• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Chippikul muthu- 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

juliyana

நாட்டாமை
Joined
Sep 22, 2018
Messages
87
Reaction score
197
Location
chennai
ஹாய் friends , thanks for your comments

நாட்கள் வேகமாக சென்று கொண்டிருந்தன. அன்புக்கரசி மனதிற்குள் ஒரே யோசனையாக இருந்தது.

சித்தர் சொன்ன 45 நாட்கள் முடிவதற்கு இன்னும் 30 நாட்கள் எஞ்சிய நிலையில் எப்படி தன் மகளின்

உரிமையை இந்த குடும்பத்தில் நிலை நாட்டுவது என்ற யோசனையில் இறங்கினார். தனக்கு

தேவைப்படாத உரிமை தன் மகளுக்கு நிச்சயம் தேவை என்று எண்ணினார். அவரின் தீவிர

யோசனையில் இருந்ததால் அன்பு! அன்பு! என்று இரண்டு தடவை பிரகாஷ் அழைத்தும் அவரின்

கவனத்தில் விழவில்லை. பிரகாஷ் தோளில் தட்டி அழைத்த பின் தான் அன்பு யோசனையில் இருந்து

கலைந்தார். ஆயினும் சிறு எரிச்சலுடனே , " என்ன ! " " எத்தனை தடவ கூப்புட்றது. அப்படி என்ன

யோசனை?. " நீ யோசிக்காமல் விட்டு சென்ற உறவை பத்தி தான் யோசனை " என்று எப்படி கூறுவது.


அன்பு நான் பேச வந்தது நம்ம பையன் அரவிந்த் பத்தி. அவன் என் தங்கச்சி பையன்னாலும், அவுங்க

அப்பா, அம்மா accident ல போனப்புறம் நம்ம பையனா தான் நெனச்சி வளக்கிறோம் . அவனும் நம்மள

அவன் அப்பா அம்மா மாதிரி தான் பாசத்தை காட்டுறான். நாமளும் நம்ம கடமையை செய்யணும்

.அவனுக்கு இப்போ 30 வயசாயிடிச்சி ..நம்ம 2 வருஷம் முன்னாடி அவன் கல்யாண பேச்ச

ஆரம்பிச்சப்போ இன்னும் கொஞ்ச நாள் போட்டும்னு சொல்லிட்டான். இப்போ நம்ம தான் எப்படியாது

அவனை கல்யாணம் பண்ண சம்மதிக்க வைக்கணும்..என் தங்கச்சி இங்க இல்லனாலும் அம்மா, அப்பா

இருந்தா கால காலத்துல கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்கனு ஒரு பேச்சு வந்துற கூடாதில்ல ..நீ

என்ன சொல்ற. பொண்ணு எந்த மாதிரி பாக்கலாம்னு சொல்றியோ அப்படி பண்ணலாம் ..என்ன

சொல்ற...


இந்த செய்தி பாரதிக்கு புதிது. அரவிந்த் அன்பு, பிரகாஷின் மகன் என்று தான் இன்று வரை

எண்ணியிருந்தாள்.

இப்போது தான் பிரகாஷின் தங்கை மகன் என்பது தெரிந்தது. இந்த ஆச்சரியத்தை வெளியில் காட்டாமல் எனக்கு கொஞ்சம் time குடுங்க.. எந்த மாதிரி பொண்ணு பாக்கிறதுனு யோசிச்சு சொல்றேன்.


நீ சொல்லிட்டோனா நம்ம ஸ்டேட்டஸ் ல இருக்கிற எல்லார் லிஸ்டும் உன்
கைல வந்துடும். நீயும் அரவிந்தும் அதுல பாத்து செலக்ட் பண்ணுங்க.

இதை பிரகாஷ் சொன்னதும் பாரதியின் மனம் தணலில் விழுந்தது போல்

கொதித்தது." ஸ்டேட்டஸ் ..இதுக்காக தானே என்ன தூக்கியெறிஞ்சிட்டு

போனனீங்க ...உங்க ஸ்டேட்டஸ் பைத்தியத்துக்கு ஒரு வைத்தியம் பார்த்தா தான்

சரிப்படும் " என்று மனதில் நினைத்து கொண்டார்.


