புவி
ஜீவா குத்து வாங்கி மயங்கி விழுந்ததும் அங்கே சட்டென ஒரு அமைதி குடியேறியது.
அனைவரும் ஒருவர் முகத்தை முகத்தை ஒருவர் பார்த்து உதட்டைப் பிதுக்கிக்கொண்டனர்.
சந்துரு கூட தன் தவற்றை உணர்ந்து ஜீவாவை தூக்க முனைந்தான். பிரபுவும் பிரபாகரனும் உதவ அவர்கள் மீண்டும் ஜீவாவை அங்கிருந்த கட்டிலில் படுக்க வைத்தனர்.
நந்தினி கவலையோடு அவன் அருகில் வந்து அவன் முகத்தைத் தட்டிப் பார்த்தாள்.
“தண்ணி தெளிப்போமா?” கல்பனா தயக்கத்துடன் கேட்டாள்.
“ம்ம்... ஆனா, ரொம்ப ஜில்லுனு இல்லாம பார்த்துக்கோங்க...” என்று சொல்லியபடியே அவனது நாடித்துடிப்பை எண்ணத் தொடங்கினார் மருத்துவர்.
“பிரபு, தண்ணி பிளாஸ்கை எடு!”
என்று கை நீட்டினாள் கல்பனா.
“பல்ஸ் ஸ்டடியா இருக்கு, சும்மா அடி வாங்கின அதிர்ச்சிதான், கவலைப்பட ஒன்னும் இல்ல...” என்று மருத்துவர் சொல்ல அனைவரும் சற்று அமைதி அடைந்தனர்.
பிரபு கொடுத்த குடிநீர் பிளாஸ்கிலிருந்து கல்பனா கொஞ்சம் நீரைத் தன் கையில் ஊற்றி அதை ஜீவாவின் முகத்தில் தெளித்தாள். ஆனால் எந்த மாற்றமும் இல்லை.
“ஜீவா?” நந்தினி மீண்டும் முகத்தைத் தட்டிப் பார்த்தாள். அசைவில்லாமல் இருந்தான்.
மருத்துவர் ஸ்தெதஸ்கோப்பை நெஞ்சில் வைத்துப் பார்த்தார், கண்ணிமைகளை இழுத்துத் திறந்து பார்த்தார்...
“க்யூரியஸ்!” தனக்குத்தானே சொல்வதைப் போலச் சொல்லிக்கொண்டார்.
”என்ன ஆச்சு டாக்டர்?” பிரபுவும் நந்தினியும் ஒரு சேர அவரைக் கேட்டனர்.
”முன்னாடி வளவன் இங்க வந்து இறங்கின உடனே மயக்கம் போட்டாருல? என்ன ஆச்சுனே தெரியாம மயக்கத்துல இருந்தாரே?”
“ஆமா...” பிரபு ஆர்வமாய்ச் சொன்னான்.
“இப்பவும் அதே மாதிரிதான் இவரும் மயங்கியிருக்காரு!”
“ஓ... அப்ப?”
“இப்போதைக்கு எதுவும் உறுதியா சொல்ல முடியாது... இவர் கண் திறக்குற வரைக்கும் காத்திருப்போம்!”
மருத்துவர் நிதானமான குரலில் சொன்னார்.
சில மணிநேரங்கள் ஜீவா அப்படியே அசைவின்றித்தான் கிடந்தான்.
ஒவ்வொருவராக அக்கூடாரத்தை விட்டு வெளியேறிருந்தனர். நந்தினி மட்டும் கட்டிலுக்கு அருகில் அமர்ந்து வளவனின் முகத்தையே வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
பிரபு சொன்னது அவள் மனத்தில் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. அவள் எண்ணங்கள் எங்கெங்கோ சென்று மீண்டன.
“நந்தினி...”
பிரபுவின் குரல் கேட்டு அவள் மெள்ளத் திரும்பிப் பார்த்தாள்.
“எவ்ளோ நேரம் இங்க இப்படியே உக்காந்துட்டு இருப்ப? போய் ரெப்ரஷ் பண்ணிட்டு டீ இல்ல சூப் ஏதாச்சு குடிச்சுட்டு வா, நான் இவன் கூட இருக்குறேன்...”
