வணக்கம் மக்களே! அழகியின் காதல் தவம் 3வது பகுதி அப்டேட் செய்துட்டாங்க உமா தீபக். படித்துவிட்டு கரத்துக்களை இங்கே பகிரவும்.
தவம் 3
அத்தியாயம் – 3
ஐநூறு வருடங்களுக்கு முன்பு:
அரண்மனைக்குள் நுழைந்ததுமே, அங்கே இருந்த மாற்றங்களை கண்டு கொண்டாள் மதியழகி. தோழிகளுக்கு யாருமறியாமல், கண் ஜாடை செய்து சுற்றி உள்ளவற்றை கவனிக்குமாறு பணித்தாள்.
என்ன தான் தோழிகளை கவனிக்க சொல்லி கூறினாலும், அவளும் கவனித்துக் கொண்டே தான் வந்தாள். அப்பொழுது அங்கே அமைச்சர் சிவனந்தர், இவளை நோக்கி வந்தார்.
அவரின் முகத்தை உற்று கவனித்தவளுக்கு, அதில் தெரிந்த பதற்றம் அவளை சற்று யோசிக்க வைத்தது.
“எதற்காக இந்த பதற்றம்? ஏன்?” என்ற கேள்வி அவளை வண்டாய் குடைந்தது.
அதற்குள் அவரே இவளை நெருங்கி, வரவேற்று அவளை உள்ளே அழைத்து சென்றார்.
“அமைச்சரே! என்னிடம் ஏதும், முக்கியமாக கூற வேண்டுமா?” என்று சற்று மெதுவாக அவருக்கு மட்டும் கேட்கும் படி வினவினாள்.
“ஆம்! இளவரசி தாங்கள் எதற்காக இங்கே விஜயம் செய்து இருக்கிறீர்கள்? இங்கே இப்பொழுது எதுவும் சரியில்லை!”.
“நீங்கள் உள்ளே மன்னரை பார்த்துவிட்டு, உடனே இங்கு இருந்து புறப்படுங்கள். தங்கள் தந்தையாரிடம் மட்டும், விஷயத்தை கூறி இங்கே வர செய்யுங்கள், அது போதும்” என்று அமைச்சர் சுற்றும், முற்றும் ஒரு பயந்த பார்வை பார்த்துக் கொண்டே வந்தார்.
“அமைச்சரே! யாரும் நம்மை பார்க்கவில்லை, ஆகையால் தைரியமாக என்னிடம் என்ன விவரம் என்று கூறுங்கள். ஏற்கனவே, என் தந்தைக்கு செய்தி அனுப்பியாகிவிட்டது”.
“ஆகையால், தாங்கள் கவலை கொள்ளாமல், என்னிடம் விஷயத்தை கூறுங்கள்” என்று அவரை தைரியப்படுத்தி, அவரிடம் இருந்து விஷயத்தை கறந்தாள் மதியழகி.
அவர் கூறிய விஷயங்களை கேட்டவள், மனதில் சொல்லொன்னா வேதனையும், சிலர் மேல் ஆத்திரமும் வந்தது. இந்த விஷயத்தை தன் தந்தையால் மட்டுமே, சரி செய்ய முடியும் என்பதை முழுமையாக நம்பினாள்.
ஆகையால் அவள் விஷயம் தனக்கு தெரிந்தது போல், காட்டிக் கொள்ளாமல் அங்கே அரசபைக்குள் நுழைந்தாள் தன் தோழிகளோடும், அமைச்சரோடும்.
“வருக வேண்டும்! இளவரசி மதியழகி! தாங்கள் நலமா? தங்கள் தந்தையார் மன்னர் இளங்கோவன் நலமா?” என்று அவளை வரவேற்று, விசாரித்துக் கொண்டு இருந்தார் இந்த காவிரிபூம்பட்டனத்தின் மன்னர் வேந்தன்.
கோபக்கார மன்னர், என்று எல்லோராலும் அழைக்கப்படும் இவருக்கு, இளவரசி மதியழகியை மணம் புரிய வேண்டும் என்பது அவரின் பல நாள் கனவு.
ஆனால் அவரால் கனவு மட்டுமே காண முடிந்ததே தவிர, இளவரசியை நெருங்க கூட முடியவில்லை. இன்று இங்கே தன்னருகில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டவும், அவருக்கு சந்தோஷத்தில் என்ன செய்ய வேண்டுமென்று கூட தோன்றவில்லை.
