தவம் – 6
500 வருடங்களுக்கு முன் :
மிகப் பெரிய பூஜை அன்று சிவன் கோவிலில், அரசர் இளங்கோவன் ஏற்பாடு செய்து இருந்தார். தன் மகளுக்கு ஆபத்து இருப்பதை அறிந்து, அந்த ஈசனிடம் தன் மனபாரத்தை இறக்கி வைத்து, அவளை காத்து அருள் புரியுமாறு வேண்டினார்.
190 அடி உள்ள அந்த சிவனின் பிரமாண்டம், மதியழகிக்கு எப்பொழுதும் போல் பிரமிப்பை ஏற்படுத்தியது. ஏனோ அவளுக்கு எப்பொழுதும் போல், அந்த சிவனின் பிரமாண்டம் மனதில் பதிந்த அளவிற்கு, அவரை மனமார வேண்ட வேண்டும் என்று தோன்றியதே இல்லை.
அதன் அமைப்பு, அதன் வடிவம் உள்ளே உள்ள கற்பக அறை, அதன் சுற்றி உள்ள பரப்பளவு என்று கண்கள் அங்கே தான் சுற்றி கொண்டு இருந்தது. தீபாராதனை காட்டும் பொழுது, அதன் வெளிச்சம் சிவனின் மேல் விழும் பொழுது ஒரு சிலிர்ப்பு தனக்குள் ஓடுவதை உணர்ந்து, முதல்முறையாக கண்களை மூடி வேண்டினாள்.
அவளின் வேண்டுதல் எப்பொழுதும் போல், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே. இந்த முறை கூடுதலாக, அவளின் மணாளன் சீக்கிரம் அவள் கண்ணில் பட்டு, காதல் கொண்டு மணம் புரிய வேண்டும் என்று வேண்டினாள்.
இந்த முறை காவிரிபூம்பட்டினம் சென்று வந்ததில் இருந்து, ஏதோ கண்ணுக்கு தெரியாத மாயை ஒன்று தன்னை சுற்றி இருப்பதாக உணர்ந்தாள். எதற்கும் கலங்காத அவளின் தந்தை, அவளை நினைத்து கலங்குகிறார் என்றால், தன்னை சுற்றி ஏதோ ஆபத்து இருப்பதாக தான் தோன்றியது அவளுக்கு.
“தன்னை, கண்காணித்துக் கொண்டு இருக்கிறது போல் ஒரு உணர்வு தோன்றுகிறதே சமீபமாக! யாராய் இருக்கும்?” என்று எண்ணங்களில் வலம் வர தொடங்கவும், அங்கே கோவிலுக்குள் இருக்க முடியாமல், அவள் சிறிது நேரத்தில் தாயாரிடம் சொல்லிக் கொண்டு, அங்கே கோவிலை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த புல்வெளியில் வந்து அமர்ந்து கொண்டாள்.
அவளை சுற்றி இருந்த பணி பெண்களும், பாதுகாப்புக்கு இருந்த காவலர்களும் அதிர்ந்தனர், அவளின் இந்த செயலில். நாட்டின் இளவரசி, இப்படி புல் தரையில் அமர்ந்து இருந்தால், மன்னர் தங்களை அல்லவா சத்தமிடுவார்.
இளவரசி மதியழகி, இப்பொழுது என்ன மனநிலையில் இருக்கிறார் என்று தெரியாமலும் தவித்தனர். தாங்கள் ஒன்று சொல்ல, கோபத்தில் ஏதேனும் சொல்லிவிட்டால் என்ற அச்சத்தில், அவர்கள் அவளிடம் எடுத்துக் கூற தயங்கினர்.
“இளவரசி! தாங்கள் அமர அங்கே ஆசனம் போடப்பட்டு இருக்கிறது. தாங்கள் அங்கே வந்து அமர வேண்டும், மன்னர் இல்லையென்றால் எங்களை தான் வசை பாடுவார், புரிந்து கொள்ளுங்கள் இளவரசி” என்று ஒரு பணி பெண் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, இளவரசியிடம் கூறினாள்.