“ப்ச்... இட்ஸ் ஓக்கே பிரபு, நான் இன்னும் கொஞ்சம் நேரம் இங்கயே இருக்கேன்... எனக்கு இப்ப ஒன்னும் டயர்டாலாம் இல்ல...”
“ஹ்ம்ம்ம்... அவன் இருக்-” பிரபு ஏதோ சொல்லத் தொடங்கி சட்டென நிறுத்தினான். அவனது பார்வை ஜீவாவின் மீது நிலைபெற்றிருந்தது.
நந்தினியும் சட்டெனத் திரும்பி ஜீவாவைப் பார்க்க அவனிடம் அசைவுகள் தெரிந்தன.
“ஹே... இவன் அசையுறான், கண்விழிக்கப் போறான்... டாக்டரைக் கூப்பிடு, க்விக்...” நந்தினி பரபரப்பானாள்.
அவள் சொல்வதற்கு முன்பே பிரபு அங்கிருந்த கம்பியில்லா தொடர்பு மூலம் பிரபாகரனுக்கும் மருத்துவருக்கும் தகவல் சொல்லத் தொடங்கியிருந்தான்.
அவன் அப்படியும் இப்படியும் அசைந்துவிட்டு மெள்ளக் கண்விழித்தான்.
நந்தினியும் பிரபுவும் அவன் முகத்தையே ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
“யார் நீங்க? என் இன்பில்ட் கம்யூனிகேட்டர்லாம் ஏன் ஆஃப்லைன்ல இருக்கு? என்ன பண்ணீங்க என்னை?”
அவன் சட்டென எழுந்து அமர்ந்துகொண்டு விறைப்புடன் கேட்க நந்தினி முகத்தில் ஏமாற்றம் அப்பியது, பிரபு அலுப்பாகக் கண்களைச் சுழற்றினான்.
“மறுபடியும் பர்ஸ்ட்லேர்ந்தா? டேய், வேண்டாண்டா... நான் அழுதுறுவேன்...” என்று அழுவதைப் போலவே சொன்னான்.
“நீ அழுதா ஆடியன்ஸ் ஒத்துக்கமாட்டாங்க மச்சி!” வளவன் ஒரு மெல்லிய புன்னகையுடன் சொல்ல, நந்தினியும் பிரபுவும் நம்ப முடியாமல் அவனைப் பார்த்தனர்.
“நீங்க... நீ?”
“நான் டாட்கர் வளவன் செம்பியன், இயற்பியலாளன்!” அவன் ஏதோ முதல் முறை அறிமுகம் செய்துகொள்பவனைப் போலப் பிரபுவை நோக்கிக் கை நீட்டினான்.
“டேய்... வளவா...? நீதானா?” பிரபு நம்ப முடியாமல் கேட்டான்.
அதற்கு மேல் அவனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. நந்தினி கூட அதே மனநிலையில் உணர்ச்சிப் பெருக்கில் திண்டாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது அறைக்குள் மற்றவர்களும் வந்து சேர, அங்கே கேள்விகளும் பதில்களும் குருக்ஷேத்திரப் போரின் அம்புகளைப் போலப் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
ஒரு வழியாய் அவர்கள் அமைதியடைந்து ஒவ்வொருவராக வளவனைக் கேள்வி கேட்கத் தொடங்கினர்.
வளவனும் அவனது கலாவிக் அனுபவங்களை அவர்களது கேள்விக்கேற்பச் சொல்லிக்கொண்டே வந்தான்.
ஒருவழியாகத் திருப்தியாக எல்லாவற்றையும் கேட்டு முடித்துவிட்டு அவர்கள் வெளியேறினர். மீண்டும் நந்தினியும் பிரபுவும் மட்டும் வளவனோடு இருந்தனர்.
“அப்புறம், வளவா... நந்தினிக்கு தெரிஞ்சு போச்சு...” பிரபு அவன் காதில் கிசுகிசுத்தான்.
“ஓ, குட்!” வளவன் பெரிதாக எந்த உணர்ச்சியையும் காட்டாமல் சொன்னான்.
“என்ன குட்?” நந்தினி சற்றே முறைத்தபடி கேட்டாள். அவனது காதல் அவளுக்குத் தெரிந்துவிட்டது என்று தெரிந்தும் அவன் அப்படிச் சாதாரணமாகக் கேட்டது அவளுக்கு ஏதோ ஒரு ஏமாற்றத்தைக் கொடுத்தது.
