அத்தியாயம் – 4
ஐநூறு வருடங்களுக்கு முன்பு:
ராஜ இருக்கையில், கம்பீரமாக அமர்ந்து இருக்கும் இளவரசி மதியழகியை பார்த்த அந்த வணிகன் பாசில், அவனையறியாமல் எழுந்து நின்றான்.
ராஜ வம்சத்து குடும்பத்தில் உள்ள எல்லோரிடமும், இந்த கம்பீரமும், மிடுக்கும் அவர்கள் கூடவே இருக்குமோ? கண்களில் உள்ள தீட்சயம், நிச்சயம் அவர் புத்திக் கூர்மை உள்ளவராக இருக்க வேண்டும், என்பதை நொடியில் கணித்து விட்டான் வணிகனான பாசில்.
இப்பொழுது கூட, கொள்ளை கூட்டத்து தலைவன் என்று தன்னை கூறுகிறார் என்றால், விஷயம் தெரிந்து தான் வருகை புரிந்து இருக்கிறார் என்று தானே அர்த்தமாகிறது.
“இளவரசி! தாங்கள் என்னை எதற்காக கொள்ள கூட்டத்து தலைவன், என்று விளித்தீர்கள்?” என்று பவ்யமாக கேட்டான் அந்த வணிகன்.
“ஒ அதுவா, வணிகரே! மக்களிடம் பொருள் விற்கும் பொழுது, தங்களை போல் உள்ளவர்கள் எல்லாம், இப்பொழுது லாபம் காண அதிக விலைக்கு அல்லவா விற்பனை செய்கிறார்கள்”.
“அப்பொழுது வணிகரான தங்களை, நான் அவ்வாறு விளிப்பது சரி தானே?” என்று இளவரசி கூறிய பின்பு, வணிகனுக்கு குழப்பம் சூழ்ந்தது.
இளவரசி கூறிய பதிலில், அவன் குழம்பி போனான். இங்கே நடப்பது அவருக்கு தெரிந்து இருக்குமா, இல்லையா? என்று மிகவும் குழம்பி போனான்.
“இளவரசி! இன்னும் சில மணி நேரத்தில் சூரியன் மறைந்து, சந்திரன் வரவிருக்கிறது. ஆகையால் தாங்கள், இங்கேயே தங்கி இளைப்பாறிவிட்டு, நாளை செல்லலாமே” என்று கேட்டார் மன்னர் வேந்தன்.
“மன்னிக்க வேண்டும் மன்னா! நாங்கள் இப்பொழுதே அங்கு செல்ல வேண்டும், வந்துவிடுவோம் என்று அன்னையிடம் சொல்லிவிட்டு தான் வந்து இருக்கிறேன்”.
“அங்கே எங்களுக்காக, எல்லோரும் காத்து இருப்பார்கள். ஆகையால், உடனே இங்கு இருந்து நாங்கள் செல்ல வேண்டும். எங்கள் ரதமும் தயார் நிலையில் தான் இருக்கிறது”.
“இப்பொழுது கிளம்பி சென்றால் தான், அங்கே செல்ல வசதியாக இருக்கும். இல்லையென்றால், என் தந்தை பெரும் படையையே திரட்டிக் கொண்டு வந்திடுவார் இங்கே” என்று கூறி நிறுத்திவிட்டு, கண்களை வணிகன் புறம் செலுத்தி, அவனை ஆராய்ந்தார் இளவரசி மதியழகி.
அரசர் இங்கு வந்திடுவார், தன்னை காணாமல் என்று இளவரசி சொன்ன அடுத்த நொடி, வணிகன் மன்னர் வேந்தனை ஒரு எச்சரிக்கை பார்வை பார்த்தார். அதை இளவரசியின் கண்கள் மட்டுமல்லாது, கங்காவின் கண்களும் அதை குறித்துக் கொண்டது.
கங்கா, இளவரசியின் தோழி மட்டும் அல்ல அவளின் பாதுகாப்புக்கு உரியவளும் கூட. இங்கே வருவதற்கு முன், இளவரசியின் தாய் மங்கை, கங்காவிடம் முதல் கட்டளையிட்டது பத்திரமாக மகளை அழைத்து வர வேண்டும் என்பது தான்.
தோழியை பற்றி நன்கு அறிந்த கங்காவும், இளவரசியின் பாதுகாப்பை தனதாக்கிக் கொண்டாள். இப்பொழுது இவர்களின் பார்வை பரிமாற்றத்தை பார்த்தவளும், தோழி இனி இங்கு இருப்பது சரியில்லை என்று தோன்றியது.