“நான் நலம்! என் தந்தையாரும் நலம்! தாங்கள் நலமா? இங்கே என் தோழிகளோடு சுற்றி பார்க்க வந்தேன், அரண்மனை கண்ணில் படவும் அப்படியே தங்களையும் பார்த்து செல்ல வேண்டும் என்று உள்ளே வந்தேன்” என்று கூறிய மதியழகியை பார்த்து பேரானந்தம் கொண்டார் வேந்தன் மன்னர்.
“நானும் நலம் இளவரசி! அவ்வளவு தூரம் வந்து இருப்பது களைப்பாக இருக்கும், சற்று பசியாறிவிட்டு ஓய்வு எடுதுதுவிட்டு அதன் பின் செல்லலாமே இளவரசி” என்று விருந்தோம்பல் செய்தார் மன்னர் வேந்தன்.
“தங்களின் விருந்தோம்பலுக்கு, நன்றி மன்னா! எங்களுக்கு பசி இல்லை, எதார்த்தமாக இந்த வழியே வந்ததால், தங்களையும் இந்த அரண்மனையையும் பார்த்து விட்டு செல்ல வந்தோம்”.
“அரண்மனையை சுற்றி பார்க்க, இப்பொழுது நாங்கள் செல்லலாமா?” என்று அவரின் விருந்தோம்பலை தவிர்த்துவிட்டு கேட்டாள் மதியழகி.
“தாரளமாக சுற்றி பார்க்க செல்லலாம், இளவரசி. யார் அங்கே? இளவரசி மதியழகியையும், அவரின் தோழிகளையும் அழைத்து சென்று நம் அரண்மனையை சுற்றி காட்டுங்கள்” என்று கட்டளையிட்டார், அந்த பணி பெண்களிடம்.
மதியழகி கண்களாலே, அவரிடம் விடை பெற்றுவிட்டு அந்த பணி பெண்கள் வழி காட்ட, தன் தோழிகளோடு சென்றாள். அவள் சென்ற அடுத்த நமிடம், அங்கு மன்னரை சந்திக்க வந்தான் பாசில் என்னும் வணிகன்.
“நீ எதற்காக, இப்பொழுது இங்கே வந்தாய் பாசில்? இளவரசி மதியழகி உன்னை பார்த்து விட்டால் ஆபத்து, முதலில் இங்கு இருந்து செல்” என்று அவனை அனுப்புவதில் குறியாக இருந்தார் மன்னர் வேந்தன்.
“நான் எதற்காக செல்ல வேண்டும்? இளவரசி தானே! அரசர் இல்லையே? கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை, ஆகையால் நான் வந்த வேலையை பார்த்து விட்டு செல்கிறேன்” என்று அங்கேயே ஒரு இருக்கையில் அமர்ந்தான் அந்த வணிகன்.
இளவரசி மதியழகியின், புத்தி சாதுரியம் பற்றி தெரியாத வணிகனும், வேந்தன் மன்னரும் தங்கள் சதி ஆலோசனையை நடத்திக் கொண்டு இருந்தனர்.
“மக்களிடம் வாங்கும் வரி பணம், அடுத்த முறை கூட்ட வேண்டும். அது மட்டுமின்றி, இன்னும் இங்கு உள்ள மக்களுக்கு பயம் என்றால் என்னவென்று காட்ட வேண்டும். இது போதாது அவர்களுக்கு, இன்று நடந்த ஒரு விஷயத்தை கூறினார்கள் என் ஆட்கள்”.
“என் ஒற்றன் ஒருவன், ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றான். அவனை தடுக்க, இங்கு இருப்பவர்களுக்கு பயம், அந்த அளவிற்கு பயத்தை நன்கு காண்பித்து இருக்கிறோம், இங்கு வாழும் மக்களிடத்தில்”.
“ அப்பொழுது அங்கே வந்த இளவரசி தான், அந்த பெண்ணை காப்பாற்றியதாக எனக்கு தகவல் கிட்டியது. பெண் புலியாக சீறினாள் என்று கேள்வி, எதற்கும் அது யார் என்று பார்த்து செல்ல தான் யாம் வந்ததே” என்று கூறிய வணிகனை அதிர்ச்சியோடு பார்த்தார் மன்னர் வேந்தன்.
“வேண்டாம் பாசில்! நீ இளவரசியை இப்பொழுது காண வேண்டாம். தோழிகளோடு அரண்மனையை சுற்றி பார்த்துவிட்டு, இளவரசி செல்லட்டும். எப்படியும், இந்த முறை நிச்சயம் எங்கள் திருமண பந்தம் உறுதியாகிவிடும்”.
