• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Chippikul muthu- 8(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

juliyana

நாட்டாமை
Joined
Sep 22, 2018
Messages
87
Reaction score
197
Location
chennai
எனக்கு என்ன கவலைனா உன் அப்பா இதுக்கு ஒதுங்குவாரா ? அவரு அந்தஸ்து , அது இதுனு பேசுவாரு...

அதுதான் என்ன பண்ணணு தெரில........

அரவிந்தும் யோசித்தான்...தன்னை வளர்த்தவரின் குணநலன்கள் அவனும் அறிந்ததே. ஏன் அவனுமே அதே சூழலில் வளர்ந்தவன் தான். ஆனால் கயலிடம் மட்டும் விதிவிலக்கு.

அரவிந்த் எனக்கு ஒரு யோசனை தோணுது...நான் உங்க அப்பா கிட்ட பேசுறேன் இன்னைக்கு .....ம்....சரி மா...


பிரகாஷ் கார் இரவு உள்ளே கேட்டினுள் நுழையும் சத்தம் கேட்டவுடன் பாரதி தயாரானாள்.....தன் மகளுக்காக எதுவும் செய்ய தயாராக இருந்தாள் ..பிரகாஷ் அன்புவின் மேல் வைத்திருந்த அக்கறையும், பாசத்தையும் கபடைக்காயாக பயன்படுத்த ஆரம்பித்தாள் .....................

அறையினுள் நுழைந்த பிரகாஷ் அங்கு கண்டது...அழுது கொண்டிருந்த அன்புக்கரசியை.....அவரை அவ்வாறு பார்த்ததும், அன்பு என்னமா ஆச்சு. .. ஏன்

இப்படி அழுற....ஏற்கினவே உன் உடம்பு இருக்கிற நிலைல டாக்டர் உன்ன ரொம்ப கவனமா பார்த்துக்க சொன்னாங்க....நீ என்னனா

அழுதுகிட்டிருக்க...............என்னடா ! என்ன ஆச்சு உனக்கு??? சொல்லுமா ..................

நான் ........உங்க கிட்ட எப்படி சொல்லனு தெரில்ல....இன்னைக்கு நான் கோயில் போனப்போ அங்க ஒரு சித்தர் அருள்வாக்கு சொல்லிட்டிருந்தாரு......

நெறய தடவ அவரை பார்த்திருக்கேன்....ஆனா நான் அவர் கிட்ட பொய் கேட்டதில்லை......இன்னைக்கு என்ன அவரே பேர் சொல்லி கூப்பிட்டாரு....

அப்புறம்................" உன் குடும்பத்தை ஒரு பொண்ணோட சாபம் தாக்க போதினு சொன்னாரு....உன் வீட்டு ஆம்பிளைங்க உயிருக்கு ஆபத்து.....இதுல


இருந்து தப்பிக்கும் நா ரெண்டு நாள்ல உன் பையனுக்கு கல்யாணம் நடக்கணும் அதுவும் அம்மா, அப்பா இல்லாத வசதி இல்லாத பொண்ணோட தான்

நடக்கணும் னு சொன்னாரு...........


சாமி அது................எந்த பொண்ணோட சாபம் என் குடும்பத்த தாக்க போதுனு கேட்டேன்....என் புருஷன் இதெல்லாம் நம்ப மாட்டாரு ..........அதுவும் எங்க

பையனுக்கு வசதி இல்லாத பொண்ண கல்யாணம் பண்ண நிச்சயம் சம்மதிக்க மாட்டாருனு சொன்னேன். .........எல்லாம் உன் புருஷன் செஞ்ச பாவம்

தான்....அதுக்கு பாவவிமோட்சனம் செய்ய நான் சொன்ன மாதிரி பொண்ணத்தான் கல்யாணம் பண்ணனும் இல்ல உன் புருஷனோட தங்கச்சிக்கு

ஏற்பட்ட நிலைமை தான் அவுங்க புள்ளைக்கும் நாடாகும் னு சொன்னாரு...அதுவும் இல்லாம நான் சொல்றத உன் புருஷன் நம்பலனா , பாரதினு

சொல்லு நம்புவான்னு சொன்னாரு...