இளவரசி மதியழகிக்கு அது புரிந்தாலும், ஏனோ இங்கு அமர்ந்து இருப்பது அவளுக்கு பிடித்து இருந்தது. பல நாள் ஏக்கம் ஒன்று, இப்பொழுது நடந்தது மனதிற்கு திருப்தி அளித்தது.
“தந்தையிடம் நான் கூறிக் கொள்ளுகிறேன், யாரும் அஞ்ச வேண்டாம். காவலரே! பூஜை முடிந்தவுடன் என் தந்தையை, இங்கே சற்று அழைத்து வாருங்கள்” என்று கூறிவிட்டு, மீண்டும் தன் எண்ணங்களில் மீண்டும் பயணம் செய்ய தொடங்கினாள்.
முதன்முதலில், தன் கனாவில் தோன்றிய தனக்கு பிடித்த மணாளனை கண்டவுடன், மனதில் அவன் உருவத்தை கொண்டு வந்து வரைந்து முடித்து, திருப்தியுடன் அந்த ஓவியத்தை எடுத்து தன் தந்தை முன் காட்டினாள்.
“ஆஹா! அற்புதம்! போர் வீரனை போல் கம்பீரமாகவும், ஒரு அரசனை போல் ஆளுமையுடனும் இருக்கும் இவன் யார் மகளே?” என்று கேட்டார் மன்னர்.
“தெரியவில்லை தந்தையே! என் கனாவில் வந்தவர் இவர். இவர் யார்? எங்கு இருக்கிறார்? என்று எந்த விபரமும் எனக்கு தெரியவில்லை. ஆனால், தாங்கள் எனக்கு திருமணம் செய்ய நினைத்தால், இவரை கண்டுபிடித்து எனக்கு மணம் செய்து வையுங்கள் தந்தையே” என்று மனதில் இருப்பதை பளிச்சென்று, தன் தந்தையிடம் கூறிவிட்டாள்.
மகள், அவள் மனதில் இருப்பதை பளிச்சென்று தன்னிடம் கூறியதை அடுத்து அவர் செய்த முதல் வேலை, இந்த மாவீரன் தேடும் படலம் தான். அவளின் தாயாருக்கு ஆனால், இதில் சிறிதும் விருப்பமில்லை.
“நீங்கள், செய்வது எந்த விதத்திலும் சரியில்லை மன்னா. நம் மகள் தான் புரியாமல், கனவில் வந்தவனை மணம் செய்ய வேண்டும் என்று பிதற்றுகிறாள் என்றால், தாங்களும் அதற்க்கு துணை போவது சரி அல்ல” என்று வாதிட்டார் மங்கையர்க்கரசி.
“மங்கை! மகள் கனவில் வந்தவன், நிச்சயம் அவள் மனதை கொள்ளை கொண்டவனாக தான் இருப்பான். அதுவும் நம் மகள், அவனை எவ்வாறு வரைந்து இருக்கிறாள் என்று, நீ பார்த்தாய் அல்லவா”.
“அந்த ஓவியத்தில், அவன் ஒரு உயிருள்ள மனிதனாக அல்லவா இருக்கிறான். மகள் மனதில் சிம்மாசனமிட்டு முதலில் அமர்ந்தவன் என்பதாலும், அப்படி ஒருவன் இருந்தால் அவனை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வத்தினாலும் தான், இப்பொழுது தேடுதல் வேட்டை நடத்த திட்டமிட்டு வீரர்களை அனுப்ப முடிவு செய்து இருக்கிறேன்”.
“நம் மகளின் எதிர்காலம் மீது, எனக்கும் அக்கறை இருக்கிறது. நல்லவன் ஒருவனை தான், மகளுக்கு மணம் முடிப்பேன். நீ சற்று கவலை கொள்ளாமல் இரு மங்கை, நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று தாயாருக்கு, தந்தை அன்று ஆறுதல் அளித்தது மனதில் மின்னி, இப்பொழுது வேதனை அளித்தது.