“எல்லாமேதான்... நான் எதிர்பாராதவிதமா எங்கயோ எப்படியோ போய், இப்ப ஏதோ லக்குல திரும்பி வந்திருக்கேனே... அது குட் இல்லையா?”
வளவன் மீண்டும் சாதாரணமாகச் சொன்னான்.
“ஆமா! சரி நான் வரேன், எனக்குப் பசிக்குது...” நந்தினி அவர்கள் பதிலுக்குக் கூட காத்திராமல் அங்கிருந்து விறுவிறுவென்று சென்றாள்.
அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்த பிரபு அவள் போனபின் வளவனைப் பார்த்து முறைத்தான்.
“என்னடா?”
“என்ன என்னடா? நீ அதே வளவன்தானா? இல்ல கலாவிக்ல எதாச்சு கழண்டுடுச்சா?”
“இப்ப என்ன பிரச்சனை உனக்கு?”
“டேய்... நான் சொன்னது உனக்குப் புரிஞ்சுதா இல்லையா? அவளுக்கு நீ அவளைக் காதலிக்குறன்றது தெரிஞ்சு போச்சு... இப்ப நீ கடைசியா மயங்கினப்ப அவ எங்கயும் போகாம மணிக்கணக்கா இங்கயே உக்காந்துட்டு உன்னையே பார்த்துட்டு இருந்தா...”
பிரபுவின் குரலில் கோவமும் ஆயாசமும் கலந்திருந்தன.
“ஓ, நல்ல விஷயம்தான் மச்சி...”
“டேய், என்னடா ஆச்சு உனக்கு? இங்க வரதுக்கு முன்னாடி அவ கூட பேச ஏங்குவ, அவளுக்குத் தெரியாம அவளையே பார்த்துட்டு இருப்ப, இப்ப என்னடானா ரொம்ப அசால்டா இருக்க?”
பிரபு அவனை அடிக்காத குறையாகக் கேட்டான்.
“மச்சீ... நான் இங்க இல்லாதப்ப என் உடல்ல ஜீவானு ஒருத்தன் இருந்தானா?”
“ஆமா!”
“அவன்கிட்டேர்ந்து ஏதாச்சு விஷயம் தெரிஞ்சுக்கிட்டீங்களா?”
“ஆமா... உலகம் அழியப் போகுது, எதிர்காலத்துல மனுஷங்க வாழ கலாவிக் கிரகம் உருவாக்கப்படும்... ஆனா, சில டீட்டெய்ல்ஸ சரியாக் கேட்டுக்கல, அதுக்குள்ள அவன் மயங்கிட்டான், நீ திரும்பி வந்துட்ட!”
“கவலைப்படாத, நான் எல்லா விவரத்தையும் தெளிவா தெரிஞ்சுக்கிட்டுத்தான் வந்திருக்கேன்... நீ சொன்னியே கலாவிக் கிரகம் உருவாக்கப்படும்னு... அதை யாரு செய்வா?”
“யரோ ஒரு இளம் விஞ்ஞானி... என்னவோ பேர் சொன்னானே... ஆங்... ஜீவப்பிரபு!”
பிரபு நினைவுபடுத்திச் சொன்னான்.
“கரெக்ட்... அந்த ஜீவப்பிரபு கலாவிக்கை உருவாக்கி மனித இனத்தைக் காப்பாத்தனும்னா நந்தினி என்னைக் காதலிச்சே ஆகனும்... அவ என்னைக் கல்யாணம் பண்ணியே ஆகனும்...”
“வாட்? என்ன டா சொல்ற...?”
“மனித இனத்தின் காவலர், கலாவிக்கின் முதல் கௌரவ ஆளுநர், விஞ்ஞானி ஜீவப்பிரபுவோட அப்பா நாந்தான்! அம்மா....”
வளவன் முகமெல்லாம் புன்னகையாக முடிக்காமல் இழுக்க, பிரபு முடித்தான்,
“நந்தினி!”
“யெஸ்! யூ ஆர் ஆப்சலூட்லி ரைட்...” வளவன் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டான்,
“இந்த மனித இனத்தைக் காப்பாத்த எனக்கு வேற வழியே இல்ல... நந்தினியைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணியே ஆகனும்!”
