ப
பர்வீன்.மை
Guest
சாக்லேட் பாய் – 01
அது ஒரு ஐ.டி கம்பெனி.....
நாயகன் : ஹர்ஷா , சிஸ்டம் அட்மின்
ரொம்ப கலகலப்பான பேர்வழி. அழகன். அவனை சுற்றி எப்போதும் பொண்ணுங்க கூட்டம் இருக்கும் அதனாலயே அவனை ஆபிஸில் செல்லமாக ‘சாக்லேட் பாய்’ னு கூப்பிடுவாங்க.... நட்பாக பேசுவானே தவிர தவறாக ஒரு பார்வை கூட பார்க்கமாட்டான்.
நாயகி : தர்ஷினி, ப்ரோக்ராமர்
ரொம்ப அமைதியான பொண்ணு. அழகானவளும் கூட. ஆனா அவ அழகை வெளிகாட்டுவது போல உடையணியமாட்டாள். அதிகம் யாருடனும் பேசவும் மாட்டாள். இந்த ஆபிஸில் சேர்ந்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது.
சரி....கதைக்குள்ளே போவோம்.......
“ஹே...ஹர்ஷா! ஏன்டா என் மெசேஜூக்கு நேத்து ரீப்ளையே பண்ணல. நான் எவ்ளோ நேரம் வையிட் பண்ணேன் தெரியுமா” ஹர்ஷாவிடம் சிணுங்கி கொண்டிருந்தாள் சாரு.
“கொஞ்சம் பிஸியா இருந்தேன் டி. இன்னைக்கு புல்லா உனக்கு மெசேஜ் பண்றேன்.ஓ.கே வா?” என்றான் ஹர்ஷா அவளை சமாதானம் படுத்தும் விதமாக.
“ ம்...அப்படி வா வழிக்கு....சரி...நேத்து மேட்ச் பார்த்தியா?” தனது அடுத்த கேள்வியை முன் வைத்தாள். அதுவரை அவளுக்கு பதில் சொல்லி கொண்டிருந்தவன் தர்ஷினி உள்ளே நுழைவதை பார்த்து சிலையானான்.
“ வந்துட்டா...பார்க்குறாளா.... பாரு? திமிர் பிடிச்சவ. ஓரே ஒரு தடவை என்னை பார்த்தால் தான் என்ன? அப்படியே பேரழகி னு நெனப்பு....” மனதிற்குள் தர்ஷினியை அர்சித்தான்.
ஆமாங்க....நம்ம ஹர்ஷாவுக்கு தர்ஷினி மேல எக்கச்சக்க லவ். அவளுடைய அமைதியான குணமும், ஆர்பாட்டமில்லாத அழகும் எப்போதும் அவனை ஈர்க்கும் விஷயங்கள். ஆனால் இதுவரை அவளிடம் ஹர்ஷா பேசியதேயில்லை. ஆபிஸில் வேலை செய்யும் எல்லா பெண்களும் அவனிடம் வந்து வந்து பேச,தர்ஷினி மட்டும் அவனை கண்டுக்கவே மாட்டாள்.இவனுக்கும் தானாக போய் பேச தயக்கம். எப்போதும் ‘தானுண்டு தன் வேலையுண்டு’ என கணிப்பொறியிலேயே கண் பதித்திருப்பவளுக்கு இவன் உருகி....உருகி.... சைட் அடிக்குறது எப்படி தெரியும் சொல்லுங்க...
“என்னடா....நான் கேட்டுட்ட இருக்கேன் நீ பதிலே சொல்லாம அமைதியா நிற்கிறே....என்னாச்சு” அவன் தோளை தொட்டு உலுக்கினாள் சாரு.
“ஹே... ஒரு முக்கியமான வேலைய மறந்துட்டேன் சாரு. நாம அப்புறமா பேசலாம்” என்றுவிட்டு தன் இருக்கைக்கு விரைந்தவன் தன் அதிமுக்கிய வேலையான தன் தேவதையை சைட் அடிக்கும் பணியை துவங்கினான்.
காரியமே கண்ணாக இருந்தவள் அவளது அடுத்த இருக்கையிலிருந்த ரீனாவை அழைத்தாள்.
“ரீனா.....இங்க வாயேன்” இருவரும் எதையோ தீவிரமாக பேசிக் கொண்டனர்.