இதை கேட்டவுடன் பிரகாஷ் நொறுங்கி போனார்.....அன்புவிற்கு பிரகாஷ் ஏற்கினவே திருமணமானவர் என்று மட்டும் தெரியும்....ஆனால் அவரின்

மனைவி பெயர் தெரியாது...இதுவரை அன்பு அவரின் கடந்த காலம் பற்றி கேட்டறிய வில்லை. ...தன் வீட்டினர் மாப்பிள்ளை இவர் தான் என்று

காட்டியவுடன் அவரை பிடித்து விட்டது.....திருமணமானவர் மனைவியை பிரிந்து விட்டார் என்று மட்டும் தெரியும்....திருமணத்திற்க்கு பின் அவரின்

மனைவி பற்றி எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. ...

பாரதி என்ற பெயரை கேட்டதும் நிலைதடுமாறினார். ...இதுவரை அவரை பற்றி அவ்வளவாக யோசித்ததில்லை....இன்று சித்தர் கூறியதாக மனைவி

கூறியதும் அவர் இருக்கிறாரா? இறந்து விட்டாரா ? என்று மனதில் பல கேள்விகள் எழுந்தது...

ஏங்க ! அப்படி யாரையாவது உங்களுக்கு தெரியுமா? அவரால் பதில் சொல்ல முடியவில்லை...

அவரின் உணர்வுகளை கண்ட பாரதிக்கு ஆத்திரம், வெறுப்பு மனதினுள் தோன்றியது.....

அது .....................! என் முதல் மனைவி ! ஒ ...அவுங்க இறந்துட்டாங்களா?


தெரில..................அன்பு...அவரு வேற என்ன சொன்னாரு?


ம்..............இன்னும் 2 நாள்ல கல்யாணம் பண்ணனும் னு சொன்னவுடனே 2 நாள்ல நீங்க சொன்னமாதிரி எப்படி பொண்ணு பாத்து கல்யாணம் பண்றதுனு

கேட்டேன்.... அதுக்கு அவரு உன் புருஷன் கிட்ட உன் வீட்ல ஒரு பொண்ணு இருக்காளே அவ ஊரு என்னனு கேட்க சொல்லு.....அவரே அவளை உன்

பையனுக்கு கல்யாணம் பண்ண சம்மதிப்பாருனு சொன்னாரு... ஆனா இந்த கல்யாணம் 2 நாள்ல நடக்கலைனா இந்த சாபம் உன் புருஷன், புள்ள

உன்னோட சந்ததி எல்லாரையும் தொடரும் னு சொன்னாரு....

பிரகாஷ்க்கு எதுக்கு சித்தர் அந்த பொண்ணு கிட்ட ஊரு என்னனு கேட்க சொல்லணும் , எதுக்கு அவள கல்யாணம் பண்ண சம்மதிப்பாருனுனு

சொல்லணும் னு குழப்பமாக இருந்தது...

சரி அன்பு................நீ எதுவும் வருத்தப்படாத.. இத நான் பாத்துக்கிறேன்....

"ம்....சரிங்க....கயலை கல்யாணம் பண்ணனும் னு அவர் ஏன் சொன்னாருன்னு எனக்கு தெரில்ல....நம்ம குடும்பத்துக்கு நல்லதுன்னா நம்ம பையனுக்காக

நம்ம ஏத்துக்கிட்டுதான் ஆகணும்....அவர் சொல்றதெல்லாம் நடந்திருக்குனு அங்க இருந்த எல்லாரும் சொன்னாங்க" சரி மா.....நான் பாத்துக்கிறேன்...நீ

கவலை படாத....


அன்புவிற்கு சமாதானம் கூறியவர் சிறிது நேரம் யோசித்தார். பின் கீழே சென்று கயல் எங்கு இருக்கிறாள் என்று நோக்கினார். அவள் கார்டனில்

இருப்பதை கண்டு அங்கு சென்றார்....