வளவன் குறும்பாகப் போலியான அலுப்புடன் சொன்னான்.
பிரபுவின் முகத்தில் சட்டெனக் குழப்பமேகம் நீங்கி கிண்டலான சிரிப்பு உதயமானது.
“என்னடா, நக்கலா பார்க்குற?”
பிரபு பதில் சொல்லாமல் பின்னாலப் பாரு என்று சைகை மட்டும் செய்தான்.
வளவன் திரும்பும்போதே அங்கு யார் நிற்கிறார்கள் என்று ஊகித்துவிட்டான்.
கம்பளி ஸ்வெட்டர் போட்ட பத்திரகாளியாய் அவள் இவனை முறைத்தபடி நின்றிருந்தாள்.
“ஓ, சார் இந்த உலகத்தக் காப்பாத்ததான் என்னை லவ் பண்றீங்களோ?”
“அது... அது சும்மா நந்து...”
அவள் தணிவதாக இல்லை,
“டாக்டர் வளவன், நம்மள்ல யாரோ ஒருத்தர் ஜீந்தான் ஜீவப்பிரபுவை உருவாக்கப் போகுது... நாம தனித்தனியா வேறொருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அதுக்கான வாய்ப்பு இருக்கு... அப்படியே டிரை பண்ணுவோம்!”
அவள் அவனை முறைத்தபடி சொன்னாள்.
“நந்தினி... நோ நோ... இப்படிலாம் மனித குலத்தோட தலையெழுத்தோட விளையாடாத! நான் சரண்டர்... ஐ லவ் யூ!”
என்று வளவன் அவள் முன் மண்டியிட்டான்.
நந்தினியின் முகத்தில் அவளையும் மீறிப் புன்னகை குடியேறியது!
“அடங்கப்பா... இது உலக மகா நடிப்பு டா சாமீ!” என்று பிரபு கிண்டலாய்ச் சொன்னான்.
வளவனும் நந்தினியும் ஒருசேர அவனை முறைத்தனர்.
*******
ஜீவா குத்து வாங்கி மயங்கி விழுந்ததும் அங்கே சட்டென ஒரு அமைதி குடியேறியது.
அனைவரும் ஒருவர் முகத்தை முகத்தை ஒருவர் பார்த்து உதட்டைப் பிதுக்கிக்கொண்டனர்.
சந்துரு கூட தன் தவற்றை உணர்ந்து ஜீவாவை தூக்க முனைந்தான். பிரபுவும் பிரபாகரனும் உதவ அவர்கள் மீண்டும் ஜீவாவை அங்கிருந்த கட்டிலில் படுக்க வைத்தனர்.
நந்தினி கவலையோடு அவன் அருகில் வந்து அவன் முகத்தைத் தட்டிப் பார்த்தாள்.
“தண்ணி தெளிப்போமா?” கல்பனா தயக்கத்துடன் கேட்டாள்.
“ம்ம்... ஆனா, ரொம்ப ஜில்லுனு இல்லாம பார்த்துக்கோங்க...” என்று சொல்லியபடியே அவனது நாடித்துடிப்பை எண்ணத் தொடங்கினார் மருத்துவர்.
“பிரபு, தண்ணி பிளாஸ்கை எடு!”
என்று கை நீட்டினாள் கல்பனா.
“பல்ஸ் ஸ்டடியா இருக்கு, சும்மா அடி வாங்கின அதிர்ச்சிதான், கவலைப்பட ஒன்னும் இல்ல...” என்று மருத்துவர் சொல்ல அனைவரும் சற்று அமைதி அடைந்தனர்.
பிரபு கொடுத்த குடிநீர் பிளாஸ்கிலிருந்து கல்பனா கொஞ்சம் நீரைத் தன் கையில் ஊற்றி அதை ஜீவாவின் முகத்தில் தெளித்தாள். ஆனால் எந்த மாற்றமும் இல்லை.
“ஜீவா?” நந்தினி மீண்டும் முகத்தைத் தட்டிப் பார்த்தாள். அசைவில்லாமல் இருந்தான்.