பாரதியின் மனதிற்குள், அரவிந்த் பற்றிய எண்ணமே இருந்தது. நல்ல பையன் .ஆனால் அவன்


காயலிடம் எரிந்து விழுந்த சந்தர்ப்பங்களும் அவளின் ஞாபகத்திற்குள் வந்தது. அவனும் தன்


தகுதிற்கேற்றவர்களிடமே பழகுவது போல் தோன்றியது. அதுதான் அவன் கயலை அணுகும் முறையை

நேரில் பார்த்திருக்கிறாளே. தன் நிலைமை தன் மகளுக்கும் வரக்கூடாது.அதே சமயம் கயலுக்கும்

அவள் தந்தையின் வாரிசாக அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.அரவிந்த் நல்ல மகனாக இருக்கலாம்.

ஆனால் தன் மகளுக்கு நல்ல கணவனாக இருப்பானா? அவள் வசதி இல்லாதவள் என்று வெறுப்புடன்

இருந்தால் தன் மகளின் எதிர்காலம் என்ன ஆவது ? குழப்பத்தில் இருந்தாள் .

இதற்கு முடிவு சொல்ல சித்தரால் மட்டுமே முடியும் என்ற முடிவுக்கு வந்தவளாய் , சித்தரே எனக்கு

என் மகள் வாழ்வை சீரமைக்க ஒரு சந்தர்ப்பம் குடுத்தீங்க ..ஆனா எப்படி, என்ன பண்றதுனு தெரில.

இவுங்க அந்தஸ்த்து ஆசை என் மகளை என்ன பண்ணும்னு தெரில ..என்னோட மகளை எப்படி பிரகாஷ்

ஏத்துக்க வைக்கிறது.அவளோட எதிர்காலம் என்ன ஆகும் எதுவும் எனக்கு தெரில. நீங்க குடுத்த நாட்கள்

வேகமா போயிட்டு இருக்கு, நான் என்ன பண்ண..................என்னக்கு ஒரு வழி காட்டுங்க..............என்று

மனமுருக அழுதாள்.

அந்த நேரம் அவள் அறைக்குள் தோன்றிய சித்தர் , "மகளே ! இருந்த போதும் நிம்மதியில்லை. இறந்த

பின்னும் அமைதியில்லாமால் ஏன் இந்த குழப்பம். நீ நடக்குமா , இல்லை நடந்தால் நிலைக்குமா என்று

நினைக்கும் யாவும் ஏற்கினவே எழுதப்பட்டவை . நீ அவை நடப்பதற்கு ஒரு கருவியாய் மட்டும்

இருக்கப்போகிறாய்.


உன் மகள் இந்த வீட்டின் வாரிசாய், நீ யாரை நினைத்து குழம்பிக்கொண்டிருக்கிறாயோ அவனின்

மனைவியாய் இந்த வீட்டில் வலம் வருவாள் ..அவளின் கணவன் நிச்சயம் உன் கணவனை போன்று

எக்காலத்திலும் மாறிவிடமாட்டான் ..இது நிச்சயம் ...ஆனால் இந்த திருமணம் சுமூகமான சூழலில்

நடைபெறாது. ..............ஆனால் உன் மகள் நிச்சயம் நன்றாக வாழ்வாள் .இப்போதைக்கு இதுமட்டும் தான்

என்னால் கூற முடியும் " என்று கூறினார்.

ரொம்ப நன்றி சித்தரே என் மகள் நன்றாக வாழ்ந்தால் போதும் ...கதவு தட்டப்படும் ஓசை கேட்கவே

சித்தர் விடை பெற்றார். கயல்தான் வாசலில் நின்று கொண்டிருந்தாள். கதவை திறந்து, உள்ளே

அழைத்தார் அன்பு.

அம்மா ! நீங்க காலைல இருந்து எதுவும் சாப்பிடல. நான் கேட்டதுக்கு நீ சாப்பிடு நான் அப்பறமா

சாபிட்றேன்னு சொல்லிட்டு இங்க வந்துடீங்க. இப்டி இருந்தா உங்க உடம்பு என்ன ஆகும் ..அப்புறம்

உங்க பையன் என்ன தான் திட்டுவாங்க. அதுக்காகவாது சாப்பிடுங்க மா...

