- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
"எம்மாடி! கட்டடம் எல்லாம் எம்புட்டு பெருசா இருக்கு. காவ்யா, ஊர் எல்லாம் நல்லா தான் இருக்கு, ஆனா நீ ஜாக்கிரதையா இருக்கணும்".
"இந்த ஊர் பயலுங்க எப்படி இருப்பாய்ங்கன்னு, நமக்கு தெரியாது. நாமதேன் ஜாக்கிரதையா இருக்கணும், அப்புறம் உடுப்பு எல்லாம் நம்ம உடுப்பே உடுத்து. நான் பார்த்த வரைக்கும், அவிளுங்க எல்லாம் உடுப்பு உடுத்தி இருக்குதுங்களான்னே தெரியல" என்று காவ்யஹரிணியிடம் சலித்துக் கொண்டார் அவளின் பாட்டி நாச்சியார்.
"கிழவிக்கு இங்க உன்னை விடுறது ல மனசே இல்லை காவி, அதான் இப்படி புலம்பிகிட்டு இருக்கு" என்று அவளின் உடன் பிறப்பு மனோகர் கூறவும், முறைத்தாள்.
"உனக்கு எம்புட்டு தடவை படிச்சு படிச்சு சொன்னேன், கிழவின்னு பாட்டியை கூப்பிடாதேன்னு. இன்னொரு தடவை அப்படி கூப்பிடு, உன்னை பாட்டி கிட்ட மாட்டி விடுறேன்" என்று தம்பியை எச்சரித்தாள்.
"அப்போ, உன்னை நான் காவின்னு கூப்பிடலாமா" என்று அந்த காவியில் அழுத்தம் கொடுக்கவும், இவள் அவனை அடிக்க துரத்தினாள்.
பஸ்சிற்க்குள், இவர்களின் அட்டகாசம் பார்த்து அவர்களின் தாத்தா முறைக்க தொடங்கினார். அந்த முறைப்பில், இருவரும் அடங்கி அவர்கள் இடத்தில் சென்று அமர்ந்தனர்.
**********************************************************************
அன்னையின் புகைப்படம் முன், அழுத்தமாக அவரை பார்த்து நின்று இருந்தான் முஹம்மத் faiq. மனதின் ஓரம் அவனுக்கு வலித்தது, அன்னையின் மறுபக்கம் அறிந்து.
"faiq! உங்க அப்பா கூப்பிடுறார் உன்னை, சீக்கிரம் கீழே இறங்கி வா" என்று அவர் தந்தையின் வலது கை ஷாஹில், சொல்லிவிட்டு சென்றார் அவனிடம்.
"அம்மா! உங்களுக்கு கிடைக்காத அங்கீகாரம், எனக்கும் வேண்டாம். இனி என் போராட்டம், எனக்கான போராட்டமா இருக்க போகுது . என்னை இனி யாரும், தடுக்க முடியாது" என்று எண்ணிக் கொண்டான்.
கீழே சில பெரிய தலைகள் அமர்ந்து இருப்பதை பார்த்து, இவனுக்கு விஷயம் எதுவோ பெரியது என்று புரிந்தது. அங்கே அவன் தந்தை, இவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தார்.
"எதுக்கு இப்படி முறைச்சு பார்கிறார்?" என்று புரியாமல் குழம்பிக் கொண்டு இருந்தான்.
ஆனால், அங்கே இவனுக்கு அளித்த செய்தி அவனை யோசிக்க வைத்தது. இது அல்லாவின் செயலா! இது எப்படி சாத்தியம்? என்று எண்ணிக் கொண்டு பல்வேறு சிந்தனைகளில் பயணித்தான்.
இறுதியாக, இப்பொழுது இதை கெட்டியாக பற்றிக் கொண்டு அவனின் போராட்டத்தை சந்திக்க தயாரானான். அல்லாவின் துணையுடன், இந்த போராட்டத்தில் ஜெயப்பேன் என்ற நம்பிக்கையோடு களத்தில் இறங்க முடிவு செய்தான் faiq.