“இளவரசி! நாம் கிளம்பலாம், ரதம் தயாராக இருக்கிறது. இப்பொழுது கிளம்பினால் தான், மிடார நாட்டிற்கு சற்று சீக்கிரம் செல்ல முடியும்” என்று கங்கா, இளவரசி மதியழகியிடம் கூறினாள்.
தோழி கூறியதை ஏற்று, இளவரசியும் எல்லோரிடமும் விடைபெறும் நோக்கோடு அந்த இருக்கையில் இருந்து எழுந்தாள்.
“விடை பெறுகிறோம் மன்னா!” என்று கை குவித்து வணக்கம் தெரிவித்து மன்னர் வேந்தனிடம் விடை பெற்றாள்.
“ஆகட்டும் இளவரசி! அரசரிடம் நான் நலம் விசாரித்ததாக கூறுங்கள்” என்று மன்னர் வேந்தனும் விடை கொடுத்தார்.
“கண்டிப்பாக” என்று கூறிவிட்டு அங்கே அமைச்சரிடமும் விடை பெற்றாள் இளவரசி.
“வணிகரே! விடை பெறுகிறோம்!” என்று அவனிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார் இளவரசி மதியழகி.
அரண்மனை வாயில் வரை இளவரசியுடன் சென்று அவரை வழியனுப்ப, மன்னர் அமைச்சர் சிவனந்தரிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.
அரண்மனை வாயில் முன் நின்ற ரதத்தில், இளவரசி ரதத்தில் ஏறுவதற்கு முன் அமைச்சரை ஒரு பார்வை பார்த்து, தான் பார்த்துக் கொள்வதாக கண்களாலே அவருக்கு ஆறுதல் அளித்தார்.
அவருக்கும் அது புரிந்து, மனதில் பாரம் நீங்கி கண்களாலே விடை அளித்தார். இளவரசியும், அவருக்கு விடையளித்து விட்டு ரதத்தில் ஏறினாள்.
மற்ற தோழிகள், ரதத்தில் முன்னமே ஏறி காத்து இருந்தனர். இளவரசி மதியழகி ஏறிய பின்பு, கங்காவும் ஏறி அமர்ந்தாள். தேரோட்டியிடம் எடுக்க சொல்லி, கட்டளையிடவும் ரதம் அங்கு இருந்து நகர தொடங்கியது.
அவர்கள் அங்கு இருந்து செல்வதை, அரண்மனை மேல் தளத்தில் இருந்து பார்த்தனர் மன்னர் வேந்தனும், வணிகன் பாசிலும். அந்த ரகசிய அறையில் இருந்த இருவரும், வெவ்வேறு மனநிலையில் இதை பார்த்தனர்.
மன்னர் வேந்தனோ, மனம் கவர்ந்தவள் செல்கிறாளே என்று பார்த்தார் என்றால், வணிகனோ சந்தேகப்பார்வை பார்த்தான்.
இளவரசியின் கண்களில், ஏதோ தன்னை குறித்த ஆராய்ச்சி இருந்ததை உணர்ந்தே இருந்தான் வணிகன். அவனுக்கு இப்பொழுது, இளவரசி தன்னை பற்றி தெரிந்து கொண்டு சந்தித்தாரா, இல்லையா என்று சந்தேகமாக இருந்தது.
இதைப்பற்றி, மன்னர் வேந்தனிடம் கேட்க அவர் அவரை காண, அவரோ இன்னும் இளவரசி சென்ற வழியை தான் பார்த்துக் கொண்டு இருந்தார்.
அவர் கண்களில் வழிந்த காதலை கண்டு, வணிகன் இவரை வைத்து இளவரசியை நெருங்க சூழ்ச்சி ஒன்றை திட்டமிட்டுக் கொண்டான்.
மிடார நாட்டு அரண்மனை எல்லைக்குள் இளவரசியின் ரதம் நுழையவும், வீரர்கள் இளவரசிக்கு வழிவிட்டு தலை குனிந்து வணக்கம் செய்தனர். அதை ஒரு தலையசைப்புடன் ஏற்று, அரண்மனை வாயில் அருகே ரதம் நிற்கவும், கம்பீரம் குறையாமல் அதில் இருந்து இறங்கினாள்.
அவளின் அன்னை, அரசி மங்கையர்க்கரசி மகளை எதிர்கொண்டு அவளை அணைத்துக் கொண்டார்.
