சாக்லேட் பாய் - 02
தர்ஷினி பாஸ்வேர்டை சொன்னதும் ஹர்ஷாவுக்கு பயங்கர அதிர்ச்சி.... இன்ப அதிர்ச்சி. அப்படியே வானத்துல பறக்கிற மாதிரி இருந்தது. ஆனா அவனுக்கு ஒரு சந்தேகம். தர்ஷின் இந்த அலுவலகத்தில் சேர்ந்து கொஞ்சம் நாள் தான் ஆகுது. அவளை கண்ட சில நாட்களிலேயே அவளை ஹர்ஷா விரும்ப தொடங்கிவிட்டான். மற்றவர்களோடு அவன் பேசும்போது காது மட்டும் தான் அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கும். அவனது கண்கெல்லாம் தர்ஷினி மீதே நிலைத்திருக்கும். காரியமாய் வேலை செய்து கொண்டிருப்பாள்.
ஒரு நாள் கூட.... ஒரு பார்வை.... ஒரு புன்னகை.... ஒரு ஹாய்.... எதுவும் கிடையாதே... அப்படி இருக்கும் போது இது தான் தான் என எப்படி நினைப்பது என அவனுக்கு குழப்பமாக இருந்தது. ஒரு ஐந்து நிமிடங்கள் இருவருமே உறைந்து போய் இருந்தனர்.
“ ஹர்ஷா! நீ ப்ரீயா இருந்தா ரம்யா வர சொன்னா.... போறியா?” வித்யா கேட்டதில் உணர்வு பெற்றவன், “இதோ.... வரேன்” என்று கூறி எழுந்து சென்றான். அவனுக்கு யோசிக்க சிறிது தனிமை தேவைபட்டது.
“ பாரு....பாரு.... நான் ரீனா கிட்ட சொல்லி கூப்பிட்டபோ வரமாட்டேன் னு சொல்லிட்டு இப்போ மட்டும் வித்யா கூப்பிட்டதும் போறான். சே.... இவனுக்கு நம்ம மேல லவ்வே இல்லை.... பாஸ்வேர்டு பத்தி ஒரு வார்த்தை கூட கேக்கல... நான் மட்டும் ஏன் தான் அவனை இப்படி உருகி உருகி காதலிக்கிறேனோ தெரியல” மனதிற்குள் குமைந்தாள் தர்ஷினி.
ரம்யாவின் கணிணியை ஆராய்ந்து கொண்டிருந்தவனின் மனமோ தர்ஷினி பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. ஒருவேளை அது வேற ஹர்ஷா என்று சொல்லிவிடுவாளோ என அவன் மனம் பதறியது.
“இல்லை.... அப்படி இருக்காது.... “ என தனக்குள் உழன்றவனால் அதற்கு மேல் அந்த வேலையை செய்ய முடியவில்லை.
“சே.... எதுக்கு இப்படி மனசை போட்டு குழப்பிக்கணும். நேரா தர்ஷினி கிட்டயே போய் கேட்டுட வேண்டியது தான். ஒரு ஹர்ஷா தான் அது நான் மட்டும் தான். தர்ஷினி பேபி..... ஐ அம் கம்மிங் டூ மேக் யூ ஃபீல் மை லவ்......” என ஒரு முடிவுக்கு வந்தவன் ரம்யா புறம் திரும்பி,
“ ரம்யா.... என்ன ப்ராபளம் தெரியல. கேன் யூ ஆஸ்க் நவீன்?”
“ஹே.... ஹர்ஷா உன்னால முடியலையா? ஆச்சரியமா இருக்கு? நீ தான் சிஸ்டமோட இண்டு இடுக்கு எல்லாத்துலயும் பூந்து விளையாடுவியே? என்னாச்சுடா உனக்கு?” என்றாள் சிரித்தபடி.
“ நத்திங் ரம்யா.... நீ நவீனை கூப்பிட்டு பார்த்துக்கோ... என்னால முடியல” என்றுவிட்டு நழுவினான்.
நேரே தர்ஷினி இருக்கையை தேடி வந்தவன் அங்கே தர்ஷினி இல்லாததை கண்டு திகைத்தான். சுற்றும் முற்றும் பார்வையால் தேடியவன் ரீனாவிடம் ,” ரீனா.... தர்ஷினி எங்கே?” என கேட்டான்.
“அவளுக்கு உடம்பு சரியில்லை னு லீவ் சொல்லிட்டு போயிட்டா.... ஏன் கேட்குற ஹர்ஷா”
“லீவ் போட்டு போயிட்டாங்களா?” என்றவனின் இதழ்களில் குறுநகை அரும்பியது.
தொடரும்.....
தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்
- பர்வீன்.மை
தர்ஷினி பாஸ்வேர்டை சொன்னதும் ஹர்ஷாவுக்கு பயங்கர அதிர்ச்சி.... இன்ப அதிர்ச்சி. அப்படியே வானத்துல பறக்கிற மாதிரி இருந்தது. ஆனா அவனுக்கு ஒரு சந்தேகம். தர்ஷின் இந்த அலுவலகத்தில் சேர்ந்து கொஞ்சம் நாள் தான் ஆகுது. அவளை கண்ட சில நாட்களிலேயே அவளை ஹர்ஷா விரும்ப தொடங்கிவிட்டான். மற்றவர்களோடு அவன் பேசும்போது காது மட்டும் தான் அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கும். அவனது கண்கெல்லாம் தர்ஷினி மீதே நிலைத்திருக்கும். காரியமாய் வேலை செய்து கொண்டிருப்பாள்.
ஒரு நாள் கூட.... ஒரு பார்வை.... ஒரு புன்னகை.... ஒரு ஹாய்.... எதுவும் கிடையாதே... அப்படி இருக்கும் போது இது தான் தான் என எப்படி நினைப்பது என அவனுக்கு குழப்பமாக இருந்தது. ஒரு ஐந்து நிமிடங்கள் இருவருமே உறைந்து போய் இருந்தனர்.
“ ஹர்ஷா! நீ ப்ரீயா இருந்தா ரம்யா வர சொன்னா.... போறியா?” வித்யா கேட்டதில் உணர்வு பெற்றவன், “இதோ.... வரேன்” என்று கூறி எழுந்து சென்றான். அவனுக்கு யோசிக்க சிறிது தனிமை தேவைபட்டது.
“ பாரு....பாரு.... நான் ரீனா கிட்ட சொல்லி கூப்பிட்டபோ வரமாட்டேன் னு சொல்லிட்டு இப்போ மட்டும் வித்யா கூப்பிட்டதும் போறான். சே.... இவனுக்கு நம்ம மேல லவ்வே இல்லை.... பாஸ்வேர்டு பத்தி ஒரு வார்த்தை கூட கேக்கல... நான் மட்டும் ஏன் தான் அவனை இப்படி உருகி உருகி காதலிக்கிறேனோ தெரியல” மனதிற்குள் குமைந்தாள் தர்ஷினி.
ரம்யாவின் கணிணியை ஆராய்ந்து கொண்டிருந்தவனின் மனமோ தர்ஷினி பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. ஒருவேளை அது வேற ஹர்ஷா என்று சொல்லிவிடுவாளோ என அவன் மனம் பதறியது.
“இல்லை.... அப்படி இருக்காது.... “ என தனக்குள் உழன்றவனால் அதற்கு மேல் அந்த வேலையை செய்ய முடியவில்லை.
“சே.... எதுக்கு இப்படி மனசை போட்டு குழப்பிக்கணும். நேரா தர்ஷினி கிட்டயே போய் கேட்டுட வேண்டியது தான். ஒரு ஹர்ஷா தான் அது நான் மட்டும் தான். தர்ஷினி பேபி..... ஐ அம் கம்மிங் டூ மேக் யூ ஃபீல் மை லவ்......” என ஒரு முடிவுக்கு வந்தவன் ரம்யா புறம் திரும்பி,
“ ரம்யா.... என்ன ப்ராபளம் தெரியல. கேன் யூ ஆஸ்க் நவீன்?”
“ஹே.... ஹர்ஷா உன்னால முடியலையா? ஆச்சரியமா இருக்கு? நீ தான் சிஸ்டமோட இண்டு இடுக்கு எல்லாத்துலயும் பூந்து விளையாடுவியே? என்னாச்சுடா உனக்கு?” என்றாள் சிரித்தபடி.
“ நத்திங் ரம்யா.... நீ நவீனை கூப்பிட்டு பார்த்துக்கோ... என்னால முடியல” என்றுவிட்டு நழுவினான்.
நேரே தர்ஷினி இருக்கையை தேடி வந்தவன் அங்கே தர்ஷினி இல்லாததை கண்டு திகைத்தான். சுற்றும் முற்றும் பார்வையால் தேடியவன் ரீனாவிடம் ,” ரீனா.... தர்ஷினி எங்கே?” என கேட்டான்.
“அவளுக்கு உடம்பு சரியில்லை னு லீவ் சொல்லிட்டு போயிட்டா.... ஏன் கேட்குற ஹர்ஷா”
“லீவ் போட்டு போயிட்டாங்களா?” என்றவனின் இதழ்களில் குறுநகை அரும்பியது.
தொடரும்.....
தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்
- பர்வீன்.மை