********************************************************
"இவனை எல்லாம், ஏன் சுனாமி தூக்கல? எப்போ பாரு, இஞ்சி தின்ன குரங்கு மாதிரி உர்ர்ன்னு முகத்தை வச்சுக்கிட்டு, வேலை வாங்குறான்" என்று சலித்துக் கொண்டாள் காவ்யஹரிணி.
"இது ஏன் இங்க இருக்கு? entrance ல இருக்க கூடாது, exit ல தான் இருக்கணும். சோ அங்க கொண்டு போய், நீயே வை" என்று கூறிவிட்டு சென்ற faiqகை பார்த்து பல்லை கடித்தாள்.
"நான் என்ன இவனுக்கு பி.ஏ வா இப்படி எல்லாத்தையும், என்னை வச்சே வேலை வாங்குறான். சொல்ல வருவதை காது கொடுத்து கூட, கேட்க ரெடியா இல்லை, இதுல இவன் எல்லாம் பிரின்ஸ், கலிகாலம்" என்று மீண்டும் வசை பாடிக் கொண்டே வேலை பார்த்தாள்.
"நாளைக்கு காலையில் எட்டு மணிக்கு எல்லாம், இங்க வந்துவிடு" என்று கூறியவனை பார்த்து முறைத்தாள்.
"நாளைக்கு லீவ் சார்" என்று நியாபகப்படுதினாள் அவனுக்கு.
"தெரியும் திங்கட்கிழமை பொருட்காட்சி இருக்கு, சோ நாளைக்கு நோ லீவ்" என்று கூறிவிட்டு சென்றவனை பார்த்து, எதையாவது எடுத்து அடிக்கலாமா என்ற எண்ணம் ஓடியது.
"என் தலையில் எதையாவது எடுத்து அடிக்கணும் நினைச்சா, உன் பாக் ல இருந்து எடுத்து அடி. இங்க இருக்கிறது எல்லாம் பொக்கிஷம், நியாபகம் இருக்கட்டும்" என்று கூறிவிட்டு செல்பவனை பார்த்து பல்லை கடித்தாள்.
"இந்த ஊர் பயலுங்க எப்படி இருப்பாய்ங்கன்னு, நமக்கு தெரியாது. நாமதேன் ஜாக்கிரதையா இருக்கணும், அப்புறம் உடுப்பு எல்லாம் நம்ம உடுப்பே உடுத்து. நான் பார்த்த வரைக்கும், அவிளுங்க எல்லாம் உடுப்பு உடுத்தி இருக்குதுங்களான்னே தெரியல" என்று காவ்யஹரிணியிடம் சலித்துக் கொண்டார் அவளின் பாட்டி நாச்சியார்.
"கிழவிக்கு இங்க உன்னை விடுறது ல மனசே இல்லை காவி, அதான் இப்படி புலம்பிகிட்டு இருக்கு" என்று அவளின் உடன் பிறப்பு மனோகர் கூறவும், முறைத்தாள்.
"உனக்கு எம்புட்டு தடவை படிச்சு படிச்சு சொன்னேன், கிழவின்னு பாட்டியை கூப்பிடாதேன்னு. இன்னொரு தடவை அப்படி கூப்பிடு, உன்னை பாட்டி கிட்ட மாட்டி விடுறேன்" என்று தம்பியை எச்சரித்தாள்.
"அப்போ, உன்னை நான் காவின்னு கூப்பிடலாமா" என்று அந்த காவியில் அழுத்தம் கொடுக்கவும், இவள் அவனை அடிக்க துரத்தினாள்.
பஸ்சிற்க்குள், இவர்களின் அட்டகாசம் பார்த்து அவர்களின் தாத்தா முறைக்க தொடங்கினார். அந்த முறைப்பில், இருவரும் அடங்கி அவர்கள் இடத்தில் சென்று அமர்ந்தனர்.
