங்களிடத்தில். பின்னர், ஏன் இந்த கவலை? முதலில் தங்களின் உடல்நிலை பற்றி கூறுங்கள், வைத்தியர் என்ன கூறுகிறார்?” என்று அவரை பார்த்து கேட்டார் குமாரிதேவி.
இத்தனை வருடத்தில், எவ்வளவு கெஞ்சியும் தந்தை என்று அழைக்காதவர், இன்று குமாரிதேவி அவரை தந்தை என்று அழைத்ததை கேட்டு ஆனந்தம் கொண்டார் சோழ மன்னர். அதே மகிழ்ச்சியுடன், அவர் அவர்களிடம் தன் உடல்நிலையை பற்றி விலக்கிவிட்டு, மதியழகி, இளமாறன் பற்றி விசாரித்தார்.
அப்பொழுது தான் அங்கே அந்த அறையில், இருவரும் இல்லாததை உணர்ந்து பெண்கள் இருவரும் திடுக்கிட்டனர். அது மட்டுமின்றி, இவர்கள் பேசிக் கொண்டு இருந்த நேரத்தில், மன்னர் இளங்கோவனும் அங்கு இருந்து சென்று இருந்தார்.
அங்கு இருந்த காவலாளியை அழைத்து விசாரித்ததில், மன்னர் இளங்கோவன் வைத்தியருடன் அடுத்த அறையில், சோழ அரசரின் உடல்நிலை குறித்து பேசிக் கொண்டு இருப்பதாக கூறிவிட்டு, மற்ற இருவரும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பதாக கூறினர்.
“குமாரி! பார்த்தாயா இருவரையும்! இங்கு அவர்களின் பாட்டனாரை வந்து பார்க்க கூட இல்லாமல், இருவரும் தோட்டத்தில் கதை அளந்து கொண்டு இருக்கிறதை” என்று பொருமினார் மங்கை.
“தமக்கையே! கோபம் வேண்டாம்! இருவரும் சிறு பிள்ளைகள் அல்ல, முக்கியமான விஷயமாக இருக்ககூடும், அதனால் தான் அங்கே பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்”.
“நீங்களே பாருங்கள், இன்னும் சற்று நேரத்தில் இருவரும் இங்கே வந்து, அவர்களின் பாட்டனார் நலம் குறித்து கேட்பார்கள்” என்று குமாரி கூறி முடிக்கையில், இருவரும் உள்ளே நுழைந்து பாட்டனாரிடம் நலம் விசாரித்துக் கொண்டு இருந்தனர்.
“பார்த்தீர்களா அக்கா! ” என்று தமக்கையிடம் கண் ஜாடை காட்டினார் குமாரிதேவி. மங்கையும் அதை புரிந்து கொண்டு, சிரித்தார்.
இவர்கள் இங்கே பேசிக் கொண்டு இருக்கையில், உள்ளே வந்த மன்னர் இளங்கோவன் தன் மனைவிகளிடம் கண் ஜாடை செய்து, மதியையும், இளமாறனையும் அழைத்துக் கொண்டு செல்லுமாறு கூறினான்.
அவர்களும் அதை புரிந்து கொண்டு, அவர்களை அழைத்துக் கொண்டு வெளியேறினார்கள். அவர்கள் சென்றதை உறுதிபடுத்திக் கொண்டு, காவலர்களிடம் இனி யாரையும் அறைக்கு உள்ளே விட வேண்டாம் என்று கட்டளையிட்டான்.
அங்கே படுத்து இருந்த சோழ அரசர் பக்கத்தில், ஒரு இருக்கையில் அமர்ந்து அவரிடம் மதியழகிக்கு சூழ்ந்து இருக்கும் ஆபத்தை பற்றி விளக்கி கூறினார். அதைக் கேட்ட சோழ அரசர், சிறிது நேரத்திற்கு சிந்தனை வயப்பட்டார்.
“மருமகனே! எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், மிடார நாட்டு ராஜ்யத்தையும், இந்த அரண்மனையையும் கைப்பற்ற தான் மதியழகியை ஆபத்து சூழ்ந்து இருக்கிறது என்று கருதுகிறேன்” என்று கூறினார் சோழ அரசர்.
“அது மட்டுமே காரணம் இல்லை மாமா, மதியழகி பற்றி தங்களுக்கு நன்றாக தெரியும். காவிரிபூம்பட்டினம் அவள் சென்று இருக்கும் பொழுது, அங்கே வேந்தன் மன்னனின் ஆட்சியையும், அங்கே இருந்த வணிகன் பாசிலையும் சந்தித்து வந்து இருக்கிறாள்”.
“அங்கு இருக்கும் தற்போதைய நிலைமையை பற்றி சொல்லி, என்னை அங்கு உள்ள மக்களை காக்கும் படி கேட்டுக் கொண்டாள். இந்த செய்திகள் எல்லாம் தூதுவன் ஒருவன் மூலம், முன்னரே அறிந்து கொண்டு இருந்ததால், யாருமறியாமல் சில பாதுக்காப்புகளை அங்கே செய்தேன்” .