• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Briyani - Sangeetha

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

priyadurai

இணை அமைச்சர்
Joined
Feb 3, 2018
Messages
543
Reaction score
389
Location
mumbai
தலகுப்பா வந்தாலும் தலை குப்புற கவுந்தாலும் இவகிட்ட இருந்து எனக்கு மரியாதை மட்டும் கிடைக்கவே கிடைக்காது
superrrrrrrrr
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
தலகுப்பா வந்தாலும் தலை குப்புற கவுந்தாலும் இவகிட்ட இருந்து எனக்கு மரியாதை மட்டும் கிடைக்கவே கிடைக்காது
superrrrrrrrr
Thank you
 




Muhilramya

மண்டலாதிபதி
Joined
Jul 24, 2018
Messages
122
Reaction score
329
Location
Chennai
அழுத்தமாக... ஆழமாக... வன்மையாக... வன்மையில் மென்மையாக அவனது இதழில் கதை எழுதிக் கொண்டிருந்தாள். ஷ்யாம் அவளின் வன்மையை, மென்மையை, ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தான். அவளுடைய செயலை தனதாக்கவுமில்லை, மேற்கொண்டு முன்னேறவுமில்லை. அவள் மூச்சுக்கு திணறிய நேரம் சிறிதே சிறிதாக விலகி நின்றான். மஹா கண்களை இறுக்கி மூடியிருந்தாள். எங்கே கண் திறந்து ஷ்யாமின் கிறங்கிய முகத்தைப் பார்த்தால் தன்னால் அவனுக்கு மேற்கொண்டு ஒத்துழைக்க முடியாமல் போய்விடுமோ என்று!!! அவனுக்கா அவனுடைய மஹாவைத் தெரியாது??? கைகளைக் கட்டிக் கொண்டு அவள் முகத்தையே பார்த்திருந்தான்.
மஹா மெல்ல கண் விழித்து அவனைப் பார்த்தாள். உள்ளுக்குள் சிறிது ஏமாற்றமாகக் கூட இருந்தது. எப்போ மஹா விழுப்புரம் கிளம்புற? அவள் கண்களைப் பார்த்துக் கேட்டான். இவள்தான் ஒன்றும் புரியாமல் விழித்தாள். அவள் முகபாவனையில் சிரிப்பு வர, புன்னகையுடன் மெல்ல அவள் கடைபிடித்து கட்டிலில் அமர வைத்து, இவன் கீழே அமர்ந்து அவள் கால்களை இதமாக பிடித்து விட்டுக் கொண்டே பேசினான்.

நாம கொஞ்ச நாள் பிரேக் எடுக்கலாம் மஹா, நீ முதல்ல விழுப்புரம் போய் உன்னோடு இன்டர்ன்ஷிப் முடி. இந்த தற்காலிக பிரிவு நம்மை நாமே புரிந்துக் கொள்ள உதவும். என்னால இன்னொரு தடவை இன்னிக்கு நடந்த அதிர்ச்சி மாதிரி தாங்க முடியாது. செத்துப் பிழைச்சேண்டி. எனக்கு நீ வேணும் மஹா. இதுல நீ ங்குறது உன்னோடு உடம்பு மட்டுமில்லை மஹா, உன்னோடு மனசும் அதில் எனக்குண்டான காதலும். என் கண்ணுக்குள்ள மூழ்கிப் போற என்னோட மஹா எனக்கு வேணும். நான் உனக்கு முன்னாடியே இந்த ஸ்பேஸ் கொடுத்திருக்கணும், தப்பு பண்ணிட்டேன். சீக்கிரமா கல்யாணத்தை முடிச்சு உன்னை நிரந்திரமா என்கிட்டயே வைச்சுக்கணும்னு தான் அப்ப தோணிச்சு. நாம கொஞ்ச நாள் தனியா இருப்போம் ஜாஸ்த்தியில்லை, உன்னோட இன்டர்ன்ஷிப் முடியிற வரைக்கும். Love you maha என்றான் Me too Shyam என்றாள் வேறெந்த பதிலும் கூறவில்லை. ஒருவரின் அண்மை மற்றவர்க்கு நல்ல உறக்கத்தைக் கொடுத்தது.

மறுநாள் மஹா பிருந்தாவுடன் விழுப்புரம் கிளம்ப ஷ்யாம் ஹைதராபாத் கிளம்பினான் பெற்றோருடன்.

ஆயிற்று மஹா விழுப்புரம் வந்து 3 மாதம் முடியப் போகிறது. இருவருக்கிடையிலும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. ஆனால் அவளின் பாதுகாப்பிற்கு மட்டும் இளங்கவியின் மூலம் ஏற்பாடு செய்திருந்தான். மஹா தற்போது சௌஜன்யாவா அது யாரு என்று கேட்கும் நிலைக்கு வந்திருந்தாள். அவளின் ஒவ்வொரு அணுவும் ஷ்யாம் புராணம் பாடியது. சொன்ன தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவே வேலையை முடித்துக் கிளம்பினாள். சென்னை வந்ததும் நேரே பெசன்ட் நகர் சென்று பைரவி கையால் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, தந்தையிடம் செல்லம் கொஞ்சிய பிறகே தங்கள் வீட்டிற்கு கிளம்பினாள்.