சிறிது நேரம் கழித்து ஹர்ஷாவிடம் வந்த ரீனா, “ ஹர்ஷா! தர்ஷினியோட சிஸ்டம் ல ஏதோ ப்ராபளமாம்... உன்னை வர சொன்னா....” என அழைத்தாள்.
ஹர்ஷாவிற்கு குஷி தாங்க முடியவில்லை இருந்தாலும் தன் கெத்தை விட்டு கொடுக்காமல் ,” ஏன் அவங்க வந்து கூப்பிட மாட்டாங்களா?” என்றான் விரைப்பாக.
“ஹே...அவள பத்தி தான் தெரியுமில்ல.... கொஞ்சம் கூச்ச சுபாவம்டா.... அதான் என் கிட்ட சொன்னா.... போ ஹர்ஷா....”
“ம்ப்ச்... அவள வர சொல்லு” என்றான் கணிணியை விட்டு கண்களை திருப்பாமல்.
“போடா....ரொம்ப தான் பண்ற” என சலித்து கொண்டவள் தர்ஷினியிடம் சென்று அவளையே ஹர்ஷாவை அழைத்து கொள்ளுமாறு கூறினாள்.
“ எக்ஸ்கீயூஸ் மீ சார். என் சிஸ்டம் ஹேங் ஆகிடுச்சு. கொஞ்சம் வந்து பார்க்குறீர்களா?” தர்ஷினியின் தேன் குரல் செவிகளில் பாய்ந்தும் ஹர்ஷாவிடம் அசைவில்லை.
“ம்ஹூம்.....இந்த ஆபிஸூல எல்லாரும் என்னை ஹர்ஷா....ஹர்ஷா னு ஏலம் போடுறாங்க..... மேடம் மட்டும் என் பேரை சொல்ல மாட்டாங்களாம்” மனதிற்குள் கறுவியவன் தன் வேலையில் கவனமாக இருப்பது போல் நடித்தான்.
“சார்...சார்... ஹர்ஷா சார்” ஒரு வழியாக அவனது பெயரை தர்ஷினி உச்சரித்து விட ஹர்ஷா திரும்பி பார்த்தான்.
“ஓ....என்னை தான் கூப்பிடுறீங்களா? சார்...சார் னா எனக்கு எப்படி தெரியும்?”
“என் சிஸ்டம்....”
“சரி.... சரி... வரேன்” என்றவன் எழுந்து அவளுடன் சென்றான்.
சிறிது நேரம் அவளது கணினியோடு போராடி பழுதை சரி செய்தான். கணினியை சரிபார்க்க வேண்டி அணைத்து பின் மீண்டும் ஆன் செய்தான். தடையில்லாது இயங்கிய கணிப்பொறி ரகசிய குறீயீட்டை வினவியது.
“ பாஸ்வோர்ட் சொல்லுங்க தர்ஷினி” அவளது பெயரை கூறும் வாய்ப்பை எண்ணி அகம் மகிழ்ந்தான் ஹர்ஷா.
“ பரவாயில்லை சார். இதுக்கு அப்புறம் நான் பார்த்துக்குறேன். நீ போங்க” என்றாள் தர்ஷினி.
“பாவி...பாவி.... ஒரு வார்த்தை ஓரே வார்த்தை என்கிட்ட பேசுறாளா பாரு.... என் மேல ஒரு சின்ன சாப்ட் கார்னர் கூட இல்லையா? துரத்துறதிலேயே குறியா இருக்கா....” என மனதிற்குள் நொந்து கொண்டவன், “ஹலோ.... எனக்கு ஒன்றும் உங்க சிஸ்டமை ஆன் பண்ணி பார்க்கணும்லாம் எந்த ஆசையுமில்ல.... This s also a part of my job.... பாஸ்வேர்டு சொல்லுங்க” என்றான் சற்று கோபமாக.
“அது....அது.... I....lo...ve Ha....Har...sha” என அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலையை குனிந்தவாறு தயங்கி தயங்கி கூறினாள் தர்ஷினி.
“அய்யோ....இவனுக்கு நம்ம பேர் கூட தெரியுமா னு தெரியல... எல்லா பொண்ணுங்களும் வழியுற மாதிரி என்னையும் நினைச்சிடுவானா? ஹர்ஷா! உன்னை மனசார காதலிக்கிறேன் டா.... புரிஞ்சிப்பியா?” பாவையவளின் பூ மனம் மௌனமாய் கதறியது.
தொடரும்.....
தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்
- பர்வீன்.மை
அது ஒரு ஐ.டி கம்பெனி.....
நாயகன் : ஹர்ஷா , சிஸ்டம் அட்மின்
ரொம்ப கலகலப்பான பேர்வழி. அழகன். அவனை சுற்றி எப்போதும் பொண்ணுங்க கூட்டம் இருக்கும் அதனாலயே அவனை ஆபிஸில் செல்லமாக ‘சாக்லேட் பாய்’ னு கூப்பிடுவாங்க.... நட்பாக பேசுவானே தவிர தவறாக ஒரு பார்வை கூட பார்க்கமாட்டான்.
நாயகி : தர்ஷினி, ப்ரோக்ராமர்
ரொம்ப அமைதியான பொண்ணு. அழகானவளும் கூட. ஆனா அவ அழகை வெளிகாட்டுவது போல உடையணியமாட்டாள். அதிகம் யாருடனும் பேசவும் மாட்டாள். இந்த ஆபிஸில் சேர்ந்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது.
சரி....கதைக்குள்ளே போவோம்.......
“ஹே...ஹர்ஷா! ஏன்டா என் மெசேஜூக்கு நேத்து ரீப்ளையே பண்ணல. நான் எவ்ளோ நேரம் வையிட் பண்ணேன் தெரியுமா” ஹர்ஷாவிடம் சிணுங்கி கொண்டிருந்தாள் சாரு.
“கொஞ்சம் பிஸியா இருந்தேன் டி. இன்னைக்கு புல்லா உனக்கு மெசேஜ் பண்றேன்.ஓ.கே வா?” என்றான் ஹர்ஷா அவளை சமாதானம் படுத்தும் விதமாக.
“ ம்...அப்படி வா வழிக்கு....சரி...நேத்து மேட்ச் பார்த்தியா?” தனது அடுத்த கேள்வியை முன் வைத்தாள். அதுவரை அவளுக்கு பதில் சொல்லி கொண்டிருந்தவன் தர்ஷினி உள்ளே நுழைவதை பார்த்து சிலையானான்.
“ வந்துட்டா...பார்க்குறாளா.... பாரு? திமிர் பிடிச்சவ. ஓரே ஒரு தடவை என்னை பார்த்தால் தான் என்ன? அப்படியே பேரழகி னு நெனப்பு....” மனதிற்குள் தர்ஷினியை அர்சித்தான்.
ஆமாங்க....நம்ம ஹர்ஷாவுக்கு தர்ஷினி மேல எக்கச்சக்க லவ். அவளுடைய அமைதியான குணமும், ஆர்பாட்டமில்லாத அழகும் எப்போதும் அவனை ஈர்க்கும் விஷயங்கள். ஆனால் இதுவரை அவளிடம் ஹர்ஷா பேசியதேயில்லை. ஆபிஸில் வேலை செய்யும் எல்லா பெண்களும் அவனிடம் வந்து வந்து பேச,தர்ஷினி மட்டும் அவனை கண்டுக்கவே மாட்டாள்.இவனுக்கும் தானாக போய் பேச தயக்கம். எப்போதும் ‘தானுண்டு தன் வேலையுண்டு’ என கணிப்பொறியிலேயே கண் பதித்திருப்பவளுக்கு இவன் உருகி....உருகி.... சைட் அடிக்குறது எப்படி தெரியும் சொல்லுங்க...
“என்னடா....நான் கேட்டுட்ட இருக்கேன் நீ பதிலே சொல்லாம அமைதியா நிற்கிறே....என்னாச்சு” அவன் தோளை தொட்டு உலுக்கினாள் சாரு.
“ஹே... ஒரு முக்கியமான வேலைய மறந்துட்டேன் சாரு. நாம அப்புறமா பேசலாம்” என்றுவிட்டு தன் இருக்கைக்கு விரைந்தவன் தன் அதிமுக்கிய வேலையான தன் தேவதையை சைட் அடிக்கும் பணியை துவங்கினான்.
காரியமே கண்ணாக இருந்தவள் அவளது அடுத்த இருக்கையிலிருந்த ரீனாவை அழைத்தாள்.
“ரீனா.....இங்க வாயேன்” இருவரும் எதையோ தீவிரமாக பேசிக் கொண்டனர்.