“அதன் பிறகு, இங்கு என் மனைவியாக அழைத்து வந்த பிறகு நீ அவரை காணலாம்” என்று சற்று அழுத்தத்தோடு முடித்தார் மன்னர் வேந்தன்.
பாசிலை பற்றி நன்கு தெரிந்து கொண்ட பிறகு தான், வேந்தன் மன்னர் அவ்வாறு சொன்னதே. அவனுக்கு ஒன்று வேண்டும் என்றால், அதை எப்பாடுபட்டாவது அதை அடைந்தே தீருவான்.
அவனுக்கு பயம் என்பதும் கிடையாது, யாரை பற்றியும் கவலையும் கிடையாது. மற்றவர்கள் தன்னை பார்த்து பயப்பட வேண்டும், என்று என்னுவானே தவிர, அவன் யாருக்கும் அடி பணியவும் மாட்டான், பயப்படவும் மாட்டான்.
இவனின் கட்டுபாட்டில் தான், இந்த நகரம் இப்பொழுது இருக்கிறது. எங்கு எது நடந்தாலும், அவனுக்கு தகவல் உடனே வந்துவிடும்.
இப்பொழுது கூட, இங்கே இளவரசி இருக்கிறாள் என்று தெரிந்து தான் அவன் இங்கு வந்ததே.
அரண்மனையை சுற்றி பார்த்துவிட்டு, அங்கு வந்த இளவரசியும் அவளின் தோழிகளும் அங்கு இருந்த புதியவனை, ஆராய்ச்சி பார்வை பார்த்தனர்.
“இளவரசி இவர் தான் வணிகர் பாசில், இங்கு மக்களுக்கு தன்னாலான எல்லா உதவியும் செய்து கொடுத்து இருப்பவர் இவர் தான். மக்களுக்கு அடுத்து என்ன செய்ய போகிறார், என்று சொல்லிக் கொண்டு இருந்தார், அதற்குள் தாங்கள் வந்து விட்டீர்கள்”.
“வணிகரே! இவர் தான் இளவரசி மதியழகி, இளங்கோவன் மன்னரின் மகள்” என்று இருவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார் வேந்தன் மன்னர்.
“ஒ! அந்த கொள்ளை கூட்டத்து தலைவன், நீ தானோ! மிக்க மகிழ்ச்சி உன்னை சந்தித்ததில்” என்று கூறிவிட்டு, அங்கு இருந்த ராஜ இருக்கையில் கம்பீரமாக அமர்ந்தாள்.
இன்று :
ஆதித்ய வர்மா கெஸ்ட் ஹவுசில் அவனின் அறையில், கையை தலையில் வைத்துக் கொண்டு, பார்வையை கட்டிலில் படுத்து இருந்த பாவையை பார்த்து யோசனையோடு அமர்ந்து இருந்தான்.
அன்று ஆடிஷன் முடிந்து, விஷ்வா இவனை தேடி அங்கு உள்ள சின்ன கூரை வீட்டில் நுழைந்தான். ஆதிக்கு ஒன்று தீவீரமாக யோசிக்க வேண்டும் என்றால், அவன் வருவது இங்கே தான்.
அன்று விஷ்வா சலித்துக் கொண்ட அடுத்த நொடி, மேற் கூரையை கிழித்துக் கொண்டு குதித்தவளை பார்த்து அதிர்ந்து போயினர் இருவரும்.
“டேய் ஆதி! இவ தான், உன் படத்து ஹீரோயின் போல டா. கடவுள் நான் சொன்ன அடுத்த நொடி, மேல இருந்து இந்த பொண்ணை உனக்கு கொடுத்து இருக்கார் போல டா” என்று சர்வசாதரணமாக ஏதோ சாதனை செய்து முடித்தது போல், கூறிய நண்பனை பார்த்து முறைத்தான்.
“வாயை வச்சுக்கிட்டு சும்மா இரு டா, முதல எனக்கு ஒரு கை கொடு இந்த பொண்ணை தூக்க. அப்படியே அடுத்து இங்க என்ன செய்யணுமோ, அதை செய்து முடிச்சிடு புரியுதா?” என்று கேட்டான் ஆதி.
“நல்லா புரிஞ்சிடுச்சு டா, நீ இந்த பொண்ணை பார்த்து பத்திரமா கூட்டிட்டு போ” என்று கூறிய விஷ்வா அவனுக்கு, அவளை தூக்கிக் கொண்டு காரில் படுக்க வைக்க உதவினான்.