“மகளே மதி! ஏன் இந்த தாமதம்? இனி தொலைதூரம் பயணம் செய்வதை, சற்று நிறுத்திக் கொள்ளம்மா. நீ வரும் வரையில், என்னால் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை” என்று கூறினார்.
“அன்னையே! காவிரிபூம்பட்டனத்தில் தோழிகளோடு சேர்ந்து காவிரி நதியோடு விளையாடிவிட்டு, மக்கள் பிரச்சனைகளை கேட்டறிந்து, அதன் பின் அங்கே அரண்மனைக்கு சென்று, வேந்தன் மன்னரையும் சந்தித்துவிட்டு திரும்புகிறோம். ஆகையால், தான் இந்த தாமதம் அன்னையே” என்று விளக்கினாள் இளவரசி மதியழகி, தன் அன்னைக்கு.
“பெற்ற வயிறு, மகள் நலமாக திரும்பி வர வேண்டுமே, என்று பரிதவிக்கிறது. உனக்கு, நான் சொல்ல வருவது புரிகிறதல்லவா?” என்று அவளின் அன்னை மங்கையர்க்கரசி, அவளிடம் கேட்டார்.
“புரிகிறது தாயே! தோழிகளோடு நேரம் கழிக்க, நீண்ட நாட்கள் கழித்து இன்று தான் முடிந்தது. அது சற்று நேரம் பிடித்தது, அதான் தந்தையார் எங்களுக்கு தெரியாமல், வீரர்களை மாறு வேடத்தில் அனுப்பி பாதுகாத்தாரே”.
“அது மட்டுமா! கங்காவிடம் கூட நீங்கள் என் பாதுகாப்பு பற்றி, அவளிடம் கூறி எனக்கு கேடையமாக இருக்க செய்தீர்களே! அதன் பின்னரும், ஏன் தாயே இவ்வளவு பயம் தங்களுக்கு?”.
“தங்கள் மகள் இளவரசி மதியழகி, வீரத்திலும், புத்தி கூர்மையிலும் சிறந்து விளங்கியவள் அன்னையே, ஆகையால் கவலை கொள்ளாதீர்கள்” என்று கூறினாள் மதியழகி.
வாயிலில் நின்று பேசிக் கொண்டே இருந்தவர்கள், அப்பொழுது தான் சுற்றம் உணர்ந்து பேச்சை நிறுத்தினர். தோழிகள் தன்னிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப வேண்டும், என்று காத்து இருப்பதை அறிந்து விரைந்தாள் அவர்களிடம்.
“மன்னித்துக் கொள்ளுங்கள் தோழிகளே! தாயிடம் பேசும் மும்முரத்தில் உங்களை கவனிக்க தவறி விட்டேன்” என்று மன்னிப்பு வேண்டினாள்.
அவர்கள் திடுக்கிட்டு, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறினார்கள். அரசியும் இவர்கள் அருகில் வந்து, எல்லோரையும் நலம் விசாரித்து விட்டு, அவர்கள் பத்திரமாக வீடு செல்ல வீரர்களுடன் அனுப்பி வைத்தார்.
கங்காவை தவிர்த்து, மற்றவர்கள் இவளிடமும், அரசியிடமும் விடை பெற்றுக் கொண்டு சென்றனர். கங்காவுக்கு, அரண்மனை ஒட்டி அவளும் அவள் தாயும் வாழ, ஒரு சிறிய வீட்டை அரசரே முன்னின்று கட்டிக் கொடுத்து இருந்தார்.
தன் மகளின் தோழிக்காக மட்டுமில்லாமல், கங்காவின் தந்தை நீதிமான் அரசரின் உயிர் சிநேகிதர். இப்பொழுது கங்கா, இளவரசியை பாதுகாப்பது போல், அன்று அவளின் தந்தை அரசரை பாதுகாத்தார்.
ஒரு போரில், அரசரை காப்பாற்ற வேண்டி, அவர் தன் உயிரை மாய்த்து கொண்டார். அரசருக்கு அப்பொழுது, நீதிமானின் அன்னையும், மனைவி மற்றும் குழந்தையும் கண் முன் வந்தனர்.
“இப்படி இவர்களை, தனியாக தவிக்க விட்டு சென்று விட்டாயே நண்பா!” என்று அந்த இடத்திலே அழுது விட்டார்.
