மிக்க நன்றி சகோ... எல்லா எபிக்கும் நீண்ட அழகிய கருத்தளித்து வந்தீர்கள்...இதுவரை எழுந்த கேள்விகளுக்கெல்லாம் தெளிவான புரியக்கூடிய பதில்களோட ஒரு அத்தியாயம்...
புத்திசாலித்தனமான இறுதி அத்தியாயம்....
உங்களோட லாஜிக் எல்லாமே மேஜிக் மாறி இருந்தது.....அவ்ளோ பிரமிப்பு படிச்சு முடிச்சதுக்கப்புறம்...!!!!!!!
தயவுசெய்து இந்த ஸ்டோரிய நாவலா எழுதனும் request பண்றேன்.....
ஜீவபிரபு கேரக்டர் மேல கிரேஸியே வந்துருச்சு....Like terminator movie john Connor....மாதிரி
Messiah /saviour of the world .சொல்லும்போதே மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு கதாபாத்திரம்....
அப்படி ஒரு விஷயத்தை குறநாவல்ல கொண்டு வந்து குறுக்கிட்டீங்களே ஜி....So think about it.....Saho...
வளவனுக்கு இருந்தாலும் இம்புட்டு குசும்பு இருக்கக்கூடாது...... ஒரு செகன்ட் ஆடியன்ஸையும் அலற விட்டுருச்சு பயபுள்ள....நீனா இவன பஞ்ச் பண்ணதுல்ல தப்பே இல்ல.....
எங்க பங்குக்கும் சேர்ந்து இன்னும் நாலடி அடிக்கனும்.....
இந்த எபிலயும் என் பொறுமைக்கு சோதனை.....நந்தினி பெயர்ர வச்சு வளவன் விளையாடும்போது......!!!!???
என்டுல நீனா மட்டுமல்ல நானும் கூட திகைச்சுட்டேன்.... அவளோட பெயர் எப்படி லிஸ்டில் வந்தது...அவளோட பங்க எந்த மாதிரி சொல்லியிருப்பாங்க அப்படி னு யோசிக்கிறேன்...!!!!!!
பிசிக்ஸ் கொஞ்சம் நமக்கு பிச்சிக்கிச்சு தான் ..கொஞ்சம் .பு......ரி...யு...ம்...பட் அப்படி பட்ட நமக்கே interesting ah இருந்ததுன்னா... no words to praise your writing..Am really enjoyed .
இன்னும் நிறைய வித்தியாசமான கதைகளை கொடுத்து இப்ப மாதிரியே எங்கள வியக்கவச்சுக்கிட்டே இருக்கனும் கேட்டுக்கிறேன்....சகோ...
?????
சில இடங்களில் உங்கள் கருத்துகளால் நான் கதையில் சிறு மாற்றங்கள் செய்துகொண்டேன்...
குறிப்பாய்: பூமியில் ஜீவா கலாவிக் ஆண்டிரோமெடாவில் இருக்கிறது என்று சாதாரணமாய்ச் சொல்வான், அத்தோடு அவ்வத்தியாயம் முடியும்.
அடுத்த அத்தியாயத்தில் ‘பிரபு “அப்படியா?” என்று வியந்து கேட்டான்’ என்றுதான் எழுதி வைத்திருந்தேன், ஆனால் நீங்கள் உங்கள் கருத்தில் ‘ஜீவா சொன்னதற்குப் பிரபு என்ன நக்கலாகச் சொல்லப் போகிறான் என்று அறிய ஆவலாய் இருக்கிறேன்’ என்று சொன்னீர்கள், நான் அதைப்படித்துவிட்டு எழுதியதை எடுத்துப் பார்த்தப் போது எனக்கே அது ‘சப்’ என்று இருந்தது, பிறகு ‘ஆண்டிரோமெடாவா? என்னடா அயனாவரம் மாதிரி அசால்ட்டா சொல்ற?’ என்று பிரபு சொல்வதாக மாற்றிக்கொண்டேன்...
ஆசிரியர் அசந்தந்தாலும் வாசகர்கள் வளைத்துப் பிடித்துவிடுகின்றீர்கள்...
நன்றி...
நான் எழுத வைத்திருக்கும் கதை கருக்களை ஒரு சுற்று முடித்துக்கொண்டு பின் மெல்ல ஜீவப்பிரபுவின் கதைக்கு வருவோம்... இன்ஷா அல்லாஹ்!