தவம் 3
அத்தியாயம் – 3
ஐநூறு வருடங்களுக்கு முன்பு:
அரண்மனைக்குள் நுழைந்ததுமே, அங்கே இருந்த மாற்றங்களை கண்டு கொண்டாள் மதியழகி. தோழிகளுக்கு யாருமறியாமல், கண் ஜாடை செய்து சுற்றி உள்ளவற்றை கவனிக்குமாறு பணித்தாள்.
என்ன தான் தோழிகளை கவனிக்க சொல்லி கூறினாலும், அவளும் கவனித்துக் கொண்டே தான் வந்தாள். அப்பொழுது அங்கே அமைச்சர் சிவனந்தர், இவளை நோக்கி வந்தார்.
அவரின் முகத்தை உற்று கவனித்தவளுக்கு, அதில் தெரிந்த பதற்றம் அவளை சற்று யோசிக்க வைத்தது.
“எதற்காக இந்த பதற்றம்? ஏன்?” என்ற கேள்வி அவளை வண்டாய் குடைந்தது.
அதற்குள் அவரே இவளை நெருங்கி, வரவேற்று அவளை உள்ளே அழைத்து சென்றார்.
“அமைச்சரே! என்னிடம் ஏதும், முக்கியமாக கூற வேண்டுமா?” என்று சற்று மெதுவாக அவருக்கு மட்டும் கேட்கும் படி வினவினாள்.
“ஆம்! இளவரசி தாங்கள் எதற்காக இங்கே விஜயம் செய்து இருக்கிறீர்கள்? இங்கே இப்பொழுது எதுவும் சரியில்லை!”.
“நீங்கள் உள்ளே மன்னரை பார்த்துவிட்டு, உடனே இங்கு இருந்து புறப்படுங்கள். தங்கள் தந்தையாரிடம் மட்டும், விஷயத்தை கூறி இங்கே வர செய்யுங்கள், அது போதும்” என்று அமைச்சர் சுற்றும், முற்றும் ஒரு பயந்த பார்வை பார்த்துக் கொண்டே வந்தார்.
“அமைச்சரே! யாரும் நம்மை பார்க்கவில்லை, ஆகையால் தைரியமாக என்னிடம் என்ன விவரம் என்று கூறுங்கள். ஏற்கனவே, என் தந்தைக்கு செய்தி அனுப்பியாகிவிட்டது”.
“ஆகையால், தாங்கள் கவலை கொள்ளாமல், என்னிடம் விஷயத்தை கூறுங்கள்” என்று அவரை தைரியப்படுத்தி, அவரிடம் இருந்து விஷயத்தை கறந்தாள் மதியழகி.
அவர் கூறிய விஷயங்களை கேட்டவள், மனதில் சொல்லொன்னா வேதனையும், சிலர் மேல் ஆத்திரமும் வந்தது. இந்த விஷயத்தை தன் தந்தையால் மட்டுமே, சரி செய்ய முடியும் என்பதை முழுமையாக நம்பினாள்.
ஆகையால் அவள் விஷயம் தனக்கு தெரிந்தது போல், காட்டிக் கொள்ளாமல் அங்கே அரசபைக்குள் நுழைந்தாள் தன் தோழிகளோடும், அமைச்சரோடும்.
“வருக வேண்டும்! இளவரசி மதியழகி! தாங்கள் நலமா? தங்கள் தந்தையார் மன்னர் இளங்கோவன் நலமா?” என்று அவளை வரவேற்று, விசாரித்துக் கொண்டு இருந்தார் இந்த காவிரிபூம்பட்டனத்தின் மன்னர் வேந்தன்.
கோபக்கார மன்னர், என்று எல்லோராலும் அழைக்கப்படும் இவருக்கு, இளவரசி மதியழகியை மணம் புரிய வேண்டும் என்பது அவரின் பல நாள் கனவு.
ஆனால் அவரால் கனவு மட்டுமே காண முடிந்ததே தவிர, இளவரசியை நெருங்க கூட முடியவில்லை. இன்று இங்கே தன்னருகில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டவும், அவருக்கு சந்தோஷத்தில் என்ன செய்ய வேண்டுமென்று கூட தோன்றவில்லை.