நண்பனுக்காக, அவரின் குடும்பத்தை பார்த்துக் கொள்வது தன் கடமை என்று எண்ணி,
ஐநூறு வருடங்களுக்கு முன்பு:
ராஜ இருக்கையில், கம்பீரமாக அமர்ந்து இருக்கும் இளவரசி மதியழகியை பார்த்த அந்த வணிகன் பாசில், அவனையறியாமல் எழுந்து நின்றான்.
ராஜ வம்சத்து குடும்பத்தில் உள்ள எல்லோரிடமும், இந்த கம்பீரமும், மிடுக்கும் அவர்கள் கூடவே இருக்குமோ? கண்களில் உள்ள தீட்சயம், நிச்சயம் அவர் புத்திக் கூர்மை உள்ளவராக இருக்க வேண்டும், என்பதை நொடியில் கணித்து விட்டான் வணிகனான பாசில்.
இப்பொழுது கூட, கொள்ளை கூட்டத்து தலைவன் என்று தன்னை கூறுகிறார் என்றால், விஷயம் தெரிந்து தான் வருகை புரிந்து இருக்கிறார் என்று தானே அர்த்தமாகிறது.
“இளவரசி! தாங்கள் என்னை எதற்காக கொள்ள கூட்டத்து தலைவன், என்று விளித்தீர்கள்?” என்று பவ்யமாக கேட்டான் அந்த வணிகன்.
“ஒ அதுவா, வணிகரே! மக்களிடம் பொருள் விற்கும் பொழுது, தங்களை போல் உள்ளவர்கள் எல்லாம், இப்பொழுது லாபம் காண அதிக விலைக்கு அல்லவா விற்பனை செய்கிறார்கள்”.
“அப்பொழுது வணிகரான தங்களை, நான் அவ்வாறு விளிப்பது சரி தானே?” என்று இளவரசி கூறிய பின்பு, வணிகனுக்கு குழப்பம் சூழ்ந்தது.
இளவரசி கூறிய பதிலில், அவன் குழம்பி போனான். இங்கே நடப்பது அவருக்கு தெரிந்து இருக்குமா, இல்லையா? என்று மிகவும் குழம்பி போனான்.
“இளவரசி! இன்னும் சில மணி நேரத்தில் சூரியன் மறைந்து, சந்திரன் வரவிருக்கிறது. ஆகையால் தாங்கள், இங்கேயே தங்கி இளைப்பாறிவிட்டு, நாளை செல்லலாமே” என்று கேட்டார் மன்னர் வேந்தன்.
“மன்னிக்க வேண்டும் மன்னா! நாங்கள் இப்பொழுதே அங்கு செல்ல வேண்டும், வந்துவிடுவோம் என்று அன்னையிடம் சொல்லிவிட்டு தான் வந்து இருக்கிறேன்”.
“அங்கே எங்களுக்காக, எல்லோரும் காத்து இருப்பார்கள். ஆகையால், உடனே இங்கு இருந்து நாங்கள் செல்ல வேண்டும். எங்கள் ரதமும் தயார் நிலையில் தான் இருக்கிறது”.
“இப்பொழுது கிளம்பி சென்றால் தான், அங்கே செல்ல வசதியாக இருக்கும். இல்லையென்றால், என் தந்தை பெரும் படையையே திரட்டிக் கொண்டு வந்திடுவார் இங்கே” என்று கூறி நிறுத்திவிட்டு, கண்களை வணிகன் புறம் செலுத்தி, அவனை ஆராய்ந்தார் இளவரசி மதியழகி.
அரசர் இங்கு வந்திடுவார், தன்னை காணாமல் என்று இளவரசி சொன்ன அடுத்த நொடி, வணிகன் மன்னர் வேந்தனை ஒரு எச்சரிக்கை பார்வை பார்த்தார். அதை இளவரசியின் கண்கள் மட்டுமல்லாது, கங்காவின் கண்களும் அதை குறித்துக் கொண்டது.
கங்கா, இளவரசியின் தோழி மட்டும் அல்ல அவளின் பாதுகாப்புக்கு உரியவளும் கூட. இங்கே வருவதற்கு முன், இளவரசியின் தாய் மங்கை, கங்காவிடம் முதல் கட்டளையிட்டது பத்திரமாக மகளை அழைத்து வர வேண்டும் என்பது தான்.
தோழியை பற்றி நன்கு அறிந்த கங்காவும், இளவரசியின் பாதுகாப்பை தனதாக்கிக் கொண்டாள். இப்பொழுது இவர்களின் பார்வை பரிமாற்றத்தை பார்த்தவளும், தோழி இனி இங்கு இருப்பது சரியில்லை என்று தோன்றியது.