அவர் வருவதை கண்டவுடன் மரியாதை நிமித்தம் எழுந்தவள், சார்! ஏதாது வேணுமா? ஒன்னும் வேண்டாம் ..உன் கூட கொஞ்சம் பேசணும்.....நீ இங்க

வரத்துக்கு முன்னாடி எங்க தங்கிருந்த....உன் வீடு எங்க....எதற்கு கேட்கிறார் என்று ஒரு நொடி யோசித்தவள் " இங்க நான் ஹாஸ்டல் ல இருந்தேன்

சார்....உன் அம்மா, அப்பா எங்க இருக்காங்க.....?

எனக்கு அம்மா, அப்பா இல்ல சார்! என்னோட அப்பா நான் பொறக்கிறதுக்கு முன்னாடியே இறந்துட்டார்....


" ஏதேனும் வீண்பேச்சு வரும் என்று தெரியாதவர்களிடம் அவ்வாறே கூறுவாள். அம்மா! ஒரு 30 நாள் முன்னாடி தான் இறந்துட்டாங்க....அப்புறம் தான்

நான் இங்க ஹாஸ்டல்ல சேர்த்துட்டேன்...

உன் சொந்த ஊரு எங்க.............. கடலூர் பக்கத்துல உச்சிமேடு சார்...ஊர் பெயரை கேட்டதும் பிரகாஷ் மிசாரம் தாக்கியதை போல் உணர்ந்தார்.....அதிர்ச்சி

நிறைந்தவராக உன்................அம்மா...பெயர் என்ன?

பாரதி சார். அம்மா டீச்சர் ஆஹ் இருந்தாங்க.....பிரகாஷால் அதிர்ச்சியை தாங்க முடியவில்லை.....

தனக்கு ஒரு குழந்தை இருப்பதே அவருக்கு தெரியாது....அதுவும் கல்யாண வயதில் ..

அப்பொழுது தான் கயலை கூர்ந்து நோக்கினார். ...பாரதியின் கண்கள், முக சாயல் அனைத்தும் இருந்தது...இவ்வளவு நாள் அவளை சரியாக கூட

நோக்கியதில்லை...தன்னிடம் வேலைபார்ப்பவள் என்ற நோக்கம் மட்டுமே கொண்டிருந்தாள்....

அவர் நினைத்து கூட பார்க்கவில்லை...தனக்கு ஒரு மகள் இருப்பாள் என்று...அப்பொழுது தான் , பாரதிக்கு இழைத்த அநியாயம் எல்லாம் அவர் கண்

முன் வந்தது...குழந்தையை வைத்து கொண்டு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள்....

அவரால் அங்கு நிற்க முடியவில்லை....உள்ளே சென்று விட்டார்...தன் அறையில் வந்தவர் அதை மூடி விட்டு வை விட்டு அழுதார். பாரதி நீ இறந்து

விட்டியா .........ஐயோ உனக்கு நான் எவ்ளோ பெரிய துரோகம் பண்ணிட்டேன். ...உன்ன மட்டும் இல்ல நம்ம குழந்தையை கூட நான் அனாதையா

விட்டுட்டேன்...எல்லாம் இருந்தும் என் பொண்ணு நீ போனப்புறம் யாரும் இல்லாம எப்படி கஷ்டப்பட்டிருப்பா....என் பாவம் எல்லாம் எனக்கு என்

மகளை பார்த்தவுடனே தான் என் கண்ணுக்கு தெரியுது.இத நான் எப்படி சரி செய்ய போறேன்...ஒரு பக்கம் அன்பு,,,என் பையன் இன்னொரு பக்கம்

என்னோட பொண்ணு.....இவுங்க எல்லாரோட வாழ்க்கையும் நல்லா இருக்கனும்...இத அன்பு கிட்ட சொன்னா அவ உடம்புக்கு ஏதாது ஆய்டும்... அவ

நல்லவ தான்...இப்போ கயல் கிட்ட இருக்கிற பாசம் அவ என் பொண்ணுன்னு தெரிஞ்சப்புறம் இருக்குமான்னு தெரில...அதுனால அவளுக்கு

தெரியாமலேயே என் பொண்ண அரவிந்த்க்கு கல்யாணம் பண்ணிவைக்கணும்...


இவர்கள் இப்படி எண்ணி கொண்டிருக்க , கயலிடம் இருந்து இதற்கு மறுப்பு வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஜூலியானா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top