“நான் நலம்! என் தந்தையாரும் நலம்! தாங்கள் நலமா? இங்கே என் தோழிகளோடு சுற்றி பார்க்க வந்தேன், அரண்மனை கண்ணில் படவும் அப்படியே தங்களையும் பார்த்து செல்ல வேண்டும் என்று உள்ளே வந்தேன்” என்று கூறிய மதியழகியை பார்த்து பேரானந்தம் கொண்டார் வேந்தன் மன்னர்.
“நானும் நலம் இளவரசி! அவ்வளவு தூரம் வந்து இருப்பது களைப்பாக இருக்கும், சற்று பசியாறிவிட்டு ஓய்வு எடுதுதுவிட்டு அதன் பின் செல்லலாமே இளவரசி” என்று விருந்தோம்பல் செய்தார் மன்னர் வேந்தன்.
“தங்களின் விருந்தோம்பலுக்கு, நன்றி மன்னா! எங்களுக்கு பசி இல்லை, எதார்த்தமாக இந்த வழியே வந்ததால், தங்களையும் இந்த அரண்மனையையும் பார்த்து விட்டு செல்ல வந்தோம்”.
“அரண்மனையை சுற்றி பார்க்க, இப்பொழுது நாங்கள் செல்லலாமா?” என்று அவரின் விருந்தோம்பலை தவிர்த்துவிட்டு கேட்டாள் மதியழகி.
“தாரளமாக சுற்றி பார்க்க செல்லலாம், இளவரசி. யார் அங்கே? இளவரசி மதியழகியையும், அவரின் தோழிகளையும் அழைத்து சென்று நம் அரண்மனையை சுற்றி காட்டுங்கள்” என்று கட்டளையிட்டார், அந்த பணி பெண்களிடம்.
மதியழகி கண்களாலே, அவரிடம் விடை பெற்றுவிட்டு அந்த பணி பெண்கள் வழி காட்ட, தன் தோழிகளோடு சென்றாள். அவள் சென்ற அடுத்த நமிடம், அங்கு மன்னரை சந்திக்க வந்தான் பாசில் என்னும் வணிகன்.
“நீ எதற்காக, இப்பொழுது இங்கே வந்தாய் பாசில்? இளவரசி மதியழகி உன்னை பார்த்து விட்டால் ஆபத்து, முதலில் இங்கு இருந்து செல்” என்று அவனை அனுப்புவதில் குறியாக இருந்தார் மன்னர் வேந்தன்.
“நான் எதற்காக செல்ல வேண்டும்? இளவரசி தானே! அரசர் இல்லையே? கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை, ஆகையால் நான் வந்த வேலையை பார்த்து விட்டு செல்கிறேன்” என்று அங்கேயே ஒரு இருக்கையில் அமர்ந்தான் அந்த வணிகன்.
இளவரசி மதியழகியின், புத்தி சாதுரியம் பற்றி தெரியாத வணிகனும், வேந்தன் மன்னரும் தங்கள் சதி ஆலோசனையை நடத்திக் கொண்டு இருந்தனர்.
“மக்களிடம் வாங்கும் வரி பணம், அடுத்த முறை கூட்ட வேண்டும். அது மட்டுமின்றி, இன்னும் இங்கு உள்ள மக்களுக்கு பயம் என்றால் என்னவென்று காட்ட வேண்டும். இது போதாது அவர்களுக்கு, இன்று நடந்த ஒரு விஷயத்தை கூறினார்கள் என் ஆட்கள்”.
“என் ஒற்றன் ஒருவன், ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றான். அவனை தடுக்க, இங்கு இருப்பவர்களுக்கு பயம், அந்த அளவிற்கு பயத்தை நன்கு காண்பித்து இருக்கிறோம், இங்கு வாழும் மக்களிடத்தில்”.
“ அப்பொழுது அங்கே வந்த இளவரசி தான், அந்த பெண்ணை காப்பாற்றியதாக எனக்கு தகவல் கிட்டியது. பெண் புலியாக சீறினாள் என்று கேள்வி, எதற்கும் அது யார் என்று பார்த்து செல்ல தான் யாம் வந்ததே” என்று கூறிய வணிகனை அதிர்ச்சியோடு பார்த்தார் மன்னர் வேந்தன்.
“வேண்டாம் பாசில்! நீ இளவரசியை இப்பொழுது காண வேண்டாம். தோழிகளோடு அரண்மனையை சுற்றி பார்த்துவிட்டு, இளவரசி செல்லட்டும். எப்படியும், இந்த முறை நிச்சயம் எங்கள் திருமண பந்தம் உறுதியாகிவிடும்”.