“இளவரசி! நாம் கிளம்பலாம், ரதம் தயாராக இருக்கிறது. இப்பொழுது கிளம்பினால் தான், மிடார நாட்டிற்கு சற்று சீக்கிரம் செல்ல முடியும்” என்று கங்கா, இளவரசி மதியழகியிடம் கூறினாள்.
தோழி கூறியதை ஏற்று, இளவரசியும் எல்லோரிடமும் விடைபெறும் நோக்கோடு அந்த இருக்கையில் இருந்து எழுந்தாள்.
“விடை பெறுகிறோம் மன்னா!” என்று கை குவித்து வணக்கம் தெரிவித்து மன்னர் வேந்தனிடம் விடை பெற்றாள்.
“ஆகட்டும் இளவரசி! அரசரிடம் நான் நலம் விசாரித்ததாக கூறுங்கள்” என்று மன்னர் வேந்தனும் விடை கொடுத்தார்.
“கண்டிப்பாக” என்று கூறிவிட்டு அங்கே அமைச்சரிடமும் விடை பெற்றாள் இளவரசி.
“வணிகரே! விடை பெறுகிறோம்!” என்று அவனிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார் இளவரசி மதியழகி.
அரண்மனை வாயில் வரை இளவரசியுடன் சென்று அவரை வழியனுப்ப, மன்னர் அமைச்சர் சிவனந்தரிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.
அரண்மனை வாயில் முன் நின்ற ரதத்தில், இளவரசி ரதத்தில் ஏறுவதற்கு முன் அமைச்சரை ஒரு பார்வை பார்த்து, தான் பார்த்துக் கொள்வதாக கண்களாலே அவருக்கு ஆறுதல் அளித்தார்.
அவருக்கும் அது புரிந்து, மனதில் பாரம் நீங்கி கண்களாலே விடை அளித்தார். இளவரசியும், அவருக்கு விடையளித்து விட்டு ரதத்தில் ஏறினாள்.
மற்ற தோழிகள், ரதத்தில் முன்னமே ஏறி காத்து இருந்தனர். இளவரசி மதியழகி ஏறிய பின்பு, கங்காவும் ஏறி அமர்ந்தாள். தேரோட்டியிடம் எடுக்க சொல்லி, கட்டளையிடவும் ரதம் அங்கு இருந்து நகர தொடங்கியது.
அவர்கள் அங்கு இருந்து செல்வதை, அரண்மனை மேல் தளத்தில் இருந்து பார்த்தனர் மன்னர் வேந்தனும், வணிகன் பாசிலும். அந்த ரகசிய அறையில் இருந்த இருவரும், வெவ்வேறு மனநிலையில் இதை பார்த்தனர்.
மன்னர் வேந்தனோ, மனம் கவர்ந்தவள் செல்கிறாளே என்று பார்த்தார் என்றால், வணிகனோ சந்தேகப்பார்வை பார்த்தான்.
இளவரசியின் கண்களில், ஏதோ தன்னை குறித்த ஆராய்ச்சி இருந்ததை உணர்ந்தே இருந்தான் வணிகன். அவனுக்கு இப்பொழுது, இளவரசி தன்னை பற்றி தெரிந்து கொண்டு சந்தித்தாரா, இல்லையா என்று சந்தேகமாக இருந்தது.
இதைப்பற்றி, மன்னர் வேந்தனிடம் கேட்க அவர் அவரை காண, அவரோ இன்னும் இளவரசி சென்ற வழியை தான் பார்த்துக் கொண்டு இருந்தார்.
அவர் கண்களில் வழிந்த காதலை கண்டு, வணிகன் இவரை வைத்து இளவரசியை நெருங்க சூழ்ச்சி ஒன்றை திட்டமிட்டுக் கொண்டான்.
மிடார நாட்டு அரண்மனை எல்லைக்குள் இளவரசியின் ரதம் நுழையவும், வீரர்கள் இளவரசிக்கு வழிவிட்டு தலை குனிந்து வணக்கம் செய்தனர். அதை ஒரு தலையசைப்புடன் ஏற்று, அரண்மனை வாயில் அருகே ரதம் நிற்கவும், கம்பீரம் குறையாமல் அதில் இருந்து இறங்கினாள்.
அவளின் அன்னை, அரசி மங்கையர்க்கரசி மகளை எதிர்கொண்டு அவளை அணைத்துக் கொண்டார்.