மருத்துவர் ஸ்தெதஸ்கோப்பை நெஞ்சில் வைத்துப் பார்த்தார், கண்ணிமைகளை இழுத்துத் திறந்து பார்த்தார்...
“க்யூரியஸ்!” தனக்குத்தானே சொல்வதைப் போலச் சொல்லிக்கொண்டார்.
”என்ன ஆச்சு டாக்டர்?” பிரபுவும் நந்தினியும் ஒரு சேர அவரைக் கேட்டனர்.
”முன்னாடி வளவன் இங்க வந்து இறங்கின உடனே மயக்கம் போட்டாருல? என்ன ஆச்சுனே தெரியாம மயக்கத்துல இருந்தாரே?”
“ஆமா...” பிரபு ஆர்வமாய்ச் சொன்னான்.
“இப்பவும் அதே மாதிரிதான் இவரும் மயங்கியிருக்காரு!”
“ஓ... அப்ப?”
“இப்போதைக்கு எதுவும் உறுதியா சொல்ல முடியாது... இவர் கண் திறக்குற வரைக்கும் காத்திருப்போம்!”
மருத்துவர் நிதானமான குரலில் சொன்னார்.
சில மணிநேரங்கள் ஜீவா அப்படியே அசைவின்றித்தான் கிடந்தான்.
ஒவ்வொருவராக அக்கூடாரத்தை விட்டு வெளியேறிருந்தனர். நந்தினி மட்டும் கட்டிலுக்கு அருகில் அமர்ந்து வளவனின் முகத்தையே வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
பிரபு சொன்னது அவள் மனத்தில் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. அவள் எண்ணங்கள் எங்கெங்கோ சென்று மீண்டன.
“நந்தினி...”
பிரபுவின் குரல் கேட்டு அவள் மெள்ளத் திரும்பிப் பார்த்தாள்.
“எவ்ளோ நேரம் இங்க இப்படியே உக்காந்துட்டு இருப்ப? போய் ரெப்ரஷ் பண்ணிட்டு டீ இல்ல சூப் ஏதாச்சு குடிச்சுட்டு வா, நான் இவன் கூட இருக்குறேன்...”
“ப்ச்... இட்ஸ் ஓக்கே பிரபு, நான் இன்னும் கொஞ்சம் நேரம் இங்கயே இருக்கேன்... எனக்கு இப்ப ஒன்னும் டயர்டாலாம் இல்ல...”
“ஹ்ம்ம்ம்... அவன் இருக்-” பிரபு ஏதோ சொல்லத் தொடங்கி சட்டென நிறுத்தினான். அவனது பார்வை ஜீவாவின் மீது நிலைபெற்றிருந்தது.
நந்தினியும் சட்டெனத் திரும்பி ஜீவாவைப் பார்க்க அவனிடம் அசைவுகள் தெரிந்தன.
“ஹே... இவன் அசையுறான், கண்விழிக்கப் போறான்... டாக்டரைக் கூப்பிடு, க்விக்...” நந்தினி பரபரப்பானாள்.
அவள் சொல்வதற்கு முன்பே பிரபு அங்கிருந்த கம்பியில்லா தொடர்பு மூலம் பிரபாகரனுக்கும் மருத்துவருக்கும் தகவல் சொல்லத் தொடங்கியிருந்தான்.
அவன் அப்படியும் இப்படியும் அசைந்துவிட்டு மெள்ளக் கண்விழித்தான்.
நந்தினியும் பிரபுவும் அவன் முகத்தையே ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
“யார் நீங்க? என் இன்பில்ட் கம்யூனிகேட்டர்லாம் ஏன் ஆஃப்லைன்ல இருக்கு? என்ன பண்ணீங்க என்னை?”
அவன் சட்டென எழுந்து அமர்ந்துகொண்டு விறைப்புடன் கேட்க நந்தினி முகத்தில் ஏமாற்றம் அப்பியது, பிரபு அலுப்பாகக் கண்களைச் சுழற்றினான்.
“மறுபடியும் பர்ஸ்ட்லேர்ந்தா? டேய், வேண்டாண்டா... நான் அழுதுறுவேன்...” என்று அழுவதைப் போலவே சொன்னான்.