“என் மனம் கவர்ந்த மணாளனே! எங்கு இருக்கிறீர்கள்? தாங்கள் சீக்கிரம் வர வேண்டும்! என் தாய், தந்தை துயர் துடைத்து என் கரம் பற்றி என்னை காத்திட, தாங்கள் சீக்கிரம் வர வேண்டும்” என்று மனதிற்குள் மனம் கவர்ந்தவனிடம் பேசிக் கொண்டு இருந்தாள், கண்களில் வழியும் நீரோடு.
பூஜை முடிந்து அவளின் தாயும், தந்தையும் வெளியே வரவும், மன்னருக்கு காவலர் மூலம் விஷயம் சொல்லப்பட்டது. அங்கே மகள் அமர்ந்து இருந்த நிலை கண்டு, அந்த தாயின் உள்ளம் கண்ணீர் வடித்தது. தானும் வருவதாக கூறியவரை, தடுத்து மன்னர் தான் மட்டும் மகளை சந்திக்க சென்றார்.
அங்கே அந்த புல்தரையில், அமர்ந்து இருந்த மகளை நோக்கி வந்தவர், மகளின் கண்களில் வழிந்த கண்ணீரை பார்த்து துடிதுடித்து விட்டார். வேக எட்டுகள் எடுத்து அவளை நெருங்கி, தானும் அங்கே அவளோடு அந்த புல்தரையில் அமர்ந்து, மகளை பாசத்தோடு அனைத்துக் கொண்டார்.
தந்தையின் ஸ்பரிசம் உணர்ந்து, அதுவரை கட்டுபடுத்தி வைத்து இருந்த உணர்வுகளை, சட்டென்று பொங்கும் வழியும் நதி போல் அவள் கண்களில் நீர் ஆறாக ஓடியது. சிறிது நேரம் அழ விட்டவர், அதன் பின் அவளிடம் என்னவென்று கேட்டார்.
“தந்தையே! என்னை சுற்றி என்ன நடக்கின்றது, என்று எனக்கு தெரியவில்லை. தாய், தந்தையின் முதல் ஆசையே மகளை ஒரு நல்ல இடத்தில் மணம் முடித்து, அழகு பார்ப்பது தான்”.
“ஆனால் இங்கே என் விஷயத்தில், என் விருப்பம் அறிந்து நீங்கள் எனக்காக, என் மனம் கவர்ந்த மணாளனை தேடிக் கொண்டு இருகிறீர்கள். இதற்க்கு நடுவில் என்னை சுற்றி ஆபத்து இருக்கிறது என்றவுடன், தாங்கள் இங்கே பூஜை செய்ய வந்து இருக்கிறீர்கள்”.
“நான் மட்டும் தாய் சொன்னது போல், நீங்கள் காட்டும் மணாளனை முதலில் மணந்து இருந்தால், இப்பொழுது அவரும் தங்களுக்கு பக்க பலமாக இருந்து இருப்பார்”.
“என்னால், என் ஒருத்தியின் சுயநலத்தால், உங்கள் அனைவரையும் கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கிறேனோ என்று மனது சஞ்சலமாக இருக்கின்றது தந்தையே” என்று மனதில் அழுத்திக் கொண்டு இருந்த பாரத்தை, தந்தையிடம் இறக்கி வைத்தாள், மதியழகி.
அவளின் மனதை புரிந்து கொண்ட மன்னரோ, அவளின் வருத்தம் கண்டு வேதனை அடைந்தாலும், இப்பொழுது மகளை சமாதனம் செய்து அவளுக்கு உற்சாகம் அளிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.
“ மகளே! வருத்தம் வேண்டாம்! நீ காட்டிய மணாளன் நிச்சயம் உன்னை தேடி வருவான். அவன் வரவில்லை என்றால், உன்னை அவனிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டியது என்னுடைய கடமை”.
“உன்னை நான் பாதுக்காத்துக் கொள்வது போல், அவனும் உன்னை பாதுகாப்பான். இப்பொழுது உன்னை சூழ்ந்து இருப்பது, ஆபத்து இல்லை, இறைவன் நமக்காக வைத்து இருக்கும் சோதனை.