கார்த்தி உடன் வருவதாகக் கூற, நீ அண்ணியாரை கவனிண்ணா என்று கூறி தனியாகக் கிளம்பினாள். அதற்குள் மாலையாகி இருந்தது. வீட்டிற்குள் வந்து பார்த்தால் ஷ்யாம் அனைத்து மொழிகளிலும் உள்ள காதல் சோகப் பாடல்களை Boschல் அலற விட்டுக் கொண்டிருந்தான். அடப்பாவி இவ்வளவு நல்லவனாடா நீ என்று மஹாவின் மைண்ட் வாய்ஸ் பேசியது.

ஷ்யாம் இவள் வந்ததை உணர்ந்த மாதிரியே தெரியவில்லை. இது ஆகுறதில்லை என்று நினைத்துக் கொண்டு, மஹா கீழே சென்று கார்த்திக்கு போன் செய்து சில பல ஏற்பாடுகளை செய்ய சொல்லிவிட்டு மீண்டும் மாடிக்கு வந்தாள்.
உயிரிலே என் உயிரிலே கலந்தவள் நீயடி
என்ற பாடல் ஓடிக்கொண்டிருக்க,
கன்னங்களில் கண்ணீர் வந்து உன் பேரை எழுதுதே
முத்தமிட்ட உதடுகள் முனங்குதே
என்று இவளும் சேர்ந்து பாட ஷ்யாம் சட்டென திரும்பி மஹா என்று ஓடி வந்து இறுக்கி அணைத்திருந்தான். அவன் இறுக்கமே கூறியது அவன் அவளை எவ்வளவு தேடினான் என்று.

ஷ்யாம் கண் கிழித்துப் பார்த்தான். சுற்றுப்புறம் மாறியிருந்தது. சற்று நிதானித்து மீண்டும் பார்க்க தலகுப்பா வீடு என்று புரிந்தது. நேற்று மஹா வந்தவுடன் தான் ஓடிச் சென்று அணைத்தது நினைவுக்கு வந்தது. ஆஹா மிர்ச்சி களமிறங்கிறிச்சு டோய் என்று மனம் குத்தாட்டம் போட்டது. மஹா வரும் அரவம் கேட்க மீண்டும் கண்களை மூடிக் கொண்டான்.

புடவை கட்டி பூ வைத்து full makeupல் வருவாளோ, கட்டிலில் பூ அலங்காரம் இருக்கான்னு பார்க்காம விட்டுட்டோமே என்று இவன் நினைக்க, "டேய் எரும எந்திரி" என்றாள். அதானே தலகுப்பா வந்தாலும் தலை குப்புற கவுந்தாலும் இவகிட்ட இருந்து எனக்கு மரியாதை மட்டும் கிடைக்கவே கிடைக்காது என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டே கண் திறந்துப் பார்த்தால் அவள் டி-ஷர்ட் த்ரீபோர்த் பேண்ட் அணிந்து நின்றிருந்தாள்.

இங்கபாரு ஷ்யாம் பேசி டைம் வேஸ்ட் பண்ணாத, நான் இப்ப உன்ன கஸ்டடி எடுத்திருக்கிறேன். நான் சொல்றபடிதான் நீ கேட்கனும். இப்ப சீக்கிரம் கிளம்பு ட்ரெக்கிங் போகணும் என்றாள்.

ஆஹான் என்று ஒற்றை புருவம் உயர்த்திப் பார்த்தவன் இங்க எப்படி வந்தோம் அத மட்டும் சொல்லு என்றான். நான் கார்த்திண்ணாகிட்ட சொல்லி கேரவேன் ஏற்பாடு பண்ணி உன்னை இங்க கடத்திட்டு வந்திருக்கேன் என்று சொல்லி டிஷர்ட்டில் இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டாள். இந்தக் கொடுமைக்கு அவனும் கூட்டா என்று ஷ்யாம் கேட்க, சீக்கிரம் கிளம்பு ஷ்யாம் என்று அவனைக் கொஞ்சி கெஞ்சி கிளப்பினாள்.

இருவரும் கிளம்பினார்கள். எனக்கு அந்த அருவிக்கு போகணும் ஷ்யாம் என்று கூறவுமே அவனுக்கு புரிந்து போயிற்று இவள் தன்னுடைய மஹா என்று பழைய கசடுகள் அனைத்தையும் மறந்துவிட்டு மஹா என்று. நடக்கும்போது இருவரிடமும் மௌனம் மட்டுமே. ஆனால் பிடித்த கையை இருவருமே விடவில்லை. அருவியை அடையவும் ஹேப்பி லவ் அனிவர்செரி ஷ்யாம் என்று கூறி இறுக்கி அணைத்துக் கொண்டாள். ஆம் அவன் அவளிடம் காதல் சொல்லி சரியாக ஒரு வருடம் ஆகியிருந்தது.

