- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
Hi Vijaya sis thanks a lot sis ..Nice ending Uma.
Hi Vijaya sis thanks a lot sis ..Nice ending Uma.
Thank u Akshaya akka .Nice ud sis
Hi akka thanks a lotNice update Uma dear, super ah mudichimga Dubai pathina niraya vishayam engaluku sonnimga super dear, iru dhruvamgala erundalum rendu perum avamga kadal Nala onnu serndamga, iva kandupudichadu periya vishayam adu, avanum avaluku help panradu ellame sema, stop super ah konduponimga nice ending Uma dear thanks, sikirama next story Oda vamga dear.
Gomathi akka me uma Deepak ..Excellent update zainab dear???
Hi thara thanks a lot Da..Very nice update
Nandri sago..கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
????????????
Thank u da..Nice story uma sis finally keladi excavation pathina research a.. athu ennamo unmai than half way la niruthitannga.. dubai prince tamilnadu vanthu settle aayitara .. happy ending nice sis???????????
“அங்க இருந்து, தப்பி வந்தவங்க இங்க இந்த பாலைவனத்தில் எப்படி பிழைக்க அப்படினு யோசிக்கும் பொழுது தான், இதோ இப்போ சொன்னாலே, அங்க அந்த சிட்டி பிளாண்ட் ஒன் அப்படினு, அதை அப்போவே நாங்க தான் செய்து இருந்தோம்”.
“எங்களோட வேர் தமிழ்நாடு, மொழி தமிழ். ஆனா, ஏனோ இங்க என்னோட முன்னோர்கள் எல்லாம் எப்படி அதுக்கு அப்புறம் அரபு கத்துகிட்டாங்க இது எல்லாம் தெரியல”.
“அதை நானும் கண்டுபிடிக்க முயற்சி பண்ணிகிட்டு தான் இருக்கேன், நிச்சயம் கண்டு பிடிசிடுவென் ஒரு நாள்” என்று அவன் கூறவும், அவர்கள் மலைத்து பார்த்தனர்.
அதன் பின் எல்லோரும், அவரகள் இருவரையும் கலாய்த்து கொண்டும், வாழ்த்து கூறிக் கொண்டும் முடித்து விட்டு, அங்கு இருந்து சென்றனர்.
அப்பொழுது மணி இரவு இரண்டு மணி எனவும், குளிர் மேலும் அதிகரிக்க தொடங்கவும், இருவரும் டென்ட் உள்ளே நுழைந்தனர்.
“ஆமா! எந்த தைரியத்தில் உனக்கும் எனக்கும் செட் ஆகாது சொல்லிட்டு, நீ என்னை அப்போ ப்ரேக் அப் பண்ண” என்று இடுப்பில் கை வைத்து, முறைத்துக் கொண்டு கேட்டாள் அவனின் வணி.
“ஹே! நீயே யோசிச்சு பாரு, நான் அங்க அப்படி ஒரு கூட்டத்தில் சாமியை பார்த்தது கிடையாது. அதுவும் இல்லாம, பிறந்ததில் இருந்து குரான் ஓதி, பழகிட்டு அப்புறம் உன்னையும் மதம் மாற சொல்ல எனக்கு இஷ்டமில்லை”.
“இது எல்லாத்துக்கும் மேல, நீ அங்க போட்ட ரூல்ஸ் தான். எல்லோரும் பார்ப்பாங்க, தள்ளி போ அப்படினு எப்போ பார்த்தாலும் சொல்லிகிட்டே இருந்தா, எனக்கு கோபம் வராதா”.
“இங்க இருக்கிற சுதந்திரம் அங்க இல்லை, அப்படினு தெரிஞ்சு நொந்துட்டேன் முதல. ஆனா, ப்ரேக் அப் பண்ணின பிறகு தான், நீ இல்லாம நான் இல்லை அப்படினு தெளிவா புரிஞ்சிக்க முடிஞ்சது என்னால”.
“அப்புறம் என்னோட வேர் அங்க அப்படினு தெரிஞ்சதாலயும், என் மனம் கவர்ந்த தேவதை பிறந்த இடம் அங்க அப்படினு தான் தீவிரமா தமிழ் கத்துக்கிட்டேன்”.
“அதுக்குள்ள, இங்க என் அம்மா ஆசை நான் இளவரசர் ஆகனும் அப்படின்றது. அதுவும், அந்த நேரத்தில் நிறைவேரவும், உடனே நான் ஆறு மாசம் டைம் எடுத்து முழு மூச்சாக, என்ன செய்யனும் எல்லாம் தெளிவா முடிவெடுத்தேன்”.
“அந்த பத்து நாள் பாலைவனத்தில் நான் இருந்த ஒரே காரணம், நீ தான். உன்னை எப்படி ஃபேஸ் பண்ணுறதுண்ணு தெரியாம, ஓடி ஒழிந்து கொண்டேன் தான் சொல்லணும்”.
“ஆனா நீ இருக்கியே, தடாலடியாக வந்து குதிச்சுட்ட. ஆமா, ஏன் அன்னைக்கு பூர்கா போட்டு இருந்த?” என்று கேட்டான்.
“எல்லாம் உங்களுக்காக தான், நீங்களே எனக்காக இவ்வளவு யோசித்து மாறும் பொழுது, நான் மாற யோசிக்க மாட்டேனா?” என்று கூறியவளை இறுக்கி அணைத்தான்.
ஆமா, நாளைக்கு நாம ஒட்டக சவாரி போகலாமா? என்று அவன் சிரித்துக் கொண்டே கேட்கவும், அவள் அவனை பிடித்து மொத்த தொடங்கினாள்.
“ஒட்டக சஃபாரி, எனக்கு பயம் தெரிஞ்சும் நீ எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி சொல்லுவ!” என்று கூறிக் கொண்டே மொத்த, அவனோ அவளை அணைத்துக் கொண்டு வேறு உலகத்திற்கு அழைத்து சென்றான்.
இரு துருவங்களாக, இன்னும் அவர்கள் இருந்தாலும் அவர்களின் காதல் மாறாமல் இன்னும் வளர்ந்து கொண்டு இருக்கும்.
முற்றும்…