“ இந்த சூழ்நிலையில் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்று, நம்மை அவர் கண்காணித்து கொண்டு இருக்கிறார். மகளே! நீ எனக்கு ஒரு சத்தியம் செய்ய வேண்டும், செய்வாயா!” என்று கேட்டார் மன்னர்.
“என் நலனிற்காக, தாங்கள் எதுவும் செய்வீர்கள் என்பதை நான் அறிவேன் தந்தையே. தங்களுக்கு நான் சத்தியம் செய்கிறேன், என்னவென்று கூறுங்கள் தந்தையே?” என்று கேட்டாள் மதியழகி.
“நேரம் வரும் பொழுது, நானே உன்னிடம் கூறுகிறேன் மகளே . இப்பொழுது உன் தாயிடம் நாம் செல்லலாம், மிகவும் பயந்து கொண்டு இருப்பார் உன்னை நினைத்து” என்று கூறிவிட்டு இருவரும், அங்கே நந்தி சன்னதி அருகே அமைக்கப்பட்டு இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்த தங்கள் குடும்பத்தாரை நோக்கி சென்றனர்.
சுற்றி இருந்த காவலர்கள், மன்னர் இப்படி மகளுக்காக அவருடன் இப்படி புல் தரையில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்ததை பார்த்து வாய் பிளந்தார்கள். மன்னரின் கம்பீரம் அறிந்த அவர்கள், அரசவையில் ஆசனம் சரியில்லை என்றால் உடனே கோபப்பார்வை பார்த்து, அடுத்து அவனை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி விடுவார் என்பதை அறிந்தவர்கள், இப்பொழுது நடந்ததை நம்ப முடியாமல் பார்த்து இருந்தனர்.
அவர்களின் பார்வை புரிந்த அரசனும், அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்.
இவர்கள் அங்கே வந்தவுடன், தாய் மங்கையர்க்கரசி மகளை பார்த்து என்னவென்று கேட்டார். மகளோ ஒன்றும் கூறாமல், அவரை கட்டி அனைத்துக் கொண்டு ஒன்றும் இல்லை என்று கூறினாள்.
500 வருடங்களுக்கு முன் :
மிகப் பெரிய பூஜை அன்று சிவன் கோவிலில், அரசர் இளங்கோவன் ஏற்பாடு செய்து இருந்தார். தன் மகளுக்கு ஆபத்து இருப்பதை அறிந்து, அந்த ஈசனிடம் தன் மனபாரத்தை இறக்கி வைத்து, அவளை காத்து அருள் புரியுமாறு வேண்டினார்.
190 அடி உள்ள அந்த சிவனின் பிரமாண்டம், மதியழகிக்கு எப்பொழுதும் போல் பிரமிப்பை ஏற்படுத்தியது. ஏனோ அவளுக்கு எப்பொழுதும் போல், அந்த சிவனின் பிரமாண்டம் மனதில் பதிந்த அளவிற்கு, அவரை மனமார வேண்ட வேண்டும் என்று தோன்றியதே இல்லை.
அதன் அமைப்பு, அதன் வடிவம் உள்ளே உள்ள கற்பக அறை, அதன் சுற்றி உள்ள பரப்பளவு என்று கண்கள் அங்கே தான் சுற்றி கொண்டு இருந்தது. தீபாராதனை காட்டும் பொழுது, அதன் வெளிச்சம் சிவனின் மேல் விழும் பொழுது ஒரு சிலிர்ப்பு தனக்குள் ஓடுவதை உணர்ந்து, முதல்முறையாக கண்களை மூடி வேண்டினாள்.
அவளின் வேண்டுதல் எப்பொழுதும் போல், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே. இந்த முறை கூடுதலாக, அவளின் மணாளன் சீக்கிரம் அவள் கண்ணில் பட்டு, காதல் கொண்டு மணம் புரிய வேண்டும் என்று வேண்டினாள்.
