புவி
”நீ 348 ஆண்டுகள் எதிர்காலத்துலேர்ந்து இங்க வந்திருக்க!” பிரபுவின் குரலிலும் வியப்பு அப்பி இருந்தது.
“பிரபு, நீங்க என்ன சொல்றீங்க? இது எப்படி சாத்தியம்? இரெண்டரை மில்லியன் ஒளியாண்டு தொலைவுலெர்ந்து, முன்னூஊஊற்றி நாப்பத்தெட்ட்டு ஆண்டுகள் பின்னோக்கி இவர் இங்க வளவன் உடலுக்குள்ள வந்திருக்காரா!”
மருத்துவரும் தன் வியப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் அவர்களுக்குத் தெரிந்த தகவலையே மீண்டும் விரிவாகச் சொன்னார்.
”டாக்டர்... எனக்கு இப்பதான் ஒன்னு நியாபகம் வருது...” பிரபி சட்டெனப் பரப்பரப்பானான்.
“என்னது அது பிரபு?” மருத்துவரும் ஆர்வமாய் கேட்டார். ஜீவாவும் பிரபுவைப் பார்த்தான்.
“இவன் கண்விழிச்சப்ப பேசினதலாம் இப்பதான் நிதானமா யோசிச்சுப் பார்த்தேன்...”
“ஓ! அப்ப நான் இங்க இல்லயே, என்ன சொன்னான் இவன்?”
”இன்-பில்ட் கம்யூனிகேட்டர்னான், என்னோட சிஸ்டம்லாம் ஆஃப் லைன்ல இருக்குனான்...”
“என்ன சொல்றீங்க நீங்க? எனக்கு ஒன்னும் புரியலயே?” மருத்துவரின் முகத்தில் குழப்பம் படர்ந்தது.
“நானே சொல்றேன்! டாக்டர், நான் ஒரு இயந்திரம், அதாவது கலாவிக்ல இருக்குற என்னோட உடல் ஒரு இயந்திர உடல்!”
பிரபு பதில் சொல்லும் முன் ஜீவாவே சொன்னான். அதைக்கேட்டு மருத்துவரின் முகம் அஷ்டகோணலாய்ப் போனது.
“நிஜம்மாவா? அதெப்படி சாத்தியம்? உங்க உடல் இயந்திரம்னா, நீங்க? நீங்க இறந்த பிறகு உங்க மைண்டை ஒரு இயந்திர உடலுக்குள்ள வெச்சுக்கிட்டீங்களா?”
மருத்துவர் சரசரவெனக் கேள்விகளை அடுக்கினார்.
ஜீவா மெள்ளத் தன் தலையை இடம்-வலமாக ஆட்டினான்.
“நான் முழுக்க முழுக்க இயந்திரந்தான், டாக்டர்! ‘நான்’ அப்படிங்குறது என் உடலென்ற வன்பொருளில் இருந்த ஒரு மென்பொருள்... அவ்வளவுதான்!”
ஜீவா சொல்லவும் மருத்துவர் அதை மறுப்பதைப் போலத் தலையை ‘இல்லை’ என்று ஆட்டினார்.
“நீங்க முழுக்க ஒரு மென்பொருள்னா உங்களால வளவனின் உடலில் இருப்பது சாத்தியமில்லையே?”
“இருக்கு, டாக்டர்! என் உடலில் சில உறுப்புகள் செமி-ஆர்கானிக், அவற்றில் என் மூளையும் ஒன்று! அதனாலத்தான் என்னோட ஏ.ஐ. (A.I.) ஏறத்தாழ மனித மூளையின் சிந்தனைக்கு நிகரான செயல்திறனோடு இருக்கு... அதே நேரம் மனித மூளையின் பலவீனமான நியாபகமறதி போன்ற குறைகள் எனக்கு இல்லை!”
“இல்ல ஜீவா, தேர் இஸ் சம்திங் டீப் இன் திஸ்!” மருத்துவர் ஆழ்ந்த சிந்தனையோடு சொன்னார்.
பிரபுவும் அதனை ஆமோதித்தான்.
அப்போது நந்தினியும் கல்பனாவும் மீண்டும் அங்கே வந்தனர்.
பிரபு அவர்களை வரவேற்றான்.
“வாங்க... இங்க சிஷுவேஷன் ரொம்ப குழப்பமா இருக்கு... நீங்களும் தெரிஞ்சுக்கனும்... இருங்க, சந்துருவையும் பிரபாகரனையும் கூட கூப்டுவோம், அவங்களும் இங்க நடந்ததைத் தெரிஞ்சுக்கனும்...”