சிறிது நேரம் கழித்து ஹர்ஷாவிடம் வந்த ரீனா, “ ஹர்ஷா! தர்ஷினியோட சிஸ்டம் ல ஏதோ ப்ராபளமாம்... உன்னை வர சொன்னா....” என அழைத்தாள்.
ஹர்ஷாவிற்கு குஷி தாங்க முடியவில்லை இருந்தாலும் தன் கெத்தை விட்டு கொடுக்காமல் ,” ஏன் அவங்க வந்து கூப்பிட மாட்டாங்களா?” என்றான் விரைப்பாக.
“ஹே...அவள பத்தி தான் தெரியுமில்ல.... கொஞ்சம் கூச்ச சுபாவம்டா.... அதான் என் கிட்ட சொன்னா.... போ ஹர்ஷா....”
“ம்ப்ச்... அவள வர சொல்லு” என்றான் கணிணியை விட்டு கண்களை திருப்பாமல்.
“போடா....ரொம்ப தான் பண்ற” என சலித்து கொண்டவள் தர்ஷினியிடம் சென்று அவளையே ஹர்ஷாவை அழைத்து கொள்ளுமாறு கூறினாள்.
“ எக்ஸ்கீயூஸ் மீ சார். என் சிஸ்டம் ஹேங் ஆகிடுச்சு. கொஞ்சம் வந்து பார்க்குறீர்களா?” தர்ஷினியின் தேன் குரல் செவிகளில் பாய்ந்தும் ஹர்ஷாவிடம் அசைவில்லை.
“ம்ஹூம்.....இந்த ஆபிஸூல எல்லாரும் என்னை ஹர்ஷா....ஹர்ஷா னு ஏலம் போடுறாங்க..... மேடம் மட்டும் என் பேரை சொல்ல மாட்டாங்களாம்” மனதிற்குள் கறுவியவன் தன் வேலையில் கவனமாக இருப்பது போல் நடித்தான்.
“சார்...சார்... ஹர்ஷா சார்” ஒரு வழியாக அவனது பெயரை தர்ஷினி உச்சரித்து விட ஹர்ஷா திரும்பி பார்த்தான்.
“ஓ....என்னை தான் கூப்பிடுறீங்களா? சார்...சார் னா எனக்கு எப்படி தெரியும்?”
“என் சிஸ்டம்....”
“சரி.... சரி... வரேன்” என்றவன் எழுந்து அவளுடன் சென்றான்.
சிறிது நேரம் அவளது கணினியோடு போராடி பழுதை சரி செய்தான். கணினியை சரிபார்க்க வேண்டி அணைத்து பின் மீண்டும் ஆன் செய்தான். தடையில்லாது இயங்கிய கணிப்பொறி ரகசிய குறீயீட்டை வினவியது.
“ பாஸ்வோர்ட் சொல்லுங்க தர்ஷினி” அவளது பெயரை கூறும் வாய்ப்பை எண்ணி அகம் மகிழ்ந்தான் ஹர்ஷா.
“ பரவாயில்லை சார். இதுக்கு அப்புறம் நான் பார்த்துக்குறேன். நீ போங்க” என்றாள் தர்ஷினி.
“பாவி...பாவி.... ஒரு வார்த்தை ஓரே வார்த்தை என்கிட்ட பேசுறாளா பாரு.... என் மேல ஒரு சின்ன சாப்ட் கார்னர் கூட இல்லையா? துரத்துறதிலேயே குறியா இருக்கா....” என மனதிற்குள் நொந்து கொண்டவன், “ஹலோ.... எனக்கு ஒன்றும் உங்க சிஸ்டமை ஆன் பண்ணி பார்க்கணும்லாம் எந்த ஆசையுமில்ல.... This s also a part of my job.... பாஸ்வேர்டு சொல்லுங்க” என்றான் சற்று கோபமாக.
“அது....அது.... I....lo...ve Ha....Har...sha” என அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலையை குனிந்தவாறு தயங்கி தயங்கி கூறினாள் தர்ஷினி.
“அய்யோ....இவனுக்கு நம்ம பேர் கூட தெரியுமா னு தெரியல... எல்லா பொண்ணுங்களும் வழியுற மாதிரி என்னையும் நினைச்சிடுவானா? ஹர்ஷா! உன்னை மனசார காதலிக்கிறேன் டா.... புரிஞ்சிப்பியா?” பாவையவளின் பூ மனம் மௌனமாய் கதறியது.
தொடரும்.....
தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்
- பர்வீன்.மை