இந்த முறை காவிரிபூம்பட்டினம் சென்று வந்ததில் இருந்து, ஏதோ கண்ணுக்கு தெரியாத மாயை ஒன்று தன்னை சுற்றி இருப்பதாக உணர்ந்தாள். எதற்கும் கலங்காத அவளின் தந்தை, அவளை நினைத்து கலங்குகிறார் என்றால், தன்னை சுற்றி ஏதோ ஆபத்து இருப்பதாக தான் தோன்றியது அவளுக்கு.
“தன்னை, கண்காணித்துக் கொண்டு இருக்கிறது போல் ஒரு உணர்வு தோன்றுகிறதே சமீபமாக! யாராய் இருக்கும்?” என்று எண்ணங்களில் வலம் வர தொடங்கவும், அங்கே கோவிலுக்குள் இருக்க முடியாமல், அவள் சிறிது நேரத்தில் தாயாரிடம் சொல்லிக் கொண்டு, அங்கே கோவிலை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த புல்வெளியில் வந்து அமர்ந்து கொண்டாள்.
அவளை சுற்றி இருந்த பணி பெண்களும், பாதுகாப்புக்கு இருந்த காவலர்களும் அதிர்ந்தனர், அவளின் இந்த செயலில். நாட்டின் இளவரசி, இப்படி புல் தரையில் அமர்ந்து இருந்தால், மன்னர் தங்களை அல்லவா சத்தமிடுவார்.
இளவரசி மதியழகி, இப்பொழுது என்ன மனநிலையில் இருக்கிறார் என்று தெரியாமலும் தவித்தனர். தாங்கள் ஒன்று சொல்ல, கோபத்தில் ஏதேனும் சொல்லிவிட்டால் என்ற அச்சத்தில், அவர்கள் அவளிடம் எடுத்துக் கூற தயங்கினர்.
“இளவரசி! தாங்கள் அமர அங்கே ஆசனம் போடப்பட்டு இருக்கிறது. தாங்கள் அங்கே வந்து அமர வேண்டும், மன்னர் இல்லையென்றால் எங்களை தான் வசை பாடுவார், புரிந்து கொள்ளுங்கள் இளவரசி” என்று ஒரு பணி பெண் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, இளவரசியிடம் கூறினாள்.
இளவரசி மதியழகிக்கு அது புரிந்தாலும், ஏனோ இங்கு அமர்ந்து இருப்பது அவளுக்கு பிடித்து இருந்தது. பல நாள் ஏக்கம் ஒன்று, இப்பொழுது நடந்தது மனதிற்கு திருப்தி அளித்தது.
“தந்தையிடம் நான் கூறிக் கொள்ளுகிறேன், யாரும் அஞ்ச வேண்டாம். காவலரே! பூஜை முடிந்தவுடன் என் தந்தையை, இங்கே சற்று அழைத்து வாருங்கள்” என்று கூறிவிட்டு, மீண்டும் தன் எண்ணங்களில் மீண்டும் பயணம் செய்ய தொடங்கினாள்.
முதன்முதலில், தன் கனாவில் தோன்றிய தனக்கு பிடித்த மணாளனை கண்டவுடன், மனதில் அவன் உருவத்தை கொண்டு வந்து வரைந்து முடித்து, திருப்தியுடன் அந்த ஓவியத்தை எடுத்து தன் தந்தை முன் காட்டினாள்.
“ஆஹா! அற்புதம்! போர் வீரனை போல் கம்பீரமாகவும், ஒரு அரசனை போல் ஆளுமையுடனும் இருக்கும் இவன் யார் மகளே?” என்று கேட்டார் மன்னர்.
“தெரியவில்லை தந்தையே! என் கனாவில் வந்தவர் இவர். இவர் யார்? எங்கு இருக்கிறார்? என்று எந்த விபரமும் எனக்கு தெரியவில்லை. ஆனால், தாங்கள் எனக்கு திருமணம் செய்ய நினைத்தால், இவரை கண்டுபிடித்து எனக்கு மணம் செய்து வையுங்கள் தந்தையே” என்று மனதில் இருப்பதை பளிச்சென்று, தன் தந்தையிடம் கூறிவிட்டாள்.
