ஆர்த்தி ரவியின் ‘பாசுந்திப் பார்வை’
அத்தியாயம் 01
காதலா ஈர்ப்பா?
கண்டதும் காதல்,
காணாமலும் காதல்…
ஈர்ப்பு எனக் கொள்ளவா,
காதல் எனக் கொண்டாடவா?
விடை தெரியா உணர்வில்…
“ரெட் ஹா(ர்)ட் ஆருஷ்!”
ஆழ்ந்த ரசனையுடன் சொல்லிக் கொண்டாள் யாஷ்வி. விழிகளில் மின்னிச் சென்றது மின்னல்.
அதீதக் கவர்ச்சி கொண்டு இயற்கையில் வடிக்கப் பட்டிருந்த அளவான உதடுகளின் பிங்க் நிறத்தை அடர்ச் சிகப்பு க்லாஸி டச் சாயத்தைப் பூசி இன்னும் மெருகேற்றியிருந்தாள்.
‘ஆருஷ்’ என்று சொல்லும் போது விரிந்துக் குவியும் அந்தக் கொவ்வைப்பழ நிறம் கொண்டிருக்கும் இதழ்களை மட்டும் அந்தப் பெயருக்குச் சொந்தக்காரன் பார்த்திருந்தால்? அப்படியே தனது அழுத்தமான விரிந்தப் பெரிய உதடுகளைக் கொண்டு பொத்தி வைத்து மூடி இருப்பானோ?
நின் விழியோரம் துள்ளும் காதல் கண்டேன் பெண்ணே,
நெஞ்சில் பதிந்து போனது சிக்கென உனது பிம்பம்!
கொஞ்சம் காதல் செஞ்சுப் பார்த்து விடுவோமா?
இதயம் கேட்கிறது வன்முறையற்றக் காதலை இப்பம்…
உன் பதில் என்னவோ விழியழகியே?
இப்படி நான்கு விழிகளும் கவிதையாய்க் காதல் பேசி இருக்குமோ?
ஹே, ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்!
ரெட் நாட் (red knot) ஆருஷ்க்குத் தான் நம் ஹைதராபாத்தின் இளஞ்சிட்டைத் தெரியாதே? இனி தானே முட்டிக் கொள்ள(?!) சாரி சாரி! மீட் பண்ணிக் கொள்ள வைக்க வேண்டும்?
முதலில் வந்து போன அவளின் மின்னலின் பின்னணியில் காதல் ஒளிரவில்லை. ஆசை! ஆசை மட்டுமே தான் தெரிகிறது. சுவாரசியத்தில் எழுந்திருக்கும் அவா, மெல்ல மெல்ல வலுப்பெற்றுப் பேராவலில் நிறுத்தியிருக்கிறது.
ஆருஷ் என்ற நபர் மீது யாஷ்விக்குப் பிடித்தம். அவனும் இவளறிந்து கொண்டிருக்கும் அவனின் செயல்களும் தான் அதற்குக் காரணம். இவளின், அவன் மீதானப் பிடித்தத்திற்கு என்ன பெயர்ச் சூட்டுவது? காதல் என்றா?
ஹூம்ம்…
தெரியவில்லை என்பது யாஷ்வியின் பதிலாக இருக்கக் கூடும். நாளிதழ்களில் அவ்வப்போது காணும் ஒரு முகம். சில தடவைகள் தொலைக்காட்சியில் அவனைக் கூர்ந்துக் கவனித்து இருக்கிறாள். அவனின் பின்னணியைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறாள் தான்.
ஆனால், இந்தளவு மட்டுமே அறிந்து வைத்து இருப்பவளுக்கு வந்திருக்கும் உணர்வைக் கொண்டு எப்படிக் காதல் என்று சொல்லலாம்?
அப்புறம்? ஹ்ம் வேறென்ன, இப்போதைக்கு ஈர்ப்பு எனச் சொல்லிக் கொள்ளலாம்.
ரெட் நாட் ஆருஷ். நாட் -யை நீக்கி செல்லமாய் ஹா(ர்)ட் போட்டு வச்சு அழைக்கும் செல்லப் பாப்பா யாரு?
இவள், ஹைதராபாத்தின் பெரும் புள்ளி நரசிம்மகாரு பேத்தி. தேவ் பிலிம்ஸ் (Dev films) புகழ் ராணாதேவின் அக்கா மகள். திரையுலகக் குடும்பத்தில் சொகுசாகப் பிறந்து வளர்ந்து நிற்கும் அம்ச குமாரி, அழகு ராணி, க்யூட்டி சின்ட்ரெல்லா.