சரி மா...நான் சாப்பிடுறேன் .. நீ சாப்டியா ....'அன்பு சாப்பிடாமல் எங்க தான் உணவருந்தினால் அரவிந்த்

எங்க அம்மாவே சாப்பிடல நீ சாப்பிடற நீ என்ன மகாராணியானு அன்னைக்கு மாதிரி

கேட்டிடுவானோனு பயம்.

இல்லமா சேர்ந்து சாப்பிடலாம் னு தான் .................

'என்ன நீ இன்னும் சாப்பிடலியா ..என்ன மா...வா முதல்ல ' என்று இருவரும் உணவருந்த சென்றனர்.

அந்நேரம் அரவிந்த் கீழிறங்கி வந்தான்.


"என்னப்பா இன்னும் ஆபீஸ் போல? " அன்பு.

இல்லமா. நேத்து மீட்டிங் முடிஞ்சப்புறம் நைட் வீட்டுக்குவர 2 மணி ஆச்சி ..நீங்க தூங்கிட்டதால உங்கள

டிஸ்டர்ப் பண்ணல. அதுதான் லேட்டா ஆ எந்திரிச்சிட்டேன் . வீட்ல இருந்தே ஒர்க் பாத்துக்கிறேன்.

காயலிடம் திரும்பி , " எனக்கு ஒரு புதினா tea குடுக்க முடியுமா ?"

உடனே தலையாட்டியவள் உள்ளே சென்று , tea தயாரித்து எடுத்து வந்தாள் .இதை அனைத்தையும்

மௌனமாக கவனித்து கொண்டிருந்த அன்பு வாயிலை நோக்கி சென்று விட்டார்.

கயல்!.................................... என்ன சார்? ம்.... tea நல்லா இருக்கு...

அவளுடைய கண்களை அப்பொழுதான் நோக்கினான். இவ்வளவுநாள் அலட்சியமாக ஒரு பார்வை

தான் பார்த்திருக்கிறான்.

இப்பொழுதுதான் கண்களை நேருக்கு நேராக பார்க்கிறான். ..நான் இன்னும் ரெண்டு நாள்ல பெங்களூரு


போறேன் வேலை விஷயமாக. ............அம்மாவை நல்லா பாத்துக்கோ... அப்புறம் tablets எல்லாம் கரெக்ட்

டைம் குடுத்துடு ..ம்...

சரி சார்! நான் பார்த்துகிறேன் என்று உள்ளே செல்ல முயன்றாள் . அவனின் ஈகோ எட்டிப்பார்த்தது.

இவளிடம் பேசி கொண்டிருக்கிறேன் .. முடிறதுக்குள்ள எப்படி உள்ளே போவா? .. ஏய் ! நான் இன்னும்

பேசி முடில.. அதுக்குள்ள உள்ள போற ....ஏன் என்ன பாத்தா டெவில் மாதிரி இருக்கா? ..........................................

ஆமாம் என்று மனதிற்குள் பேசியவள் வெளியே இல்லை என்று தலையாட்டினாள்..அந்த

விழிகளுக்குள் அப்படியே விழுந்துவிடலாம் போலிருந்தது.

அப்பறம் நீ என்ன படிச்ச? ஏதோ nutrition course னு அம்மா சொல்லிருக்காங்க. இனிமே அம்மாக்கு மட்டும்

இல்ல எனக்கும் food chart நீதான் ரெடி பண்ணி மணி அங்கிள் கிட்ட குடுக்கணும் ..எல்லாமே different ஆ

இருக்கணும் அண்ட் ஹெல்த்தி ஆ இருக்கனும் புரிஞ்சிதா.....என்ன என்று புரிவதற்குள்

தலையாட்டினாள்.
"
ஓகே காட் இட் " என்று சென்றுவிட்டான்.


கயலுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏற்கினவே ஒவ்வொன்றுக்கும் குறை சொல்பவன்

இனி உணவு விஷயத்தில் என்ன சொல்வானோ என்று அச்சம் கொண்டாள் ..