“அதன் பிறகு, இங்கு என் மனைவியாக அழைத்து வந்த பிறகு நீ அவரை காணலாம்” என்று சற்று அழுத்தத்தோடு முடித்தார் மன்னர் வேந்தன்.
பாசிலை பற்றி நன்கு தெரிந்து கொண்ட பிறகு தான், வேந்தன் மன்னர் அவ்வாறு சொன்னதே. அவனுக்கு ஒன்று வேண்டும் என்றால், அதை எப்பாடுபட்டாவது அதை அடைந்தே தீருவான்.
அவனுக்கு பயம் என்பதும் கிடையாது, யாரை பற்றியும் கவலையும் கிடையாது. மற்றவர்கள் தன்னை பார்த்து பயப்பட வேண்டும், என்று என்னுவானே தவிர, அவன் யாருக்கும் அடி பணியவும் மாட்டான், பயப்படவும் மாட்டான்.
இவனின் கட்டுபாட்டில் தான், இந்த நகரம் இப்பொழுது இருக்கிறது. எங்கு எது நடந்தாலும், அவனுக்கு தகவல் உடனே வந்துவிடும்.
இப்பொழுது கூட, இங்கே இளவரசி இருக்கிறாள் என்று தெரிந்து தான் அவன் இங்கு வந்ததே.
அரண்மனையை சுற்றி பார்த்துவிட்டு, அங்கு வந்த இளவரசியும் அவளின் தோழிகளும் அங்கு இருந்த புதியவனை, ஆராய்ச்சி பார்வை பார்த்தனர்.
“இளவரசி இவர் தான் வணிகர் பாசில், இங்கு மக்களுக்கு தன்னாலான எல்லா உதவியும் செய்து கொடுத்து இருப்பவர் இவர் தான். மக்களுக்கு அடுத்து என்ன செய்ய போகிறார், என்று சொல்லிக் கொண்டு இருந்தார், அதற்குள் தாங்கள் வந்து விட்டீர்கள்”.
“வணிகரே! இவர் தான் இளவரசி மதியழகி, இளங்கோவன் மன்னரின் மகள்” என்று இருவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார் வேந்தன் மன்னர்.
“ஒ! அந்த கொள்ளை கூட்டத்து தலைவன், நீ தானோ! மிக்க மகிழ்ச்சி உன்னை சந்தித்ததில்” என்று கூறிவிட்டு, அங்கு இருந்த ராஜ இருக்கையில் கம்பீரமாக அமர்ந்தாள்.
இன்று :
ஆதித்ய வர்மா கெஸ்ட் ஹவுசில் அவனின் அறையில், கையை தலையில் வைத்துக் கொண்டு, பார்வையை கட்டிலில் படுத்து இருந்த பாவையை பார்த்து யோசனையோடு அமர்ந்து இருந்தான்.
அன்று ஆடிஷன் முடிந்து, விஷ்வா இவனை தேடி அங்கு உள்ள சின்ன கூரை வீட்டில் நுழைந்தான். ஆதிக்கு ஒன்று தீவீரமாக யோசிக்க வேண்டும் என்றால், அவன் வருவது இங்கே தான்.
அன்று விஷ்வா சலித்துக் கொண்ட அடுத்த நொடி, மேற் கூரையை கிழித்துக் கொண்டு குதித்தவளை பார்த்து அதிர்ந்து போயினர் இருவரும்.
“டேய் ஆதி! இவ தான், உன் படத்து ஹீரோயின் போல டா. கடவுள் நான் சொன்ன அடுத்த நொடி, மேல இருந்து இந்த பொண்ணை உனக்கு கொடுத்து இருக்கார் போல டா” என்று சர்வசாதரணமாக ஏதோ சாதனை செய்து முடித்தது போல், கூறிய நண்பனை பார்த்து முறைத்தான்.
“வாயை வச்சுக்கிட்டு சும்மா இரு டா, முதல எனக்கு ஒரு கை கொடு இந்த பொண்ணை தூக்க. அப்படியே அடுத்து இங்க என்ன செய்யணுமோ, அதை செய்து முடிச்சிடு புரியுதா?” என்று கேட்டான் ஆதி.
“நல்லா புரிஞ்சிடுச்சு டா, நீ இந்த பொண்ணை பார்த்து பத்திரமா கூட்டிட்டு போ” என்று கூறிய விஷ்வா அவனுக்கு, அவளை தூக்கிக் கொண்டு காரில் படுக்க வைக்க உதவினான்.