“நீ அழுதா ஆடியன்ஸ் ஒத்துக்கமாட்டாங்க மச்சி!” வளவன் ஒரு மெல்லிய புன்னகையுடன் சொல்ல, நந்தினியும் பிரபுவும் நம்ப முடியாமல் அவனைப் பார்த்தனர்.
“நீங்க... நீ?”
“நான் டாட்கர் வளவன் செம்பியன், இயற்பியலாளன்!” அவன் ஏதோ முதல் முறை அறிமுகம் செய்துகொள்பவனைப் போலப் பிரபுவை நோக்கிக் கை நீட்டினான்.
“டேய்... வளவா...? நீதானா?” பிரபு நம்ப முடியாமல் கேட்டான்.
அதற்கு மேல் அவனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. நந்தினி கூட அதே மனநிலையில் உணர்ச்சிப் பெருக்கில் திண்டாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது அறைக்குள் மற்றவர்களும் வந்து சேர, அங்கே கேள்விகளும் பதில்களும் குருக்ஷேத்திரப் போரின் அம்புகளைப் போலப் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
ஒரு வழியாய் அவர்கள் அமைதியடைந்து ஒவ்வொருவராக வளவனைக் கேள்வி கேட்கத் தொடங்கினர்.
வளவனும் அவனது கலாவிக் அனுபவங்களை அவர்களது கேள்விக்கேற்பச் சொல்லிக்கொண்டே வந்தான்.
ஒருவழியாகத் திருப்தியாக எல்லாவற்றையும் கேட்டு முடித்துவிட்டு அவர்கள் வெளியேறினர். மீண்டும் நந்தினியும் பிரபுவும் மட்டும் வளவனோடு இருந்தனர்.
“அப்புறம், வளவா... நந்தினிக்கு தெரிஞ்சு போச்சு...” பிரபு அவன் காதில் கிசுகிசுத்தான்.
“ஓ, குட்!” வளவன் பெரிதாக எந்த உணர்ச்சியையும் காட்டாமல் சொன்னான்.
“என்ன குட்?” நந்தினி சற்றே முறைத்தபடி கேட்டாள். அவனது காதல் அவளுக்குத் தெரிந்துவிட்டது என்று தெரிந்தும் அவன் அப்படிச் சாதாரணமாகக் கேட்டது அவளுக்கு ஏதோ ஒரு ஏமாற்றத்தைக் கொடுத்தது.
“எல்லாமேதான்... நான் எதிர்பாராதவிதமா எங்கயோ எப்படியோ போய், இப்ப ஏதோ லக்குல திரும்பி வந்திருக்கேனே... அது குட் இல்லையா?”
வளவன் மீண்டும் சாதாரணமாகச் சொன்னான்.
“ஆமா! சரி நான் வரேன், எனக்குப் பசிக்குது...” நந்தினி அவர்கள் பதிலுக்குக் கூட காத்திராமல் அங்கிருந்து விறுவிறுவென்று சென்றாள்.
அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்த பிரபு அவள் போனபின் வளவனைப் பார்த்து முறைத்தான்.
“என்னடா?”
“என்ன என்னடா? நீ அதே வளவன்தானா? இல்ல கலாவிக்ல எதாச்சு கழண்டுடுச்சா?”
“இப்ப என்ன பிரச்சனை உனக்கு?”
“டேய்... நான் சொன்னது உனக்குப் புரிஞ்சுதா இல்லையா? அவளுக்கு நீ அவளைக் காதலிக்குறன்றது தெரிஞ்சு போச்சு... இப்ப நீ கடைசியா மயங்கினப்ப அவ எங்கயும் போகாம மணிக்கணக்கா இங்கயே உக்காந்துட்டு உன்னையே பார்த்துட்டு இருந்தா...”
பிரபுவின் குரலில் கோவமும் ஆயாசமும் கலந்திருந்தன.
“ஓ, நல்ல விஷயம்தான் மச்சி...”
“டேய், என்னடா ஆச்சு உனக்கு? இங்க வரதுக்கு முன்னாடி அவ கூட பேச ஏங்குவ, அவளுக்குத் தெரியாம அவளையே பார்த்துட்டு இருப்ப, இப்ப என்னடானா ரொம்ப அசால்டா இருக்க?”
பிரபு அவனை அடிக்காத குறையாகக் கேட்டான்.