அதற்குள் அவன் கிளம்பும் நாளும் வந்தது ..black கலர் suit அணிந்து, கம்பீரமாக, குட் மோர்னிங் Dad

என்று கைக்கடிகாரத்தை நோக்கி கொண்டே கீழிறங்கி வந்தவன் தந்தையின் கையில் இருந்த tab இல்

கவனம் பதித்தான் . பதிலுக்கு குட் மோர்னிங் சொன்னவர் மகனிடம் tab ஐ காட்டி , அரவிந்த் நீ இப்போ

பெங்களூரு போறன்னு தெரியும்.அதுக்கு முன்னாடி ஒரு 10 மினிட்ஸ் இந்த images எல்லாம்

பார்த்துடு.உனக்கு எந்த பொண்ணு பிடிச்சிருக்குனு சொல்லு நீ பெங்களூரு லிருந்து வந்ததும் நிச்சயம்

பண்ணிடலாம் ... dad ....இப்போ எனக்கு marriage வேண்டாம் என்று சொன்னவனிடம் இது உன் அம்மா

வோட ஆசை. அவ உனக்கு கல்யாணம் பண்ணிவைக்கணும் னு நெனைக்கிறா, அவளோட ஹெல்த்த

மனசுல வச்சிட்டு மறுக்காம பதில் சொல்லு. இதுல இருக்கிற எல்லாரும் நம்ம ஸ்டேட்டஸ் கு சமமா

இருக்காங்க என்று விட்டு அன்புவை நோக்கினார்.


இதுவும் பாரதியின் திட்டம் தான். அரவிந்த் மனதில் என்ன நினைத்து கொண்டிருக்கிறான் கயலை பற்றி

என்று தெரிந்து கொள்ளவே ப்ரகாஷிடம் சொல்லி , தரகரிடம் அரவிந்த்கு ஏற்ற பெண்களின்

புகைப்படங்களை கொண்டுவர சொன்னது. அவர் குடுத்த போட்டோஸ் தான் பிரகாஷ் அரவிந்திடம்

காட்டிக்கொண்டிருந்தார். பாரதியும் தன் பங்கிற்கு அரவிந்த் அம்மா வோட உடம்பு இருக்கிற கண்டிஷன்

உனக்கு நல்லாவே தெரியும் ..இன்னும் உன் கல்யாணத்த தள்ளிவைக்கிறது நல்லதில்லை. .என்னோட

ஆசைய நீ நிறைவேத்துவியாப்பா. தன் தாய் கேட்டு மறுக்கும் படி தோன்றவில்லை.அதே நேரம்

அவனுக்குள் குழப்பம் மனைவி என்ற ஸ்தானத்தை நினைத்தவுடன் அவள் மனதில் தோன்றிய முகம்

கயலுடையது .....மீண்டும் குழம்பினான். சரி மா....நீங்க யாரை செலக்ட் பண்றீங்களா அவுங்க நான்

கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றான். ஆவான் முகத்தில் மகிழ்ச்சி துளி அளவும் இல்லை.

பெற்றவர்கள் இறந்த பின் தன்னை மகன் போல வளர்க்கும் அவர்களுக்கு தான் தன் வாழ்வின்

அனைத்து உரிமையும் என்று எண்ணினான். ...கயலை பற்றி அவனுக்கே ஒரு முடிவுக்கு வர

இயலவில்லை. அவள் மேல் இருப்பது வெறும் ஈர்ப்பா இல்லை காதலா எது என்று தெரியவில்லை

..அதே குழப்பத்துடன் விமானம் ஏறினான்.

பாரதிக்கு ஒருவாறு விளங்கியது அவனின் எண்ணம்". ..ம்....உனக்கு பிடிச்சி இனி என் பொண்ணுகிட்ட

சொல்லி அதுக்கு அவளோட அப்பா , உன்னோட வளர்ப்பு அப்பா சம்மதிக்கிறது...எந்த காலத்துல

முடியும் .எனக்கு இருக்கிறது இன்னும் 29 நாள் தான்..நானா எதாது அதிரடியா பண்ணத்தான் உண்டு..

பண்றேன் ..நீ பெங்களூரு போயிட்டு வா............................" என்று நினைத்தவர் அதிரடி திட்டம் ஒன்றை

தீட்டினார்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஜூலியானா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top