ஐம்பொன் சிலை யாஷ்வி! பிப்டி கேஜி? நோ நோ, கூட ஒரு பத்துக். கிலோவைச் சேர்த்துக்கோங்க. தர்பூசணி லுக்கை குறைக்க ஜிம் போக மாட்டா நம்ம அம்மிணி. மேக்-அப் ப்ளஸ் டைட் பிட்ஸ் போட்டு சிக் லுக் கொண்டு வந்து அசத்துற கேடி!
“யாஷ்!”
டிரினிடி தினசரியின் (Trinity Daily) ஞாயிறு பிரதியை விரித்து வைத்து வெறித்துக் கொண்டிருந்த யாஷ்வியின் செவி திடீர் விளிப்பில் அதிர்ந்தது.
காதலனைப் போல் நெருங்கி வந்து நின்று, இத்தனை நேரம் கண் நோகப் பார்த்துப் பார்த்துக் கடுப்பான நாவியா தான் ஹை டெசிபெல்லைக் கொட்டியது.
அவள் கண்களுக்குப் படாதது எதுவோ யாஷைக் கட்டிப் போடுவது? புரியவேயில்லை தான். அது வேறு அவளின் சுருதியை ஏற்றிவிட்டு இருந்தது.
நாவியா யாஷின் ஒன்று விட்ட கசின்.
கொய்ங்ங் சத்தத்தில் துள்ளி விழுந்து காதை தேய்த்துவிட்டுக் கொண்ட யாஷ்வி உர்ரென்ற பார்வையுடன்,
“நவீ! இடியட்! ஸ்ஸ் ஹா, என் காதே பிஞ்சி போச்சு. இப்போ என்னடி வேணும்? முதலில் உன் சத்தத்தைக் குறை. தள்ளிப் போய் நின்னு அப்புறம் பேசு.” என்று சத்தம் போட்டாள்.
“போக்கா! அப்படி என்னத்தைத் தான் இந்தச் சன் டே பேப்பர்ல பார்ப்பியோ? வாரம் தப்பாமல் வெறிச்சு வெறிச்சுப் பார்க்கிறது. நானும் தான் பார்த்துட்டு இருக்கேன். ஒன்னும் புரியலை போ. வெளியே போகலாம்ன்னு வரச் சொல்லிட்டு இப்படி டைம் வேஸ்ட் பண்ணினா என்ன அர்த்தம்?”
“ஹஹ்ஹா நவி! மை புஜ்ஜி! வெரி சாரி. நீ வந்ததை நான் பார்க்கலை. போகலாம் போகலாம்டி. சும்மா ஸ்டார் பாக்ஸ் நியூஸ் தான். இதைப் பற்றியெல்லாம் உனக்கு இப்போ ஒன்னும் புரிய வேண்டாம். அப்படியே விட்ரு.”
‘அதான் எனக்குச் சேஃப்டி.’
யாஷ்வியின் சிரிப்பில் மற்றது மறந்தாள் நாவியா.
“ஹய்யோ! ரொம்ப அழகுக்கா உன் சிரிப்பு! எந்த ராஜக் குமாரன் வந்து உன்னைத் தூக்கப் போறானோ?”
கள்ளம் கபடமற்ற உள்ளம் நாவியாவிற்கு. யாஷ்வியின் கீழுதட்டைக் கிள்ளிக் கொஞ்சினாள்.
‘ராஜகுமாரனா?’, யாஷ்வியின் விழிகளில் ஆருஷ் தோன்றி புன்னகைத்தான். இதயத்தில் சிறு தடக் தடக் வந்து போவதை எண்ணி பரவசமான மனநிலைக்கு ஆட் பட்டிருந்தாள். அது அப்படியே முகத்தில் ஜொலித்து உதட்டில் படர்ந்தது.
சித்தப்பா மகள். சம வயதில் இல்லையென்றாலும் நல்ல தோழி. யாஷிக்கு இவளின் இன்னொசன்ஸ் தான் கவர்ந்ததே. படித்துப் பட்டம் வாங்கியவள். செல்வச்செழிப்பு மிக்கவள். ஆனால், கர்வம் தீண்டாப் பண்பைக் கொண்டிருப்பவள் நாவியா.