**********************************************************************
அன்னையின் புகைப்படம் முன், அழுத்தமாக அவரை பார்த்து நின்று இருந்தான் முஹம்மத் faiq. மனதின் ஓரம் அவனுக்கு வலித்தது, அன்னையின் மறுபக்கம் அறிந்து.
"faiq! உங்க அப்பா கூப்பிடுறார் உன்னை, சீக்கிரம் கீழே இறங்கி வா" என்று அவர் தந்தையின் வலது கை ஷாஹில், சொல்லிவிட்டு சென்றார் அவனிடம்.
"அம்மா! உங்களுக்கு கிடைக்காத அங்கீகாரம், எனக்கும் வேண்டாம். இனி என் போராட்டம், எனக்கான போராட்டமா இருக்க போகுது . என்னை இனி யாரும், தடுக்க முடியாது" என்று எண்ணிக் கொண்டான்.
கீழே சில பெரிய தலைகள் அமர்ந்து இருப்பதை பார்த்து, இவனுக்கு விஷயம் எதுவோ பெரியது என்று புரிந்தது. அங்கே அவன் தந்தை, இவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தார்.
"எதுக்கு இப்படி முறைச்சு பார்கிறார்?" என்று புரியாமல் குழம்பிக் கொண்டு இருந்தான்.
ஆனால், அங்கே இவனுக்கு அளித்த செய்தி அவனை யோசிக்க வைத்தது. இது அல்லாவின் செயலா! இது எப்படி சாத்தியம்? என்று எண்ணிக் கொண்டு பல்வேறு சிந்தனைகளில் பயணித்தான்.
இறுதியாக, இப்பொழுது இதை கெட்டியாக பற்றிக் கொண்டு அவனின் போராட்டத்தை சந்திக்க தயாரானான். அல்லாவின் துணையுடன், இந்த போராட்டத்தில் ஜெயப்பேன் என்ற நம்பிக்கையோடு களத்தில் இறங்க முடிவு செய்தான் faiq.
********************************************************
"இவனை எல்லாம், ஏன் சுனாமி தூக்கல? எப்போ பாரு, இஞ்சி தின்ன குரங்கு மாதிரி உர்ர்ன்னு முகத்தை வச்சுக்கிட்டு, வேலை வாங்குறான்" என்று சலித்துக் கொண்டாள் காவ்யஹரிணி.
"இது ஏன் இங்க இருக்கு? entrance ல இருக்க கூடாது, exit ல தான் இருக்கணும். சோ அங்க கொண்டு போய், நீயே வை" என்று கூறிவிட்டு சென்ற faiqகை பார்த்து பல்லை கடித்தாள்.
"நான் என்ன இவனுக்கு பி.ஏ வா இப்படி எல்லாத்தையும், என்னை வச்சே வேலை வாங்குறான். சொல்ல வருவதை காது கொடுத்து கூட, கேட்க ரெடியா இல்லை, இதுல இவன் எல்லாம் பிரின்ஸ், கலிகாலம்" என்று மீண்டும் வசை பாடிக் கொண்டே வேலை பார்த்தாள்.
"நாளைக்கு காலையில் எட்டு மணிக்கு எல்லாம், இங்க வந்துவிடு" என்று கூறியவனை பார்த்து முறைத்தாள்.
"நாளைக்கு லீவ் சார்" என்று நியாபகப்படுதினாள் அவனுக்கு.
"தெரியும் திங்கட்கிழமை பொருட்காட்சி இருக்கு, சோ நாளைக்கு நோ லீவ்" என்று கூறிவிட்டு சென்றவனை பார்த்து, எதையாவது எடுத்து அடிக்கலாமா என்ற எண்ணம் ஓடியது.
"என் தலையில் எதையாவது எடுத்து அடிக்கணும் நினைச்சா, உன் பாக் ல இருந்து எடுத்து அடி. இங்க இருக்கிறது எல்லாம் பொக்கிஷம், நியாபகம் இருக்கட்டும்" என்று கூறிவிட்டு செல்பவனை பார்த்து பல்லை கடித்தாள்.