பிரபு சொல்லிக்கொண்டே அங்கிருந்த கம்பியில்லா தொடர்பு சாதனம் மூலம் பிரபாகரனை அழைத்து வரச்சொல்லிவிட்டு, சந்துருவையும் அழைத்துக்கொண்டு வரும்படி சொன்னான்.
சற்று நேரத்தில் அவர்களும் வந்து சேர, மருத்துவரும் பிரபுவும் அங்கிருந்த நிலைமையை அனைவருக்கும் விளக்கினர்.
“வாட்? இவரு ஜீவாவா? வேற்றுக்கிரக இயந்திர மனிதனா?”
“இரண்டரை மில்லியன் ஒளியாண்டுகளா? 348 ஆண்டுகள் எதிர்காலத்திலேர்ந்தா?”
அவர்கள் மாறி மாறி கேள்விகள் கேட்டனர்.
முதலில் அதிகமாய்க் குழம்பிப் பின் மெள்ளத் தெளிந்தனர்.
”ஆனா, ஒரு ஹ்யூமனாய்ட் ரோபோவான இவரால எப்படி வளவனின் மூளைக்குள்ள வர முடியும்? நாட் பாஸிபிள்!”
நந்தினி நம்பமுடியாமல் மீண்டும் ஒருமுறை கேட்டாள்.
“எனக்கும் அதே குழப்பந்தான் நந்தினி... ஆனா, இவரோட நிஜ உடல் முழுக்க இயந்திரம் இல்லையாம், சில உறுப்புகள் செமி-ஆர்கானிக்காம், இவரோட மூளையும் அப்படி செமி-ஆர்கானிக்தானாம்!”
மருத்துவர் விளக்கினார்.
“இதை எப்படி எடுத்துகுறதுனே தெரியல...” என்று நந்தினி குழப்பம் கலந்த சிந்தனையோடு சொன்னாள்.
”ஆமா, வளவன் என்ன ஆனானும் தெரியல!” பிரபு தன் கவலையை வெளிப்படுத்தினான்.
அவன் வளவனைக் குறிப்பிட்டதும் நந்தினியின் நெஞ்சு பிசைந்தது. என்னவென்று குறிப்பிட முடியாத ஒரு உணர்வு அவளை ஆக்கிரமித்துக்கொண்டது.
“எனக்கென்னவோ, இவர் இங்க வளவன் உடல்ல வந்தா மாதிரி வளவன் அங்க இவர் உடலுக்குள்ள போயிருபார்னு தோனுது!”
கல்பனா சட்டெனச் சொன்னாள்.
அதைக் கேட்டு பிரபு நந்தினி இருவருமே சற்று ஆறுதல் அடைந்தனர்.
“சரிதான், எனக்கும் இந்த மாற்றம் முழுக்க எதேச்சையா நடந்ததா தெரியல, அப்படி ஒருவர் மூளைக்குள்ள இன்னொருவரின் மனம் வந்து கச்சிதமா பொருந்துறது எளிதான விஷயமில்ல... ஸோ, ஜீவா வளவன் உடல்ல வந்தா மாதிரி வளவன் ஜீவா உடல்லதான் இருக்கனும்...”
மருத்துவரும் நம்பிக்கையோடு சொன்னார்.
“நம்மால கலாவிக்கைத் தொடர்பு கொள்ள முடியுமா?” நந்தினி ஆர்வத்தோடு கேட்டான்.
“வாய்ப்பே இல்ல! ஜீவா சொல்றபடி பார்த்தா கலாவிக் இரண்டரை மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவுல இருக்கு, அதிகபட்சமா ஒளி வேகத்துல தகவல் அனுப்பினாலும் அது அங்க போய் சேர இரண்டரை மில்லியன் ஆண்டுகள் ஆகும்! அதுமட்டுமில்லாம...”
பிரபு முடிக்கும் முன் நந்தினியே சொன்னாள்,
“ஜீவா வந்திருக்கிறது எதிர்காலத்துலேர்ந்து!”
“ஆமா! 348 ஆண்டுகள்!” பிரபு அலுப்போடு சொன்னான்.
“என்னப்பா, ஒரு கிரகத்தையே இங்கேர்ந்து அங்க அனுப்பிருக்காங்க, நம்மால ஒரு தகவல் அனுப்ப இயலாதா?” கல்பனா சலிப்போடு கேட்டாள்.
