எஸ் எம். தளத்தில் அகிலா கண்ணனின் குறும்புப் பார்வையிலே எனது பார்வையில் . ஸ்ருதி மற்றும் ஆகாஷின் காதல் இதை திருமணம் என்ற அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பொழுது இந்தக் கால இளைஞர்கள் மற்றும் வசதிகள்படி இருவரும் திருமணத்திற்கு முன் புகைப்படங்கள் எடுக்க வெளிநாட்டுக்கு செல்கின்றனர். இப்பொழுது திருமணத்தில் அதற்கு முன் எடுக்கப்படும் படங்களால் அவர்களின் மன மாறுதல், நெருக்கமாக பழகுவதால் அவர்களின் வரம்பு மீறிய உறவால் ஏற்படும் விளைவுகள், ஆகாஷின் குறும்பான பேச்சால் ஏற்படும் அவர்களின் பிரிவு. மீள அவர்கள் சேருவதில் இருவருக்கும் உள்ள மனச்சுணக்கங்கள் எல்லாவற்றையும் தனது இயல்பான நடையால் வசீகரிக்க வைக்கிறார் அகிலா. ஆகாஷின் குறும்பு வரம்பு மீறிய ஒன்று என்றாலும் அதை அப்பொழுதே அவனுக்கு உணரவைக்காமல் ஸ்ருதி விலகி செல்லும் முடிவை எடுப்பதும் சிறுபிள்ளைகள் வெள்ளாமை வீடு வந்து சேர்வதில்லை என்று சொல்வது மாதிரி நடந்துக் கொள்கிறார்கள். இருவரும் எப்படி சேருகிறார்கள் என்பதை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள். கார்த்திக் ரஞ்சனி, கிருஷ் ஆகியோரும் மனதை கவர்கிறார்கள்.