“மச்சீ... நான் இங்க இல்லாதப்ப என் உடல்ல ஜீவானு ஒருத்தன் இருந்தானா?”
“ஆமா!”
“அவன்கிட்டேர்ந்து ஏதாச்சு விஷயம் தெரிஞ்சுக்கிட்டீங்களா?”
“ஆமா... உலகம் அழியப் போகுது, எதிர்காலத்துல மனுஷங்க வாழ கலாவிக் கிரகம் உருவாக்கப்படும்... ஆனா, சில டீட்டெய்ல்ஸ சரியாக் கேட்டுக்கல, அதுக்குள்ள அவன் மயங்கிட்டான், நீ திரும்பி வந்துட்ட!”
“கவலைப்படாத, நான் எல்லா விவரத்தையும் தெளிவா தெரிஞ்சுக்கிட்டுத்தான் வந்திருக்கேன்... நீ சொன்னியே கலாவிக் கிரகம் உருவாக்கப்படும்னு... அதை யாரு செய்வா?”
“யரோ ஒரு இளம் விஞ்ஞானி... என்னவோ பேர் சொன்னானே... ஆங்... ஜீவப்பிரபு!”
பிரபு நினைவுபடுத்திச் சொன்னான்.
“கரெக்ட்... அந்த ஜீவப்பிரபு கலாவிக்கை உருவாக்கி மனித இனத்தைக் காப்பாத்தனும்னா நந்தினி என்னைக் காதலிச்சே ஆகனும்... அவ என்னைக் கல்யாணம் பண்ணியே ஆகனும்...”
“வாட்? என்ன டா சொல்ற...?”
“மனித இனத்தின் காவலர், கலாவிக்கின் முதல் கௌரவ ஆளுநர், விஞ்ஞானி ஜீவப்பிரபுவோட அப்பா நாந்தான்! அம்மா....”
வளவன் முகமெல்லாம் புன்னகையாக முடிக்காமல் இழுக்க, பிரபு முடித்தான்,
“நந்தினி!”
“யெஸ்! யூ ஆர் ஆப்சலூட்லி ரைட்...” வளவன் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டான்,
“இந்த மனித இனத்தைக் காப்பாத்த எனக்கு வேற வழியே இல்ல... நந்தினியைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணியே ஆகனும்!”
வளவன் குறும்பாகப் போலியான அலுப்புடன் சொன்னான்.
பிரபுவின் முகத்தில் சட்டெனக் குழப்பமேகம் நீங்கி கிண்டலான சிரிப்பு உதயமானது.
“என்னடா, நக்கலா பார்க்குற?”
பிரபு பதில் சொல்லாமல் பின்னாலப் பாரு என்று சைகை மட்டும் செய்தான்.
வளவன் திரும்பும்போதே அங்கு யார் நிற்கிறார்கள் என்று ஊகித்துவிட்டான்.
கம்பளி ஸ்வெட்டர் போட்ட பத்திரகாளியாய் அவள் இவனை முறைத்தபடி நின்றிருந்தாள்.
“ஓ, சார் இந்த உலகத்தக் காப்பாத்ததான் என்னை லவ் பண்றீங்களோ?”
“அது... அது சும்மா நந்து...”
அவள் தணிவதாக இல்லை,
“டாக்டர் வளவன், நம்மள்ல யாரோ ஒருத்தர் ஜீந்தான் ஜீவப்பிரபுவை உருவாக்கப் போகுது... நாம தனித்தனியா வேறொருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அதுக்கான வாய்ப்பு இருக்கு... அப்படியே டிரை பண்ணுவோம்!”
அவள் அவனை முறைத்தபடி சொன்னாள்.
“நந்தினி... நோ நோ... இப்படிலாம் மனித குலத்தோட தலையெழுத்தோட விளையாடாத! நான் சரண்டர்... ஐ லவ் யூ!”
என்று வளவன் அவள் முன் மண்டியிட்டான்.
நந்தினியின் முகத்தில் அவளையும் மீறிப் புன்னகை குடியேறியது!
“அடங்கப்பா... இது உலக மகா நடிப்பு டா சாமீ!” என்று பிரபு கிண்டலாய்ச் சொன்னான்.
வளவனும் நந்தினியும் ஒருசேர அவனை முறைத்தனர்.
*******