“மேடம், கிரகத்தையே அனுப்புனது 2050-ல, இன்னும் முப்பது வருஷம் கழிச்சு!”
”ம்ம்ம்...” கல்பனா சிந்தனையில் ஆழ்ந்தாள், சட்டென அவள் முகம் பிரகாசமானது,
“அப்ப எதிர்காலத்துல இருக்குற கலாவிக்லேர்ந்து நம்மல தொடர்பு கொள்ள முடியும்ல?” பள்ளிப் பெண்ணைப் போல ஆர்வமாய்க் கேட்டாள்.
“முடியலாம், முடியாமலும் போகலாம்... இரண்டரை மில்லியன் ஒளியாண்டுகள் இட இடைவெளி, முந்நூத்தி நாப்பத்தெட்டு ஆண்டுகள் கால இடைவெளி... என்னால எதையும் உறுதியா சொல்ல முடியல!” பிரபு அலுப்பாய்ச் சொன்னான்.
”நீங்க என்ன நினைக்குறீங்க, ஜீவா?”
கல்பனா விடாமல் ஜீவாவைப் பார்த்துக் கேட்டாள்.
“கலாவிக்ல இங்கவரைக்கும் தகவல் அனுப்பக் கூடிய ஆற்றல் உள்ள கருவிகள் இருக்கு, ஆனா, அங்கேர்ந்து அனுப்பினாலும் இங்க வர-”
“இரண்டரை மில்லியன் ஆண்டுகள் ஆகும், அதானே?” கல்பனா அவனைச் சலிப்போடு இடைவெட்டினாள்,
“எத்தன தடவதான்பா ‘இரண்டரை மில்லியன் ஒளியாண்டு’யே திரும்பத் திரும்பச் சொல்வீங்க, ஸ்ரீ ராம ஜெயம் மாதிரி!”
“சீ... என்னது?” ஜீவா புரியாமல் கேட்டான்.
“சீப்பு! அட போய்ய்யா...” என்று அவள் அருகில் இருந்த இருக்கையில் விழுந்தமர்ந்தாள்.
பிரபுவிற்கு அவளைப் பார்த்து வாஞ்சையுடன் கூடிய ஒரு புன்னகை மலர்ந்தது.
”என்ன டா இளிப்பு?” கல்பனா பிரபுவிற்கு மட்டும் கேட்கும்படி கேட்டாள்.
“அது... நீ சீப்புனதும் எனக்கு சீ.பீ.ஆர். நியாபகம் வந்துச்சு, அதான்...” என்று மீண்டும் ஒரு பெரிய புன்னகையோடு சொன்னான்.
“இந்த ரணகலத்துலயும் உனக்குக் கிலுகிலுப்பு கேக்குதா?” கல்பனா பொய்க் கோவத்தோடு அவனை முறைத்தாள்.
“ஜீவா சொன்னதக் கேட்டல, 2050ல உலகம் அழியப் போகுது, இருக்குற முப்பது வருஷத்த நல்லா எஞ்ஜாய் பண்ணிக்கனும் டார்லிங்!” பிரபு குறும்பாகச் சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்டதும் கல்பனா பரபரப்பாய் எழுந்தாள்.
“மை காட்! இத எப்படி நான் மிஸ் பண்ணேன்!”
“எதை?” பிரபு புரியாமல் கேட்டான், ஆனால் கல்பனா அவனைக் கண்டு கொள்ளாமல் ஜீவாவை நோக்கினாள்.
“ஜீவா...?”
“ம்?”
“பூமி அழிஞ்சிடுச்சுனு சொன்னீங்கள்ல, அது எப்படி அழிஞ்சுது?”
“டெக்டானிக் பிளேட்ஸ்ல தொடர்ச்சியா ஏற்பட்ட விரிசல்களால பூமி இரெண்டா பிளந்துருச்சு...”
அவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் அவனை நம்ப முடியாத பெருவியப்பில் பார்த்தனர்.
கல்பனா மட்டும் அசராமல் அடுத்த கேள்வியைக் கேட்டாள்,
“அந்த ஃபால்ட் எங்க தொடங்கிச்சுனு தெரியுமா?”
“ம்ம், தெரியுமே! இங்கதான், அண்டார்டிக்கால!”
ஜீவா சர்வ சாதாரணமாய்ச் சொல்ல, அனைவருமே அதிர்ச்சியில் உறைந்தனர்.