“மகளே மதி! ஏன் இந்த தாமதம்? இனி தொலைதூரம் பயணம் செய்வதை, சற்று நிறுத்திக் கொள்ளம்மா. நீ வரும் வரையில், என்னால் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை” என்று கூறினார்.
“அன்னையே! காவிரிபூம்பட்டனத்தில் தோழிகளோடு சேர்ந்து காவிரி நதியோடு விளையாடிவிட்டு, மக்கள் பிரச்சனைகளை கேட்டறிந்து, அதன் பின் அங்கே அரண்மனைக்கு சென்று, வேந்தன் மன்னரையும் சந்தித்துவிட்டு திரும்புகிறோம். ஆகையால், தான் இந்த தாமதம் அன்னையே” என்று விளக்கினாள் இளவரசி மதியழகி, தன் அன்னைக்கு.
“பெற்ற வயிறு, மகள் நலமாக திரும்பி வர வேண்டுமே, என்று பரிதவிக்கிறது. உனக்கு, நான் சொல்ல வருவது புரிகிறதல்லவா?” என்று அவளின் அன்னை மங்கையர்க்கரசி, அவளிடம் கேட்டார்.
“புரிகிறது தாயே! தோழிகளோடு நேரம் கழிக்க, நீண்ட நாட்கள் கழித்து இன்று தான் முடிந்தது. அது சற்று நேரம் பிடித்தது, அதான் தந்தையார் எங்களுக்கு தெரியாமல், வீரர்களை மாறு வேடத்தில் அனுப்பி பாதுகாத்தாரே”.
“அது மட்டுமா! கங்காவிடம் கூட நீங்கள் என் பாதுகாப்பு பற்றி, அவளிடம் கூறி எனக்கு கேடையமாக இருக்க செய்தீர்களே! அதன் பின்னரும், ஏன் தாயே இவ்வளவு பயம் தங்களுக்கு?”.
“தங்கள் மகள் இளவரசி மதியழகி, வீரத்திலும், புத்தி கூர்மையிலும் சிறந்து விளங்கியவள் அன்னையே, ஆகையால் கவலை கொள்ளாதீர்கள்” என்று கூறினாள் மதியழகி.
வாயிலில் நின்று பேசிக் கொண்டே இருந்தவர்கள், அப்பொழுது தான் சுற்றம் உணர்ந்து பேச்சை நிறுத்தினர். தோழிகள் தன்னிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப வேண்டும், என்று காத்து இருப்பதை அறிந்து விரைந்தாள் அவர்களிடம்.
“மன்னித்துக் கொள்ளுங்கள் தோழிகளே! தாயிடம் பேசும் மும்முரத்தில் உங்களை கவனிக்க தவறி விட்டேன்” என்று மன்னிப்பு வேண்டினாள்.
அவர்கள் திடுக்கிட்டு, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறினார்கள். அரசியும் இவர்கள் அருகில் வந்து, எல்லோரையும் நலம் விசாரித்து விட்டு, அவர்கள் பத்திரமாக வீடு செல்ல வீரர்களுடன் அனுப்பி வைத்தார்.
கங்காவை தவிர்த்து, மற்றவர்கள் இவளிடமும், அரசியிடமும் விடை பெற்றுக் கொண்டு சென்றனர். கங்காவுக்கு, அரண்மனை ஒட்டி அவளும் அவள் தாயும் வாழ, ஒரு சிறிய வீட்டை அரசரே முன்னின்று கட்டிக் கொடுத்து இருந்தார்.
தன் மகளின் தோழிக்காக மட்டுமில்லாமல், கங்காவின் தந்தை நீதிமான் அரசரின் உயிர் சிநேகிதர். இப்பொழுது கங்கா, இளவரசியை பாதுகாப்பது போல், அன்று அவளின் தந்தை அரசரை பாதுகாத்தார்.
ஒரு போரில், அரசரை காப்பாற்ற வேண்டி, அவர் தன் உயிரை மாய்த்து கொண்டார். அரசருக்கு அப்பொழுது, நீதிமானின் அன்னையும், மனைவி மற்றும் குழந்தையும் கண் முன் வந்தனர்.
“இப்படி இவர்களை, தனியாக தவிக்க விட்டு சென்று விட்டாயே நண்பா!” என்று அந்த இடத்திலே அழுது விட்டார்.
நண்பனுக்காக, அவரின் குடும்பத்தை பார்த்துக் கொள்வது தன் கடமை என்று எண்ணி,