“நானொரு லூசு.” தலையில் தட்டிக் கொண்ட நாவியா, “தேவ்... ராஜகுமாரன் ராணாதேவ், உன்னைக் கொத்திப் போகக் காத்திருக்கும் போது வேறவன் எதுக்கு வர்றான்.” என்றாள் சின்னதாகிப் போன முகத்துடன் சுருதி இறங்கிய குரலில்.
அவளின் சிறு விழிகளில் சுடர் குறைந்து நிராசையின் படர்வு. அவளின் இச்சுணக்கம் ஏன் என்பதை அறியாதவளா பெரியவள்?
“என் நவி சூப்பர் க்யூட் டாலி. இந்தக் குட்டி முகம் நொடியில் எத்தனை ஜாலங்களைக் காட்டுது, அப்ப்பா! என் மாமகாரு மட்டும் என் மேல் ஆசைப்பட்டால் போதுமா?”
தங்கைக்கு ஹிண்ட் கொடுத்தாள் யாஷ்வி.
அவளின் அழகான வரி வடிவம் கொண்ட அடர்ந்த புருவங்கள் உயர்ந்து கேள்வி போல் வளைந்துச் சுருங்கின. அவற்றின் கீழ் விரிந்திருக்கும் இமைகள் இரண்டும் படபடத்து அழகுக் காட்டின.
கண் சிமிட்டிப் புன்னகைத்தபடி,
“உனக்குக் கவலை வேண்டாம் நவி பேபி.”
என்று தங்கையைப் பரிவுடன் அணைத்துக் கொண்டாள் யாஷ்வி.
“நீ ரெடியா? வா போகலாம்.”
தன் மெகா சைஸ் பிரதா கூலர்ஸ் எடுத்து அணிந்து கொண்டு, லூயிஸ் ஊட்டன் கைப்பையுடன் வந்த யாஷ்வியின் தோற்றத்தைப் பார்த்த நாவியா அசந்து தான் போனாள்.
செல்வச் சீமாட்டிகள் இருவரும் ஹைதராபாத்தின் மிகப் பெரிய ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்தனர்.
யாஷிக்குத் தெரியும் நாவியா மனதில் ராணா இருப்பது. பத்து வயசு வித்தியாசம் கொஞ்சம் உறுத்தல் தானென்றாலும் அதைத் தவிர வேறு அனைத்தும் நல்ல பொருத்தமே. சொத்து அனைத்தும் இவளைப் போலவே.
என்னவொன்று, இவள் ராணாதேவிற்குச் சொந்த அக்கா மகள். நாவியா ஒன்று விட்ட சொந்தம். அது மட்டுமா? ராணாதேவ் யாஷ்வியை அல்லவா நெஞ்சத்தில் சிறையெடுத்து வைத்திருக்கிறான்?
ராணாவைப் பொறுத்த வரை, தனக்கும் யாஷ்விக்கும் இருக்கும் ஏழு வயது வித்தியாசம் இருப்பது ஒன்றுமேயில்லை. யாஷ்வியைத் தன்னில் புதைத்துப் பொக்கிசமாகக் காவல் காத்துக் கொண்டிருப்பவன்.
அத்தனை எளிதாக அவளை நழுவ விட்டு விட மாட்டான். யாஷ்வியும் இதனை நன்றாக அறிந்து வைத்திருக்கிறாள் தான்.
என்று தன் தாய்மாமன், பாசம் மற்றும் பரிவைத் தாண்டி நேசத்தையும் நெருக்கத்தையும் விழிகளில் வழிய விட்டு நின்றானோ, அன்றிலிருந்து அவனிடம் தூரம் காட்டிப் பழகி வருகிறாள்.
ஏனோ, ‘தாய்மாமன்’ என்ற பந்தத்தைத் தாண்டிய ஓர் உறவுநிலை அவனிடம் ஏற்படுவதை யோசித்துப் பார்க்கவே இவள் விரும்பவில்லை. வரும் காலத்தின் கணக்குகளின் டெலிபதியோ?
திண்ணென்றிருக்கும் தன் தோள்கள் யாஷ்விக்காக ஏங்குவதைப் புரிந்தும் விலகிப் போகும் அவளை, விட்டுப்பிடிக்க நினைத்தது பெரிய முட்டாள் தனம் என்பதை ராணாதேவ் விரைவில் உணரப் போகிறான்.