”நீ 348 ஆண்டுகள் எதிர்காலத்துலேர்ந்து இங்க வந்திருக்க!” பிரபுவின் குரலிலும் வியப்பு அப்பி இருந்தது.
“பிரபு, நீங்க என்ன சொல்றீங்க? இது எப்படி சாத்தியம்? இரெண்டரை மில்லியன் ஒளியாண்டு தொலைவுலெர்ந்து, முன்னூஊஊற்றி நாப்பத்தெட்ட்டு ஆண்டுகள் பின்னோக்கி இவர் இங்க வளவன் உடலுக்குள்ள வந்திருக்காரா!”
மருத்துவரும் தன் வியப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் அவர்களுக்குத் தெரிந்த தகவலையே மீண்டும் விரிவாகச் சொன்னார்.
”டாக்டர்... எனக்கு இப்பதான் ஒன்னு நியாபகம் வருது...” பிரபி சட்டெனப் பரப்பரப்பானான்.
“என்னது அது பிரபு?” மருத்துவரும் ஆர்வமாய் கேட்டார். ஜீவாவும் பிரபுவைப் பார்த்தான்.
“இவன் கண்விழிச்சப்ப பேசினதலாம் இப்பதான் நிதானமா யோசிச்சுப் பார்த்தேன்...”
“ஓ! அப்ப நான் இங்க இல்லயே, என்ன சொன்னான் இவன்?”
”இன்-பில்ட் கம்யூனிகேட்டர்னான், என்னோட சிஸ்டம்லாம் ஆஃப் லைன்ல இருக்குனான்...”
“என்ன சொல்றீங்க நீங்க? எனக்கு ஒன்னும் புரியலயே?” மருத்துவரின் முகத்தில் குழப்பம் படர்ந்தது.
“நானே சொல்றேன்! டாக்டர், நான் ஒரு இயந்திரம், அதாவது கலாவிக்ல இருக்குற என்னோட உடல் ஒரு இயந்திர உடல்!”
பிரபு பதில் சொல்லும் முன் ஜீவாவே சொன்னான். அதைக்கேட்டு மருத்துவரின் முகம் அஷ்டகோணலாய்ப் போனது.
“நிஜம்மாவா? அதெப்படி சாத்தியம்? உங்க உடல் இயந்திரம்னா, நீங்க? நீங்க இறந்த பிறகு உங்க மைண்டை ஒரு இயந்திர உடலுக்குள்ள வெச்சுக்கிட்டீங்களா?”
மருத்துவர் சரசரவெனக் கேள்விகளை அடுக்கினார்.
ஜீவா மெள்ளத் தன் தலையை இடம்-வலமாக ஆட்டினான்.
“நான் முழுக்க முழுக்க இயந்திரந்தான், டாக்டர்! ‘நான்’ அப்படிங்குறது என் உடலென்ற வன்பொருளில் இருந்த ஒரு மென்பொருள்... அவ்வளவுதான்!”
ஜீவா சொல்லவும் மருத்துவர் அதை மறுப்பதைப் போலத் தலையை ‘இல்லை’ என்று ஆட்டினார்.
“நீங்க முழுக்க ஒரு மென்பொருள்னா உங்களால வளவனின் உடலில் இருப்பது சாத்தியமில்லையே?”
“இருக்கு, டாக்டர்! என் உடலில் சில உறுப்புகள் செமி-ஆர்கானிக், அவற்றில் என் மூளையும் ஒன்று! அதனாலத்தான் என்னோட ஏ.ஐ. (A.I.) ஏறத்தாழ மனித மூளையின் சிந்தனைக்கு நிகரான செயல்திறனோடு இருக்கு... அதே நேரம் மனித மூளையின் பலவீனமான நியாபகமறதி போன்ற குறைகள் எனக்கு இல்லை!”
“இல்ல ஜீவா, தேர் இஸ் சம்திங் டீப் இன் திஸ்!” மருத்துவர் ஆழ்ந்த சிந்தனையோடு சொன்னார்.
பிரபுவும் அதனை ஆமோதித்தான்.
அப்போது நந்தினியும் கல்பனாவும் மீண்டும் அங்கே வந்தனர்.
பிரபு அவர்களை வரவேற்றான்.
“வாங்க... இங்க சிஷுவேஷன் ரொம்ப குழப்பமா இருக்கு... நீங்களும் தெரிஞ்சுக்கனும்... இருங்க, சந்துருவையும் பிரபாகரனையும் கூட கூப்டுவோம், அவங்களும் இங்க நடந்ததைத் தெரிஞ்சுக்கனும்...”