மகள், அவள் மனதில் இருப்பதை பளிச்சென்று தன்னிடம் கூறியதை அடுத்து அவர் செய்த முதல் வேலை, இந்த மாவீரன் தேடும் படலம் தான். அவளின் தாயாருக்கு ஆனால், இதில் சிறிதும் விருப்பமில்லை.
“நீங்கள், செய்வது எந்த விதத்திலும் சரியில்லை மன்னா. நம் மகள் தான் புரியாமல், கனவில் வந்தவனை மணம் செய்ய வேண்டும் என்று பிதற்றுகிறாள் என்றால், தாங்களும் அதற்க்கு துணை போவது சரி அல்ல” என்று வாதிட்டார் மங்கையர்க்கரசி.
“மங்கை! மகள் கனவில் வந்தவன், நிச்சயம் அவள் மனதை கொள்ளை கொண்டவனாக தான் இருப்பான். அதுவும் நம் மகள், அவனை எவ்வாறு வரைந்து இருக்கிறாள் என்று, நீ பார்த்தாய் அல்லவா”.
“அந்த ஓவியத்தில், அவன் ஒரு உயிருள்ள மனிதனாக அல்லவா இருக்கிறான். மகள் மனதில் சிம்மாசனமிட்டு முதலில் அமர்ந்தவன் என்பதாலும், அப்படி ஒருவன் இருந்தால் அவனை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வத்தினாலும் தான், இப்பொழுது தேடுதல் வேட்டை நடத்த திட்டமிட்டு வீரர்களை அனுப்ப முடிவு செய்து இருக்கிறேன்”.
“நம் மகளின் எதிர்காலம் மீது, எனக்கும் அக்கறை இருக்கிறது. நல்லவன் ஒருவனை தான், மகளுக்கு மணம் முடிப்பேன். நீ சற்று கவலை கொள்ளாமல் இரு மங்கை, நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று தாயாருக்கு, தந்தை அன்று ஆறுதல் அளித்தது மனதில் மின்னி, இப்பொழுது வேதனை அளித்தது.
“என் மனம் கவர்ந்த மணாளனே! எங்கு இருக்கிறீர்கள்? தாங்கள் சீக்கிரம் வர வேண்டும்! என் தாய், தந்தை துயர் துடைத்து என் கரம் பற்றி என்னை காத்திட, தாங்கள் சீக்கிரம் வர வேண்டும்” என்று மனதிற்குள் மனம் கவர்ந்தவனிடம் பேசிக் கொண்டு இருந்தாள், கண்களில் வழியும் நீரோடு.
பூஜை முடிந்து அவளின் தாயும், தந்தையும் வெளியே வரவும், மன்னருக்கு காவலர் மூலம் விஷயம் சொல்லப்பட்டது. அங்கே மகள் அமர்ந்து இருந்த நிலை கண்டு, அந்த தாயின் உள்ளம் கண்ணீர் வடித்தது. தானும் வருவதாக கூறியவரை, தடுத்து மன்னர் தான் மட்டும் மகளை சந்திக்க சென்றார்.
அங்கே அந்த புல்தரையில், அமர்ந்து இருந்த மகளை நோக்கி வந்தவர், மகளின் கண்களில் வழிந்த கண்ணீரை பார்த்து துடிதுடித்து விட்டார். வேக எட்டுகள் எடுத்து அவளை நெருங்கி, தானும் அங்கே அவளோடு அந்த புல்தரையில் அமர்ந்து, மகளை பாசத்தோடு அனைத்துக் கொண்டார்.
தந்தையின் ஸ்பரிசம் உணர்ந்து, அதுவரை கட்டுபடுத்தி வைத்து இருந்த உணர்வுகளை, சட்டென்று பொங்கும் வழியும் நதி போல் அவள் கண்களில் நீர் ஆறாக ஓடியது. சிறிது நேரம் அழ விட்டவர், அதன் பின் அவளிடம் என்னவென்று கேட்டார்.
“தந்தையே! என்னை சுற்றி என்ன நடக்கின்றது, என்று எனக்கு தெரியவில்லை. தாய், தந்தையின் முதல் ஆசையே மகளை ஒரு நல்ல இடத்தில் மணம் முடித்து, அழகு பார்ப்பது தான்”.