என்னைக் கிறங்கடிக்கிற குல்பி இந்த மயக்கம் என்றைக்குமே தீராது என்று கூறி அன்று போலவே இன்றும் அவள் இடையை அணைத்து, அவளை தன்னுயரத்திற்குத் தூக்கி ஒரு நீண்ட இதழ் முத்தம்....... இருவருமே அதிலிருந்து வெளிவர விரும்பவில்லை. ஷ்யாம் தான் முதலில் தெளிந்தது. சுற்றுப்புறம் உணர்ந்து, பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அங்கிருந்து கிளம்பி சிறிது தூரம் சென்று அன்று போலவே டெண்ட் அமைத்துத் தங்கினார்கள். ஆனால் இந்த முறை ஷ்யாம் வெளியில் அல்ல......??

எப்படி வீட்டிற்கு வந்தார்கள், 10 நாள் பொழுது எப்படி சென்றது என்று இருவருக்குமே தெரியாது. ஷ்யாம் மஹாவை சீண்டுவதையே முழு நேர வேலையாக வைத்திருந்தான். அவளை சிணுங்கவிட்டு அந்த சிணுங்களில் இவன் கிறங்கினான். தன்னுடைய உலகமே மஹாவாகிப் போனது அவனுக்கு.

10நாள் கழித்து காலிங் பெல் சத்தம் கேட்க, போர்வையை மட்டுமே அணிந்திருந்த மஹா வேகமாக அவளுடைய உடையை அணியப்போக, அவளைத் தடுத்து, இப்படியே இருக்கணும் எதாவது போட்ட வந்த வேகத்தில் கழட்டிடுவேன் என்று மிரட்டி அதற்கு பரிசாக இரண்டு அடியையும் அவளிடமிருந்து வாங்கிக் கொண்டே கதவைத் திறக்க சென்றான்.

வெளியே கார்த்திக் டென்ஷனாக காத்திருந்தான்.சற்றுத்தள்ளி இளங்கவி. டேய் மச்சான் என்று ஷ்யாம் ஆரவாரமாகக் கட்டிப்பிடிக்க, போடாங்க.. பாப்பா 2 நாள் டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு சொல்லிட்டு வந்துச்சுடா. இப்போ 10 நாள் ஆச்சு ஒரு போன் பண்ணமாட்டீங்க ரெண்டு பேரும், உங்க போன் எங்க இருக்குன்னாவது தெரியுமா? என்று பொரிந்துத் தள்ளினான்.

10 நாள் ஆச்சா என்று ஷ்யாம் வாய் பிளக்கவுமே கார்த்திக்கு அனைத்தும் புரிந்து போனது. கார்த்தி பார்த்த பார்வைக்கு ஷ்யாமுக்கே வெட்கம் வந்துவிட்டது. பிறகு இளங்கவியை அழைத்து பிசினஸ் விஷயங்கள் பேச ஆரம்பித்துவிட்டான். கார்த்தி தனக்குப் பின்னால் பார்த்து சிரிப்பதை அறிந்து தானும் திரும்பிப் பார்க்க மஹா குளித்து முடித்து நல்ல பிள்ளையாக இவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.

அவள் மட்டுமே அறியுமாறு கண்களால் மன்னிப்பை யாசித்து விட்டு, எல்லாருக்கும் சாப்பிட எதாவது கொடு மஹா என்க, கார்த்தி உடனே, இல்லயில்ல வாங்க கிளம்பலாம். போற வழில சாப்பிட்டுக்கலாம். டேய் மச்சான் கிளம்புற ஐடியா இருக்கா இல்லையா என்று கேட்க இருவருமே அசடு வழிந்துவிட்டு, சிரித்து மளுப்பிக் கிளம்பினர். அப்பொழுதும், நான் உன் ஹனிமூன் போது பாதியில வந்து நிக்கிறனா இல்லையா பாரு என்று கார்த்தியை மிரட்டிக் கொண்டே தான் ஷ்யாம் கிளம்பினான்.

சென்னைக்கு வந்ததும் இருவரின் பெற்றோர்களும் இவர்களுக்காகக் காத்திருக்க, இவர்களைப் பார்த்ததும் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி. மஹாவின் வெட்கச் சிவப்பு பைரவிக்கும், ஜோதிக்கும் பல கதைகள் கூறியது. அவர்களுக்குப் புரிந்தது இனி

"ஷ்யாமளப்பிரசாத் மஹாவின் ஷ்யாமளன்" என்று.....
Super
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top