பிரபு சொல்லிக்கொண்டே அங்கிருந்த கம்பியில்லா தொடர்பு சாதனம் மூலம் பிரபாகரனை அழைத்து வரச்சொல்லிவிட்டு, சந்துருவையும் அழைத்துக்கொண்டு வரும்படி சொன்னான்.
சற்று நேரத்தில் அவர்களும் வந்து சேர, மருத்துவரும் பிரபுவும் அங்கிருந்த நிலைமையை அனைவருக்கும் விளக்கினர்.
“வாட்? இவரு ஜீவாவா? வேற்றுக்கிரக இயந்திர மனிதனா?”
“இரண்டரை மில்லியன் ஒளியாண்டுகளா? 348 ஆண்டுகள் எதிர்காலத்திலேர்ந்தா?”
அவர்கள் மாறி மாறி கேள்விகள் கேட்டனர்.
முதலில் அதிகமாய்க் குழம்பிப் பின் மெள்ளத் தெளிந்தனர்.
”ஆனா, ஒரு ஹ்யூமனாய்ட் ரோபோவான இவரால எப்படி வளவனின் மூளைக்குள்ள வர முடியும்? நாட் பாஸிபிள்!”
நந்தினி நம்பமுடியாமல் மீண்டும் ஒருமுறை கேட்டாள்.
“எனக்கும் அதே குழப்பந்தான் நந்தினி... ஆனா, இவரோட நிஜ உடல் முழுக்க இயந்திரம் இல்லையாம், சில உறுப்புகள் செமி-ஆர்கானிக்காம், இவரோட மூளையும் அப்படி செமி-ஆர்கானிக்தானாம்!”
மருத்துவர் விளக்கினார்.
“இதை எப்படி எடுத்துகுறதுனே தெரியல...” என்று நந்தினி குழப்பம் கலந்த சிந்தனையோடு சொன்னாள்.
”ஆமா, வளவன் என்ன ஆனானும் தெரியல!” பிரபு தன் கவலையை வெளிப்படுத்தினான்.
அவன் வளவனைக் குறிப்பிட்டதும் நந்தினியின் நெஞ்சு பிசைந்தது. என்னவென்று குறிப்பிட முடியாத ஒரு உணர்வு அவளை ஆக்கிரமித்துக்கொண்டது.
“எனக்கென்னவோ, இவர் இங்க வளவன் உடல்ல வந்தா மாதிரி வளவன் அங்க இவர் உடலுக்குள்ள போயிருபார்னு தோனுது!”
கல்பனா சட்டெனச் சொன்னாள்.
அதைக் கேட்டு பிரபு நந்தினி இருவருமே சற்று ஆறுதல் அடைந்தனர்.
“சரிதான், எனக்கும் இந்த மாற்றம் முழுக்க எதேச்சையா நடந்ததா தெரியல, அப்படி ஒருவர் மூளைக்குள்ள இன்னொருவரின் மனம் வந்து கச்சிதமா பொருந்துறது எளிதான விஷயமில்ல... ஸோ, ஜீவா வளவன் உடல்ல வந்தா மாதிரி வளவன் ஜீவா உடல்லதான் இருக்கனும்...”
மருத்துவரும் நம்பிக்கையோடு சொன்னார்.
“நம்மால கலாவிக்கைத் தொடர்பு கொள்ள முடியுமா?” நந்தினி ஆர்வத்தோடு கேட்டான்.
“வாய்ப்பே இல்ல! ஜீவா சொல்றபடி பார்த்தா கலாவிக் இரண்டரை மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவுல இருக்கு, அதிகபட்சமா ஒளி வேகத்துல தகவல் அனுப்பினாலும் அது அங்க போய் சேர இரண்டரை மில்லியன் ஆண்டுகள் ஆகும்! அதுமட்டுமில்லாம...”
பிரபு முடிக்கும் முன் நந்தினியே சொன்னாள்,
“ஜீவா வந்திருக்கிறது எதிர்காலத்துலேர்ந்து!”
“ஆமா! 348 ஆண்டுகள்!” பிரபு அலுப்போடு சொன்னான்.
“என்னப்பா, ஒரு கிரகத்தையே இங்கேர்ந்து அங்க அனுப்பிருக்காங்க, நம்மால ஒரு தகவல் அனுப்ப இயலாதா?” கல்பனா சலிப்போடு கேட்டாள்.