“ஆனால் இங்கே என் விஷயத்தில், என் விருப்பம் அறிந்து நீங்கள் எனக்காக, என் மனம் கவர்ந்த மணாளனை தேடிக் கொண்டு இருகிறீர்கள். இதற்க்கு நடுவில் என்னை சுற்றி ஆபத்து இருக்கிறது என்றவுடன், தாங்கள் இங்கே பூஜை செய்ய வந்து இருக்கிறீர்கள்”.
“நான் மட்டும் தாய் சொன்னது போல், நீங்கள் காட்டும் மணாளனை முதலில் மணந்து இருந்தால், இப்பொழுது அவரும் தங்களுக்கு பக்க பலமாக இருந்து இருப்பார்”.
“என்னால், என் ஒருத்தியின் சுயநலத்தால், உங்கள் அனைவரையும் கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கிறேனோ என்று மனது சஞ்சலமாக இருக்கின்றது தந்தையே” என்று மனதில் அழுத்திக் கொண்டு இருந்த பாரத்தை, தந்தையிடம் இறக்கி வைத்தாள், மதியழகி.
அவளின் மனதை புரிந்து கொண்ட மன்னரோ, அவளின் வருத்தம் கண்டு வேதனை அடைந்தாலும், இப்பொழுது மகளை சமாதனம் செய்து அவளுக்கு உற்சாகம் அளிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.
“ மகளே! வருத்தம் வேண்டாம்! நீ காட்டிய மணாளன் நிச்சயம் உன்னை தேடி வருவான். அவன் வரவில்லை என்றால், உன்னை அவனிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டியது என்னுடைய கடமை”.
“உன்னை நான் பாதுக்காத்துக் கொள்வது போல், அவனும் உன்னை பாதுகாப்பான். இப்பொழுது உன்னை சூழ்ந்து இருப்பது, ஆபத்து இல்லை, இறைவன் நமக்காக வைத்து இருக்கும் சோதனை.
“ இந்த சூழ்நிலையில் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்று, நம்மை அவர் கண்காணித்து கொண்டு இருக்கிறார். மகளே! நீ எனக்கு ஒரு சத்தியம் செய்ய வேண்டும், செய்வாயா!” என்று கேட்டார் மன்னர்.
“என் நலனிற்காக, தாங்கள் எதுவும் செய்வீர்கள் என்பதை நான் அறிவேன் தந்தையே. தங்களுக்கு நான் சத்தியம் செய்கிறேன், என்னவென்று கூறுங்கள் தந்தையே?” என்று கேட்டாள் மதியழகி.
“நேரம் வரும் பொழுது, நானே உன்னிடம் கூறுகிறேன் மகளே . இப்பொழுது உன் தாயிடம் நாம் செல்லலாம், மிகவும் பயந்து கொண்டு இருப்பார் உன்னை நினைத்து” என்று கூறிவிட்டு இருவரும், அங்கே நந்தி சன்னதி அருகே அமைக்கப்பட்டு இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்த தங்கள் குடும்பத்தாரை நோக்கி சென்றனர்.
சுற்றி இருந்த காவலர்கள், மன்னர் இப்படி மகளுக்காக அவருடன் இப்படி புல் தரையில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்ததை பார்த்து வாய் பிளந்தார்கள். மன்னரின் கம்பீரம் அறிந்த அவர்கள், அரசவையில் ஆசனம் சரியில்லை என்றால் உடனே கோபப்பார்வை பார்த்து, அடுத்து அவனை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி விடுவார் என்பதை அறிந்தவர்கள், இப்பொழுது நடந்ததை நம்ப முடியாமல் பார்த்து இருந்தனர்.
அவர்களின் பார்வை புரிந்த அரசனும், அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்.
இவர்கள் அங்கே வந்தவுடன், தாய் மங்கையர்க்கரசி மகளை பார்த்து என்னவென்று கேட்டார். மகளோ ஒன்றும் கூறாமல், அவரை கட்டி அனைத்துக் கொண்டு ஒன்றும் இல்லை என்று கூறினாள்.