“மேடம், கிரகத்தையே அனுப்புனது 2050-ல, இன்னும் முப்பது வருஷம் கழிச்சு!”
”ம்ம்ம்...” கல்பனா சிந்தனையில் ஆழ்ந்தாள், சட்டென அவள் முகம் பிரகாசமானது,
“அப்ப எதிர்காலத்துல இருக்குற கலாவிக்லேர்ந்து நம்மல தொடர்பு கொள்ள முடியும்ல?” பள்ளிப் பெண்ணைப் போல ஆர்வமாய்க் கேட்டாள்.
“முடியலாம், முடியாமலும் போகலாம்... இரண்டரை மில்லியன் ஒளியாண்டுகள் இட இடைவெளி, முந்நூத்தி நாப்பத்தெட்டு ஆண்டுகள் கால இடைவெளி... என்னால எதையும் உறுதியா சொல்ல முடியல!” பிரபு அலுப்பாய்ச் சொன்னான்.
”நீங்க என்ன நினைக்குறீங்க, ஜீவா?”
கல்பனா விடாமல் ஜீவாவைப் பார்த்துக் கேட்டாள்.
“கலாவிக்ல இங்கவரைக்கும் தகவல் அனுப்பக் கூடிய ஆற்றல் உள்ள கருவிகள் இருக்கு, ஆனா, அங்கேர்ந்து அனுப்பினாலும் இங்க வர-”
“இரண்டரை மில்லியன் ஆண்டுகள் ஆகும், அதானே?” கல்பனா அவனைச் சலிப்போடு இடைவெட்டினாள்,
“எத்தன தடவதான்பா ‘இரண்டரை மில்லியன் ஒளியாண்டு’யே திரும்பத் திரும்பச் சொல்வீங்க, ஸ்ரீ ராம ஜெயம் மாதிரி!”
“சீ... என்னது?” ஜீவா புரியாமல் கேட்டான்.
“சீப்பு! அட போய்ய்யா...” என்று அவள் அருகில் இருந்த இருக்கையில் விழுந்தமர்ந்தாள்.
பிரபுவிற்கு அவளைப் பார்த்து வாஞ்சையுடன் கூடிய ஒரு புன்னகை மலர்ந்தது.
”என்ன டா இளிப்பு?” கல்பனா பிரபுவிற்கு மட்டும் கேட்கும்படி கேட்டாள்.
“அது... நீ சீப்புனதும் எனக்கு சீ.பீ.ஆர். நியாபகம் வந்துச்சு, அதான்...” என்று மீண்டும் ஒரு பெரிய புன்னகையோடு சொன்னான்.
“இந்த ரணகலத்துலயும் உனக்குக் கிலுகிலுப்பு கேக்குதா?” கல்பனா பொய்க் கோவத்தோடு அவனை முறைத்தாள்.
“ஜீவா சொன்னதக் கேட்டல, 2050ல உலகம் அழியப் போகுது, இருக்குற முப்பது வருஷத்த நல்லா எஞ்ஜாய் பண்ணிக்கனும் டார்லிங்!” பிரபு குறும்பாகச் சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்டதும் கல்பனா பரபரப்பாய் எழுந்தாள்.
“மை காட்! இத எப்படி நான் மிஸ் பண்ணேன்!”
“எதை?” பிரபு புரியாமல் கேட்டான், ஆனால் கல்பனா அவனைக் கண்டு கொள்ளாமல் ஜீவாவை நோக்கினாள்.
“ஜீவா...?”
“ம்?”
“பூமி அழிஞ்சிடுச்சுனு சொன்னீங்கள்ல, அது எப்படி அழிஞ்சுது?”
“டெக்டானிக் பிளேட்ஸ்ல தொடர்ச்சியா ஏற்பட்ட விரிசல்களால பூமி இரெண்டா பிளந்துருச்சு...”
அவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் அவனை நம்ப முடியாத பெருவியப்பில் பார்த்தனர்.
கல்பனா மட்டும் அசராமல் அடுத்த கேள்வியைக் கேட்டாள்,
“அந்த ஃபால்ட் எங்க தொடங்கிச்சுனு தெரியுமா?”
“ம்ம், தெரியுமே! இங்கதான், அண்டார்டிக்கால!”
ஜீவா சர்வ சாதாரணமாய்ச் சொல்ல, அனைவருமே அதிர்ச்சியில் உறைந்தனர்.
*******